Thursday, August 15, 2013

பிராமணத்தியின் சாபம்! - ஆதிபர்வம் பகுதி 184

The Curse of the Brahmini! | Adi Parva - Section 184 | Mahabharata In Tamil

(சைத்ரரதப் பர்வம் - 18)

பதிவின் சுருக்கம் : கல்மாஷபாதனின் மனைவியிடம் வசிஷ்டர் ஏன் சேர்ந்தார் என்று அர்ஜுனன் கேட்டது; பிராமணத்தியின் சாபம் குறித்து கந்தர்வன் உரைத்தது...

அர்ஜுனன், "ஓ கந்தர்வா, மன்னன் கல்மாஷபாதன், வேதங்கள் அறிந்த மனிதர்களில் முதன்மையானவரான குரு வசிஷ்டரிடம் செல்லுமாறு, தனது ராணிக்கு {மனைவிக்கு}, எதற்காகக் கட்டளையிட்டான்?(1) அறநெறிகள் அனைத்தும் அறிந்த அந்தச் சிறப்புமிகுந்த பெரும் முனிவர் வசிஷ்டரும், தான் சேரத்தகாத ஒரு பெண்ணை ஏன் சேர்ந்தார்?(2) ஓ நண்பா, வசிஷ்டரின் இச்செயல் பாவச்செயல் ஆகாதா? உன்னிடம் தீர்வைப் பெற நான் கொள்ளும் ஐயங்களைக் களைவதே உனக்குத் தகும்" என்று கேட்டான்.(3)

அதற்கு அந்தக் கந்தர்வன், "ஓ ஒடுக்கப்படமுடியாத தனஞ்செயா {அர்ஜுனா}, வசிஷ்டர் மற்றும் நண்பர்களைப் பேணி வளர்ப்பவனான கல்மாஷபாதன் ஆகியோரைக் குறித்து நீ கேட்ட கேள்விகளுக்கு நான் பதிலுரைக்க்கிறேன் கேட்பாயாக.(4) ஓ பாரதர்களில் சிறந்தவனே, மன்னர் கல்மாஷபாதனுக்கு வசிஷ்டரின் சிறப்புமிக்க மைந்தரான சக்திரி இட்ட சாபம் குறித்து நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.(5) அச்சாபத்தின் வசப்பட்டதால், அந்த எதிரிகளை அழிக்கும் மன்னன் கல்மாஷபாதன், கோபத்தில் கண்கள் சுழலத் தனது மனைவியை அழைத்துக் கொண்டு தலைநகரை விட்டு வெளியே சென்றுவிட்டான்.(6) தனது மனைவியுடன் வெளியே சென்ற அவன், தனிமையான காட்டில் திரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள், சாபத்தின் ஆளுகையில் இருந்த அம்மன்னன் பலவகைப்பட்ட மான்களும், பல விலங்குகளும், பெரும் மரங்களும், செடிகளும், கொடிகளும், நிறைந்த அக்கானகத்தில் உலவிக் கொண்டிருந்தபோது, அவன் மிகவும் பசித்துப் போனான். அந்த ஏகாதிபதி உணவைத் தேடத் தொடங்கினான். பசி வயிற்றைக் கிள்ளக் இறுதியாக, அக்கானகத்தின் ஒரு தனிமையான இடத்தில்,(7-9) ஒரு பிராமணனும் அவனது மனைவியும் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டான். அந்த ஏகாதிபதியைக் கண்ட அந்த ஜோடி அச்சத்தால் தங்கள் ஆசை நிறைவேறாமலேயே ஓடிச் சென்றனர்.(10)

ஓடும் அந்த ஜோடியைக் கண்ட அம்மன்னன், அந்த பிராமணனைப் பலவந்தமாகப் பற்றினான். அப்போது அந்த பிராமணத்தி {பிராமணப் பெண்} அகப்பட்ட தனது கணவனைக் கண்டு அந்த ஏகாதிபதியிடம் {கல்மாஷபாதனிடம்},(11) "சிறந்த நோன்புகளைக் கொண்ட ஓ ஏகாதிபதி, நான் சொல்வதைக் கேட்பாயாக! நீ சூரிய குலத்தில் பிறந்தவன் என்பதும், அறநெறிகளைக் காப்பவன் என்பதும், பெரியோரின் தொண்டுக்கு உன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் என்பதும் உலகம் அறிந்தவையாகும்.  நீ பாவம் இழைப்பது உனக்குத் தகாது. ஓ ஒடுக்கப்பட முடியாதவனே, {முனிவர்களின்} சாபத்தால் நீ உனது உணர்வுகளை இழந்திருக்கிறாய். (12,13)  இப்போது எனது காலம் கனிந்திருக்கிறது, எனவே, நான் எனது கணவரோடு இணைந்திருந்தேன். எங்கள் உறவில் நான் இன்னும் நிறைவடையவில்லை.(14) எங்களிடம் கருணை கொள்வாயாக. ஓ மன்னர்களில் சிறந்தவனே, எனது கணவரை விடுவிப்பாயாக" என்று கேட்டாள்.(15)

இருப்பினும் அந்த ஏகாதிபதி {கல்மாஷபாதன்} அவ்வார்த்தைகளைக் கேளாமல், விருப்பப்பட்ட உணவை உண்ணும் புலியொன்றைப் போல அந்த பிராமணனை விழுங்கினான்.(16) இக்காட்சியால் கோபமடைந்த அந்தப் பெண்ணின் கண்ணீர் தரையில் விழுந்து நெருப்பெனத் தகித்து அந்த இடத்தையே எரித்தது.(17) தனது கணவனுக்கு நேர்ந்த பேரிடரால் பெரும் துன்பமடைந்த அந்த பிராமணத்தி கல்மாஷபாதனிடம் கோபத்துடன்,(18) "கொடும் பாவியே, எனது ஆசை நிறைவேறாத சூழ்நிலையில், எனது மூக்கின் அருகிலேயே {முன்னிலையிலேயே} எனக்கு அன்பானவரும், சிறப்புமிக்கவருமான கணவரை நீ விழுங்கியதால், ஓ தீயவனே, உனது மனைவிக்கான காலத்தில் நீ அவளுடன் இணைந்தால், எனது சாபத்தின் சக்தியால் உடனே மரணிப்பாய்.  ஓ பாவியே, மேலும், நீ யாருடைய பிள்ளைகளைத் தின்றாயோ, அந்த முனிவர் வசிஷ்டருடன் கூடி உனது மனைவி ஒரு மகனைப் பெற்றெடுப்பாள். ஓ மன்னர்களில் இழிந்தவனே, அவனே உனது குலத்தைத் தழைக்கச் செய்வான்" என்று சபித்தாள்.(19-21)

அனைத்து நற்குறிகளையும் கொண்டவளும், அங்கீரஸக் குடும்பத்தைச் சேர்ந்தவளுமான அந்தப் பெண், இவ்வாறு அந்த ஏகாதபதியைச் சபித்துவிட்டு, அந்த ஏகாதபதி பார்த்துக் கொண்டிருக்கும்போதே சுடர்மிக்க நெருப்புக்குள் நுழைந்தாள்.(22) ஓ எதிரிகளனைவரையும் தண்டிப்பவனே {அர்ஜுனா}, சிறப்புமிகுந்தவரும், மேன்மையானவருமான அந்த வசிஷ்டர், தனது ஆன்ம சக்தியாலும், தெய்வீகப் பார்வையாலும் இவையாவையும் அறிந்தார்.(23) வெகு காலம் கழித்து, சாபத்திலிருந்து மன்னன் {கல்மாஷபாதன்} விடுபட்டதும், தனது மனைவி மதயந்தியிடம் அவளது காலத்தில் அணுகினான். ஆனால், அந்த மதயந்தி மென்மையாகப் பேசி அவனை அனுப்பிவிட்டாள்.(24) ஆசையின் ஆதிக்கத்தில் இருந்த மன்னன், பழைய சாபத்தை நினைத்துப் பார்த்தான். இருப்பினும், தனது மனைவியின் வார்த்தைகளைக் கேட்ட மன்னர்களில் சிறந்தவன், கடும் அச்சத்துக்குள்ளானான்.(25) பழைய சாபத்தை நினைத்துப் பார்த்து, நடந்த காரியத்திற்காக மிகவும் வருந்தினான். இந்தக் காரணத்திற்காகவே, ஓ மனிதர்களில் சிறந்தவனே, அந்த பிராமணத்தியின் சாபத்தால் பாதிப்படைந்த அந்த ஏகாதிபதி, தனது ராணியிடம் ஒரு மகனைப் பெற வசிஷ்டரை நியமித்தான்" {என்றான் கந்தர்வன்}.(26)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்