Friday, August 23, 2013

துரியோதனனை எச்சரித்த பீஷ்மர்! - ஆதிபர்வம் பகுதி 205

Bhishma warned Duryodhana! | Adi Parva - Section 205 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் அனைவரையும் சமமாக நினைப்பதாகச் சொல்வது; பாண்டவர்கள் நெருப்பில் அகப்பட்டது துரியோதனனின் சூழ்ச்சியே என்று உலகம் நினைப்பதைச் சொல்லி துரியோதனனை பீஷ்மர் எச்சரிப்பது; பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுக்கும்படி பீஷ்மர் அறிவுறுத்தியது...

வைசம்பாயனர் சொன்னார், "தனது கருத்தைச் சொல்லுமாறு திருதராஷ்டிரன் கேட்டதால், பீஷ்மர், "ஓ திருதராஷ்டிரா, பாண்டவர்களுடன் சச்சரவு என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. நீ எனக்கு எப்படியோ, பாண்டுவும் எனக்கு அப்படியே என்பதில் ஐயமில்லை.(1) காந்தாரியின் மகன்களும் எனக்குக் குந்தியின் மகன்களைப் போலத்தான். ஓ திருதராஷ்டிரா, உனது மகன்களை நான் காப்பது போல, அவர்களையும் நான் காக்க வேண்டும்.(2) மேலும், ஓ மன்னா, துரியோதனனுக்கும் மற்ற குரு குலத்தவருக்கும் அவர்கள் {பாண்டவர்கள்} எவ்வளவு நெருக்கமோ, எனக்கும் அவ்வளவு நெருக்கமாகவே இருக்கிறார்கள்.(3) இத்தகையச் சூழ்நிலையில், அவர்களுடன் சச்சரவு என்பதை நான் {பீஷ்மன்} சற்றும் விரும்ப மாட்டேன். அந்த வீரர்களுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இந்நாடு அந்தக் குரு குலத்தின் முதன்மையானவர்களுக்கும் தந்தையின் வழி வந்த நாடுதான் என்பதில் ஐயமில்லை.(4) மேலும், ஓ துரியோதனா, இந்த நாட்டை உனது தந்தையின் சொத்தாகப் பார்க்கும் நீ, பாண்டவர்களும் இந்த நாட்டை அவர்களது தந்தையின் சொத்தாக நோக்குகிறார்கள் என்பதை உணர வேண்டும்.(5)

பாண்டுவின் புகழ்பெற்ற மகன்கள் நாட்டை அடையவில்லை என்றால், அஃது எப்படி உனதாகும்? அல்லது அஃது எப்படி மற்ற பாரதக் குலத் தோன்றல்களுக்கு உரியதாகும்?(6) சட்டப்படி நீ மட்டுமே இதற்கு உரியவன் என நீ கருதினால், உனக்கு முன்னால் அவர்கள் நாட்டை அடைவதுதான் சட்டப்படியானது என அவர்கள் கருதுவார்கள், என்று நான் நினைக்கிறேன்.(7) அமைதியாக அவர்களுக்குப் பாதி நாட்டைக் கொடுப்பாயாக. இதுவே, ஓ மனிதர்களில் புலியே, எல்லோருக்கும் நன்மையைத் தரும்.(8) நீ வேறுமாதிரியாகச் செயல்பட்டால், அனைவர் மேலும் தீமை வந்து விழும். நீயும் அவமரியாதையால் மறைக்கப்பட்டிருப்பாய்.(9)  ஓ துரியோதனா, உனது நல்ல பெயரைக் காப்பாற்ற முயற்சி செய். ஒருவனின் நல்ல பெயர்தான் நிச்சயமாக அவனது பலத்தின் ஊற்றுக்கண்ணாகும். மதிப்பிழந்தவன் வாழ்வது வீண் என்று சொல்லப்படுகிறது.(10)

ஓ கௌரவா {துரியோதனா}, ஒருவனது புகழ் நிலைத்திருக்கும் வரை அவன் இறப்பதில்லை. ஒருவன் தனது புகழ் இருக்கும் வரை வாழ்ந்து, அது மறையும் போதே இறக்கிறான்.(11) ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, குரு குலத்தவருக்குத் தகுந்த {ஏற்ற} நடவடிக்கைகளைத் தொடர்ந்து செய்வாயாக. பெரும்பலம் கொண்ட கரமுடையவனே, உனது மூதாதையர்களின் செயல்களைப் பின்பற்றுவாயாக.(12) பாண்டவர்கள் அழியவில்லை என்பது நமக்குக் கிடைத்த நற்பேறாகும். குந்தி வாழ்வதும் நமக்குக் கிடைத்த நற்பேறாகும். தனது செயலை சாதிக்க முடியாத பாவி புரோசனன் அழிந்தான் என்பதும் நமக்குக் கிடைத்த பெரும் நற்பேறாகும்.(13) குந்திபோஜனின் மகள் {குந்தி} எரிந்து செத்தாள் என்பதை நான் கேட்ட நேரத்திலிருந்து, ஓ காந்தாரியின் மகனே {துரியோதனா}, எந்த உயிரினத்தையும் சந்திக்கும் சக்தி அற்று இருந்தேன்.(14) ஓ மனிதர்களில் புலியே, குந்திக்கு நேர்ந்த விதியை அறிந்த உலகம், உன்னை விடப் புரோசனனைப் பெரிய குற்றவாளியாகக் கருதவில்லை.(15)

ஓ மன்னா, பாண்டுவின் மகன்கள் நெருப்பில் இருந்து தப்பி, மீண்டும் காட்சி அளித்துவிட்டதால், உனது தீய நோக்கங்களை விட்டுவிடுவாயாக.(16) ஓ குரு குலத்தோனே, அந்த வீரர்கள் {பாண்டவர்கள்} வாழும் வரை, இடியை ஆயுதமாகக் கொண்டவன் {இந்திரன்} நினைத்தாலும், அவர்களது மூதாதையர் நாட்டில் அவர்களுக்கு இருக்கும் பங்கை அவர்களை இழக்கச் செய்ய முடியாது என்பதை அறிந்து கொள்வாயாக.(17) பாண்டவர்கள் அறம்சார்ந்தவர்கள் {தர்மவான்கள்}, ஒற்றுமையானவர்கள். அவர்களுக்குச் சரிபாதி நாடான அவர்கள் பங்கைக் கொடுக்காமல் இருப்பது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.(18) நீ சரியாகச் செயல்பட வேண்டுமெனில், எனக்கு ஏற்புடையதை நீ செய்ய வேண்டுமெனில், அனைவரின் நன்மையை நீ கருதுவதாக இருந்திடில், பாதி நாட்டை அவர்களுக்குக் கொடுப்பாயாக" என்றார் {பீஷ்மர்}.(19)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்