Tuesday, June 11, 2013

குந்தி சொன்ன பத்ரை கதை! - ஆதிபர்வம் பகுதி 121

Kunti told the story of Bhadra! | Adi Parva - Section 121 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 57)

பதிவின் சுருக்கம் : பழங்காலத்தில் நடந்த வியுஷிதாஸ்வன் மற்றும் பத்ரையின் கதையைப் பாண்டுவுக்குச் சொன்ன குந்தி; இறந்து போன கணவனிடம் பிள்ளைகளைப் பெற்ற பத்ரை...

வைசம்பாயனர் சொன்னார், "இப்படிச்சொல்லப்பட்ட குந்தி, குருக்களில் காளையும், தனது வீரத் தலைவனுமான மன்னன் பாண்டுவிடம்,(1) "ஓ அறம்சார்ந்தவரே, நீர் என்னிடம் இப்படிச் சொல்வது தகாது. ஓ தாமரைக் கண் கொண்டவரே! நான் எப்போதும் உம்மிடம் அர்ப்பணிப்புடன் உள்ளவளும், முறையாக மணந்து கொள்ளப்பட்டவளுமான உமது மனைவியாவேன்.(2) ஓ பெரும் கரம் கொண்ட பாரதரே, பெரும் சக்தி கொண்ட நீரே என்னிடம் பிள்ளைகளைப் பெறுவீர்.(3) அதன் பிறகு நான் சொர்க்கத்திற்கு உம்முடனே சேர்ந்தே வருகிறேன். ஓ குருகுல இளவரசரே, உம் அணைப்பில் என்னை ஏற்றுப் பிள்ளைகளைப் பெறுவீராக.(4) உமது அணைப்பைத் தவிர வேறு எந்த மனிதனின் அணைப்பையும் நான் கற்பனையில் கூட ஏற்கமாட்டேன். உம்மைவிட உயர்ந்தவனாக எந்த மனிதன் உலகத்தில் இருக்கிறான்?(5) ஓ அறம்சார்ந்தவரே, தாமரைக் கண் கொண்டவரே! நான் கேள்விப்பட்ட ஒரு புராண விவரிப்பைக் கேட்பீராக. நான் உமக்கு அதைச் சொல்கிறேன்.(6)



பழங்காலத்தில் பூருவின் குலத்தில் வியுஷிதாஸ்வன் என்ற பெயரில் ஒரு மன்னன் இருந்தான். அவன் உண்மைக்கும் அறத்திற்கும் தன்னை அர்ப்பணித்திருந்தான்.(7) அறம்சார்ந்த ஆன்மாவையும், பெரும் கரத்தையும் கொண்டிருந்த அவன் ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு வேள்வியைச் செய்து கொண்டிருக்கும்போது, அங்கே இந்திரனுடன் பெரும் முனிவர்களும் வந்தனர்.(8) இந்திரன் சோமச்சாற்றாலும், பிராமணர்கள் அவர்கள் பெற்ற பரிசுகளாலும் போதையுண்டிருந்ததால், அவ்வேள்வியில் அந்த அரசமுனி செய்ய வேண்டிய அனைத்துக் காரியங்களையும் அவர்களே செய்தனர்.(9)  எனவே, பனிக்காலம் முடிந்ததும், இருமடங்கு பிரகாசத்துடன் தோன்றும் சூரியனைப் போல அந்த வியுஷிதாஸ்வன், பிற மனிதர்கள் அனைத்துயிர்களையும் விட அதிகமாகப் பிரகாசித்தான்.(10)

பத்து யானைகளின் பலத்தைக் கொண்ட அந்தப் பலம் வாய்ந்த வியுஷிதாஸ்வன், பெரும் குதிரை வேள்வி ஒன்றைச் செய்து கிழக்கு, வடக்கு, மேற்கு மற்றும் தெற்கிலிருந்த அனைத்து ஏகாதிபதிகளையும் வீழ்த்தி அவர்கள் அனைவரையும் தனக்குக் கப்பம் கட்டச் செய்தான்.(11,12) புராணங்களை உரைப்பவர்கள், ஓ குருக்களில் சிறந்தவரே, இந்த மன்னனைக் குறித்துப் பதியப்படாத ஒரு சிறுகதையைப் பாடுவர்கள்.(13) கடற்கரைவரையுள்ள மொத்த பூமியையும் வென்ற வியுதாஸ்வன், தன் குடிமக்களில் அனைத்து வர்க்கங்களையும் {வர்ணங்களையும்}, ஒரு தகப்பன் பிள்ளைகளைப் பாதுகாப்பதுபோலக் காத்தான்.(14) அவன் பல பெரும் வேள்விகளைச் செய்து, பெரும் செல்வத்தை பிராமணர்களுக்குக் கொடுத்தான்.  அளவிலா நகைகளையும், விலைமதிப்பில்லாக் கற்களையும் சேகரித்தபிறகு பெரும் வேள்விகளைத் துவங்கினான்.(15)

அவன் {வியுஷிதாஸ்வன்} அக்னிஷ்டோமம் என்ற வேள்வியையும் மற்றும் பெரும் சோமச் சாற்றினைப்பிழிந்து சிறப்பான வேத வேள்விகளையும் செய்தான். ஓ மன்னரே, வியுஷிதஸ்வாவுக்கு ஓர் அன்பான மனைவி இருந்தாள். அவள் கக்ஷீவத்தின் {கக்ஷீவானின்} மகள் பத்ரை ஆவாள். அவள் பூலோகத்திலேயே மிகுந்த அழகு வாய்ந்தவளாக இருந்தாள்.(16) அந்த இணை ஆழமான காதல் கொண்டதாக இருந்தது என்று நாம் கேள்விப்படுகிறோம். மன்னன் வியுஷிதஸ்வா தனது மனைவியுடனேயே எப்போதும் பிரியாமல் இருந்தான். காமத்தின் மிகை, அவனுக்கு மூச்சு சம்பந்தமான நோயைக் கொண்டு வந்தது. மன்னன் தான் புகழோடிருக்கும்போதே, மூழ்கும் கதிரவனைப் போல சில தினங்களுக்குள் இறந்து போனான். பிறகு பத்ரை என்ற அந்த அழகிய அரசி, மகனில்லாத காரணத்தால் மிகுந்த துயர் கொண்டாள். அவள் கொண்ட பெரும் துயரால் மிகவும் அழுதாள். ஓ அறம் சார்ந்த மன்னரே, நான் சொல்வதைக் கேளும்.

பத்ரா கன்னத்தில் கண்ணீர் வழிந்தோட,(17-19) "ஓ அறம் சார்ந்தவரே, கணவன் இறந்த பிறகு பெண்களால் ஆகப்போவது ஒன்றுமில்லை. கணவன் இறந்த பிறகு வாழ்பவள், துயர் நிறைந்த இருப்பையே வாழ்க்கையெனப் பெறுகிறாள்.(20) ஓ க்ஷத்திரிய குலத்தின் காளையே, கணவன் இல்லாத பெண்களுக்கு இறப்பே வரமாகும். நான் உமது பாதையிலேயே தொடர விரும்புகிறேன். என்னிடம் அன்புகூர்ந்து என்னையும் உம்மோடு அழைத்துச் செல்வீராக.(21) நீர் இல்லாத உலகத்தில் என்னால் ஒரு நொடியும் வாழ முடியாது. ஓ மன்னா, என்னிடம் அன்பு கொண்டு, விரைவாக என்னை அழைத்துக் கொள்வீராக.(22) ஓ மனிதர்களில் புலியே, நான் சமமான மற்றும் சமமற்ற தரைகளிலும் உம்மைத் தொடர்வேன். ஓ தலைவா, திரும்பிவராத இடத்திற்கு நீர் சென்றுவிட்டீர். நான் உம்மைத் தொடர்ந்து வருவேன்.(23) ஓ மன்னா! உமது நிழலைப் போல வருவேன். ஓ மன்னர்களில் புலியே, (உமது அடிமையைப் போல) நான் உமக்குக் கீழ்ப்படிந்து, உமக்கு ஏற்புடையதையும், உமக்கு நன்மையானதையும் எப்போதும் செய்வேன்.(24) ஓ தாமரை இதழ் போன்ற கண்களை உடையவரே, நீரில்லை ஆகையால், இன்றிலிருந்து மனத்துயரானது, என்னை மீறி எனது இதயத்தை உண்ணப் போகிறது.(25)

முந்தைய பிறவியில் ஏதோ அன்பான காதல் இணையரைப் பிரித்ததாலேயே இன்று நான் இந்தப் பாவகர வாழ்க்கையை வாழ நேர்ந்தது. நான் உமது பிரிவால் துயருறவே படைக்கப்பட்டிருக்கிறேன்.(26) ஓ மன்னா! தன் தலைவனிடம் இருந்து ஒரு நொடியாவது பிரிந்து வாழும் பாவியான அந்தப் பெண், துயர்வாழ்வு வாழ்ந்து, நரகத்தை இங்கேயே அனுபவிப்பாள்.(27) முந்தைய வாழ்வில் நான் நிச்சயம் ஓர் அன்பான இணையரைப் பிரித்திருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. அதன்காரணமாகவே நாம் உம்மைப் பிரிந்திருக்கும் இந்தச் சித்திரவதையை அனுபவிக்கிறேன்.(28,29) ஓ மன்னா! நான் இந்த நாளிலிருந்து, ஆடம்பரத்தை விடுத்து, உம்மை மறுபடியும் காணுவேன் என்ற நம்பிக்கையில் தரையில் குசப்புற்களை விரித்து, படுக்கப் போகிறேன். ஓ மனிதர்களில் புலியே, உம்மை என்னிடம் காட்டுவீராக. ஓ மன்னரே, ஓ தலைவரே, துயரால் அழுது கொண்டிருக்கும் பாவியான உமது மனைவிக்கு மறுபடியும் உத்தரவிடுவீராக" என்றாள் {பத்ரை}.(30)

குந்தி தொடர்ந்தாள், "ஓ மன்னா, இப்படியே அந்த அழகான பத்ரை தனது நாயகனின் மரணத்தால் துயருண்டு அழுதாள். இதயத்தின் துயரத்தால் அழுதுகொண்டிருந்த பத்ரை தனது கரத்தால் {தன் கணவனின்} சடலத்தை அணைத்துக் கொண்டாள்.(31)

அப்போது ஓர் உருவமில்லாத குரல், "ஓ பத்ரா, எழுந்து இந்த இடத்தை விட்டு அகன்று போ.  ஓ இனிய புன்னகையுடையவளே, நான் உனக்கு இந்த வரத்தை அளிக்கிறேன். நான் உன்னிடம் சந்ததியை உண்டாக்குவேன்.(32)  எட்டாவது அல்லது பதினாலாவது பிறை கொண்ட நாளில், உன் பருவகால குளியலைக் குளித்துவிட்டு, உனது படுக்கையில் என்னுடன் படுப்பாயாக" என்றது.(33)

உருவமற்ற அந்தக் குரலால் இவ்வாறு சொல்லப்பட்டவளும், கற்புடையவளுமான பத்ரை, பிள்ளையைப் பெறுவதற்காகத் தனக்குச் சுட்டப்பட்ட வழியின்படியே நடந்து கொண்டாள்.(34) ஓ பாரதர்களில் காளையே, அவளது {பத்ராவின்} கணவனின் {வியுஷிதாஸ்வனின்} சடலமானது, மூன்று சால்வர்கள் மற்றும் நான்கு மத்ரர்களைக் கொண்ட ஏழு பிள்ளைகளை அவளிடம் பெற்றது.(35) ஓ பாரதர்களில் காளையே, நீரும் என்னிடம் அந்தச் சிறப்பு மிகுந்த வியுஷிதாஸ்வனைப் போல, நீர் அடைந்திருக்கும் உமது ஆன்ம பலத்தால் பிள்ளைகளைப் பெறுவீராக" என்றாள் {குந்தி}.(36)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்