Saturday, September 07, 2013

நெருப்பால் சூழப்பட்ட பறவைக் குஞ்சுகள்! - ஆதிபர்வம் பகுதி 232

Fire surrounded the infant birds! | Adi Parva - Section 232 | Mahabharata In Tamil

(மய தரிசன பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : ஜரிதையின் ஒப்பாரி; குஞ்சுகள் தங்கள் தாயைத் தப்பிக்கச் சொன்னது; ஜரிதை குஞ்சுகளை பொந்துக்குள் நுழையச் சொன்னது; பொந்துக்குள் நுழைய மறுத்த குஞ்சுகள்...

வைசம்பாயனர் சொன்னார், "காண்டவ வனத்தில் நெருப்புச் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்த போது, அந்தப் பறவை குஞ்சுகள் மிகவும் கலங்கிப் போய்த் துயரத்தில் இருந்தன.  கவலை நிறைந்த அவர்கள் {பறவைகள்} தப்பிக்க எந்த வழியும் காணவில்லை.(1) தப்ப இயலாத குஞ்சுகள் அவை என்பதை அறிந்த அவற்றின் தாயான ஆதரவற்ற ஜரிதை, மிகுந்த துயர் கொண்டு பேரொலியுடன் கதறி அழுதாள்.(2)

அவள் {ஜரிதை}, "ஓ கொடூரமான இந்தத் தீ அண்டத்தைப் பிரகாசிக்கச் செய்து, கானகத்தை எரித்துத் தள்ளி, எனது துன்பத்தை அதிகரிக்க, இதோ எங்களை நோக்கி வருகிறதே.(3) அழிந்து போன எங்கள் மூதாதையர்களின் ஒரே ஆதரவான, கால்களும் சிறகுகளும் முளைக்காத இந்தப் பிஞ்சுக் குஞ்சுகளால் எனக்குத் துயர் அதிகரிக்கிறதே.(4) அனைத்துப் புறமும் பீதியைக் கிளப்பிக் கொண்டு இந்த நெருப்பு, தனது நீண்ட நாவால் உயரமான மரங்களை நக்கிக் கொண்டு எங்களை நோக்கி வருகிறதே.(5) இவர்களைச் {குஞ்சுகளைச்} சுமந்து கொண்டு என்னால் தப்பித்துச் செல்ல முடியவில்லையே. இவர்களைக் குறித்து எனது இதயம் துயர்கொண்டுள்ளதால், இவர்களைக் கைவிடவும் முடியவில்லையே.(6) எனது மகன்களில் யாரை நான் விடுவேன்? யாரை நான் சுமந்து செல்வேன்? எனது கடமைக்கு உகந்த செயல்தான் என்ன? ஓ பிள்ளைகளே நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? நான் என்ன சிந்தித்தாலும் நாம் தப்புவதற்கு வழி தெரியவில்லை. எனது இறக்கைகளால் உங்களை மூடியபடி நானும் உங்களுடன் சாகப்போகிறேன்.(7,8)

கொடூரரான உங்கள் தந்தை {மந்தபாலர்} சில காலத்திற்கு முன்பு என்னைவிட்டு அகலும் போது, "ஜரிதாரி என்ற இவன் மூத்தவனாதலால், உனது குலமே இவனை நம்பி இருப்பதலால் இவனே {ஜரிதாரியே} அதற்கு ஆதாரமாக இருப்பான். இரண்டாவது மகனான சாரிஸ்ரிக்குவன் எனது மூதாதையரின் குலத்தை விருத்தி செய்வான். எனது மூன்றாவது மகனான ஸ்தம்பமித்ரன் தவத்துக்குத் தன்னை அர்ப்பணித்துத் துறவியாவான். எனது இளைய மகன் துரோணன், வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவன் ஆவான்" என்று சொல்லிவிட்டுச் சென்றாரே.(9,10) ஆனால் நம்மை இப்படிப்ப்பட்ட பேராபத்து சூழ்ந்துள்ளதே. நான் யாரை எடுத்துச் செல்வேன்? எதைச் செய்தால் செய்ய வேண்டியதைச் செய்ததாகும்? நான் தீர்மானிக்கும் சக்தியை இழந்துவிட்டேனே. எப்படி எனது பிள்ளைகளை நெருப்பில் இருந்து காப்பது என்று எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையே!" என்று அழுது கொண்டிருந்தாள்".(11)

வைசம்பாயனர் சொன்னார், "இப்படி ஒப்பாரி வைத்த தனது தாயிடம் அந்தக் பிஞ்சுக் குஞ்சுகள், "ஓ தாயே, உனது பாசத்தைக் கைவிட்டு, நெருப்பில்லாத இடத்திற்கு உடனே செல்வாயாக.(12) நாங்கள் இங்கே கொல்லப்பட்டாலும், பின்பு உனக்கு வேறு பிள்ளைகள் பிறப்பர். ஓ தாயே நீயே கொல்லப்பட்டால், நமது குலத்தில் வேறு பிள்ளைகள் இருக்க மாட்டார்கள்.(13) இந்த இடரைச் சிந்தித்துப் பார், ஓ தாயே, நமது குலத்திற்கு நன்மையான காரியத்தைச் செய்ய நேரம் வந்தவிட்டது. நீ காக்கப்பட்டால், உயர்ந்த உலகங்களை அடைய இன்னும் எங்கள் தந்தை {மந்தபாலகர்} உனது விருப்பங்களை ஈடேற்ற வழி இருக்கிறது" என்றன.(14,15)

அந்தப் பிஞ்சுகள் சொன்னதைக் கேட்ட ஜரிதை, "இந்த மரத்தின் அருகே தரையில் ஒரு பொந்து இருக்கிறது. அஃது ஓர் எலிக்குச் சொந்தமானது. அந்தப் பொந்துக்குள் நேரங்கடத்தாமல் நுழையுங்கள். அப்போது உங்களுக்கு நெருப்பிடம் எந்தப் பயமும் இருக்காது.(16) நீங்கள் அனைவரும் நுழைந்ததும், நான் அந்தப் பொந்தின் வாயிலை புழுதியால் அடைத்துவிடுவேன். சுடர்விட்டு எரியும் இந்த நெருப்பில் இருந்து தப்பிக்க இது தான் ஒரே வழி.(17) பிறகு, நெருப்பு அணைந்ததும், நான் இங்கே திரும்பிவந்து புழுதியை  அகற்றுவேன். நெருப்பில் இருந்து தப்ப வேண்டும் என்றால் எனது ஆலோசனைப்படி செய்வீரா" என்றாள் {சாரங்கப் பறவையான ஜரிதை}.(18)

அதற்கு அந்தப் பறவைக் குஞ்சுகள், "இறகுகள் அற்று, சதைப்பிண்டம் போல் நாங்கள் இருக்கிறோம். நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், இறைச்சி உண்ணும் எலி எங்கள் அனைவரையும் அழித்துவிடும் என்பது நிச்சயம். எங்கள் முன் இருக்கும் ஆபத்தை நாங்கள் காண்பதால், அந்தப் பொந்துக்குள் நுழைய முடியாது.(19) நெருப்பில் இருந்து தப்பிக்கவோ, அந்த எலியிடம் இருந்து தப்பிக்கவோ எங்களுக்கு எந்த வழியும் தெரியவில்லை. எங்கள் தந்தையின் {மந்தபாலரின்} இனப்பெருக்கம் பலன்றறுப் போவது எவ்வாறு? எங்கள் தாய் {ஜரிதை} காக்கப்படுவது எவ்வாறு? என்பது எங்களுக்குத் தெரியவில்லை.(20) நாங்கள் அந்தப் பொந்துக்குள் நுழைந்தால், எலி எங்களை அழித்துவிடும்; நாங்கள் இங்கேயே இருந்தால், விண்ணை முட்டும் இந்த நெருப்பு எங்களை அழித்துவிடும்; இந்தப் பேராபத்தைச் சிந்தித்துப் பார்த்தால், கடித்து உண்ணப்பட்டு இறப்பதைவிட, நெருப்பினால் இறப்பதே சிறந்தது.(21) பொந்துக்குள் எலி விழுங்கிச் சாகும் நிலை தாழ்ந்தது; அதே வேளையில் நெருப்பினால் அழிவது ஞானமுள்ளோரால் ஏற்கப்பட்டுள்ளது" என்றன {அந்தக் குஞ்சுகள்}".(22)


ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்