Showing posts with label காண்டவ தகா பர்வம். Show all posts
Showing posts with label காண்டவ தகா பர்வம். Show all posts

Thursday, September 05, 2013

இந்திரன் அர்ஜுனன் மோதல்! - ஆதிபர்வம் பகுதி 229

The fight between Indra and Arjuna! | Adi Parva - Section 229 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : இந்திரனுக்கும் அர்ஜுனனுக்கு நடந்த மோதல்; இந்திரன் அர்ஜுனனை நினைவை இழக்கச் செய்தது; தக்ஷகன் மனைவியின் தந்திரம்; இந்திரன் தனது நண்பனின் மகனைக் காக்க நினைப்பது; தக்ஷகன் மகன் தப்பிப்பது; நாகர்கள், கருடர்கள், அசுரர்கள், ராட்சசர்கள் ஆகியோருடன் கிருஷ்ணனும் அர்ஜுனனும் மோதியது; தேவர்கள் அனைவரும் சேர்ந்து கிருஷ்ணனுடன் அர்ஜுனனுடனும் மோதியது; தேவர்கள் இந்திரனிடம் தஞ்சம் புகுந்தது; இந்திரன் மீண்டும் தாக்கியது...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டுவின் மகனான பீபத்சு {அர்ஜுனன்}, அற்புதமான ஆயுதங்களை அழைத்து, இந்திரனால் உண்டாகப்பட்ட மழையைத் தடுத்தான்.(1) உயர் ஆன்ம அர்ஜுனன், சந்திரன் மூடுபனியால் சுற்று வட்டாரத்தை மறைப்பதைப் போலத் தனது ஆயுதங்களால் காண்டவ வனத்தை மறைத்தான்.(2) அந்தக் கானகத்திற்கு மேலிருந்த வானம் இப்படி அர்ஜுனனின் கணைகளால் மறைக்கப்பட்ட பிறகு, கீழே இருந்த எந்த உயிரினத்தாலும் தப்ப முடியவில்லை.(3) அந்தக் கானகம் அப்படி எரிந்து கொண்டிருக்கும்போது, நாகர்கள் தலைவனான தக்ஷகன் அந்த இடத்தில் இல்லை. அவன் அந்த நேரத்தில் குருக்ஷேத்திரக் களத்திற்குச் சென்றிருந்தான்.(4)

Wednesday, September 04, 2013

களத்தில் இறங்கிய இந்திரன்! - ஆதிபர்வம் பகுதி 228

Indra entered the field! | Adi Parva - Section 228 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : அக்னி காண்டவ வனத்தை எரிக்க ஆரம்பித்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் கானகத்தில் எதிர் எதிர் பக்கங்களில் நின்று கொண்டு தப்பிக்க நினைத்த உயிரினங்களைக் கொன்றது; நெருப்பு விண்ணுலகை எட்டியது; தேவர்கள் துயருற்றது; தேவேந்திரனிடம் அவர்கள் முறையிட்டது; இந்திரன் களத்தில் இறங்கி கானகத்தைக் காக்கத் துணிந்தது; அக்னியிடம் கோபம் கொண்ட இந்திரன் கடும் மழையைப் பொழிந்தது...

வைசம்பாயனர் சொன்னார், "தேர் வீரர்களில் முதன்மையான அவர்கள் இருவரும், தங்கள் தேர்களில் ஏறிக் கானகத்தின் எதிர் எதிர்ப் புறங்களில் தங்களை நிறுத்திக் கொண்டு, அந்தக் காண்டவ வனத்தில் வசித்த அனைத்து உயிரினங்களையும் படுகொலை செய்யத் தொடங்கினர்.(1) காண்டவ வனவாசி உயிரினங்கள் எந்த இடத்திலெல்லாம் தப்ப நினைத்தனவோ அங்கெல்லாம் அந்தப் பெரும் வீரர்கள் விரைந்தனர் (அவை தப்புவதைத் தடுக்க).(2) நிச்சயமாக அந்த இரு தேர்களும் ஒன்றாகவே தெரிந்தன. அந்த இருவீரர்களும் கூட ஒருவராகவே தெரிந்தனர்.(3) அந்தக் கானகம் அவ்வாறு எரிந்து கொண்டிருக்கையில், நூற்றுக் கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் உயிரினங்கள் பயங்கரமான கதறல்களை எழுப்பி எல்லாத் திசைகளிலும் ஓடின.(4) சிலவற்றிற்குக் குறிப்பிட்ட உறுப்புகள் எரிந்திருந்தன. சில அதிகமான வெப்பத்தால் பொசுங்கிப் போயின. சில வெளியே வந்தன, சில அச்சத்தால் ஓடின.(5)

கிருஷ்ணனுக்குக் கிடைத்த சக்கரம்! - ஆதிபர்வம் பகுதி 227

The Chakra obtained by Krishna! | Adi Parva - Section 227 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : அக்னி, வருணனை வரவழைத்து, சோமனிடம் வருணன் பெற்ற குதிரைகளுடன் கூடிய ரதத்தையும், காண்டீவத்தையும், அம்பறாத்தூணிகளையும் அர்ஜுனனுக்குப் பெற்றுக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு அக்னி சக்கரத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனுக்கு வருணன் கௌமோதகி என்ற கதாயுதத்தைக் கொடுத்தது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் திருப்தியடைந்தது; அக்னி கானகத்தை எரிக்க ஆரம்பித்தது...


வைசம்பாயனர் சொன்னார், "இப்படி அர்ஜுனனால் சொல்லப்பட்ட, புகையைக் கொடியாகக் கொண்ட ஹுதாசனன் {அக்னி}, வருணனிடம் பேச விரும்பி, அந்த அதிதியின் மகனை {வருணனை} நினைத்துப் பார்த்தான். அந்த வருணன் விண்ணுலகின் ஒரு புறத்தைக் காத்து வருபவனாவான். நீரைத் தனது வீடாகக் கொண்டு, அந்தப் பூதத்தை {பஞ்ச பூதத்தில் ஒன்றான நீர் என்ற பூதத்தை} ஆண்டான். பவகனால் {அக்னியால்} தான் நினைக்கப்படுகிறோம் என்பதை அறிந்த வருணன், உடனடியாக அக்னியின் முன்பு வந்தான்.(1,2) புகையைக் கொடியாகக் கொண்ட அந்தத் தேவன் {அக்னி} நீரை ஆள்பவனை {வருணனை} மரியாதையுடன் வரவேற்றான். அந்த நான்காவது லோகபாலன் {அக்னி}, அந்த நிலைத்த தேவர்களுக்குத் தேவனிடம் {வருணனிடம்},(3) "மன்னன் சோமனிடம் பெற்ற வில்லையும் {வில் - காண்டீவம்}, அம்பறாத்தூணியையும் {அம்பினை வைக்கும் பேழை (கூடை)யையும்}, குரங்குக் கொடி கொண்ட ரதத்தையும் தாமதமில்லாமல் எனக்குக் கொடுப்பாயாக.(4) பார்த்தன் {அர்ஜுனன்} காண்டீபத்தைக் கொண்டும், வாசுதேவன் {கிருஷ்ணன்} சக்கரத்தைக் கொண்டும் பெரிய சாதனைகளைச் சாதிப்பார்கள். ஆகவே, அவை இரண்டையும் இன்று என்னிடம் கொடுப்பாயாக" என்றான் {அக்னி}.(5)

Tuesday, September 03, 2013

ஆயுதங்கள் கேட்ட அர்ஜுனன்! - ஆதிபர்வம் பகுதி 226

Arjuna asked for weapons! | Adi Parva - Section 226 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : அக்னிக்கு வழி காட்டிய பிரம்மன்; அக்னி கிருஷ்ணனிடமும் அர்ஜுனனிடமும் வந்தது; அக்னியிடம் பேசிய அர்ஜுனன்; அக்னியிடம் வில்லும், குதிரைகளுடன் கூடிய தேரும்; வற்றாத அம்புகளும் கேட்ட அர்ஜுனன்…

வைசம்பாயனர் சொன்னார், "ஹாவ்யவாகனன் (அக்னி) கோபமும், ஏமாற்றமும் கொண்டு, தனது பிணி போக்கப்படாமல் {நோய் குணமாகாமலேயே}, பெருந்தகப்பனிடம் {பிரம்மனிடம்} சென்றான்.(1) பிரம்மனிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். அந்தச் சிறப்புவாய்ந்த தேவன், சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, அவனிடம் {அக்னியிடம்},(2) "ஓ பாவமற்றவனே, இந்திரன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நீ காண்டவ வனத்தை இன்றே உண்ணும் வழியை நான் கண்டுவிட்டேன்.(3) பழங்காலத்தின் தேவர்களான நரனும் நாராயணனும், இந்த மனித உலகத்தில் தேவர்களின் காரியத்தை நிறைவேற்றுவதற்காக அவதரித்திருக்கிறார்கள்.(4) அவர்கள் அர்ஜுனன் என்றும் வாசுதேவன் {கிருஷ்ணன்} என்றும் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் இப்போது காண்டவ வனத்தில்தான் தங்கியிருக்கிறார்கள்.(5) அந்தக் கானகத்தை எரிக்க அவர்களின் துணையை நாடுவாயாக. அதன் பிறகு, அந்த வனத்தைத் தேவர்களே காத்தாலும், நீ அதை உண்டுவிடலாம்.(6) அவர்கள் நிச்சயமாகக் காண்டவ வனத்தின் உயிரினங்கள் தப்பிப் போகாதவாறு இந்திரனை (யாரும் தப்பிப் போக இந்திரன் உதவினால் அவனை) முறியடிப்பார்கள். இதில் எனக்குச் சந்தேகமே இல்லை" என்றான்.(7)

அக்னியின் செரியாமை! - ஆதிபர்வம் பகுதி 225

Agni suffering from surfeit! | Adi Parva - Section 225 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : ஸ்வேதகி செய்த யாகங்கள்; ஸ்வேதகி செய்த தவம்; தவத்தை மெச்சிய சிவன்; தவத்திற்குத் துணையாக துர்வாசர்; பனிரெண்டு வருட வேள்வியில் தொடர்ந்து ஊற்றப்பட்ட நெய்யை உண்ணும் அக்னி; செரியாமையால் அவதிப்படும் அக்னி; செரியாமைக்கு பிரம்மன் ஒரு வழி சொல்லுதல்; அக்னி காண்டவ வனம் செல்லுதல்…

வைசம்பாயனர் சொன்னார், "அவ்வாறு வந்த பிராமணன் அர்ஜுனனிடமும், சாத்வத குலத்தைச் சேர்ந்த வாசுதேவனிடமும் {கிருஷ்ணனிடமும்}, "இந்தக் காண்டவத்திற்கு மிக அருகே வசித்து வரும் நீங்கள் இருவரும் தான் இந்த உலகத்தின் முதன்மையான இரு வீரர்களாவீர்.(1) அதிகமாக உண்ணும் பெரும் பசி கொண்ட பிராமணன் நான். ஓ விருஷ்ணி குலத்தவனே {கிருஷ்ணா}, ஓ பார்த்தா {அர்ஜுனா}, எனக்குத் தகுந்த உணவைக் காட்டி என்னை மனநிறைவு கொள்ளச் செய்யும்படி உங்களிடம் நான் கேட்டுக் கொள்கிறேன்" என்றான்.(2)

Monday, September 02, 2013

மதுவும் பெண்களும் - திரௌபதியும் சுபத்திரையும்! - ஆதிபர்வம் பகுதி 224

Wine and women - Draupadi and Subhadra! | Adi Parva - Section 224 | Mahabharata In Tamil

(காண்டவ தாஹ பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : இந்திரப்பிரஸ்தத்தை யுதிஷ்டிரன் முறையாக ஆண்டது; கிருஷ்ணனும் அர்ஜுனனும் யுதிஷ்டிரனிடம் விடைபெற்று, கேளிக்கைக்காக கானகத்திற்குச் சென்றது; அங்கே மங்கையரிடம் இன்பமாக இருந்தது; மதுவின் மயக்கத்தில் இருந்த திரௌபதியும் சுபத்திரையும், போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த பெண்களுக்கு ஆடைகளையும் ஆபரணங்களையும் பரிசாகத் தந்தது; அந்த இடத்திற்கு அருகில் இருக்கும் ஒரு இடத்திற்கு அர்ஜுனனும் கிருஷ்ணனும் சென்றது; அங்கே ஒரு பிராமணனைக் கண்டது...

வைசம்பாயனர் சொன்னார், "திருதராஷ்டிரன் மற்றும் பீஷ்மரின் உத்தரவின் பேரில் பாண்டவர்கள் இந்திரப்பிரஸ்தத்தைத் தங்கள் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்ட பிறகு, மற்ற மன்னர்களைத் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர்.(1) நற்குறிகளும், மேன்மையான சாதனைகளையும் செய்யும் உடலுக்குள் இருக்கும் ஆன்மா மகிழ்ச்சியாக வாழ்வது போல அந்த நாட்டின் குடிமக்கள் அனைவரும், நீதிமானான யுதிஷ்டிரனின் ஆட்சியில் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.(2) ஓ பாரதக் குலத்தின் காளையே {ஜனமேஜயனே}, யுதிஷ்டிரன், அறம், இன்பம், பொருள் ஆகியவற்றுக்குத் தகுந்த அளவுகளில் ஏதோ அவை அனைத்தும் தனக்கு விருப்பமானவை போல மரியாதை செய்தான்.(3) அறம், இன்பம், பொருள் ஆகிய மூன்று நிலைகளுடன், நான்காவது நிலையாகத் தானும் இருந்து பிரகாசித்தான்.(4) யுதிஷ்டிரனைத் தங்கள் மன்னனாகக் கொண்ட குடிமக்கள், தங்கள் மன்னனிடம், வேதங்களைக் கற்பதில் ஆர்வம் கொண்ட ஏகாதிபதியையும், பெரும் வேள்விகள் செய்பவனையும், நன்மக்களைக் காப்பாற்றுபவனையும் கண்டனர்.(5)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்