Wednesday, July 17, 2013

யுதிஷ்டிரன் துயரம் - ஆதிபர்வம் பகுதி 152

The sorrow of Yuthishthira | Adi Parva - Section 152 | Mahabharata In Tamil

(ஜதுக்கிரகப் பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : வாரணவத மக்கள் பாண்டவர்கள் இறந்ததாகக் கருதியது; திருதராஷ்டிரனுக்கு செய்தியைச் சொல்லியனுப்பிய மக்கள்; பாண்டவர்களுக்கு நீர்க்கடன் செலுத்தச் சொன்ன திருதராஷ்டிரன்; யுதிஷ்டிரன் அடைந்த துயரம்...

The sorrow of Yuthishthira
Adi Parva - Section 152 | Mahabharata In Tamil
வைசம்பாயனர் சொன்னார், "இரவு கழிந்ததும், நகரத்து மக்கள் பெருமளவில் கூடி பாண்டுவின் மைந்தர்களைக் காண வந்தனர்.(1) எரிந்து போன அவ்வீடு அரக்கைக் கொண்டு கட்டப்பட்டது என்பதையும், அதைக் கட்டிய (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து இறந்தான் என்பதையும் நெருப்பை அணைத்த பிறகு அம்மக்கள் அறிந்தனர்.(2)

அவர்கள், "பாண்டவர்களின் அழிவுக்காகப் பாவியான துரியோதனன் ஏற்படுத்திய திட்டமே இஃது என்பது நிச்சயம்.(3) திருதராஷ்டிரனுக்குத் தெரிந்தே பாண்டுவின் வாரிசுகளைத் துரியோதனன் கொன்றிருக்கிறான் என்ற சிறு சந்தேகமும் எழுகிறது. இல்லையென்றால் அவ்விளவரசன் தனது தந்தையால் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.(4) சந்தனுவின் மைந்தன் பீஷ்மர், துரோணர், விதுரன், கிருபர் மற்றும் மற்ற கௌரவர்கள் ஆகியோர், தங்கள் கடமைகளைச் சரிவரச் செய்ய வில்லை என்ற சிறு சந்தேகமும் எழுகிறது.(5) சரி இனி, "உனது பெரும் விருப்பம் ஈடேறியது! நீ பாண்டவர்களை எரித்துவிட்டாய்" என்று திருதராஷ்டிரனுக்குச் சொல்லி அனுப்புவோம்" என்று தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர்.(6)



அப்போது, பாண்டவர்களை அடையாளம் காணச் சிலரை அனுப்பினர். அவர்கள் அந்த அப்பாவி நிஷாதப் பெண்மணியும், அவளது ஐந்து மகன்களும் எரிந்து கிடப்பதைக் கண்டனர்.(7) விதுரனால் அனுப்பப்பட்ட சுரங்க நிபுணன் {கனகன்}, எவரும் அறியாவண்ணம், சாம்பலை அகற்றி, அவன் தோண்டியிருந்த சுரங்கக் குழியில் அவற்றைப் போட்டு அதை மறைத்தான்.(8) அந்நகரக் குடிமக்கள், பாண்டவர்களும், (துரியோதனனின்) அமைச்சன் புரோசனனும் எரிந்து போய் இறந்ததாகத் திருதராஷ்டிரனுக்குச் சொல்லியனுப்பினர்.(9) பாண்டவர்கள் இறந்த தீய செய்தியைக் கேட்ட மன்னன் திருதராஷ்டிரன் பெரும் துயர் கொண்டு அழுதான்.(10)

அவன் {திருதராஷ்டிரன்}, "இந்த வீர மைந்தர்கள் தங்கள் தாயுடன் எரிந்து போனதால், பெரும் புகழ் கொண்டவனும் எனது தம்பியுமான மன்னன் பாண்டு, இன்றுதான் இறந்து போனான். இது நிச்சயம்.(11) மக்களே, வேகமாக வாரணாவதம் சென்று அவ்வீரர்களுக்கும் {பாண்டவர்களுக்கும்}, குந்திபோஜனின் மகளுக்கும்  {குந்திக்கும்} ஈமச்சடங்குகளைச் செய்யுங்கள்.(12) அவர்களது எலும்புகளைக் கொணர்ந்து அதற்குத் தகுந்த சடங்குகளைச் செய்யுங்கள். அவர்களது நன்மைக்கான எல்லாச் செயல்களையும் செய்யுங்கள். எரிந்து போனவர்களின் நண்பர்களும் உறவினர்களும் அங்கே செல்லட்டும்.(13) பாண்டவர்களுக்காகவும், குந்திக்காகவும் இச்சூழலில் செய்ய வேண்டிய நற்கருமங்கள் அனைத்தும் தொடங்கட்டும்" என்றான்.(14)

உறவினர்களால் சூழப்பட்ட அம்பிகையின் மைந்தன் திருதராஷ்டிரன், இதைச் சொல்லிவிட்டுப் பாண்டுவின் மகன்களுக்கு நீர்க்கடன் செலுத்தினான்.(15) அனைவரும் சோகத்தால் தாக்குண்டு சத்தமாக, "ஓ! யுதிஷ்டிரா, ஓ! குரு குலத்தின் இளவரசா!" என்று கதறி அழுதனர். அதே வேளையில் மற்றவர்கள், “ஓ! பீமா!,(16) ஓ! பல்குனா!" என்றும், வேறு சிலர், “ஓ! இரட்டையர்களே!, ஓ! குந்தி!" என்றும் கதறி அழுது தங்கள் நீர்க்கடன்களைச் செலுத்தினர்.(17) பாண்டவர்களுக்காக அந்நாட்டுக் குடிமக்கள் அழுதனர், ஆனால், உண்மையை அறிந்திருந்ததால், விதுரன் அதிகமாக அழவில்லை[1].(18)

[1] கும்பகோணம் பதிப்பில் இந்த இடத்தில் பீஷ்மர் மிகவும் துக்கமடைந்ததாகவும், பாண்டவர்களுக்காகக் கதறி அழுததாகவும், அவரைத் தேற்றுவதற்காக விதுரன், பாண்டவர்கள் உயிரோடிருக்கும் செய்தியை அவருக்குச் சொன்னதாகவும், பீஷ்மர் விதுரனைப் பாராட்டுவதாகவும் செய்திகள் இருக்கின்றன.

அதேவேளையில், பெரும் பலம் வாய்ந்த பாண்டவர்கள், தங்கள் தாயுடன் சேர்ந்து ஆறு பேராக வாரணாவத நகரத்தை விட்டு அகன்று கங்கைக் கரைக்கு வந்தனர்.(19) படகோட்டியின் கரபலத்தாலும், நதியின் வேகமான ஓட்டத்தாலும், சாதகமாக வீசிய காற்றினாலும், விரைவாகக் கங்கையின் மறுகரையை அடைந்தனர்.(20) அவர்கள் அப்படகை விடுத்து, இருட்டில் நட்சத்திரங்களின் வெளிச்சத்தில் தங்கள் வழியைக் கண்டுபிடித்துத் தென்திசையில் முன்னேறிச் சென்றனர்.(21) ஓ! மன்னா {ஜனமேஜயா}, பெரும் துன்பத்திற்கிடையில் கடைசியாக அவர்கள் அடர்ந்த கானகத்தை அடைந்தனர். அவர்கள் களைத்துப் போய், தாகத்தால் நாவறண்டு இருந்தனர்.  உறக்கம் அவர்களது கண்களை ஒவ்வொரு நொடியும் மூடியது.(22) பின்பு யுதிஷ்டிரன், வலிமைமிக்கவனான பீமசேனனிடம் "இதைவிட வலி நிறைந்தது என்ன இருக்க முடியும்? நாம் இப்போது ஆழ்ந்த கானகத்திற்குள் இருக்கிறோம். நமக்குத் திசைகள் தெரியவில்லை. மேற்கொண்டு நகரவும் முடியவில்லை.(23) பாவி புரோசனன் இறந்துவிட்டானா? இல்லையா? என்பதும் நமக்குத் தெரியவில்லை. நாம் மற்றவர்களுக்குத் தெரியாமல் எப்படி இந்த ஆபத்துகளிலிருந்து தப்பப் போகிறோம்?(24) ஓ! பாரதா {பீமா}, முன்பு போலவே எங்களைச் சுமந்து கொண்டு முன்னேறுவாயாக. நம்மில் நீயே பலவானும், காற்றைப் போல் வேகமாக நகர்பவனும் ஆவாய்" என்றான்.(25)

யுதிஷ்டிரனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டவனும், பெரும் பலம் வாய்ந்தவனுமான பீமசேனன், குந்தியையும், அவனது சகோதரர்களையும் தூக்கிக் கொண்டு, வேகமாக நடந்து முன்னேறிச் சென்றான்.(26)


ஆதிபர்வம் பகுதி 152ல் உள்ள சுலோகங்கள் : 26
ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்