Saturday, August 24, 2013

துருபதனிடம் அனுமதி கேட்ட விதுரன்! - ஆதிபர்வம் பகுதி 208

Vidura asked Drupada for permission! | Adi Parva - Section 208 | Mahabharata In Tamil

(விதுராகமன பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : விதுரன், துருபதனிடம் சென்று, பல பரிசுப் பொருட்களையும், நலம் விசாரிப்புகளையும் செய்து, பாண்டவர்களை ஹஸ்தினாபுரம் அழைத்துச் செல்ல அனுமதி கேட்பது...

வைசம்பாயனர் சொன்னார், "இந்தப் பல்வேறு பேச்சுகளைக் கேட்ட திருதராஷ்டிரன், "சந்தனுவின் மகனும் கல்விமானுமான பீஷ்மரும், சிறப்பு மிகுந்த முனிவர் துரோணரும், நீயும் (ஓ விதுரா) உண்மையையும், எனக்கு எது நன்மையைத் தருமோ அதையுமே சொல்லியிருக்கிறீர்கள்.(1) நிச்சயமாக, அந்தப் பெரும் தேர் வீரர்களான குந்தியின் வீர மகன்கள், பாண்டுவின் மகன்களே. எனவே, விதிப்படி அவர்கள் எனது மகன்களே என்பதில் ஐயமில்லை.(2) எனது மகன்களுக்கு எப்படி இந்த நாட்டின் மீது உரிமை இருக்கிறதோ, அதே போல, பாண்டுவின் மகன்களுக்கும் நிச்சயமாக உரிமை உண்டு.(3) எனவே, முறையான அன்புமிக்க வழியில் விரைவாகப் பாண்டவர்களை அவர்களின் தாயுடன் {குந்தியுடன்} இங்கு அழைத்து வருவாயாக. ஓ பாரதக் குலத்தோனே {விதுரனே}, கூடவே தெய்வீக அழகுடைய கிருஷ்ணையையும் {திரௌபதியையும்} அழைத்து வருவாயாக.(4) நற்பேறால் மட்டுமே பிருதையின் {குந்தியின்} மகன்கள் உயிருடன் இருக்கிறார்கள்; நற்பேறால் மட்டுமே பிருதையும் உயிரோடிருக்கிறாள். நற்பேறால் மட்டுமே அந்தப் பெரும் தேர் வீரர்கள் துருபதனின் மகளை {திரௌபதியை} அடைந்தார்கள்.(5) நற்பேறால் மட்டுமே நமது பலம் அதிகரித்திருக்கிறது; நற்பேறால் மட்டுமே புரோசனன் அழிந்தான். ஓ பெரும் பிரகாசமுள்ளவனே, நற்பேறால் மட்டுமே எனது பெரும் துயர் நீக்கப்பட்டது" என்றான் {திருதராஷ்டிரன்}".(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "விதுரன், ஓ பாரதா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரனுடைய கட்டளையின் பேரில், யக்ஞசேனனிடமும் {துருபதனிடமும்}, பாண்டவர்களிடமும் சென்றான்.(7) அவனுடன் கணக்கிலடங்கா நகைகளையும், பல தரப்பட்ட செல்வங்களையும், திரௌபதிக்காகவும், பாண்டவர்களுக்காகவும், யக்ஞசேனனுக்காகவும் கூட எடுத்துச் சென்றான்.(8) அறத்தின் அனைத்து விதிகளையும் அறிந்தவனும், அனைத்து அறிவியல்களிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவனுமான விதுரன், துருபதனின் வசிப்பிடத்திற்கு வந்து, அந்த ஏகாதிபதியைச் சரியான முறையில் அழைத்து, அவனுக்காகக் காத்திருந்தான்.(9) துருபதன் விதுரனைச் சரியான முறையில் வரவேற்று அழைத்தான். இருவரும் ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டனர்.(10)

விதுரன் அங்கே பாண்டவர்களையும், வாசுதேவனையும் {கிருஷ்ணனையும்} கண்டான். அவன் அவர்களைக் கண்டதுமே அன்புடன் அவர்களை அணைத்துக் கொண்டு அவர்களின் நலம் விசாரித்தான்.(11) வாசுதேவனுடன் {கிருஷ்ணனுடன்} கூடிய பாண்டவர்கள் அளவிடமுடியா புத்திக்கூர்மைகொண்ட விதுரனைத் தகுந்த முறையில் வழிபட்டனர். ஆனால் விதுரன், ஓ மன்னா {ஜனமேஜயா}, திருதராஷ்டிரன் பெயரால் அவர்களது நலனைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பாசத்துடன் விசாரித்தான். ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, அவன், பாண்டவர்களுக்கும், குந்திக்கும், திரௌபதிக்கும், துருபதனுக்கும், துருபதனின் மகன்களுக்கும், கௌரவர்களால் அவன் {விதுரன்} வழியாகக் கொடுத்தனுப்பப்பட்ட ரத்தினங்களையும், பல்வேறு வகைகளிலான செல்வங்களையும் கொடுத்தான்.(12-14) அளவற்ற புத்திக்கூர்மை கொண்ட அடக்கமுடைய விதுரன், பாண்டவர்கள் மற்றும் கேசவனின் {கிருஷ்ணனின்} முன்னிலையில் துருபதனிடம் இவ்வார்த்தைகளைச் சொன்னான்.(15)

அவன் {விதுரன்}, "ஓ ஏகாதிபதி {துருபதரே}, உமது அமைச்சர்களுடனும் மகன்களுடனும் சேர்ந்து, நான் சொல்லப்போவதைக் கேட்பீராக. மன்னன் திருதராஷ்டிரன், தனது அமைச்சர்கள், மகன்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், ஓ மன்னா {துருபதா}, திரும்பத் திரும்ப உமது நலனைப் பற்றி விசாரித்தார்.  ஓ ஏகாதிபதி {துருபதா}, உம்முடன் ஏற்பட்ட சம்பந்தம் குறித்து அவர் {திருதராஷ்டிரர்} பெரும் மனநிறைவுகொண்டுள்ளார்.(16,17) ஓ மன்னா {துருபதரே}, அதே போல, சந்தனுவின் மகனான பெரும் ஞானம் கொண்ட பீஷ்மரும், குரு குலத்தவர் அனைவருடன் சேர்ந்து அனைத்து விதத்திலும் உமது நலனைக் குறித்து விசாரித்தார்.(18) பரத்வாஜரின் மகனும், பெரும் ஞானம் கொண்டவரும், உமது நண்பருமான துரோணர் உளப்பூர்வமாக உம்மைக் கட்டி அணைத்து, உமது மகிழ்ச்சி குறித்து விசாரித்தார்.(19) ஓ பாஞ்சாலர்களின் மன்னா {துருபதரே}, திருதராஷ்டிரனும், அனைத்துக் குரு குலத்தவரும் சேர்ந்து, உமது சம்பந்தம் கிடைத்ததால், பெரும் அருள் கிடைத்ததாகக் கருதுகிறார்கள்.(20)

ஓ யக்ஞசேனரே {துருபரே), நீர் நிறுவிய இந்தக் கூட்டணியால், ஒரு புதிய நாடு கிடைத்ததைப் போல அவர்கள் மகிழ்ந்திருக்கிறார்கள்.(21) ஓ ஏகாதிபதி {துருபதரே}, இவையாவற்றையும் அறிந்து கொண்டு, பாண்டவர்களை அவர்களது மூதாதையர் நாட்டுக்கு {குருஜாங்கலத்திற்கு} மீண்டும் செல்ல அனுமதி அளிப்பீராக. பாண்டு மகன்களைக் காண குருக்கள் பேராவல் கொண்டிருக்கின்றனர்.(22) இந்த மனிதர்களில் காளைகளை (அவர்களது நாட்டில் {ஹஸ்தினாபுரத்தில்}) நீண்ட நாட்களாகக் காணவில்லை. அவர்களும், பிருதையும் கூட தங்கள் நகரத்தைக் காண மிகுந்த ஆவலுடனேயே இருக்கக்கூடும்.(23) குரு மகளிர் அனைவரும், எங்கள் குடிமக்கள் அனைவரும், பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையைக் காண பேராவலுடன் காத்திருக்கிறார்கள்.(24) எனவே, ஓ ஏகாதிபதி {துருபரே}, காலந்தாழ்த்தாமல், பாண்டவர்கள் தங்கள் மனைவியுடன் {திரௌபதியுடன்} அங்கே செல்ல நீர் அனுமதிக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.(25)  ஓ மன்னா, சிறப்புமிகுந்த பாண்டவர்களுக்கு அங்கே செல்வதற்கு உமது அனுமதி கிடைத்ததும், நான் திருதராஷ்டிரருக்கு விரைவான தூதர்கள் மூலம் செய்தியைச் சொல்லி அனுப்புகிறேன். ஓ மன்னா {துருபதரே}, பாண்டவர்கள், குந்தியுடனும், கிருஷ்ணையுடனும் {திரௌபதியுடன்} புறப்படட்டும்" என்றான் {விதுரன்}”[1].(26)


[1] மன்மதநாததத்தர், பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளில் விதுராகமனபர்வம் என்ற இந்த உபபர்வம் இத்துடன் நிறைவடைந்து, அடுத்த பகுதியிலிருந்து அடுத்த உபபர்வமான ராஜ்லாப பர்வம் தொடங்குகிறது. ஆனால் கும்பகோணம் பதிப்பிலும், கங்குலியின் பதிப்பிலும் அடுத்த பகுதியிலேயே நிறைவடைகிறது. கும்பகோணம் பதிப்பிலும் அடுத்த பகுதியின் பதியிலே ஒரு அத்தியாம் நிறைவு பெற்று, உடனே ராஜ்யலாப பர்வம் தொடங்குகிறது. உபபர்வ பிரிப்பில் மேற்கண்ட பதிப்புகளே முறையாக இருந்தாலும்,, நாம் கங்குலியைப் பின்பற்றுவதால் இந்த உப பர்வம் அடுத்த பகுதியிலேயே நிறைவடையும்.


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்