Who is that Vasishta? | Adi Parva - Section 175 | Mahabharata In Tamil
(சைத்ரரத பர்வத் தொடர்ச்சி)
கந்தர்வன் தொடர்ந்தான், "இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.
அவனது அமைச்சர்களும் தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடி, கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். அந்த தனிமையான இடத்தில் வானத்திலிருந்து விழுந்த வானவில்லைப் போல கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது பிரதம மந்திரி நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனை தூக்கினார். வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், அந்த ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, அந்த மன்னனிடம் "ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!" என்று சொல்லி இனிமையாகப் பேசத் துவங்கினார். பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார். பிறகு அந்த வயது முதிர்ந்தவர், அந்த ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்து, தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார்.
கந்தர்வன் தொடர்ந்தான், "இதைச் சொன்ன களங்கமற்ற தபதி, வானத்தில் உயர்ந்து சென்றாள். அதன்காரணமாக அந்த ஏகாதிபதி மறுபடியும் பூமியில் விழுந்தான்.
அவனது அமைச்சர்களும் தொண்டர்களும் அவனைக் கானகம் முழுவதும் தேடி, கடைசியாக, அவன் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்தனர். அந்த தனிமையான இடத்தில் வானத்திலிருந்து விழுந்த வானவில்லைப் போல கைவிடப்பட்டு விழுந்து கிடந்த அந்த அருமையான மன்னனைக் கண்ட அவனது பிரதம மந்திரி நெருப்பால் சுடப்பட்டது போல் துடித்தார். அந்த அமைச்சர், பாசத்தோடும் மரியாதையோடும், அன்பின் காரணமாக மதி மயங்கி விழுந்து கிடந்த அந்த ஏகாதிபதிகளில் சிறந்தவனை தூக்கினார். வயதைப் போலவே சாதனைகளிலும், ஞானத்திலும் முதிர்ந்த அந்த அமைச்சர், அந்த ஏகாதிபதியை நிமிர்த்தியவுடன் நிம்மதியடைந்து, அந்த மன்னனிடம் "ஓ பாவங்களற்றவனே! நீ அருளப்பட்டிரு! ஓ மன்னர்களில் புலியே, நீ அஞ்சாதே!" என்று சொல்லி இனிமையாகப் பேசத் துவங்கினார். பசியாலும், தாகத்தாலும், களைப்பாலேயுமே அவன் அப்படித் தரையில் விழுந்து கிடைந்ததாக அந்த அமைச்சர் நினைத்தார். பிறகு அந்த வயது முதிர்ந்தவர், அந்த ஏகாதிபதியின் முடிதரித்த தலையில் குளிர்ந்த நீரைத்தெளித்து, தாமரை இதழ்களைக் கொண்டு அவனை மூர்ச்சை தெளிவித்தார்.
மெதுவாக சுயநினைவை அடைந்த அந்தப் பெரும்பலம் வாய்ந்த ஏகாதிபதி, தனது அமைச்சர் ஒருவரைத் தவிர மற்ற பணியாட்கள் அனைவரையும் அங்கிருந்து அனுப்பிவிட்டான். அப்படி அந்தப் பணியாட்கள் சென்றதும். அந்த மன்னன் மலையின் மார்பில் அமர்ந்தான். தன்னைச் சுத்திகரித்துக் கொண்ட அம்மன்னன், மலைகளில் முதன்மையான மலையில் அமர்ந்து, தனது கரங்களைக் குவித்து, முகத்தை உயர்த்தி சூரியனை வழிபட்டான். எதிரிகளைத் தாக்கும் அந்த மன்னன் சம்வர்ணன், முனிவர்களில் சிறந்த தனது தலைமைப் புரோகிதர் வசிஷ்டரையும் நினைத்தான். அந்த மன்னன் இரவும் பகலுமாகத் தொடர்ந்து இடைவெளியில்லாமல் அங்கேயே அமர்ந்து தியானித்தான். பனிரெண்டாவது நாளில் அந்த அந்தண முனிவர் வசிஷ்டர் அங்கே வந்தார். தபதியினால் உணர்விழந்த அந்த ஏகாதிபதியின் நிலையைத் தனது ஞானப்பார்வையால் உணர்ந்தார் அந்தப் பெரும் முனிவர். எப்போதும் நோன்பு நோற்கும் அந்த ஏகாதிபதிக்கு நன்மை செய்ய விரும்பிய முனிவர்களில் சிறந்த அந்த அறம்சார்ந்தவர் அவனிடம் அனைத்து உறுதிகளையும் அளித்துப் பேசினார்.
அச்சிறப்புமிகுந்த முனிவர், அந்த ஏகாதிபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேலே எழும்பி வானத்தில் பிரகாசத்துடன் இருந்த சூரியனிடம் பேசினார்.
ஆயிரம் கதிர்கள் கொண்ட சூரியனை, அந்த அந்தணர் அணுகி, மகிழ்ச்சிகரமாக, "நான் தான் வசிஷ்டன்." என்றார்.
பிறகு பெரும் சக்தி கொண்ட அந்த விவஸ்வத் {சூரியன்} அந்த முனிவர்களில் சிறந்தவரிடம், "ஓ பெரு முனியே, நீர் வரவேற்கப்படுகிறீர் {உமது வரவு நல்வரவாகட்டும்}, உமது மனதில் என்ன இருக்கிறது என்று எனக்குச் சொல்லும். ஓ பெரும் நற்பேறுபெற்றவரே, நீர் என்னிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறீர், நாநலமிக்கவர்களில் முதன்மையானவரே, நீர் எவ்வளவு கடுமையான ஒன்றைக் கேட்டாலும் நான் அதை உமக்கு அளிக்கிறேன்!" என்றான். இப்படி சூரியனால் சொல்லப்பட்ட அந்த பெரும் ஆன்மத்தகுதி கொண்ட அந்தப் பெரும் முனிவர், அந்த ஒளிக்கடவுளை வணங்கி, "ஓ விபாவசு, இது உனது மகளான தபதி, இவள் சாவித்ரியின் இளைய சகோதரி, நான் இவளை சம்வர்ணனுக்காக உன்னிடம் கேட்கிறேன்! அந்த ஏகாதிபதி பெரும் சாதனைகள் செய்தவன், அறம் தவறாத உயர்ந்த ஆன்மா கொண்டவன். ஓ விண்ணதிகாரியே, சம்வர்ணன் உனது மகளுக்குத் தகுதியுடைய கணவனாக இருப்பான்." என்றார்.
அந்த முனிவரால் இப்படிச் சொல்லப்பட்ட விபாகரன் {சூரியன்}, தனது மகளைச் சம்வர்ணனுக்கு அளிக்கத் தீர்மானித்து, அந்த முனிவரை வணங்கி, "சம்வர்ணன் ஏகாதிபதிகளில் சிறந்தவனாவான், நீர் முனிவர்களில் சிறந்தவராவீர், தபதி பெண்களில் சிறந்தவளாவாள். சம்வர்ணனுக்கு அவளை அளிப்பதைத் தவிர, இதில் நாம் செய்ய என்ன இருக்கிறது?" என்று சொன்ன தேவன் தபனன் {சூரியன்}, களங்கமற்ற தனது மகள் தபதியை சம்வர்ணனுக்கு அளிப்பதற்காக, சிறப்புமிகுந்த வசிஷ்டரிடம் கொடுத்தான். அந்தப் பெரும் முனிவர், அந்த மங்கை தபதியை ஏற்றுக் கொண்டு, சூரியனிடம் விடைபெற்றுக் கொண்டு, குருகுலத்தின் காளை {சம்வர்ணன்} அமர்ந்திருந்த இடத்திற்குத் திரும்பினார். காதலால் கட்டுண்டு, தபதியிடம் இதயத்தை நிலைக்கச் செய்து இருந்த அம்மன்னன் சம்வர்ணன், வசிஷ்டருடன் வந்து கொண்டிருந்த அந்த தேவமங்கையைக் கண்டு மிகவும் மகிழ்ந்தான். அழகான புருவங்கள் கொண்ட அந்த தபதி மேகத்திலிருந்து மின்னல் இறங்குவது போல வானத்திலிருந்து சொர்க்கத்தின் பத்து புள்ளிகளையும் கிறங்கடித்து இறங்கினாள். அந்த ஏகாதிபதியின் பனிரெண்டு இரவு நோன்பு முடிந்ததும், புனிதமான ஆன்மா கொண்ட அந்த சிறப்பு மிகுந்த முனிவர் வசிஷ்டர் அவனை அணுகினார். இப்படியே மன்னன் சம்வர்ணன் முழு மதியைப் போல வணங்கிய பிறகு தனது மனைவியை அடைந்தான்." என்றான் கந்தர்வன்.
குரு பரம்பரையின் முதன்மையான அந்தப் பெரும் பலம் வாய்ந்த வில்லாளி {அர்ஜுனன்}, கந்தர்வனிடமிருந்து வசிஷ்டரின் ஆன்ம சக்தியைக் கேட்டறிந்த பிறகு, அது குறித்து மேலும் அறிய ஆவல் கொண்டான். அந்த ஆவலால், கந்தர்வனிடம், "வசிஷ்டர் என்று நீர் சொன்ன முனிவரைப் பற்றி நான் அறிய விரும்புகிறேன். அவரைக் குறித்து முழுமையாக எனக்குச் சொல். ஓ கந்தர்வர் தலைவனே, எங்கள் மூதாதையர்களுக்கு புரோகிதராக இருந்த அந்தச் சிறப்பு மிகுந்த முனிவர் யார் என்பதையும் சொல்." என்று கேட்டான்.
அதற்கு அந்தக் கந்தர்வன், "வசிஷ்டர் பிரம்மனின் ஆன்ம மகனும் (மனதால் பிறந்தவர்) அருந்ததியின் கணவரும் ஆவார். தேவர்களாலும் கட்டுப்படுத்த முடியாத ஆசை மற்றும் கோபத்தைத் தனது ஆன்ம நோன்புகளால் வெற்றி கொண்டு, அவை {ஆசையும் கோபமும்} அவரது கால்களைப் பிடித்துவிடும்படி வாழ்வை அமைத்துக் கொண்டவர். விசுவாமித்ரர் செய்த குற்றத்தினால் அவரது கோபம் தூண்டப்பட்டாலும், அந்த உயர் ஆன்ம முனிவர் கௌசிகர்களைக் (மன்னன் விசுவாமித்ரரின் இனக்குழுவை{குலத்தை}) கொல்லாதிருந்தார். தனது மகன்களை இழந்து துயருற்ற போதும், தன்னை சக்தியற்றவராகக் கருதிக் கொண்டு, தான் அப்படியில்லையென்றாலும், விஸ்வாமித்ரருக்கு அழிவு உண்டாகும்படி எக்காரியத்தையும் செய்யாமல், சமுத்திரம் கலங்கினாலும் கண்டங்கள் கலங்காததுபோல இருந்தார். வசிஷ்டர் தனது பிள்ளைகளை மரணதேவன் பகுதியில் இருந்து மீட்டு யமனை (யம {தர்ம} நீதியை) மீறிச் செயல்படவில்லை. தன்னையே வெற்றி கொண்ட அந்தச் சிறப்பு மிகுந்தவரை அடைந்ததால்தான், இக்ஷவாகுவாலும் மற்ற பெரும் ஏகாதிபதிகளாலும் முழு உலகத்தையும் அடைய முடிந்தது.
ஓ குருகுல இளவரசனே {அர்ஜுனா}, முனிவர்களில் சிறந்த வசிஷ்டரை புரோகிதராக அடைந்ததால்தான், அந்த ஏகாதிபதிகளால் பெரும் வேள்விகளைச் செய்ய முடிந்தது. ஓ பாண்டவர்களில் சிறந்தவனே {அர்ஜுனா}, மறுபிறப்பாளரான அந்த முனிவர், தேவர்களுக்கு பிருஹஸ்பதி உதவுவது போல, அந்த ஏகாதிபதிகள் வேள்வி செய்யத் துணை புரிந்தார். ஆகையால், இதயத்தில் அறம் நிலைத்த, வேதமறிந்த நல்ல அந்தணனைப் புரோகிதனாக உங்களுக்கு நியமித்துக் கொள். ஓ பார்த்தா {அர்ஜுனா}, பூமியை வெற்றி கொண்டு, தனது எல்லையை விரிவுபடுத்திக் கொள்ள விரும்பும் நல்ல குலத்தில் பிறந்த க்ஷத்திரியன், முதலில் நல்ல புரோகிதரை நியமித்துக் கொள்ள வேண்டும். உலகத்தை வெற்றிகொள்ள நினைப்பவன் எவனோ, அவன் ஒரு பிராமணனைத் தன் முன் கொண்டிருக்க வேண்டும். ஆகையால், ஓ அர்ஜுனா, அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை அறிந்து, புலன்களைத் தனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு தகுதிவாய்ந்த கற்ற பிராமணரை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்." என்று சொன்னான்.
![]() |
![]() |
![]() |