Monday, June 17, 2013

பாண்டு மாத்ரி காமம்! - ஆதிபர்வம் பகுதி 125

The Lust of Pandu over Madri! | Adi Parva - Section 125 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 61)

பதிவின் சுருக்கம் : மாத்ரியிடம் மோகம் கொண்ட பாண்டு கலவியின் போதே இறந்தது; மாத்ரியும் அவனுடன் சிதையேறியது...

வைசம்பாயனர் சொன்னார்,[1] "மலைச்சரிவில் இருந்த கானகத்தில் தன் முன் வளர்ந்து வரும் தன் மகன்களைக் கண்ட பாண்டு, தனது பலம் மீட்டெடுக்கப்பட்டது போல உணர்ந்தான்.(1)



[1] கும்பகோணம் பதிப்பில் இதற்கு முன்பே சில குறிப்புகள் காணக் கிடைக்கின்றன, அவை பின்வருமாறு: "பாண்டவர்களின் ஆயுளைச் சொல்கிறேன்; கேளும். அஸ்தினாபுரம் போனபோது யுதிஷ்டிரருக்குப் பிராயம் பதினாறு; பீமசேனனுக்குப் பதினைந்து; அர்ஜுனனுக்குப் பதினான்கு; நகுலஸஹதேவர்களுக்குப் பதின்மூன்று. அந்த அஸ்தினாபுரத்தில் பதின்மூன்றுவருஷகாலம் த்ருதராஷ்டிர புத்ரர்களோடு வஸித்தனர். அரக்கு மாளிகையிலிருந்து விடப்பட்டு ஆறு மாஸமிருந்தனர். அப்போது கடோத்கசன் பிறந்தான். ஏகசக்ராநகரியில் ஆறு மாஸமிருந்தனர். பாஞ்சாலராஜன் கிருஹத்தில் ஒரு வருஷம் வஸித்தனர். பாரதரே! த்ருதராஷ்டிர புத்ரர்களுடன் கூட மறுபடியும் ஐந்து வருஷம் வாஸஞ்செய்து, பிறகு இந்திரப்பிரஸ்தத்தில் இருபத்துமூன்று வருஷம் வஸித்தனர். பிறகு, சூதாட்டத்தில் தோல்வியடைந்து பதின்மூன்று வருஷம் இருந்தனர். ராஜாவே! கிருஷ்ணயை {திரௌபதியை} ஆதாரமாகவுடைய அம்மஹாத்மாக்களனைவரும் கடல்சூழ்ந்த பூமியை முப்பத்தாறு வருஷம் ஆண்டு, அதன்பின் ஆறு மாஸங்களுக்குப் பிறகு பரிக்ஷித்துக்கு ராஜ்யபட்டாபிஷேகஞ்செய்து, தெய்வகதியையடைந்தனர். இவ்வாறு யுதிஷ்டிரருக்கு நூற்றெட்டு வருஷம் ஆயுளிருந்தது. சிறந்த மஹிமையுள்ள கிருஷ்ணபகவான் அர்ச்சுனனுக்கு மூன்று மாதம் பெரியவர். மஹாபலசாலியான பலராமர், கிருஷ்ணனுக்கு மூன்று மாதம் பெரியவர். அப்போது மிகுந்த பராக்ரமசாலியான பாண்டு சதச்ருங்க மலையில் காசியபரென்னும் புரோஹிதரோடும், தன் தேவிமார்களோடுங்கூட அந்த ஐந்து புத்ரர்களையும் பார்த்துக் கொண்டு மிகவும் மகிழ்வுற்றிருந்தான். வனங்களில் புஷ்பங்கள் மிகுதியாகவுள்ள சித்திரை வைகாசி மாதங்களாகிய வஸந்தகாலத்தின் ஆரம்பத்தில், புத்திசாலியான அர்ஜுனனுக்குப் பதினான்காவது பிராயம் நிரம்பி அவன் பிறந்த உத்தர பல்குனி நக்ஷத்திரம் வந்த தினத்தினால் ஸ்வஸ்திவாசனம் நடத்துவதிலும், பிராமணபோஜனம் செய்விப்பதிலும் பிரவிர்த்திருந்த குந்தியானவள், பாண்டு மஹாராஜாவைக் காப்பாற்றுகிற விஷயத்தில் மறந்திருந்தாள்; புரோகிதருக்கும், மற்ற ப் பிராமணர்களுக்கும் போஜனம் பரிமாரிக் கொண்டிருந்தாள். பிறகு, தன் கைவன்மையைச் சகாயமாகவுடைய பாண்டு, வனங்கள் செவ்வையாகப் புஷ்பித்து எல்லாப் பிராணிகளையும் மயங்கச் செய்வதாகிய சித்திரை வைகாசி மாதங்களாகிய வஸந்த காலத்தில் பெருங்காடடர்ந்த அழகான சதச்ருங்க மலையில் பார்ப்பதற்கினிய தன் புத்ரர்களான அந்த ஐவரையும் பார்த்துக் கொண்டே பாரியையுடன் வனத்தில் திரிந்தான்" என்றிருக்கிறது.

ஒரு நாள், அனைத்து உயிர்களையும் கிளர்ந்தெழச் செய்யும் ஒரு வசந்த காலத்தில், ஒவ்வொரு மரமும் புதிய இலைகளால் மலர்ந்திருக்கும் அந்த வனத்தில், அந்த மன்னன் தனது மனைவியுடன் (மாத்ரியுடன்) உலவிக் கொண்டிருந்தான்.(2) அந்தக் கானகத்தில் பலாசம், திலகம், மா, சம்பகம், பரிஹத்திரகம், கர்ணிகரம், அசோகம், கேசரம், அதிமுகம், கருவாகம் ஆகிய மரங்களில் பித்தம்பிடித்த வண்டுகளின் கூட்டம் ரீங்காரமிட்டபடி இருந்தன. மலர்ந்திருந்த பாரிஜாதம், கோகிலம் ஆகிய மலர்களில் வண்டுகள் அமர்ந்து இனிமையாக ரீங்காரம் இசைத்தன. பல்வேறு மரங்கள், தங்கள் பூக்கள் மற்றும் கனிகளின் கனத்தால் தாழ்ந்து இருந்ததைக் கண்டான்.(3-5) அங்கே, நூற்றுக்கணக்கான தாமரைகளுடன் பல குளங்களும் இருந்தன. இதையெல்லாம் கண்ட பாண்டு, காமத்தின் சிறு ஆதிக்கத்தை அவனுள் உணர்ந்தான்.(6)

அந்த அற்புதக் காட்சிகளின் மத்தியில், தேவர்களில் ஒருவனைப் போலப் பாரமற்ற இதயத்துடன் உலவிக்கொண்டிருந்த பாண்டு, அரை வெளிப்படையான மெல்லிய ஆடையை அணிந்திருந்த தனது மனைவி மாத்ரியுடன் தனிமையில் இருந்தான்.(7) இளமையான மாத்ரியின் உடுப்பைக் கண்ட மன்னனின் ஆசை காட்டுத்தீயைப் போலப் பற்றிக் கொண்டது.(8) அந்தத் தனிமையான கானகத்தில் தாமரை இதழ்களைப் போன்ற கண்களையுடைய தனது மனைவியைக் கண்டு ஆசையை அடக்க இயலாமல், அவன் காமத்தால் வெற்றிகொள்ளப்பட்டான்.(9) அந்த மன்னன் அவளது விருப்பத்திற்கு எதிராக அவளைப் பற்றி இழுத்தான். ஆனால், மாத்ரி பயத்தால் நடுங்கி, அவளால் முடிந்த வரை பலத்துடன் தடுத்துப் பார்த்தாள்.(10)

காமத்தால் உண்ணப்பட்ட பாண்டு, தனது துரதிர்ஷ்டத்தால் அனைத்தையும் மறந்தான். ஓ குரு பரம்பரையில் வந்தவனே, அந்த ஏகாதிபதி! விதிவசத்தால் முனிவரின் சாபத்தில் பயமற்று, ஆசையால் வெல்லப்பட்டுத் தானே தன் உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தவன் போல, வலுக்கட்டாயமாக மாத்ரியின் அணைப்பைப் பெற முற்பட்டான். புலன்களின் உணர்வில் மயங்கி, உணர்வை இழந்து, மரண  தேவனிடம் {காலனிடம்} தானே அகப்பட்டுக் கொண்டான்.(11-13)

அற ஆன்மா கொண்டவனான அந்தக் குருக்களின் மன்னன் பாண்டு, தனது மனைவியுடன் உறவு கொண்டவாறே, தவிர்க்க முடியாத காலத்தின் செல்வாக்கால் மாண்டு போனான்.(14) பிறகு மாத்ரி தனது தலைவனின் சடலத்தை அணைத்தவாறே ஓலமிட்டுக் கதறி அழுதாள்.(15) துயரமான அந்தக் கதறலைக் கேட்ட குந்தி, தனது மகன்களுடனும், மாத்ரியின் மகன்களுடனும், மன்னன் அப்படிக் கிடந்த பகுதிக்கு வந்தாள்.(16)

பிறகு ஓ மன்னா! மாத்ரி குந்தியிடம் பரிதாபகரமான குரலில், "ஓ குந்தி, இங்கே தனியாக வா, பிள்ளைகள் அங்கேயே இருக்கட்டும்" என்றாள்.(17)  இதைக் கேட்ட குந்தி, பிள்ளைகளை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு "எனக்குக் கேடு வந்தது" என்று சொல்லி, அழுதுகொண்ட வேகமாக ஓடினாள்.(18) பாண்டுவும் மாத்ரியும் தரையில் கிடந்த கோலத்தைக் கண்ட அவள், துயரத்தாலும் வருத்தத்தாலும்,(19) "ஓ மாத்ரி, ஆசையை முழுமையாக அடக்கி, இந்த வீரரைப் பாதுகாப்பாகக் காத்து வந்தேனே. முனிவரின் சாபத்தை மறந்து, காமத்துடன் உன்னை அவர் எப்படி அணுகினார்?(20) ஓ மாத்ரி, இந்த மனிதர்களின் முதன்மையானவர் உன்னால் காக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தனிமையில் நீ ஏன் அவரை மயக்கினாய்?(21) முனிவரின் சாபத்தால் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு உன்னிடம் தனிமையில் மகிழ்வாக இருக்க எவ்வாறு முடிந்தது?(22) ஓ பாஹ்லீக இளவரசியே {மாத்ரியே}, நமது தலைவனின் முகம் மகிழ்ச்சியால் நிறைந்திருந்ததை நீ கண்டாய், நீ என்னைவிட நற்பேறு பெற்றவள். இதற்காகவே நீ என்னால் எதிரியாகக் கருதப்பட வேண்டியவள்" என்றாள்.(23)

மாத்ரி, "மரியாதைக்குரிய சகோதரி, எனது கண்கள் கண்ணீரால் நிரம்ப, நான் மன்னரைத் தடுத்துப் பார்த்தேன். ஆனால் அவரால் தன்னை அடக்கிக் கொள்ள முடியவில்லை. முனிவரின் சாபத்தை மெய்யாக்க முற்படுவது போலவே அவரது செயல்பாடு இருந்தது" என்றாள்.(24)

குந்தி, "அவர் மணந்த மனைவியருள் நானே மூத்தவள், தலைமைத் தகுதி என்னுடையதே. எனவே, ஓ மாத்ரி, நான் அடைய வேண்டியதை அடைய விடாமல் தடுக்காதே. நான் நமது தலைவரை மரணத் தேவன் வசிக்கும் பகுதிக்கும் தொடர்ந்து செல்ல வேண்டும். ஓ மாத்ரி, எழுந்து, அவரது உடலை எனக்குக் கொடுப்பாயாக. இந்தக் குழந்தைகளை நீயே வளர்ப்பாயாக" என்றாள்.(25,26)

அதற்கு மாத்ரி, "நான் இன்னும் நமது தலைவனின் கட்டுக்குள் இருந்தும், அவரிடம் இருந்தும் பிரியாமல் இணைந்திருக்கிறேன். எனவே, நானே அவரைத் தொடர்வேன். எனது பசி {ஆசை} இன்னும் தணிவடையவில்லை. நீ எனக்கு மூத்த சகோதரி, எனவே, உனது ஏற்பை எனக்குக் கொடுப்பாயாக.(27) இந்தப் பாரதக் குல இளவரசர்களின் முதன்மையானவர் உறவுக்காக என்னை அணுகினார். அவரது பசியும் தணிவையடையவில்லை. நான் யமனின் உலகத்திற்குச் சென்றாவது அவரது பசியைத் தீர்க்க வேண்டாமா?(28) ஓ மரியாதைக்குரியவளே, உனக்குப் பதில் நான் பிழைத்து இருந்தால், நிச்சயமாக உனது பிள்ளைகளை எனது பிள்ளைகள் போல் கருதி வளர்க்க முடியாது. அதனால் எனக்குப் பாவம் சம்பவிக்காதா?(29) ஆனால் நீயோ, ஓ குந்தி, எனது பிள்ளைகளையும் உனது பிள்ளைகள் போல் வளர்ப்பாய். மன்னர், என்னை விரும்பியே பிதிர்களின் உலகத்தை அடைந்தார்.(30) எனவே, எனது உடலும் அவருடன் எரிக்கப்பட வேண்டும். ஓ மரியாதைக்குரிய சகோதரி, எனக்கு ஏற்புடைய இந்த விஷயத்தை மறுக்காதே.(31) நீ இந்தப் பிள்ளைகளை நிச்சயமாகக் கவனத்துடன் வளர்ப்பாய். அதுவே நீ எனக்குச் செய்யும் பெரும் நன்மையாகும். உனக்கு வேறேதும் சொல்ல எனக்குத் தெரியவில்லை" என்றாள்.( 32)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "மத்ர மன்னனின் மகளான அந்தப் பாண்டுவின் மனைவி இவ்வார்த்தைகளைச் சொல்லிவிட்டு, மனிதர்களில் காளையான தனது தலைவனின் ஈமச்சிதையில் ஏறினாள்" {என்றார் வைசம்பாயனர்}[2].(33)

[2] கும்பகோணம் பதிப்பில், மாத்ரி ஈமச்சிதையேறிய நிகழ்வு விரிவாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இதன்பிறகு, பாண்டு மாத்ரியின் உடல்கள் ஹஸ்தினாபுரத்திற்குக் கொண்டு செல்லும் செய்தியும் சொல்லப்படுகிறது. மாத்ரி ஈமச்சிதையேறியது இங்கே ஒரே ஸ்லோகத்தில் சொல்லப்படுகிறது. இந்த ஒரு ஸ்லோகம் ஐயத்திற்கிடமானதே.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்