Tuesday, September 03, 2013

அக்னியின் செரியாமை! - ஆதிபர்வம் பகுதி 225

Agni suffering from surfeit! | Adi Parva - Section 225 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…

வைசம்பாயனர் சொன்னார், "அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர்.(1) அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.(2)

இப்படி அந்த பிராமணனால் கேட்டுக் கொள்ளப்பட்ட கிருஷ்ணனும், பாண்டுவின் மகனும் {அர்ஜுனனும்} அவனிடம், "எந்த வகையான உணவு உம்மை மனநிறைவுகொள்ளச் செய்யும் என்று சொன்னால் நாங்கள் அஃதை உமக்குக் கொடுக்க முயல்வோம்" என்றனர்.(3)

இவ்வாறு பதில் உரைக்கப்பட்ட அந்தச் சிறப்பு மிகுந்த பிராமணன், ’எந்த வகையான உணவு உமக்குத் தேவை’ என்று அந்த வீரர்கள் கேட்டதால், அவர்களிடம்,(4) "நான் சாதாரண உணவை உண்ண விரும்புவதில்லை. நான் அக்னி என்பதை அறிவீராக! உகந்த உணவை எனக்குக் கொடுப்பீராக.(5) இந்தக் காண்டவக் காடு {காண்டவவனம்} இந்திரனால் எப்போதும் காக்கப்படுகிறது. இஃது அந்தச் சிறப்பு வாய்ந்தவனால் காக்கப்படுவதால், நான் இஃதை எப்போதும் உண்ணத் தவறுகிறேன்.(6) இந்தக் கானகத்தில் இந்திரனின் நண்பனும், நாகனுமான தக்ஷகன் தன்னைத் தொடர்பவர்களுடனும், தனது குடும்பத்துடனும் வசித்து வருகிறான்.(7) அவனுக்காகவே {தஷகனுக்காகவே} அந்த வஜ்ரதாரி {இந்திரன்} இந்தக் கானகத்தைக் காக்கிறான். பல உயிரினங்களும் தக்ஷகனின் பொருட்டு இங்குப் பாதுகாப்பாக இருக்கின்றன. இந்தக் கானகத்தை உண்ண நினைத்தாலும், இந்திரனின் ஆற்றலின் காரணமாக எனது முயற்சிகள் பலனளிக்கவில்லை.(8) நான் நெருப்புச் சுடர்களை வீசியதும் அவன் மேகத்திலிருந்து நீரைப் பொழிகிறான். எனவே, நான் காண்டவ வனத்தை உட்கொள்வதைப் பெரிதும் விரும்பினாலும் அதில் வெற்றியடைய முடியவில்லை.(9) இப்போது நான் ஆயுதத்திறன்மிக்க உங்களிடம் வந்திருக்கிறேன். நீங்கள் எனக்கு உதவி செய்தால், நான் நிச்சயம் இந்த வனத்தை உட்கொள்வேன் {எரித்துவிடுவேன்}. இதுவே நான் விரும்பும் உணவாகும்.(10) சிறந்த ஆயுதங்களில் திறன்மிக்க நீங்கள், மழைத் துளிகள் கீழே பொழியப்படுவதையும், உயிரினங்கள் தப்புவதையும் தடுத்தால், நான் இந்த வனத்தை உட்கொள்ள {எரிக்கத்} தொடங்குவேன்" என்றான் {அக்னி}".(11)

ஜனமேஜயன், "தேவர்கள் தலைவனால் {இந்திரனால்} காக்கப்பட்டுப் பல உயிரினங்களுடன் இருந்த அந்தக் காண்டவ வனத்தை உட்கொள்ள அந்தச் சிறப்பு மிகுந்த அக்னி ஏன் விரும்பினான்?(12) அக்னி கோபத்துடன் காண்டவ வனத்தை உட்கொள்ளப் பெரிய காரணம் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. ஓ பிராமணரே {வைசம்பாயனரே}, இதை விவரமாக அறிய நான் விரும்புகிறேன். ஓ முனிவரே {வைசம்பாயனரே}, பழங்காலத்தில் காண்டவ வனம் எப்படி எரிக்கப்பட்டது என்பதை எனக்குச் சொல்லும்" என்று கேட்டான் {ஜனமேஜயன்}.(13,14)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மனிதர்களின் தலைவா {ஜனமேஜயா}, முனிவர்கள் புராணங்களில் சொல்லியபடிக் காண்டவனத்தில் மூண்ட பெருந்தீயைப் பற்றிச் சொல்கிறேன்.(15) ஓ மன்னா {ஜனமேஜயா}, புராணங்களில் பலமும் ஆற்றலும் பொருந்தியவனும், இந்திரனுக்கு நிகரானவனும், ஸ்வேதகி என்ற பெயரில் கொண்டாடப்பட்டவனுமான மன்னன் ஒருவன் இருந்தான் என்று நாம் கேள்விப்படுகிறோம்.(16) வேள்விகளிலும், தானங்களிலும், புத்திசாலித்தனத்திலும் அவனுக்கு நிகராக யாரும் உலகத்தில் இல்லை. ஸ்வேதகி ஐந்து பெரும் வேள்விகளையும் மற்ற பல வேள்விகளையும் செய்து, பிராமணர்களுக்குப் பரிசுகள் பலவும் கொடுத்தான்.(17) ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இதயம் எப்போதும் வேள்விகளிலும், அறச் சடங்குகளிலும், பரிசு பொருட்களைக் கொடுப்பதிலுமே நிலைத்திருந்தது.(18) பெரும் நுண்ணறிவைக் கொண்ட ஸ்வேதகி, பல வருடங்கள் நீடிக்கும் வேள்விகளைச் செய்தான். தனக்கு வேள்வி செய்ய உதவி செய்த ரித்விக்குகள், தொடர்ந்து புகைபட்டுக் கண்கள் பாதிப்படைந்து, பலவீனமாகி தன்னைவிட்டுப் போகும்வரை அம்மன்னன் தொடர்ந்து வேள்விகளைச் செய்து வந்தான். ஒரு கட்டத்தில் அவர்கள் இனிமேல் தங்களால் வேள்விகளில் உதவ முடியாது என்று சொல்லிச் சென்றுவிட்டார்கள். இருப்பினும், அம்மன்னன் {ஸ்வேதகி}, தொடர்ந்து அந்த ரித்விக்குகளைத் தன்னிடம் வருமாறு அழைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், கண்கள் வலி கொண்ட அவர்கள் {ரித்விக்குகள்} அவனது வேள்விக்கு வரவில்லை.(19,20)

எனவே, அந்த மன்னன் {ஸ்வேதகி}, தன் ரித்விக்குகளின் சிபாரிசில் அந்த ரித்விக்குகளைப் போன்றே உள்ள மற்ற ரித்விக்குகளைக் கொண்டு தான் தொடங்கிய அவ்வேள்வியை முடித்தான்.(21) சில நாட்கள் கடந்தது, மன்னன் ஸ்வேதகி நூறுவருடங்கள் செய்வதற்கான மற்றொரு வேள்வியைத் திட்டமிட்டான்.(22) ஆனால் அந்தச் சிறப்பு வாய்ந்த ஏகாதிபதிக்கு ஒரு ரித்விக்கும் கிடைக்கவில்லை. அந்தக் கொண்டாடப்பட்ட மன்னன் {ஸ்வேதகி}, தனது நண்பர்களுடனும் உறவினர்களுடனும் சேர்ந்து, சோம்பலை விடுத்துத் தனது புரோகிதர்களை, சமாதானப் பேச்சுகள் மூலமும், பரிசுகள் மூலமும், வணங்கியும் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான்.(23,24)

ஆனால், அளவில்லாச் சக்தி கொண்ட அம்மன்னனின் {ஸ்வேதகியின்} நோக்கத்தைச் சாதிக்க அனைவரும் மறுத்து விட்டனர். கோபம் அடைந்த அந்த அரசமுனி {ஸ்வேதகி}, ஆசிரமங்களில் அமர்ந்திருந்த பிராமணர்களிடம்,(25) "பிராமணர்களே நான் வீழ்ந்த மனிதனாக இருந்தாலோ, உங்களுக்குத் தரும் மரியாதையையோ சேவையையோ குறைத்து வழங்குபவனாக இருந்தாலோ உங்களாலோ அல்லது மற்ற பிராமணர்களாலோ இப்படிக் கைவிடப்பட்ட கதியை அடையத் தகுதி வாய்ந்தவனாவேன்.(26) ஆனால் நான் உங்களை அவமதிக்கவும் இல்லை, தரம் தாழ்த்தவும் இல்லை. எனவே, பிராமணர்களில் முதன்மையானவர்களே, தகுந்த காரணமில்லாமல் நீங்கள் என்னைக் கைவிட்டு எனது வேள்விக்குத் தடை செய்யக் கூடாது. பிராமணர்களே, நான் உங்கள் பாதுகாப்பைக் கோருகிறேன்! நீங்கள் எனக்கு நன்மை செய்ய வேண்டுகிறேன். ஆனால் பிராமணர்களில் முதன்மையானவர்களே, பகையால் மட்டுமே அல்லது சரியற்ற நோக்கத்தால் மட்டுமே நீங்கள் என்னைக் கைவிடுவதாக இருந்தால், எனது வேள்விக்குத் துணைபுரிய மற்ற புரோகிதர்களை நாடி, அவர்களிடம் சமாதானமாகவும் இனிமையாகவும் பேசி அவர்களுக்குப் பரிசு கொடுத்து இந்த வேலையை அவர்கள் கையில் கொடுப்பேன்" என்று சொல்லி அந்த ஏகாதிபதி அமைதியடைந்தான்.(27-30)

ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே {ஜனமேஜயா}, பிறகு, தங்களால் மன்னனின் வேள்விக்குத் துணை புரிய முடியாது என்பதை அறிந்த அந்தப் புரோகிதர்கள், தாங்கள் கோபம் கொண்டதாக நடித்து, அந்த மன்னனிடம் {ஸ்வேதகியிடம்},(31) "ஓ மன்னர்களில் சிறந்தவனே, உனது வேள்விகள் இடைவிடாது தொடர்ச்சியாக நடக்கின்றன. உனக்குத் தொடர்ந்து துணை புரிந்து வருவதால், நாங்கள் களைப்படைந்திருக்கிறோம்.(32) உழைப்பால் எங்களுக்கு நேர்ந்த களைப்பால், நீ எங்களுக்கு விடுப்பு அளிப்பதே தகும். ஓ பாவமற்றவனே, நீதியை இழந்ததால், உன்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (தொடர்ந்து எங்களைத் துரிதப்படுத்திக்கொண்டிருக்கிறாய்).(33) நீ ருத்ரனிடம் {சிவனிடம்} செல்! அவன் உனது வேள்விக்குத் துணை புரிவான்!" என்றனர். கோபத்தால் வந்த அந்தக் கண்டிக்கும் வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஸ்வேதகி மிகுந்த கோபம் கொண்டான்.(34) அந்த ஏகாதிபதி கைலாச மலைக்குச் சென்று, துறவுக்குத் தன்னை அர்ப்பணித்தான். ஓ மன்னா {ஜனமேஜயா}, அந்த ஏகாதிபதி நிலைத்த கவனத்துடன் மகாதேவனை {சிவனை} வழிபடத் தொடங்கினான்.(35)

அவன் மிகுந்த கடுமையான தவத்தில் ஈடுபட்டான். உணவு உட்கொள்வதைத் தவிர்த்துப் பல காலங்களைக் கடத்தினான். அந்த ஏகாதிபதி {ஸ்வேதகி}, நாள் முழுவதும், சில வேளைகளில் பனிரெண்டாவது மணி நேரத்திலும், சில வேளைகளில் பதினாறாவது மணி நேரத்திலும் பழங்களையும் கிழங்குகளையும் மட்டும் உண்டான். மன்னன் ஸ்வேதகி தொடர்ந்து ஒரு காலை உயர்த்தியபடி ஆறுமாதங்களுக்கு நிலைத்த கண்களுடனும், நிலைத்த கவனத்துடனும் ஒரு தூண் தரையில் ஊன்றப்பட்டது போலவும், ஒரு நெடும் மரம் நிற்பது போலவும் நின்றான்.(36-38) ஓ பாரதா {ஜனமேஜயா}, இறுதியாக சங்கரன் {சிவன்} கடும் தவம் இருந்த அந்த மனிதர்களில் புலியானவனிடம் மனநிறைவை அடைந்து, அவனிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டான். அந்தத் தேவன் {சிவன்} ஏகாதிபதியிடம் {ஸ்வேதகியிடம்} அமைதியானதும் கடுமையானதுமான குரலில், "ஓ மன்னர்களில் புலியே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, உன் தவத்தால் நான் மனநிறைவடைந்தேன்.(39) நீ அருளப்பட்டிரு! ஓ மன்னா, இப்போது நீ விரும்பிய வரத்தைக் கேள்" என்று கேட்டான்.

அளவற்ற சக்தி கொண்ட ருத்திரனின் {சிவனின்} வார்த்தைகளைக் கேட்ட அரச முனி,(40) அந்தத் தேவனைப் பணிந்து அவனிடம் {சிவனிடம்}, "ஓ சிறப்பு மிகுந்தவனே, மூன்று உலகத்தாலும் வழிபடப்படுபவனே, நீ என்னிடம் மனநிறைவடைந்தாய் என்றால், ஓ தேவர்களுக்குத் தேவா, ஓ தேவர்களுக்குத் தலைவா, எனது வேள்விகளில் நீ எனக்குத் துணை புரிவாயாக" என்று கேட்டான்.(41,42) ஏகாதிபதியின் {ஸ்வேதகியின்} இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தச் சிறப்பு மிகுந்த தேவன் {சிவன்} பெரும் மனநிறைவு கொண்டு, புன்னகைத்து, "{தேவர்களாகிய} நாங்கள் வேள்விகளுக்குத் துணை புரிவதில்லை;(43) ஆனால், ஓ மன்னா, கடுந்தவங்களை இயற்றிய நீ வரமாக இதை விரும்புவதால், இச்சூழ்நிலையில், ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நான் உனது வேள்விக்குத் துணை புரிகிறேன்" என்றான்.(44) ருத்திரன் மேலும் தொடர்ந்து, "ஓ மன்னர் மன்னா! தொடர்ந்த பனிரெண்டு வருடங்களுக்கு நீ இடைவிடாமல் நெருப்பில் தெளிந்த நெய்யை விட்டு நிலைத்த கவனத்துடன் பிரம்மச்சாரியாக வாழ்ந்தால், நீ என்னிடம் கேட்பதை அடைவாய்" என்றான் {சிவன்}.

ருத்திரனால் இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் ஸ்வேதகி,(45,46) அந்தத் திரிசூலம் தாங்கியவன் {சிவன்} வழிகாட்டியபடியே நடந்து கொண்டான். பனிரெண்டு வருடங்கள் கடந்தன, அங்கே மகேஸ்வரன் {சிவன்} மீண்டும் வந்தான்.(47) உலகத்தை உண்டாக்கிய அந்தச் சங்கரன், அந்த அற்புதமான ஏகாதிபதியான ஸ்வேதகியைக் கண்டு பெரும் மனநிறைவு அடைந்து உடனடியாக அவனிடம்,(48) "நான் உனது செயல்களால் மனநிறைவடைந்தேன். ஆனால், ஓ மன்னர்களில் சிறந்தவனே, வேள்விகளில் துணைபுரிவது பிராமணர்களின் கடமையாகும்.(49) எனவே, ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, நானே வந்து உனது வேள்வியில் இன்று துணை புரிய மாட்டேன். இந்தப் பூமியில் எனது சுயத்தின் ஒரு பங்கைக் கொண்டிருக்கும் ஓர் உயர்ந்த பிராமணன் இருக்கிறான்.(50) அவன் துர்வாசன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறான். பெரும் சக்தி கொண்ட அந்த பிராமணன் {துர்வாசன்} உனது வேள்வியில் உனக்குத் துணையாக இருப்பான். எனவே, வேள்விக்கான தயாரிப்புகள் தொடங்கட்டும்" என்றான் {சிவன்}.(51)

ருத்திரனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன், தனது தலைநகருக்குத் திரும்பி, தேவையானவற்றைச் சேகரித்தான்.(52) அனைத்தும் சேகரிக்கப்பட்ட பிறகு, அந்த மன்னன் {ஸ்வேதகி} மறுபடியும் ருத்திரனிடம் சென்று, "அனைத்துப் பொருட்களையும் சேகரித்தாகிவிட்டது.(53) உனது கருணையால் அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து விட்டன. ஓ தேவர்களுக்குத் தேவா, நாளை வேள்வியில் நீ நிறுவப்பட்டிருப்பாயாக" என்றான். அந்தச் சிறப்புவாய்ந்த மன்னனின் வார்த்தைகளைக் கேட்ட ருத்திரன்,(54) துர்வாசரை அழைத்து, அவரிடம், "ஓ துர்வாசரே, இந்த ஏகாதிபதிகளில் சிறந்தவன் ஸ்வேதகி என்று அழைக்கப்படுகிறான்.(55) ஓ பிராமணர்களில் சிறந்தவரே {துர்வாசரே}, எனது கட்டளையின் பேரில், நீர் இந்த மன்னனுக்கு அவனது வேள்வியில் துணை புரியும்" என்று சொன்னார். அதற்குத் துர்வாச முனிவர் ருத்திரனிடம், "அப்படியே ஆகட்டும்" என்று சொன்னார்.(56)

மன்னன் சுவேதகியின் ஏற்பாடுகள் முடிந்து வேள்வி நடந்தது. அந்தச் சிறப்பு மிகுந்த ஏகாதிபதி தகுந்த காலத்தில் விதிப்படி வேள்வியைச் செய்தான். அந்த நேரத்தில் பிராமணர்களுக்குக் கொடுக்கப்பட்ட பரிசுகள் அதிகமாக இருந்தன.(57) அந்த ஏகாதிபதியின் வேள்வி முடிவுக்கு வந்ததும் துணை புரிய வந்த புரோகிதர்கள் அனைவரும் துர்வாசருடன் சென்று விட்டார்கள். வேள்வியில் இருந்த அளவிடமுடியாத சக்தி கொண்ட மற்ற அனைத்து சத்யஸ்யர்களும் சென்று விட்டார்கள். அந்த உயர்ந்த ஏகாதிபதி! வேதங்களை அறிந்த உயர்ந்த பிராமணர்களாலும் வழிபடப்பட்டுக் குடிமக்களால் பாராட்டப்பட்டு, வாழ்த்துப்பா பாடப்பட்டு, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். இதுதான் ஏகாதிபதிகளில் சிறந்த அரசமுனி ஸ்வேதகியின் வரலாறு. பூமியில் பெரும் புகழ் கொண்ட அவனுக்கு நேரம் வந்ததும் தனக்கு வாழ்க்கையில் உதவிய ரித்விக்குகளுடனும், சத்யஸ்யர்களுடனும் சொர்க்கத்திற்கு உயர்ந்தான்".(58,59)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஸ்வேதகியின் அந்த வேள்வியில் அக்னி தொடர்ந்து பனிரெண்டு வருடங்களுக்குச் தூய்மையாக்கப்பட்ட நெய்யைக் குடித்திருந்தான்.  நிச்சயமாக அந்தக் காலத்தில், தூய்மையாக்கப்பட்ட நெய் அக்னியின் வாயில் தொடர்ந்து உற்றப்பட்டுக் கொண்டே இருந்தது. அவ்வளவு அதிகமாகக் குடித்த அக்னிக்கு நெய் மிகவும் தெவிட்டி, இனி யார் கையிலும் எந்த வேள்வியிலும் நெய் உண்ணக்கூடாது என்று விரும்பினான். அக்னி தனது நிறத்தையும் பளபளப்பையும் இழந்து மங்கிப் போனான்.(60) அளவுக்கு அதிகமாக {நெய்யை} உண்டு தெவிட்டும் நிலையை அடைந்ததால் அவன் பசியற்ற {ஜீரணிக்காத} நிலையை உணர்ந்தான். அவனுக்கு சக்தி குறைந்து, நோயால் பாதிக்கப்பட்டான். வேள்வி நெய்யைக் குடிப்பவன் {அக்னி}, தனது சக்தி சிறுகச் சிறுக குறைவதைக் கண்டு, அனைவராலும் வழிபடப்படும் பிரம்மனின் புனிதமான வசிப்பிடம் சென்றான்.(61)  தனது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் அந்தத் தேவனை {பிரம்மனை} அணுகிய அக்னி அவனிடம் {பிரம்மனிடம்}, "ஓ உயர்ந்தவனே, ஸ்வேதகி {தனது வேள்வியில்} என்னை அளவுக்கதிகமாக மனநிறைவு கொள்ளச் செய்தான். தவிர்க்க முடியாத தெவிட்டும் நிலையால் இன்னும் நான் பாதிப்படைந்திருக்கிறேன். ஓ அண்டத்தின் தலைவா {பிரம்மா}, நான் பிரகாசத்தாலும் சக்தியாலும் குறைந்து வருகிறேன்.(62) உமது கருணையால் நான் எனது இயல்பான தன்மையை மறுபடி அடைய விரும்புகிறேன்" என்று கேட்டான். ஹூதவாஹனின் {அக்னியின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட சிறப்புமிகுந்த படைப்பாளி {பிரம்மன்},(63) அவனிடம் {அக்னியிடம்} புன்னகைத்து, "ஓ உயர்ந்தவனே, பனிரெண்டு வருடங்களுக்கு நீ தொடர்ந்து உனது வாயில் ஊற்றப்பட்ட வேள்வி நெய்யை உண்டிருக்கிறாய். அதனாலேயே இந்த நோய் உன்னைப் பீடித்திருக்கிறது.(64,65) ஆனால் ஓ அக்னியே துயர் கொள்ளாதே. நீ உனது இயற்கை நிலையை விரைவில் அடைவாய். நான் உனது தெவிட்டும் நிலையைப் போக்குகிறேன். அதற்கான நேரமும் வந்துவிட்டது. பயங்கரக் கானகமான காண்டவ வனம், தேவர்களுடைய எதிரிகளின் வசிப்பிடமாகிவிட்டது. அதை முன்பொரு முறை தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி நீ சாம்பலாக்கி இருக்கிறாய். அஃது இப்போது எண்ணிலடங்கா உயிரினங்களுக்கு இல்லமாகி இருக்கிறது.(66,67) அந்த உயிரினங்களின் கொழுப்பை நீ உண்டால், உனது இயற்கையான நிலையை அடைவாய். விரைவாக நீ அந்தக் கானகத்திற்கு முன்னேறி அங்கு வசிக்கும் உயிரினங்களை உட்கொள்வாயாக. அதனால் நீ உனது நோயிலிருந்து மீள்வாய்" என்றான் {பிரம்மன்}.(68)

இந்த வார்த்தைகளை உயர்ந்த தேவனின் உதடுகளில் இருந்த அறிந்த அந்த ஹூதசானன் {அக்னி}, பெரும் வேகத்துடன் சென்றான்.(69) விரைவாகவும், பெரும் உற்சாகத்துடனுடம் அந்தக் காண்டவப் பிரஸ்தத்தை அடைந்து, காற்றின் {வாயுவின்} உதவியுடன் அதை முழு வீரியத்துடன் எரிக்கத் தொடங்கினான்.(70) அவன் காண்டவ வனம் பற்றி எரிவதைக் கண்ட அந்தக் கானக வாசிகள், பெரும் முயற்சி எடுத்து அந்தப் பெருந்தீயை அணைக்க முயன்றனர்.(71) நூறாயிரம் {ஒரு லட்சம்} யானைகள், கோபம் கொண்ட வேகத்துடன், தங்கள் துதிக்கைகளில் நீர் கொண்டு வந்து நெருப்பின் மீது இரைத்தன.(72) கோபத்தால் வெறியை அடைந்தவையும்,  ஆயிரக்கணக்கானவையும், பல தலைகளைக் கொண்டவையுமான நாகங்கள், தங்கள் பல தலைகளிலும் இருந்தும் நீரை இரைத்து அந்த நெருப்பை அணைக்க முயன்றன.(73) ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா} மற்ற கானகவாழ் உயிரினங்கள், பல்வேறு வழிகளிலும், பலவிதமான முயற்சிகளிலும் அந்த நெருப்பை அணைத்தன.(74) இதே போல அக்னி ஏழு முறை அந்தக் காண்டவ வனத்தை எரித்தான். இப்படியே கானகத்தில் சுடர்விட்டெரிந்த அந்த நெருப்பு, அக்கானக வாசிகளால் அணைக்கப்பட்டது" {என்றார் வைசம்பாயனர்}.(75)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்