Friday, October 04, 2013

சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42

The Birth mystery of Sisupala | Sabha Parva - Section 42 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், சிசபாலன் மூன்று கண்கள் மற்றும் நான்கு கரங்களுடன் பிறந்ததாகக் கூறுவது; யாருடைய மடியில் வைக்கும்போது அவை விழுகின்றனவோ அவனே சிசுபாலனின் கொலையாளி என்று ஓர் அரூபக் குரல் சொல்வது; கிருஷ்ணன் மடியில் வைக்கும் போது அவ்வுறுப்புகள் விழுவது; சிசுபாலனின் தாய் கிருஷ்ணனிடம் வரம் கேட்பது; சிசுபாலனின் நூறு பிழைகளைப் பொறுப்பதாக கிருஷ்ணன் உறுதி கூறுவது...

Sishupala in the lap of Krishna

பீஷ்மர் சொன்னார், "சேதி மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் {சிசுபாலன்} பிறந்ததும், கழுதைக்கொப்பான குரலில் இரைந்து ஊளையிட்டான்.(1) இதனால் அவனது {சிசுபாலனது} தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்கு மீறிய தீய சகுனங்களைக் கண்ட அவனது {சிசுபாலனது} பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர்.(2) ஆனால், {புலப்படாத} ஓர்  அரூபமான குரல், அந்த நேரத்தில் ஒலித்து, துயரத்தில் மூழ்கியிருந்த மன்னனிடம், அவனது மனைவி, அமைச்சர்கள் புரோகிதர் ஆகியோர் முன்னிலையில்,(3) "ஓ மன்னா, உன்னுடைய இந்த மகன், நற்பேறு பெற்றவனாகவும், பலத்தில் மேன்மையானவனுமாக இருப்பான். எனவே நீ அச்சப்பட வேண்டாம். கவலையில்லாமல் இந்தக் குழந்தையை {சிசுபாலனை} நீ வளர்ப்பாயாக.(4) அவன் (குழந்தைப் பருவத்திலேயே) இறந்து போக மாட்டான். அவனது காலம் {இறப்பு} இன்னும் வரவில்லை. ஆயுதங்களால் இவனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவனும் ஏற்கனவே பிறந்துவிட்டான்" என்றது {அந்த அரூபமான குரல்}.(5)

இந்த வார்த்தைகளைக் கேட்ட அந்தக் குழந்தையின் தாய், துயர மிகுதியால் அந்த அரூபக் குரலிடம்,(6) "என் பிள்ளையை மதித்து இந்த வார்த்தைகளை உதிர்த்தவனை நான் குவிந்த கரங்களுடன் வணங்குகிறேன். அவன் {சிசுபாலனைக் கொல்லப் போகிறவன்} தெய்வீகமானவனா? அல்லது வேறு ஏதாவது உயிர்வகையைச் சேர்ந்தவனா என்று அவனே {அரூபக் குரலே} சொல்லட்டும்.(7) எனது மகனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவன் எவன் என்பதை நான் கேட்க விரும்புகிறேன்" என்றாள்.(8) 

அதற்கு அந்த அரூபக் குரல், "யார் மடியில் இக்குழந்தையை வைக்கும்போது, இவனது {சிசுபாலனது} மிகுதியான கரங்களும் ஐந்து தலை நாகத்தைப் போல தலைகளும் விழுமோ, யாருடைய பார்வை பட்டதும் இவனது மூன்றாவது கண் மறைகிறதோ, அவனே இக்குழந்தையைக் கொல்லப் போகிறவன்" என்றது.(9,10) 

குழந்தையின் மூன்று கண்களையும், நான்கு கரங்களையும், அரூபக் குரலின் வார்த்தைகளையும் கேள்விப்பட்ட(11) உலகத்தின் மன்னர்கள் அனைவரும் சேதிக்கு அவனைக் காணச் சென்றனர். சேதியின் மன்னன் அவர்கள் ஒவ்வொருவரையும் அவர்கள் தகுதிக்கேற்ப வழிபட்டு,(12) ஒருவர் பின் ஒருவராக அவர்களது மடியில் குழுந்தையை வைத்துப் பார்த்தான். ஒருவர் பின் ஒருவராக ஆயிரம் மன்னர்கள் மடியில் வைத்தும், அந்த அரூபக் குரல் சொன்ன வேளை வரவில்லை. துவாராவதியில் {துவாரகையில்} இவையனைத்தையும் கேள்விப் பட்ட பெரும் பலம் வாய்ந்த யாதவ வீரர்களான சங்கர்ஷணனும் {பலராமனும்}, ஜனார்த்தனனும் {கிருஷ்ணனும்}, சேதியின் தலைநகருக்கு யாதவர்களின் மகளான (சேதியின் ராணியான), தங்கள் தந்தையின் தங்கையை {அத்தையைக்} காணச் சென்றனர்.(13-15) 

அங்கே சென்ற ராமனும் {பலராமனும்}, கேசவனும் {கிருஷ்ணனும்}, அங்கே இருந்தவர்களில் அவரவர் தகுதிக்கேற்ப அனைவரையும் வணங்கி, மன்னனையும் ராணியையும் வணங்கி, அனைவரின் உடல்நலனையும் விசாரித்த பிறகு, தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.(16) பதிலுக்கு அந்த வீரர்கள் வணங்கப்பட்டதும், பெரும் மகிழ்ச்சியுடன் இருந்த ராணி {சேதி நாட்டின் ராணி} தானே தனது குழந்தையை {சிசுபாலனை} தாமோதரனின் {கிருஷ்ணனின்} மடியில் வைத்தாள்.(17) அந்தக் குழந்தை {சிசுபாலன்} அப்படி மடியில் வைக்கப்பட்டதும், தேவைக்கதிகமான கரங்கள் அனைத்தும் கீழே விழுந்தன. நெற்றியில் இருந்த கண்ணும் மறைந்தது.(18) 

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ராணி துயரத்துடன் கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டாள். அவள் {சேதி நாட்டின் ராணி}, "ஓ பெரும் பலம் கொண்ட கிருஷ்ணா, நான் அச்சத்தால் பீடிக்கப்படுகிறேன். எனக்கு ஒரு வரம் தருவாயாக.(19) துயர் நிறைந்தவர்களுக்கு துன்பத்தைக் களைய உறுதியளிப்பவன் நீ. அனைவரின் அச்சத்தையும் விலக்கவல்லவன் நீ", என்றாள். 

இப்படி அவளால் {சேதி நாட்டின் ராணியால்} கேட்டுக் கொள்ளப்பட்ட யது குலத்தின் கிருஷ்ணன்,(20) "ஓ மரியாதைக்குரியவளே, அஞ்சாதே. நீ நீதிகளை அறிந்தவள். உனக்கு என்னிடம் எந்த அச்சமும் இருக்காது. நான் உனக்கு என்ன வரம் தர வேண்டும்? ஓ அத்தை, நான் உனக்கு என்ன செய்ய வேண்டும்?(21) என்னால் முடிந்தாலும், முடியாவிட்டாலும், உன் ஆணையை நிறைவேற்றுவேன்" என்றான். 
இப்படி கிருஷ்ணன் சொன்னதும், {சேதி நாட்டின்} ராணி,(22) "ஓ பெரும் பலம் கொண்டவனே {கிருஷ்ணா}, சிசுபாலன் செய்யும் குற்றங்களை நீ எனக்காக மன்னிக்க வேண்டும். ஓ யது குலத்தின் புலியே, ஓ தலைவா, நான் கேட்கும் இதுவும் ஒரு வரம் தான் என்பதை அறிந்து கொள்வாயாக", என்றாள்.(23) 

அதற்கு கிருஷ்ணன், "ஓ அத்தை, அவன் {சிசுபாலன்} கொல்லப்படத் தகுதி வாய்ந்தவனாக இருந்தாலும், நான் அவனது {சிசுபாலனது} நூறு குற்றங்களை மன்னிப்பேன். நீ வருந்தாதே" என்றான் {கிருஷ்ணன்}".(24)

பீஷ்மர் தொடர்ந்தார், "ஓ பீமா, மன்னனும், தீய இதயம் கொண்ட பாவியுமான இந்தச் சிசுபாலன், கோவிந்தன் {கிருஷ்ணன்} கொடுத்த வரத்தால் கர்வம் கொண்டு, உன்னைப் போருக்கு அழைக்கிறான்".(25)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்