Sunday, June 30, 2013

பீமனின் ஏளனமும் துரியோதனனின் கோபமும் - ஆதிபர்வம் பகுதி 139

Bhima's ridicule and Duryodhana's wrath | Adi Parva - Section 139 | Mahabharata In Tamil

(சம்பவ பர்வம் - 75)

பதிவின் சுருக்கம் : கர்ணனின் வளர்ப்புத்தந்தையான அதிரதன் அரங்கினுள் நுழைந்தது; தேரோட்டி மகனென கர்ணனைக் கேலி பேசிய பீமன்; பீமனை அதட்டிய துரியோதனன்; கர்ணனைக் கரம்பற்றி அழைத்துச் சென்ற துரியோதனன்…

Bhima's ridicule and Duryodhana's wrath | Adi Parva - Section 139 | 
Mahabharata In Tamil
வைசம்பாயனர் தொடர்ந்தார், "அதன்பிறகு, மேலாடை நழுவிய நிலையில், வேர்த்து விறுவிறுத்து நடுக்கத்துடன் ஒரு கோலை ஊன்றித் தன்னைத் தாங்கிக் கொண்டு ஓர் அதிரதன் {தேரோட்டி} அந்த அரங்கத்தினுள் வந்தான்.(1) அவனைக் கண்டதும், பட்டமேற்பினால் நனைந்திருந்த தலையுடன் இருந்த கர்ணன், தனது வில்லைவிட்டு, மகனுக்குரிய மரியாதையுடன் தலைவணங்கினான் {அவனது பாதங்களில் தன் தலையை வைத்தான்}.(2) அந்தத் தேரோட்டி பரபரப்புடன் தனது பாதங்களை ஆடையால் மூடிக் கொண்டு, வெற்றி மகுடம் சூடிய கர்ணனை "மகனே!" என்று அழைத்தான்.(3) மேலும் அவன் அன்பின் மிகுதியால் கர்ணனை ஆரத்தழுவிக் கொண்டு, அங்கதேசத்தின் மன்னனாக முடிசூடப்பட்டு நனைந்திருந்த அவன் தலையில், தனது கண்ணீரைப் பனித்துளியாக்கி மேலும் நனைத்தான்.(4)

அந்தத் தேரோட்டியைக் கண்ட பாண்டவ பீமன், கர்ணனை தேரோட்டியின் மகனாகக் கருதி, ஏளனமாக,(5) “ஓ! தேரோட்டி மகனே, பார்த்தனின் கைகளால் மரணத்தைப் பெறும் தகுதி உனக்கில்லை. உனது குலத்துக்கு ஏற்ற வகையில் சாட்டையை {சவுக்கை} உடனே எடுத்துக் கொள்வாயாக.(5) ஓ! மனிதர்களில் தாழ்ந்தவனே, வேள்வி நெருப்பினருகில் இருக்கும் நெய்யைப் பெற ஒரு நாய்க்கு எவ்வாறு தகுதியில்லையோ, அவ்வாறே அங்கநாட்டை ஆட்சி செய்ய உனக்கும் தகுதியில்லை" என்றான்.(6)

இப்படிச் சொல்லப்பட்ட கர்ணன், நடுங்கும் உதடுகளுடன், பெருமூச்சுவிட்டுக்கொண்டு, வானிலிருக்கும் பகலவனைக் {சூரியனைக்} கண்டான்.(8) தாமரைக்கூட்டத்திற்கு இடையிலிருந்து மதம்பிடித்த யானை எழுவது போலத் தனது சகோதரர்களுக்கு மத்தியில் இருந்து கோபத்துடன் எழுந்த துரியோதனன்,(9) பயங்கரச் செயல்களைப் புரியும் பீமசேனனிடம், “ஓ! விருகோதரா {பீமா}, இது போன்ற வார்த்தைகளைப் பேசுவது உனக்குத் தகாது.(10) பலமே க்ஷத்திரியனுக்கு இதயப்பூர்வமான அறமாகும். பிறப்பால் தாழ்மையுற்றிருப்பினும், போர்புரியத் தகுதி வாய்ந்தவன் க்ஷத்திரியனே. தெய்வீக ஆறுகளின் தோற்றுவாயும் {பிறப்பிடமும்}, பெரும் வீரர்களின் மூலமும் {பிறப்பிடமும்}, எப்போதும் அறியப்படுவதில்லை.(11) உலகத்தையே சுட்டெரிக்கும் நெருப்பு, நீரிலிருந்தே எழுகிறது. தானவர்களைக் கொல்லும் இடி {வஜ்ரம்} ததீச முனிவரின் எலும்பால் ஆனது.(12) சிறப்பு மிகுந்த குஹதேவன் {முருகன்}, பல தேவர்களின் பகுதிகளைக் கொண்டு பிறந்ததால், அவனது மூலம் யாருக்கும் தெரியாது. சிலர் அவனை அக்னியின் மகன் என்றும், சிலர் கிருத்திகையின் மகனென்றும், சிலர் ருத்திரனின் மகன் என்றும், சிலர் கங்கையின் மகனென்றும் சொல்கின்றனர்.(13)

க்ஷத்திரியர்களாகப் பிறந்தவர்கள் பிராமணர்களாக ஆனதைப் பற்றி நாம் கேள்விப்படுகிறோம். விஷ்வாமித்திரரும், மற்றவர்களும் (மற்ற க்ஷத்திரியர்களும்) நித்தியமான பிரம்மத்தை அடைந்துள்ளனர்.(14) ஆயுதம் தாங்கியவர்களில் முதன்மையான நமது குரு துரோணர் நீர்க்குடத்தில் பிறந்தவர், கோதம {கௌதம} குலத்தில் பிறந்த கிருபர் நாணற்கட்டிலிருந்து உதித்தவர்.(15) பாண்டவர்களே, உங்கள் பிறப்பைக் குறித்தும் நான் அறிவேன். சூரியனைப் போன்ற பிரகாசத்துடன் அனைத்து அதிர்ஷ்டக்குறிகளையும் கொண்டு, இயற்கைக் கவசமும், காதுகுண்டலங்களும் கொண்ட (கர்ணனைப் போன்ற) ஒரு புலியை ஒரு பெண்மானால் பெற முடியுமா?(16) இந்த இளவரசன், தனது கரத்தின் பலத்தாலும், அவன் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அவனது ஆணைக்குக் கீழ்ப்படிய நான் ஏற்றிருக்கும் உறுதியாலும், அவன் அங்கதேசத்தை மட்டுமல்ல, முழு உலகத்தின் மனிதர்களையும் ஆளும் தகுதி உடையவன்.(17) நான் கர்ணனுக்குச் செய்திருக்கும் இந்தக் காரியத்தைப் பொறுக்காத எவரும் இங்கே இருந்தால், அப்படிப்பட்டவன் தனது காலின் உதவியால் தேரில் ஏறி, வில்லை வளைக்கட்டும்" என்றான்”.(18)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "துரியோதனனின் பேச்சை அங்கீகரிப்பது போலப் பார்வையாளர்கள் மத்தியில் குழப்பமான முணுமுணுப்பு எழுந்தது. சரியாக அந்த நேரத்தில் கதிரவனும் மறைந்தான்.(19) அப்போது, கர்ணனின் கரங்களைப் பற்றிக் கொண்ட துரியோதனன், எண்ணற்ற விளக்குகளின் வெளிச்சத்தில் அவனை வெளியே அழைத்துச் சென்றான்.(20) ஓ! மன்னா, துரோணர், கிருபர், பீஷ்மர் ஆகியோர் புடைசூழப் பாண்டவர்களும் தங்கள் வசிப்பிடத்திற்குத் திரும்பினர்.(21)

அங்கிருந்த மக்களில் சிலர் "அர்ஜுனனே வெற்றியாளன்” என்றும், சிலர் கர்ணனே வெற்றியாளன்!" என்றும், சிலர் "துரியோதனனே வெற்றியாளன்!" என்றும் பேசிக்கொண்டு திரும்பினர்.(22) கர்ணனிடம் சில மங்கலக்குறிகளைக் கண்ட குந்தி, அவனைத் தனது மகனாக அடையாளம் கண்டுகொண்டாள். அங்கதேசத்தின் அரசுரிமையைத் தன் மகன் அடைந்ததைக் கண்டு, தாய்ப்பாசத்தால் மிகவும் மகிழ்ந்து போனாள்.(23) ஓ! ஏகாதிபதியே, கர்ணனை இவ்வழியில் அடைந்த துரியோதனன், அர்ஜுனனின் ஆயுதத்திறமை மீது கொண்டிருந்த அச்சத்திலிருந்து விடுபட்டான்.(24) ஆயுதத் திறமை கொண்ட வீரனான அந்தக் கர்ணன், தனது இனிமையான பேச்சால் துரியோதனனை மனநிறைவு கொள்ளச் செய்தான். அதேவேளையில் யுதிஷ்டிரன், கர்ணனுக்கு நிகரான போராளி இந்த உலகத்திலேயே இல்லை என்று நம்பத் தொடங்கினான்” {என்றார் வைசம்பாயனர்}.(25)



ஆதிபர்வம் பகுதி 139ல் உள்ள சுலோகங்கள் : 25
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்