Thursday, August 22, 2013

துரியோதனனை ஏசிய கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 204

Karna sewed Duryodhana! | Adi Parva - Section 204 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்ன திட்டங்களைக் கேட்டு கர்ணன் அவனை ஏசியது; சூழ்ச்சியைக் கையாளாதே ஆற்றலை வெளிப்படுத்து என்று சொன்னது; செல்வம், இன்பம், நாடு என்று எதையும் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தியாகம் செய்வான் என்று சொன்னது; வீரமே க்ஷத்திரியனுக்கு அழகு என்று சொன்னது...

வைசம்பாயனர் சொன்னார், "துரியோதனனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், "ஓ துரியோதனா, உன் பகுத்தறிவு நன்கு நிறுவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பாண்டவர்களுக்கு எதிரான எந்த வழிவகையும் வெற்றிபெறாது.(1) ஓ வீரமான இளவரசனே, இதற்கு முன்பே நீ பல்வேறு நுட்பமான வழிவகைகள் மூலம் உனது விருப்பத்தைச் செய்யப் போராடியிருக்கிறாய். ஆனால், உனது எதிரிகளைக் கொல்வதில் தோல்வியே கண்டிருக்கிறாய்.(2) அப்போது அவர்கள் உனது அருகிலே வாழ்ந்து வந்தார்கள். ஓ மன்னா, அப்போது அவர்கள் சிறுவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அப்போதும் உன்னால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடிய வில்லை.(3) இப்போது அவர்கள் தொலைவில் இருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பெரும் ஆட்சிப்பரப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ உறுதியான முடிவு கொண்டவனே, குந்தியின் மகன்கள் உனது எந்த நுட்பமான {தந்திரமான} திட்டமிடல் மூலமும் காயப்பட மாட்டார்கள். இஃது எனது கருத்து.(4) அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அவர்களது விதி உதவி செய்கிறது. அவர்கள் தங்கள் மூதாதையர் நாட்டை அடைய விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது, நமது சக்தியைக் கொண்டு, எந்த வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில் நாம் வெற்றிகொள்ள முடியாது.(5)

அவர்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்குவது என்பது முடியாத காரியம். பொது மனைவியைக் கொண்ட அவர்கள் அனைவரையும் பிரிக்க முடியாது.(6) அதே போல நமது ஒற்றர்களைக் கொண்டு கிருஷ்ணைக்கும் {திரௌபதிக்கும்} பாண்டவர்களுக்கும் இடையில் பேதத்தை ஏற்படுத்தவும் முடியாது. அவர்கள் {பாண்டவர்கள்} கேடு காலத்தில் {துரதிர்ஷ்டத்தில்} இருந்த போதே, அவள் அவர்களைத் தலைவர்களாகத் தேர்ந்தெடுத்தாள். இப்போது வளமையில் இருக்கும் அவர்களை அவள் கைவிடுவாளா?(7) அல்லாமலும், பெண்கள் எப்போதும் பல கணவர்களை அடையவே விரும்புவார்கள். கிருஷ்ணை {திரௌபதி} அவள் விருப்பத்தை அடைந்துவிட்டாள். அவளைப் பாண்டவர்களிடம் பேதம் கொள்ள வைக்க முடியாது.(8) பாஞ்சால மன்னன் {துருபதன்} நேர்மையானவனும் அறம் சார்ந்தவனும் ஆவான்; அவன் பேராசையுடையவன் அல்லன். நாம் நமது முழு நாட்டை அவனுக்குக் கொடுப்பதாய் இருந்தாலும் அவன் பாண்டவர்களைக் கைவிட மாட்டான்.(9) துருபதனின் மகனும் {திருஷ்டத்யும்னனும்}, அனைத்துத் தகுதிகளும் கொண்டு பாண்டவர்களிடம் பிணைப்புடன் இருக்கிறான். எனவே, உனது சக்தியைக் கொண்டு எந்த நுட்பமான திட்டத்தைச் செய்தாலும் பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது, என்று நான் நினைக்கிறேன்.(10)

ஆனால், ஓ மனிதர்களில் காளையே {துரியோதனா}, நான் இனி சொல்லப் போவதுதான் நமக்கு உகந்ததும், நன்மையானதும் ஆகும். ஆதாவது, அவர்கள் {பாண்டவர்கள்} அழியும் வரை அவர்களைத் தாக்கி அடித்துக் கொண்டு இருக்க வேண்டும். இந்தப் போக்கே உனக்குப் பரிந்துரைக்கப்பட வேண்டியது.(11) நமது தரப்பு பலமாக இருக்கும் வரையும், பாண்டவ மன்னனின் தரப்பு பலவீனமாய் இருக்கும் வரையும், அவர்களை எந்த மன உறுத்தலும் இன்றித் தாக்க வேண்டும்.(12) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனனே}, அவர்களது கணக்கிலடங்கா வாகனங்களும், விலங்குகளும், நண்பர்களும், நட்புக் குழுக்களும் ஒன்றாகத் திரளாத வரை, ஓ மன்னா, உனது ஆற்றலை வெளிப்படுத்துவதைத் தொடர்ந்து கொண்டிருப்பாயாக.(13) பாஞ்சாலர்களின் மன்னன் {துருபதன்}, பெரும் சக்தியைக் கொடையாகக் கொண்ட அவனது மகனுடன் {திருஷ்டத்யும்னனுடன்} சேர்ந்து, நம் மீது போர் தொடுக்க எண்ணாத வரை, ஓ மன்னா, உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(14) ஓ மன்னா, அனைத்தையும் எடுத்துக் கொண்டு பாண்டவர்களுக்கு அவர்கள் தந்தை வழிச் சொத்தை மீட்டுக் கொடுக்க விருஷ்ணி குலத்தோன் (கிருஷ்ணன்), யாதவப் படைகளுடன் துருபதன் நகரத்திற்குள் நுழையாத வரை உனது ஆற்றலை வெளிப்படுத்துவாயாக.(15)

செல்வம், இன்பத்துக்கான அனைத்து நுகர்ச்சிப் பொருட்கள், நாடு என அந்தக் கிருஷ்ணன், பாண்டவர்களுக்காக எதையும் தியாகம் செய்வான்.(16) அந்தச் சிறப்புமிக்கப் பாரதன் {கிருஷ்ணன்} தனி ஒருவனாக வீரத்தைக் காட்டி இந்த முழு உலகத்தையே அடைந்திருக்கிறான். இந்திரன் தன் ஆற்றலை மட்டுமே கொண்டு மூன்று உலகத்தின் ஆட்சியை அடைந்தான்.(17) ஓ மன்னா, ஆற்றல் மட்டுமே க்ஷத்திரியர்களால் எப்போதும் மெச்சப் படுகிறது. ஓ க்ஷத்திரியக் காளையே, துணிவுள்ளவனுக்கு ஆற்றலே முக்கியமான அறமாகும்.(18) எனவே, ஓ ஏகாதிபதி, நேரத்தைக் கடத்தாமல், நான்கு வகைச் சேனைகளைக் கொண்ட நமது பெரும் படையைக் கொண்டு துருபதனைத் தாக்கி, பாண்டவர்களை இங்கே கொண்டு வருவோம்.(19) உண்மையில், சமாதானக் கொள்கை கொண்டோ, பரிசையும் செல்வத்தையும் லஞ்சமாகக் கொடுத்தோ அல்லது ஒற்றுமையின்மையை உண்டாக்கியோ பாண்டவர்களை வீழ்த்த முடியாது. எனவே, உனது ஆற்றலைக் கொண்டே அவர்களை வெற்றி கொள்வாயாக.(20) உனது ஆற்றலைக் கொண்டு அவர்களை வெற்றிகொண்டு இந்தப் பரந்த உலகத்தை ஆட்சி செய்வாயாக. ஓ ஏகாதிபதி, நமது இலக்கை அடைய நான் வேறு வழி எதையும் காணவில்லை" என்றான் {கர்ணன்}".(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ராதேயனின் {கர்ணனின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட பெரும் பலம் வாய்ந்த திருதராஷ்டிரன், அவனைப் பெரிதும் மெச்சினான். அதன்பிறகு அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம்,(22) "ஓ சூதனின் மகனே {கர்ணனே}, நீ ஆயுதங்களில் தேர்ச்சி பெற்ற பெரும் ஞானம் கொண்டவன். எனவே ஆற்றலை வெளிக்காட்டச் சொன்ன உனது பேச்சு, உனக்கு மிகவும் பொருந்துகிறது.(23) ஆனாலும், பீஷ்மர், துரோணர், விதுரன் மற்றும் நீங்கள் இருவரும் {கர்ணனும், துரியோதனனும்) ஆலோசனை செய்து, நமது நலனுக்கு வழிவகுக்கும் திட்டத்தை ஏற்படுத்தி, அதையே ஏற்றுக் கொள்வீராக" என்றான் {திருதராஷ்டிரன்}”.(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு மன்னன் திருதராஷ்டிரன், கொண்டாடப்பட்டவர்களான தனது அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுடன் ஆலோசித்தான்".(25)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்