Saturday, June 15, 2013

"நான் முட்டாளா?" என்றாள் குந்தி - ஆதிபர்வம் பகுதி 124

Am I a fool?" asked Kunti! | Adi Parva - Section 124 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 60)

பதிவின் சுருக்கம் : பாண்டுவிடம் பேசிய மாத்ரி, மாத்ரிக்காகக் குந்தியிடம் பேசிய நகுலன்; நகுலன் மற்றும் சகாதேவன் பிறப்பு; பொறாமையடைந்த குந்தி; பாண்டவர்களுக்குப் பெயர் சூட்டல்; பாண்டவர்களின் வளர்ச்சி...

வைசம்பாயனர் சொன்னார், "குந்தியின் மகன்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும் பிறந்த பிறகு, மத்ர மன்னனின் மகள் {மாத்ரி} பாண்டுவிடம்,(1) "ஓ எதிரிகளைத் தண்டிப்பவரே, நீர் எனக்கு நன்மை செய்யவில்லையென்று நான் உம்மைக் குறைசொல்லவில்லை. ஓ பாவங்களற்றவரே, பிறப்பால் நான் குந்தியைவிட உயர்ந்தவளாக இருப்பினும், இருப்பு நிலவரத்தில் நான் தாழ்ந்தவளாகவே இருக்கிறேன் என்று குறைசொல்லவில்லை.(2) ஓ குரு குலத்தவரே, காந்தாரி நூறு மகன்களைப் பெற்றுவிட்டாள் என்றும் நான் கவலை கொள்ளவில்லை.(3) குந்தியும் நானும் இணையானவர்களாகவே இருந்தாலும் உமக்குக் குந்தியின் மூலமாக பிள்ளைகள் இருக்க, நான் பிள்ளையில்லாமல் இருப்பதே என் பெரும் துயராகும்.(4) குந்திபோஜனின் மகள் நான் பிள்ளைப்பேறடைய விட்டாள் என்றால், அவள், எனக்கு நன்மை செய்ததோடு மட்டுமல்லாமல் உமக்கும் நன்மை செய்ததாகவே இருக்கும்.(5) அவள் எனது சக்காளத்தியாக இருப்பதால், அவளிடம் எனது நன்மையைக் கருதச் சொல்ல என்னால் முடியவில்லை. ஓ மன்னரே, நீர் என்னிடம் அன்பாக இருப்பது உண்மையென்றால், அவளிடம் எனது விருப்பத்தை நிறைவேற்றச் சொல்வீராக" என்றாள்.(6)



இதைக் கேட்ட பாண்டு, "ஓ மாத்ரி, இந்த எண்ணம் எனது மனத்திலும் ஓடிக் கொண்டுதான் இருந்தது, ஆனால், நீ அதை எப்படி எடுத்துக் கொள்வாய் என்று நினைத்தே, அதை உன்னிடம் சொல்லவில்லை.(7) இப்போது உனது விருப்பதை அறிந்து கொண்டதால், நிச்சயம் முயற்சி செய்வேன். நான் கேட்டு குந்தி மறுக்க மாட்டாள் என்றே நினைக்கிறேன்" என்றான்".(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், அதன்பிறகு பாண்டு குந்தியிடம் தனிமையில், "ஓ குந்தி, என் குல வளர்ச்சிக்காகவும், உலகத்தின் நன்மைக்காகவும் எனக்கும் மேலும் சில பிள்ளைகளைக் கொடுப்பாயாக. ஓ அருளப்பட்டவளே, நானும், என் மூதாதையர்களும், ஏன் நீயும்கூட எப்போதும் ஈமப்பிண்டம் பெற எது வழிவகுக்குமோ அஃதை அளிப்பாயாக. ஓ, எனக்கு நன்மையானதைச் செய்து, உண்மையில் நன்மைகளில் சிறந்ததை எனக்கும் இந்த உலகத்திற்கும் கொடுப்பாயாக.(9,10) ஓ, அழியா புகழை அடையும் விருப்பத்தால் உந்தப்பட்டு, உனக்குக் கடுமையானதையும் செய்வாயாக. இந்திரன் தேவர்களின் அரசுரிமையை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே வேள்விகளைச் செய்வதைப் பார்.(11) ஓ அழகியே, பிராமணர்கள் வேதங்களை நன்கறிந்து கொண்டு, உயர்ந்த தவத்தகுதியை அடைந்துவிட்டாலும் கூட, புகழுக்காகவே தங்கள் ஆன்ம ஆசான்களை மரியாதையுடன் அணுகுகின்றனர்.(12) அதே போலவே, அரச முனிகள் அனைவரும், தவத்தை செல்வமாகக் கொண்ட பிராமணர்களும் சாதித்துவிட்டாலும், புகழுக்காகவே மிகக்கடினமான தவத்தை சாதனைகளைச் செய்கின்றனர்.(13) எனவே, ஓ பழியற்றவளே, ஒரு ஓடத்தைக் கொடுத்து (சந்ததியை அடைவதற்கான வழிகளை அருளி) இந்த மாத்ரியைக் காத்து, அவளைப் பிள்ளைகளுக்குத் தாயாகச் செய்து அழிவிலா புகழை அடைவாயாக" என்றான் {பாண்டு}.(14)

தனது தலைவனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட குந்தி, அதற்குச் சம்மதித்து மாத்ரியிடம், "நேரத்தையிழக்காமல், தேவர்களில் எவரையாவது நினைப்பாயாக. அவர் மூலமாக, அவரையே போன்ற பிள்ளையை நீ நிச்சயம் பெறுவாய்" என்றாள்.(15) மாத்ரி சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அசுவினி இரட்டையர்களை நினைத்தாள். அந்த அசுவினிகள் வேகமாக அவளிடம் வந்து, பூலோகத்தின் ஒப்பற்ற அழகர்களான நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களைப் பெற்றனர். அவர்கள் பிறந்த போது ஓர் அசரீரி,(16,17) "சக்தியிலும், அழகிலும் இந்த இரட்டையர்கள், அசுவினி இரட்டையர்களைக் காட்டிலும் மேலானவர்களாக இருப்பார்கள்." என்றது. அக்குழந்தைகள் பெரும் சக்தியும், அழகும் கொண்டு, அந்த மொத்தப் பகுதியையும் பிரகாசிக்கச் செய்தனர்.(18)

ஓ மன்னா! அந்தப் பிள்ளைகள் பிறந்த பிறகு, அந்த நூறு சிகரம் கொண்ட மலையில் வசித்த முனிவர்கள் அவர்களை வாழ்த்தி, அவர்களது பிறப்பிற்கான முதல் சடங்கைச் செய்து, அவர்களுக்கான பெயர்களைச் சூட்டினர்.(19) குந்தியின் மக்களில் மூத்தவன் யுதிஷ்டிரன் என்றும், இரண்டாமவன் பீமசேனன் என்றும், மூன்றாமவன் அர்ஜுனன் என்றும்,(20) மாத்ரியின் மக்களில் முதலில் பிறந்தவன் நகுலன் என்றும் அடுத்தவன் சகாதேவன் என்றும் அழைக்கப்பட்டனர்[1]. {அந்தப் பிராமணர்கள் இவ்வாறே மிகுந்த மகிழ்ச்சியோடு அவர்களுக்குப் பெயர்களைச் சூட்டினர்}.(21)

[1] யுதிஷ்டிரன் என்றால் "போரில் புறமுதுகிடாமல் உறுதியாக நிற்பவன்" என்றும், பீமசேனன் என்றால், "அனைவரும் அஞ்சத்தக்க படையை {சேனையைக்} கொண்டவன்" என்றும், அர்ஜுனன் என்றால், "குற்றமில்லாதவன்" என்றும், நகுலன் என்றால்,, "பாம்புகளுக்குக் கீரியைப் போலப் பகைவர்களுக்குப் பயங்கரமானவன்" என்றும், சகாதேவன் என்றால், "அன்னையிடம் வேற்றுமையின்றி பிற சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருப்பவன்" என்றும் பொருளாம்.

மைந்தர்களின் முதன்மையான அவர்கள், ஒருவருக்கொருவர் ஒரு வருட இடைவெளியில் பிறந்து ஐந்து வருடங்களின் முழு உருவமாகத் திகழ்ந்தனர்[2].(22) தேவர்களைப் போன்ற அழகும், அபரிமிதமான சக்தியும், பெரும் பலமும் வீரமும் கொண்டு ஆன்மாவில் பெரியவர்களாகவும் இருந்த தன் பிள்ளைகளைக் கண்டு மன்னன் பாண்டு மிகவும் மகிழ்ந்தான். நூறு சிகரம் கொண்ட அந்த மலையில் வசித்த முனிவர்களுக்கு அந்தப் பிள்ளைகள் பிடித்தமானவர்களாகினர்.(23,24)

[2] மன்மதநாததத்தரின் பதிப்பில், "குருக்களில் சிறந்தவர்களான அந்தப் பாண்டு மகன்கள் ஒவ்வொருவரும், ஒரு வயதாக இருக்கும்போதே ஐந்து வயது சிறுவர்களைப் போலத் தெரிந்தனர்" என்றிருக்கிறது. கும்பகோணம் பதிப்பில், "கௌரவ சிரேஷ்டர்களாகிய பாண்டுபுத்திரர்கள் ஒவ்வொரு வருஷத்திற்குப் பின் பிறந்தவராயினும் எல்லாரும் சிறந்த சுபாவமுள்ளவர்களும், மிகுந்த சக்தியுள்ளவர்களும், சிறந்த பலமும், பராக்ரமமுமுடையவர்களுமாக ஐந்து வருஷங்களானவர்கள் போல் விளங்கினர்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராயின் பதிப்பில் இது குறித்து எந்தக் குறிப்பும் இல்லை.

சில காலம் கழித்துப் பாண்டு மறுபடியும் குந்தியிடம் மாத்ரிக்காகப் பேசினான். ஓ மன்னா! தனிமையில் தனது தலைவனால் கேட்கப்பட்ட குந்தி,(25) "ஓ மன்னரே, ஒரு முறை அந்த மந்திரத்தைச் சொன்னதற்கே, அவள் இரு பிள்ளைகளைப் பெற்றுவிட்டாள். நான் அவளால் ஏமாற்றப்படவில்லையா?(26) அவள் என்னைவிட அதிகம் பிள்ளைகளைப் பெற்றுவிடுவாள் என்று நான் அஞ்சுகிறேன். நிச்சயமாக இதுவே தீய பெண்களின் வழியாகும். ஒரு முறை இரட்டை தேவர்களை அழைத்தால் ஒரே பிரசவத்தில் இரு பிள்ளைகளைப் பெற்றுவிடலாம் என்பதை அறியாத அளவுக்கு முட்டாளாயிருந்திருக்கிறேன்.(27) ஓ மன்னா! நான் உம்மை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு மேலும் கட்டளையிடாதீர். இதுவே நீர் எனக்குத் தரும் வரமாக இருக்கட்டும்" என்றாள்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே பாண்டுவுக்குப் பெரும் பலமுடைய ஐந்து பிள்ளைகள் தேவர்கள் மூலமாகப் பிறந்தனர். அவர்கள் அனைவரும் பெரும் புகழை அடையவும், குரு பரம்பரையை விரிவாக்கவும் செய்தனர். அனைவரும் தங்கள் மேனியில் அதிர்ஷ்டக்குறிகளைக் கொண்டு, சோமனைப் (சந்திரனைப்) போன்ற அழகுடனும்,(28,29) சிங்கத்தைப் போன்ற செருக்குடனும், சிங்கத்தைப் போன்ற நடை, மார்பு, கண்கள், கழுத்து மற்றும் வீரமும் பெற்று, வில்லைப் பயன்படுத்துவதில் நிபுணத்துவம் பெற்று[3], மனிதர்களில் முதன்மையானவர்களாக இருந்து, பலத்தில் தேவர்களைப் பிரதிபலித்து வளர்ந்தனர்.(30) பனி மூடியிருந்த அந்தப் புனிதமான மலையில் வசிக்கும் பெரும் முனிவர்கள், அக்குழந்தைகள் வளர்வது போலவே, அவர்களது அறங்களும் வளர்வதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர்.(31) குரு பரம்பரையை விரிவாக்கப்பிறந்த ஐந்து பாண்டவர்களும், திருதராஷ்டிரனின் நூறு மகன்களும், ஏரியில் வளரும் தாமரைக்கூட்டங்களைப் போல வேகமாக வளர்ந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(32)

[3] கும்பகோணம் பதிப்பில், பாண்டுவுக்கு மகன்கள் பிறந்ததைக் கேள்விப்பட்டு வசுதேவர் {கிருஷ்ணனின் தந்தை},  தம் புரோகிதரை அனுப்பி, சௌளம், உபநயனம், உபாகர்மம் ஆகியவற்றைச் செய்தார் என்றும், சர்யாதியின் மூத்த மகனான சுகன் என்ற மன்னன் சதசிருங்கத்தில் அப்போது இருந்ததாகவும், அவன் மூலமாகப் பாண்டவர்கள் பெரும் வில்வீரர்களானார்கள் என்றும், அவர்களுக்கு அவன் அனைத்து ஆயுதங்களையும் கொடுத்தான் என்றும், பீமன் கதாயுத்தத்திலும், யுதிஷ்டிரன் ஈட்டிப்போரிலும், நகுலன் சகாதேவர்கள் கத்தி கேடயங்களில் தேர்ந்தார்கள் என்றும், அதில் அர்ஜுனனை மட்டும் அந்தச் சுகன் தனக்கு நிகரானவனாகக் கருதினான் என்றும் இருக்கிறது.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்