Friday, September 06, 2013

"அர்ஜுனா! என்னைக் காப்பாற்று," என்றான் மயன்! - ஆதிபர்வம் பகுதி 230

"Arjuna! Save me," said Maya! | Adi Parva - Section 230 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : கிருஷ்ணன் பல உயிரினங்களைக் கொன்றது; தேவர்கள் பின்வாங்கியது; இந்திரனுக்கு ஒரு அரூபக் குரல் எச்சரித்தது; மயன் தப்புவதை கிருஷ்ணன் கண்டது; மயனை அர்ஜுனன் காத்தது; அர்ஜுனன் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு அக்னியும் அவனை விட்டுவைத்தது...

வைசம்பாயனர் சொன்னார், "அந்தக் காண்டவ வன வாசிகளான, தானவர்கள், ராட்சசர்கள், நாகர்கள், ஓநாய்கள், கரடிகள் மற்றும் மற்ற காட்டு விலங்குகள், மதம் கொண்ட யானைகள், புலிகள், பிடரி மயிர் கொண்ட சிங்கங்கள், மான்கள், நூற்றுக்கணக்கான எருமைகள், பறவைகள், பல்வேறு மற்ற உயிரினங்கள் அனைத்தும் விழுந்து கொண்டிருக்கும் கற்களால் பயந்து, மிகுந்த துயரத்துக்கு உள்ளாகி திசைகள் அனைத்திலும் தப்பி ஓடத் தொடங்கின.(1,2) அவை (திசையெங்கும் பற்றி எரியும்} கானகத்தையும், ஆயுதத்துடன் ஆயத்தமாக நிற்கும் கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் கண்டன. தெளிவாகக் கேட்கும் பயங்கரமான சத்தங்களால் பயம் கொண்ட அந்த உயிரினங்கள் தங்கள் நகரும் சக்தியை இழந்தன.(3) பல இடங்களில் கானகம் பற்றி எரிவதையும், தனது ஆயுதங்களுடன் தங்களைத் தாக்கத் தயாராக நிற்கும் கிருஷ்ணனையும் கண்ட அவை, அச்சத்துடன் கதறின.(4) அந்தப் பயங்கர ஆரவாரத்தாலும், நெருப்பின் சீற்றத்தாலும், மொத்தச் சுற்றுப்புறமே எச்சரிக்கும் மேகங்களைப் போலப் பேரொலி நிறைந்ததாக இருந்தது.(5)

கரிய நிறம் கொண்ட, பலம் நிறைந்த கேசவன் {கிருஷ்ணன்} அவற்றை அழிக்க, தீ கக்குவதும், தன் சக்தியாலேயே பிரகாசிப்பதுமான தனது பெரிய சக்கரத்தைச் சுழற்றி வீசினான்.(6) தானவர்களும் ராட்சசர்களும் அடங்கிய அந்தக் கானகவாசிகள், அந்த ஆயுதத்தால் தாக்கப்பட்டு, நூறு துண்டுகளாக வெட்டப்பட்டு, அக்னியின் வாயில் விழுந்தனர்.(7) கிருஷ்ணனின் சக்கரத்தால் சிதைக்கப்பட்ட அந்த அசுரர்கள், அவர்களது கொழுப்பிலும் ரத்தத்தில் நனைந்து மாலை நேர மேகங்கள் போல இருந்தனர்.(8) ஓ பாரதா {ஜனமேஜயா}, அந்த விருஷ்ணி குலத்தவன் {கிருஷ்ணன்}, காலனே நேராக வந்து அங்கு நடப்பது போல, பிசாசங்களையும், பறவைகளையும், நாகர்களையும் மற்ற விலங்குகளையும் ஆயிரக்கணக்கில் கொன்று நகர்ந்து கொண்டிருந்தான்.(9) எதிரிகளைக் கொல்பவனான கிருஷ்ணனின் கரங்களில் இருந்து தொடர்ந்து வீசப்பட்ட அந்தச் சக்கரம், எண்ணிலடங்கா உயிரினங்களைக் கொன்று மீண்டும் மீண்டும் அவன் கரங்களுக்கே திரும்பிக் கொண்டிருந்தது.(10)

படைக்கப்பட்ட அனைத்து உயிர்களின் ஆன்மாவான கிருஷ்ணனின் உருவமும் முகமும், அவன் பிசாசங்களையும், நாகர்களையும், ராட்சசர்களையும் கொன்று கொண்டிருக்கும்போது பார்ப்பதற்கு மிகக்கடுமையாக இருந்தது.(11) அங்கே கூடியிருந்த தேவர்களில் யாரும் கிருஷ்ணனையோ அர்ஜுனனையோ வீழ்த்த முடியவில்லை.(12) கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனன் ஆகியோரின் பலத்தால் எரிந்து கொண்டிருந்த கானகத்தை இனி காக்க முடியாது என்று கண்ட தேவர்கள், காட்சியில் இருந்து மறைந்தார்கள்.(13) பிறகு, ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, நூறு வேள்விகளைச் செய்தவன் (இந்திரன்), தேவர்கள் பின்வாங்கியதைக் கண்டு, மிகுந்த மகிழ்ச்சியடைந்து, கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் பாராட்டினான்.(14)

தேவர்கள் போரிடுவதைக் கைவிட்டதும், வடிவமற்ற ஒலியானது {அசரீரி}, நூறு வேள்விகளைச் செய்தவனிடம் {இந்திரனிடம்} ஆழமான பேரொலியுடன்,(15) "உனது நண்பனான பாம்புகளின் தலைவன் தக்ஷகன் கொல்லப்படவில்லை! காண்டவ வனம் எரியூட்டப்படும் முன்பே அவன் குருக்ஷேத்திரத்திற்குச் சென்று விட்டான்.(16) ஓ வாசவா {இந்திரா}, வாசுதேவனும் {கிருஷ்ணனும்], அர்ஜுனனும் போர்க்களத்தில் யாராலும் வீழ்த்தப்பட முடியாதவர்கள் என்பதை எனது வார்த்தைகளால் அறிந்து கொள்வாயாக.(17) அவர்கள் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} சொர்க்கவாசிகளால் கேள்விப்படப்படும் பழங்கால தேவர்களான நரனும் நாராயணனும் ஆவர்.(18) அவர்களது சக்தியையும், ஆற்றலையும் குறித்து நீ அறிவாய்.  போர்க்களத்தில் வெல்லப்பட முடியாத இந்தப் பழங்காலத்துச் சிறந்த முனிவர்கள், உலகத்தில் யாராலும் வெல்லப்பட முடியாதவர்களாவர்.(19) அவர்கள் தேவர்களாலும் அசுரர்களாலும், யக்ஷர்களாலும், ராட்சசர்களாலும், கந்தர்வர்களாலும், மனிதர்களாலும், கின்னரர்களாலும், நாகர்களாலும் மதிக்கப்பட வேண்டியவர்கள்.(20) எனவே, ஓ வாசவா {இந்திரா}, அனைத்துத் தேவர்களுடன் சேர்ந்து நீயும் இந்த இடத்தை விட்டுச் செல்வதுதான் உனக்குத் தகுந்ததாகும். காண்டவத்தின் அழிவு விதியால் நிர்ணயிக்கப்பட்டது!" என்றது {அந்த அசரீரி}.(21)

இறவாதவர்களின் தலைவன் {இந்திரன்} அந்த வார்த்தைகளை உண்மை என்று ஏற்றுத் தனது கோபத்தையும், பொறாமையையும் கைவிட்டுச் சொர்க்கத்திற்குத் திரும்பினான்.(22) ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயனே}, சொர்க்கவாசிகள், சிறப்புமிகுந்த இந்திரன் போரைக் கைவிட்டதைக் கண்டு, தங்கள் படைவீரர்கள் அனைவருடன் அவனைப் பின்தொடர்ந்தனர்.(23) பிறகு, வீரர்களான வாசுதேவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும், தேவர்கள் பின்வாங்குவதைக் கண்டு சிங்கமுழக்கம் செய்தனர்.(24)  ஓ ஏகாதிபதியே {ஜனமேஜயா}, இந்திரன் காட்சியை விட்டு அகன்றதும், கேசவனும் {கிருஷ்ணனும்}, அர்ஜுனனும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர். அந்த வீரர்கள், கானகம் எரிவதற்கு அக்னிக்கு அச்சமற்றுத் துணை புரிந்தார்கள்.(25) காற்று மேகங்களைச் சிதற வைப்பது போல, அர்ஜுனன் தேவர்களைச் சிதற வைத்தான். அந்தக் கானகத்தில் வசித்த எண்ணற்ற உயிர்களைத் தனது கணை மழையால் கொன்றான்.(26)

அர்ஜுனனின் கணைகளால் வெட்டப்பட்ட கணக்கற்ற உயிர்களில் ஒன்று கூட, அந்த எரியும் கானகத்திலிருந்து தப்ப முடிய வில்லை.(27) போரிடுவதைத் தவிர்த்து, அங்கிருந்த பலம்வாய்ந்த உயிரினங்கள் அர்ஜுனனின் கணை பொய்த்துப் போவதைக் காண முடியவில்லை.(28) சில நேரங்களில் ஒரு கணையால் நூற்றுக்கணக்கான உயிர்களையும், சில நேரங்களில் ஓர் உயிரை நூற்றுக்கணக்கான கணைகளாலும் துளைத்துக் கொண்டே அர்ஜுனன் தனது தேரில் நகர்ந்தான். உயிரற்ற அந்த விலங்குகள், காலனால் தாக்கப்பட்டவை போலத் தாமாகவே அக்னியின் (நெருப்பு தேவன்) வாயில் விழுந்தன.(29)

ஆற்றங்கரைக்குச் சென்றாலும், சமமற்ற தரைக்குச் சென்றாலும், சுடுகாட்டுக்குச் சென்றாலும், எங்குச் சென்றாலும் அந்த உயிரினங்கள் வெப்பத்தால் பீடிக்கப்பட்டன.(30) பல விலங்குகள் வலியால் கதறின. யானைகளும், மான்களும், ஓநாய்களும் துன்பத்தால் கதறின.(31) அவ்வொலிகளைக் கேட்டு கங்கையிலும் கடலிலும் இருந்த மீன்களும், அந்தக் கானகத்தில் வசித்த வித்யாதரர்கள் என்ற பல்வேறு இனங்களும் பேரச்சத்துக்கு உள்ளாகின.(32) ஓ பலம் வாய்ந்த கரங்களைக் கொண்டவனே {ஜனமேஜயா}, அவர்களுடன் தனியாகச் சண்டைக்கு நின்ற எந்த உயிரினத்தாலேயும் கரிய நிறம் கொண்ட அர்ஜுனனையும், ஜனார்த்தனனையும் {கிருஷ்ணனையும்} காணக்கூட முடியவில்லை.(33) ஹரி {கிருஷ்ணன்} தன்னை நோக்கி விரைந்து வந்த ராட்சசர்களையும், தானவர்களையும், நாகர்களையும் தனது சக்கரத்தால் {சக்கராயுத்தால்} கொன்றான்.(34) சக்கரத்தின் வேகமான நகர்வால் பெரும் உடல்களில் இருந்த தலைகள் கொய்யப்பட்டு, உயிர் மாய்க்கப்பட்ட அவர்களது உடல்கள் எரியும் நெருப்புக்குள் விழுந்தன.(35)

பெரும் அளவிலான சதை, குருதி, கொழுப்பு ஆகியவற்றால் பெரும் மனநிறைவுக் கொண்ட சுடர்கள், சுருள்புகை இல்லாமல் பெரும் உயரத்திற்கு எழுந்தன.(36) பிரகாசமான தாமிரக் கண்களையுடைய ஹுதாசனன் (அக்னிதேவன்), எரியும் நாவுடனும், பெரிய வாயுடனும், நெருப்புப் போன்ற கூந்தலுடனும் இருந்தான். கிருஷ்ணன் மற்றும் அர்ஜுனனின் உதவியால், தேன் ஊற்றைக் குடிப்பது போல விலங்குகளின் கொழுப்பைக் குடித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தான். நிறைவடைந்த அக்னி பெரும் இன்பம் அடைந்தான்.(37,38) மதுவைக் கொன்றவன் {மதுசூதனனான கிருஷ்ணன்}, தக்ஷகனின் வசிப்பிடத்திலிருந்து {வீட்டிலிருந்து} மயன் எனும் அசுரன் தப்புவதை திடீரெனக் காண நேர்ந்தது.(39) வாயுவை தேரோட்டியாகக் கொண்டவனும், தலையில் சடமுடி தரித்தவனும், நெருப்பே உடலாகக் கொண்டவனுமான அக்னி, அந்த அசுரனைக் கண்டு, மேகங்களைப் போல முழங்கிக் கொண்டு அவனை {மயனை} உட்கொள்ள விரும்பி அவனைப் பின்தொடர்ந்து சென்றான்.(40)

அசுரனைக் {மயாசுரனைக்} கண்ட வாசுதவேன் {கிருஷ்ணன்}, தனது சக்கரத்தை உயர்த்திப் பிடித்தபடி அவனைத் தாக்க ஆயத்தமாக நின்றான். அவனை {மாயாசுரனை} எரித்துவிட எண்ணிய அக்னி, அவனைப் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான்.(41) அப்போது மயன், "ஓ அர்ஜுனா, என்னிடம் வேகமாக வா, என்னைக் காப்பாற்றுவாயாக" என்றான். இந்த அச்சம் கலந்த குரலைக் கேட்ட அர்ஜுனன், "அஞ்சாதே" என்றான்.(42) அர்ஜுனனின் அந்தக் குரல், ஓ பாரதா {ஜனமேஜயா}, மயனுக்கு உயிரைக் கொடுத்தது போல இருந்தது. பிருதையின் {குந்தியின்} கருணை கொண்ட மகன் {அர்ஜுனன்} மயனிடம் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை என்று சொன்னதால், அதற்கு மேலும் தசார்ண குலத்தைச் சேர்ந்தவன் {கிருஷ்ணன்}, நமுசியின் சகோதரனான மயனைக் கொல்ல விரும்பவில்லை. அக்னியும் அவனை எரிக்கவில்லை".(43,44)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "நுண்ணறிவைக் கொடையாகக் கொண்டவனான அக்னி, இந்திரனால் பாதுகாக்கப்பட்டக் கானகத்தைக் கிருஷ்ணன் மற்றும் பார்த்தனின் {அர்ஜுனனின்} தயவால் பதினைந்து நாட்களுக்கு எரித்தான்.(45) அந்தக் கானகம் எரிந்த போது அக்னி அந்தக் கானகவாசிகளில் ஆறு பேரை மட்டுமே விட்டு வைத்தான். அவர்கள் அஸ்வசேனன் {தக்ஷகனின் மகன்}, மயன், மற்றும் நான்கு சாரங்கப் பறவைகள் ஆகிய அறுவர் ஆவர்" {என்றார் வைசம்பாயனர்}.(46)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்