Showing posts with label விதுராகமன பர்வம். Show all posts
Showing posts with label விதுராகமன பர்வம். Show all posts

Sunday, August 25, 2013

பாண்டவர்கள் தலைநகரானது காண்டவப்பிரஸ்தம்! - ஆதிபர்வம் பகுதி 209

Kandavaprasta became the capital of Pandavas! | Adi Parva - Section 209 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பாண்டவர்களைக் காண்டவப்பிரஸ்தம் போகச் சொன்னது; கிருஷ்ணனைத் தலைமையாகக் கொண்டு பாண்டவர்கள் அங்கே சென்றது; வியாசரைக் கொண்டு நகரத்துக்கான நிலத்தைத் தேர்ந்தெடுத்து அளந்தது; நகரை நிர்மாணித்தது; இந்திரப்பிரஸ்தத்தின் சிறப்பு விவரிப்பு; கிருஷ்ணன் துவாரகை திரும்பியது...

வைசம்பாயனர் சொன்னார், "விதுரனின் வார்த்தைகளைக் கேட்ட துருபதன், "ஓ பெரும் ஞானம் கொண்ட விதுரரே, நீர் சொன்னது போலத்தான் இருக்கிறது. மதிப்பிற்குரியவரே, நானும் இக்கூட்டணியின் விளைவை எண்ணிப் பெரிதும் மகிழ்ந்திருக்கிறேன்.(1) இந்த இளவரசர்கள் தங்கள் மூதாதையர் நாட்டுக்குத் திரும்புவதே சரியானது. ஆனால் அதை நானே சொல்வது சரியாகாது.(2) குந்தியின் வீர மகனான யுதிஷ்டிரனோ, பீமனோ, அர்ஜுனனோ, மனிதர்களில் காளைகளான இரட்டையர்களோ செல்வதற்கு விருப்பப்பட்டு, அறவிதிகள் அனைத்தையும் அறிந்த ராமனும் (பலதேவனும் {பலராமனும்}), கிருஷ்ணனும் அதே மனம் கொண்டார்களென்றால், பாண்டவர்கள் அங்கே செல்லட்டும். ஏனென்றால் இந்த மனிதப்புலிகள் (ராமனும் {பலராமனும்} கிருஷ்ணனும்), பாண்டுவின் மகன்களுக்கு நன்மையைச் செய்வதிலேயே எப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்" என்றான் {துருபதன்}.3,4)

Saturday, August 24, 2013

துருபதனிடம் அனுமதி கேட்ட விதுரன்! - ஆதிபர்வம் பகுதி 208

Vidura asked Drupada for permission! | Adi Parva - Section 208 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : விதுரன், துருபதனிடம் சென்று, பல பரிசுப் பொருட்களையும், நலம் விசாரிப்புகளையும் செய்து, பாண்டவர்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்ல அனுமதி கேட்பது...

வைசம்பாயனர் சொன்னார், "இந்தப் பல்வேறு பேச்சுகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "சந்தனுவின் மகனும் கல்விமானுமான பீஷ்மரும், சிறப்பு மிகுந்த முனிவர் துரோணரும், நீயும் (ஓ விதுரா) உண்மையையும், எனக்கு எது நன்மையைத் தருமோ அதையுமே சொல்லியிருக்கிறீர்கள்.(1) நிச்சயமாக, அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் வீர மகன்கள், பாண்டுவின் மகன்களே. எனவே, விதிப்படி அவர்கள் எனது மகன்களே என்பதில் ஐயமில்லை.(2) எனது மகன்களுக்கு எப்படி இந்த நாட்டின் மீது உரிமை இருக்கிறதோ, அதே போல, பாண்டுவின் மகன்களுக்கும் நிச்சயமாக உரிமை உண்டு.(3) எனவே, முறையான அன்புமிக்க வழியில் விரைவாகப் பாண்டவர்களை அவர்களின் தாயுடன் {குந்தியுடன்} இங்கு அழைத்து வருவாயாக. ஓ பாரதக் குலத்தோனே {விதுரனே}, கூடவே தெய்வீக அழகுடைய கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அழைத்து வருவாயாக.(4) நற்பேறால் மட்டுமே பிருதையின் {குந்தியின்} மகன்கள் உயிருடன் இருக்கிறார்கள்; நற்பேறால் மட்டுமே பிருதையும் உயிரோடிருக்கிறாள். நற்பேறால் மட்டுமே அந்தப் பெரும் தேர் வீரர்கள் துருபதனின் மகளை {திரௌபதியை} அடைந்தார்கள்.(5) நற்பேறால் மட்டுமே நமது பலம் அதிகரித்திருக்கிறது; நற்பேறால் மட்டுமே புரோசனன் அழிந்தான். ஓ பெரும் பிரகாசமுள்ளவனே, நற்பேறால் மட்டுமே எனது பெரும் துயர் நீக்கப்பட்டது" என்றான் {திருதராஷ்டிரன்}".(6)

Friday, August 23, 2013

"பாவிகளின் பேச்சைக் கேட்காதீர்" விதுரன்! - ஆதிபர்வம் பகுதி 207

Vidura said, "Don't Listen to wretches" | Adi Parva - Section 207 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : விதுரன் பீஷ்மருக்கும், துரோணருக்கும் ஆதரவாகப் பேசுவது; துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனியைப் பாவிகள், முட்டாள்கள், சிறுவர்கள் என்று விதுரன் பழித்தது; துரியோதனன் தவறால் நாட்டின் குடிமக்கள் கொல்லப்படுவார்கள் என்று எச்சரித்தது...

வைசம்பாயனர் சொன்னார், "துரோணர் முடித்ததும், விதுரன் ஆரம்பித்தான், "ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, உமது நண்பர்கள் உமக்கு நன்மையையே சொல்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. ஆனால், உமக்கு அதைக் கேட்பதில் விருப்பமில்லை எனவே, அந்த வார்த்தைகளுக்கு உமது காதில் இடம் கிடைக்கவில்லை.(1) சந்தனுவின் மகனும், குருகுலத்தவரில் முதன்மையானவருமான பீஷ்மர் சொன்னது அற்புதமானதும், உமது நன்மைக்கானதும் ஆகும். ஆனால் நீர் அதைக் கேட்க மறுக்கிறீர்.(2) ஆசானான துரோணர் சொல்வதும் உமது நன்மைக்கே, ஆனால் அதைக்கூட ராதையின் மகனான கர்ணன் மதிக்க மறுக்கிறான்.(3) ஓ மன்னா {திருதராஷ்டிரா}, ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தாலும், மனிதர்களில் சிங்கங்களான இந்த இருவரைவிடச் {பீஷ்மர், துரோணர்} சிறந்த நண்பர்கள் கிடைக்க மாட்டார்கள்.(4) ஓ மன்னா, வயதில் மூத்தவர்களும், ஞானத்திலும், கல்வியிலும் சிறந்தவர்களான இந்த இருவரும், எப்போதும் உம்மையும், பாண்டுவின் மகன்களையும் சமமான பார்வையிலேயே மதிக்கிறார்கள்.(5)

"கர்ணா! நீ தீயவன்" துரோணர்! - ஆதிபர்வம் பகுதி 206 ஆ

Drona said, "Karna! you are evil" | Adi Parva - Section 206B | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : துரோணர் கர்ணனுக்கு மறுமொழி கூறியது; கௌரவர்களின் அழிவைப் பற்றி எச்சரித்தது...

வைசம்பாயனர் தொடர்ந்தார், துரோணர் முடித்ததும், கர்ணன் மறுபடியும், "பீஷ்மர், துரோணர் ஆகிய இருவரும் உமது செல்வத்தாலும், உமது கருணைகளாலும் அதிகம் கொழுத்துப் போய் இருக்கிறார்கள்[1].  இவர்களை எப்போதும் நீர் நம்பத்தகுந்த நண்பர்களாக மதிக்கிறீர். அப்படிப்பட்ட இவர்கள் இருவரின் ஆலோசனைகளும் உமது நன்மைக்கானதாக இல்லாமல் இருப்பது வேடிக்கையானது அல்லவா?(13) தீய நோக்கம் கொண்டு, தங்கள் இதயத்தின் தீமையை மறைத்து, நல்ல ஆலோசனை வழங்குவதாகச் சொல்பவர்களை ஞானமுள்ளோர் எப்படி அங்கீகரிப்பார்கள்?(14) கேடுகாலத்தில், நண்பர்களால் நிச்சயம் நன்மையும் செய்ய முடியாது, தீமையும் செய்ய முடியாது. அனைவரின் மகிழ்ச்சியோ, அல்லது நேர்மாறான நிலையோ அவர்களின் விதியைப் பொறுத்தே அமைகிறது.(15)  ஞானமுள்ளவனும், முட்டாளும், (வயதில்) இளமையானவனும், முதுமையடைந்தவனும், கூட்டணியுள்ளவனும், கூட்டணி அற்றவனும் - ஆகிய அனைவரும் சில நேரங்களில் மகிழ்ச்சியாகவும், சில நேரங்களில் மகிழ்ச்சியற்றும் இருப்பதை எங்கும் காண்கிறோம்.(16)

[1] பெரியோரைக் கர்ணன் மதிக்காத போக்கு, இங்கிருந்தே தொடங்குகிறது. இதுவே பெரும்போர் வரை நீடிக்கிறது.

பழங்காலத்தில் அம்பவீசன் என்ற ஒரு மன்னன் இருந்ததாக நாம் கேட்டிருக்கிறோம். அந்த மகதநாட்டுத் தலைவன் ராஜகிருஹம் என்ற தலைநகரைக் கொண்டிருந்தான்.(17) அப்படிப்பட்ட அவன் தனது காரியங்கள் எதையும் செய்யாது இருந்தான். காற்றைச் சுவாசிப்பது மட்டுமே அவனது முயற்சியாக இருந்தது. அவனது காரியங்கள் அனைத்தும் அமைச்சர்களின் கைகளில் இருந்தன.(18) மஹாகர்ணி என்ற அவனது அமைச்சன், அந்த நாட்டின் தலைமை நிர்வாகியாக ஆனான். அந்நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டவன் என்று தன்னைக் கருதிக் கொண்டு அந்த அமைச்சன், மன்னனை அவமதிக்கத் தொடங்கினான்.(19) அந்தப் பாவி, அந்த மன்னனுக்கு உரிய ராணிகள், செல்வங்கள், ஆட்சி உரிமைகள் என அனைத்தையும் எடுத்துக் கொண்டான்.(20) ஆனால், இவற்றையெல்லாம் அடைந்தும் அவனது பேராசை தணியவில்லை. அஃது இன்னும் கொழுந்துவிட்டெரிந்தது. மன்னனுக்கு உரிய அனைத்தையும் கவர்ந்த அவன், அரியணையையும் கவர்ந்தான்.(21) ஆனால், அந்த ஏகாதிபதி தனது கடமைகளில் கவனமற்று இருந்தும், காற்றைச் சுவாசிப்பதை மட்டுமே செயலாகக் கொண்டிருந்தும் கூட, சிறந்தது அனைத்தையும் பெற்றும், அந்த அமைச்சனால் தனது முதலாளியின் நாட்டை அடைய முடியவில்லை என்று கேள்விப்படுகிறோம்.(22)

ஓ மன்னா, அந்த ஏகாதிபதியின் ஆட்சியுரிமை விதியின் கையில் இருந்தது என்பதைத் தவிர நாம் இதில் வேறு என்ன சொல்ல முடியும்?(23) எனவே, ஓ மன்னா, இந்த நாடு விதியால் உமக்கு அளிக்கப்பட்டது. இந்த முழு உலகமே உமக்கு எதிரியாக ஆனாலும், நிச்சயம் அஃது உம்மிடமே தொடர்ந்து இருக்கும். இருப்பினும், விதி வேறு விதமாகக் கட்டளையிட்டால், நீர் எவ்வளவு முயன்றாலும், அஃது உம்மிடம் இருக்காது.(24) ஓ கல்விமானே, இவையெல்லாவற்றையும் நினைத்துப் பார்த்து, உமது அமைச்சர்களின் நேர்மையைப் பற்றியோ, மற்ற குணங்களைப் பற்றியோ தீர்மானித்துக் கொள்வீராக. அவர்களில் யார் தீயவர்கள், யார் ஞானத்துடன் பேசுபவர்கள், நல்லதைச் சொல்பவர்கள் என்பதை உறுதி செய்து கொள்வீராக" என்றான் {கர்ணன்}”.(25)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "கர்ணனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட துரோணர் மறுமொழியாக, "நீ தீயவன் ஆனதால், உனது தீய நோக்கத்தின் காரணமாகவே இப்படிச் சொல்கிறாய் என்பதற்கு நீயே சான்று பகர்கின்றாய். பாண்டவர்களுக்குத் தீங்கிழைக்கவே[2], நீ எங்களிடம் குறை கண்டுபிடிக்கிறாய்.(26) ஆனால், ஓ கர்ணா, நான் சொன்னது அனைத்தும் குரு குலத்தின் வளமைக்காகச் சொன்னது என்பதை அறிந்து கொள்வாயாக. அவையெல்லாம், தீயதைக் கொண்டு வரும் என்று நீ மதித்தால், நமக்கு நல்லது எது என்பதை நீயே தீர்மானித்துக் கொள்வாயாக.(27) நான் சொன்ன நல்ல ஆலோசனைகள் பின்பற்றப்படவில்லையென்றால், அற்ப காலத்திற்குள் கௌரவர்கள் அழிக்கப்படுவார்கள் என்றே நான் நினைக்கிறேன்" என்றார் {துரோணர்}.(28)

[2] கர்ணனின் இந்தப் பிழையை முதலிலேயே துரோணர் சுட்டிக் காட்டிவிடுகிறார் என இங்கே விளக்குகிறார் கங்குலி.


ஆங்கிலத்தில் | In English

துரோணர் சொன்ன ஆலோசனை! - ஆதிபர்வம் பகுதி 206 அ

The counsel of Drona! | Adi Parva - Section 206A | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்களுக்கு உரிய பங்கைக் கொடுக்குமாறு துரோணர் சொன்னது; பீஷ்மரும், துரோணரும் கௌரவர்களுக்கு தீங்கிழைப்பவர்கள் என்று கர்ணன் சாடியது;

வைசம்பாயனர் சொன்னார், "பீஷ்மர் முடித்ததும் துரோணர் பேசினார், "ஓ திருதராஷ்டிர மன்னா, ஆலோசனைக்கு அழைக்கப்பட்ட நண்பர்கள் எப்போதும் சரியானதை, உண்மையானதை, புகழைக் கொடுப்பதையே சொல்ல வேண்டும் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(1) ஓ ஐயா, இக்காரியத்தில் சிறப்பு மிகுந்த பீஷ்மர் சொன்னதைப் போலவே நானும் கருதுகிறேன். இந்த நாட்டின் ஒரு பங்கு பாண்டவர்களுக்குக் கொடுக்கப்படட்டும். அதுவே அழிவில்லாத அறமாகும்.(2) ஓ பாரதா {திருதராஷ்டிரா}, காலந்தாழ்த்தாமல், அனைவரும் ஏற்கும் பேச்சுக் கொண்ட ஒரு தூதுவனைத் துருபதனிடம் அனுப்புவாயாக. அவனிடம் பாண்டவர்களுக்குப் பெரும் செல்வத்தைக் கொடுத்தனுப்புவாயாக.(3) மணமகனுக்கும், மணமகளுக்குமான விலையுயர்ந்த பரிசுகளைத் துருபதனிடம் அந்தத் தூதன் கொண்டு செல்லட்டும். அவன் அந்த ஏகாதிபதியிடம் {துருபதனிடம்} உனது சக்தியின் பெருக்கத்தைச் சொல்லிப் புதிய கூட்டணி ஏற்பட வழிவகுக்கட்டும்.(4) ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரா}, நடந்தது அத்தனையும் அறிந்த நீயும், துரியோதனனும் இது விஷயத்தில் மிகுந்த மகிழ்ச்சி கொண்டதாக அந்த மனிதன் {தூதுவன்} அறியட்டும்.(5)

துரியோதனனை எச்சரித்த பீஷ்மர்! - ஆதிபர்வம் பகுதி 205

Bhishma warned Duryodhana! | Adi Parva - Section 205 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் அனைவரையும் சமமாக நினைப்பதாகச் சொல்வது; பாண்டவர்கள் நெருப்பில் அகப்பட்டது துரியோதனனின் சூழ்ச்சியே என்று உலகம் நினைப்பதைச் சொல்லி துரியோதனனை பீஷ்மர் எச்சரிப்பது; பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி பீஷ்மர் அறிவுறுத்தியது...

வைசம்பாயனர் சொன்னார், "தனது கருத்தைச் சொல்லுமாறு திருதராஷ்டிரன் கேட்டதால், பீஷ்மர், "ஓ திருதராஷ்டிரா, பாண்டவர்களுடன் சச்சரவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீ எனக்கு எப்படியோ, பாண்டுவும் எனக்கு அப்படியே என்பதில் ஐயமில்லை.(1) காந்தாரியின் மகன்களும் எனக்குக் குந்தியின் மகன்களைப் போலத்தான். ஓ திருதராஷ்டிரா, உனது மகன்களை நான் காப்பது போல, அவர்களையும் நான் காக்க வேண்டும்.(2) மேலும், ஓ மன்னா, துரியோதனனுக்கும் மற்ற குரு குலத்தவருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்} எவ்வளவு நெருக்கமோ, எனக்கும் அவ்வளவு நெருக்கமாகவே இருக்கிறார்கள்.(3) இத்தகையச் சூழ்நிலையில், அவர்களுடன் சச்சரவு என்பதை நான் {பீஷ்மன்} சற்றும் விரும்ப மாட்டேன். அந்த வீரர்களுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இந்நாடு அந்தக் குரு குலத்தின் முதன்மையானவர்களுக்கும் தந்தையின் வழி வந்த நாடுதான் என்பதில் ஐயமில்லை.(4) மேலும், ஓ துரியோதனா, இந்த நாட்டை உனது தந்தையின் சொத்தாகப் பார்க்கும் நீ, பாண்டவர்களும் இந்த நாட்டை அவர்களது தந்தையின் சொத்தாக நோக்குகிறார்கள் என்பதை உணர வேண்டும்.(5)

Thursday, August 22, 2013

துரியோதனனை ஏசிய கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 204

Karna sewed Duryodhana! | Adi Parva - Section 204 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் சொன்ன திட்டங்களைக் கேட்டு கர்ணன் அவனை ஏசியது; சூழ்ச்சியைக் கையாளாதே ஆற்றலை வெளிப்படுத்து என்று சொன்னது; செல்வம், இன்பம், நாடு என்று எதையும் பாண்டவர்களுக்காக கிருஷ்ணன் தியாகம் செய்வான் என்று சொன்னது; வீரமே க்ஷத்திரியனுக்கு அழகு என்று சொன்னது...

வைசம்பாயனர் சொன்னார், "துரியோதனனால் இப்படிக் கேட்டுக் கொள்ளப்பட்ட கர்ணன், "ஓ துரியோதனா, உன் பகுத்தறிவு நன்கு நிறுவப்பட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, பாண்டவர்களுக்கு எதிரான எந்த வழிவகையும் வெற்றிபெறாது.(1) ஓ வீரமான இளவரசனே, இதற்கு முன்பே நீ பல்வேறு நுட்பமான வழிவகைகள் மூலம் உனது விருப்பத்தைச் செய்யப் போராடியிருக்கிறாய். ஆனால், உனது எதிரிகளைக் கொல்வதில் தோல்வியே கண்டிருக்கிறாய்.(2) அப்போது அவர்கள் உனது அருகிலே வாழ்ந்து வந்தார்கள். ஓ மன்னா, அப்போது அவர்கள் சிறுவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், அப்போதும் உன்னால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடிய வில்லை.(3) இப்போது அவர்கள் தொலைவில் இருக்கிறார்கள். வளர்ந்திருக்கிறார்கள். பெரும் ஆட்சிப்பரப்பைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஓ உறுதியான முடிவு கொண்டவனே, குந்தியின் மகன்கள் உனது எந்த நுட்பமான {தந்திரமான} திட்டமிடல் மூலமும் காயப்பட மாட்டார்கள். இஃது எனது கருத்து.(4) அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} அவர்களது விதி உதவி செய்கிறது. அவர்கள் தங்கள் மூதாதையர் நாட்டை அடைய விரும்புகிறார்கள். அப்படியிருக்கும்போது, நமது சக்தியைக் கொண்டு, எந்த வகையிலும் அவர்களுக்குத் தீங்கிழைப்பதில் நாம் வெற்றிகொள்ள முடியாது.(5)

Wednesday, August 21, 2013

திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராக தூண்டுவோம் - ஆதிபர்வம் பகுதி 203

Duryodhana, “incite Draupadi against her husbands” | Adi Parva - Section 203 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : துரியோதனன், திரௌபதியை பாண்டவர்களுக்கு எதிராகத் தூண்டவும், பாண்டவர்களைக் கொல்லவும் சொன்னது; குறிப்பாக பீமனின் பெருமைகளைச் சொல்லி, அவனைக் கொன்றால் பாண்டவர்கள் நாடு கேட்க மாட்டார்கள் என்று சொன்னது; கர்ணனிடம் கருத்து கேட்ட துரியோதனன்...

வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன், " நீங்கள் பரிந்துரைப்பதைத்தான் நான் சரியாகச் செய்ய விரும்புகிறேன். ஆனால், எனது சிறு சதை {முக} மாற்றத்தினாலும் விதுரனுக்கு அதைத் தெரிவிக்க நான் விரும்பவில்லை.(1) எனவே, ஓ மகனே, எனது மனத்தின் சிறு குறிப்பையும் விதுரன் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காகவே, நான் அவனது முன்னிலையில், பாண்டவர்களைப் புகழ்ந்தேன்.(2) இப்போது விதுரன் சென்றுவிட்டான். ஓ சுயோதனா (துரியோதனா) உங்களுக்கு என்ன தோன்றுகிறது? ஓ ராதேயா (கர்ணா) உனக்கு என்ன தோன்றுகிறது என்பதைச் சொல்வதற்கு இதுவே தகுந்த நேரம்" என்றான்.(3)

Tuesday, August 20, 2013

திரௌபதியால் துரியோதனன் கணவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டானா? - ஆதிபர்வம் பகுதி 202

Did Draupadi choose Duryodhana for her husband? | Adi Parva - Section 202 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் பற்றிய செய்தியைக் கேட்ட மற்ற மன்னர்கள் திருதராஷ்டிரனைப் பழிப்பது; துரியோதனனை கணவனாக திரௌபதி தேர்ந்தெடுத்தாள் என்று புரிந்து கொண்ட திருதராஷ்டிரன்; துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனுடன் ஆலோசிப்பது...

வைசம்பாயனர் சொன்னார், "(திரௌபதியின் சுயம்வரத்திற்கு வந்த) அனைத்து ஏகாதிபதிகளுக்கும், அவர்களின் திறமை வாய்ந்த ஒற்றர்களால் பாண்டுவின் மகன்களுக்கும் திரௌபதிக்கும் திருமணம் நடந்த செய்தி எட்டியது.(1) வில்லை வளைத்துக் குறி அடித்த வீரன், வெற்றிபெறும் வீரர்களில் முதன்மையான, விற்கணைகளைத் தாங்குபவர்களில் முதன்மையான அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும்;(2) மத்ர மன்னன் சல்லியனை தரையில் தூக்கி எவன் தூக்கி எறிந்தானோ, தீண்டல் ஒன்றாலேயே எதிரிகளின் உயிரை எடுக்கும் வல்லமைபெற்ற எவனோ, கோபம் கொண்டு மரத்தைப் பிடுங்கி அங்கே கூடியிருந்த மன்னர்களை அச்சுறுத்தியவன் எவனோ, அவன் எதிரிகளை வீழ்த்தும் பீமனைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதும் அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.(3,4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்