Showing posts with label சிசுபால வத பர்வம். Show all posts
Showing posts with label சிசுபால வத பர்வம். Show all posts

Friday, October 04, 2013

சிசுபால வதம் - சபாபர்வம் பகுதி 44

The slaughter of Sisupala | Sabha Parva - Section 44 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : சிசுபாலன் கிருஷ்ணனை அறைகூவி அழைத்தது; அங்கே கூடியிருந்து மன்னர்களுக்கு சிசுபாலனின் தவறுகளைக் கிருஷ்ணன் விளக்குவது; சிசுபாலன் கிருஷ்ணனைக் கடிந்து கொள்வது; கிருஷ்ணன் சிசுபாலனைக் கொல்வது; யுதிஷ்டிரனின் ராஜசூய வேள்வி முடிவுக்கு வருவது; கிருஷ்ணன் அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டு துவாரகை திரும்புவது...

Slaughter of Sishupala

வைசம்பாயனர் சொன்னார், "பீஷ்மரின் இந்த வார்த்தைகளைக் கேட்ட, பேராற்றல் வாய்ந்த சேதியின் ஆட்சியாளன் {சிசுபாலன்}, வாசுதேவனிடம் {கிருஷ்ணனிடம்} போரிட விரும்பி, அவனிடம்,(1) "ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, நான் உன்னை அறைகூவி அழைக்கிறேன். நான் இன்று உன்னையும் பாண்டவர்கள் அனைவரையும் கொல்லும்வரை என்னுடன் போரிடுவாயாக.(2) ஓ கிருஷ்ணா, பாண்டுவின் மகன்கள், மன்னனாகக் கூட இல்லாத உன்னை வழிபட்டு, இந்த மன்னர்களை அவமதித்ததால், உன்னுடன் சேர்த்துக் கொல்லப்பட தகுதி படைத்தவர்களே.(3) ஓ கிருஷ்ணா, மன்னனாக இல்லாதவனும், அடிமையும், தீயவனும், வழிபடத் தகாதவனுமாகிய ஆகிய உன்னை வழிபடத் தகுதியுடையவன் என்று குழந்தைத்தனமாகப் பூஜித்த பாண்டவர்கள் கொல்லப்படத் தக்கவர்களே என்பது என் கருத்து" என்று சொன்னான்.(4) இப்படிச் சொன்ன அந்த மன்னர்களில் புலி {சிசுபாலன்}, அங்கே கோபத்தில் முழங்கியபடி நின்றான்[1]. சிசுபாலன் ஓய்ந்த பிறகு, கிருஷ்ணன், பாண்டவர்களின் முன்னிலையில் அனைத்து மன்னர்களிடமும் மென்மையான சொற்களில் இவ்வாறு பேசினான்.(5) 

பீஷ்மருக்கு எதிராக கலகம் பிறந்தது - சபாபர்வம் பகுதி 43

The kings wrath for Bhishma | Sabha Parva - Section 43 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், பீமனின் கோபமாற்றுவது; இதைக் கேட்ட சிசுபாலன் மிகுந்த கோபம் கொண்டு பீஷ்மரை இகழ்வது; பீஷ்மர் பேசிய வார்த்தைகள் அங்கு கூடியிருந்து மன்னர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்துவது; பீஷ்மரைக் கொல்ல அங்குக் கூடியிருந்த மன்னர்களில் சிலர் எண்ணுவது; பீஷ்மர் சமாதானம் சொல்வது...

Sishupala against Bhima

பீஷ்மர் சொன்னார், "அழியாத பலம் கொண்ட உன்னை {பீமனே} சேதி நாட்டு ஆட்சியாளன் {சிசுபாலன்} சொந்த புத்தியால் அழைக்கவில்லை. நிச்சயமாக, இது அண்டத் தலைவனான கிருஷ்ணனின் காரியம்தான்.(1) ஓ பீமா, மரணத்தினால் ஆட்கொள்ளப்பட்டவனும், தன் குலத்தில் இழிந்தவனுமான இவன் {சிசுபாலன்} இன்று என்னை அவமதித்தது போல அவமதிக்க இந்தப் பூமியில் வேறு எந்த மன்னன் இருக்கிறான்?(2) இந்த பலம்வாய்ந்த கரங் கொண்டவன் {சிசுபாலன்}, ஹரியின் {கிருஷ்ணனில்} சக்தியில் ஒரு பாகம்தான் என்பதில் ஐயமில்லை. நிச்சயமாக, அந்தத் தலைவன் {கிருஷ்ணன்} தனது சக்தியைத் தானே எடுத்துக் கொள்ள விரும்புகிறான்.(3) இந்தச் சூழ்நிலையில், ஓ குரு குலத்தின் புலியே {பீமா}, தீய இதயம் கொண்டவனும், புலி போன்றவனுமான சேதி நாட்டு மன்னன் {சிசுபாலன்}, நம்மையெல்லாம் மதிக்காமல் முழங்கிக் கொண்டு இருக்கிறான்" என்றார் {பீஷ்மர்}".(4)

சிசுபாலனின் பிறப்பு மர்மம் - சபாபர்வம் பகுதி 42

The Birth mystery of Sisupala | Sabha Parva - Section 42 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 04)

பதிவின் சுருக்கம் : பீஷ்மர், சிசபாலன் மூன்று கண்கள் மற்றும் நான்கு கரங்களுடன் பிறந்ததாகக் கூறுவது; யாருடைய மடியில் வைக்கும்போது அவை விழுகின்றனவோ அவனே சிசுபாலனின் கொலையாளி என்று ஓர் அரூபக் குரல் சொல்வது; கிருஷ்ணன் மடியில் வைக்கும் போது அவ்வுறுப்புகள் விழுவது; சிசுபாலனின் தாய் கிருஷ்ணனிடம் வரம் கேட்பது; சிசுபாலனின் நூறு பிழைகளைப் பொறுப்பதாக கிருஷ்ணன் உறுதி கூறுவது...

Sishupala in the lap of Krishna

பீஷ்மர் சொன்னார், "சேதி மன்னனின் குலத்தில் சிசுபாலன் மூன்று கண்களுடனும் நான்கு கரங்களுடனும் பிறந்தான். அவன் {சிசுபாலன்} பிறந்ததும், கழுதைக்கொப்பான குரலில் இரைந்து ஊளையிட்டான்.(1) இதனால் அவனது {சிசுபாலனது} தந்தையும் தாயும் உறவினர்களும் அச்சத்தால் பீடிக்கப்பட்டனர். இந்த இயல்புக்கு மீறிய தீய சகுனங்களைக் கண்ட அவனது {சிசுபாலனது} பெற்றோர் அவனைக் கைவிடத் தீர்மானித்தனர்.(2) ஆனால், {புலப்படாத} ஓர்  அரூபமான குரல், அந்த நேரத்தில் ஒலித்து, துயரத்தில் மூழ்கியிருந்த மன்னனிடம், அவனது மனைவி, அமைச்சர்கள் புரோகிதர் ஆகியோர் முன்னிலையில்,(3) "ஓ மன்னா, உன்னுடைய இந்த மகன், நற்பேறு பெற்றவனாகவும், பலத்தில் மேன்மையானவனுமாக இருப்பான். எனவே நீ அச்சப்பட வேண்டாம். கவலையில்லாமல் இந்தக் குழந்தையை {சிசுபாலனை} நீ வளர்ப்பாயாக.(4) அவன் (குழந்தைப் பருவத்திலேயே) இறந்து போக மாட்டான். அவனது காலம் {இறப்பு} இன்னும் வரவில்லை. ஆயுதங்களால் இவனை {சிசுபாலனை} கொல்லப் போகிறவனும் ஏற்கனவே பிறந்துவிட்டான்" என்றது {அந்த அரூபமான குரல்}.(5)

Thursday, October 03, 2013

மூர்க்கமாகக் குதித்த பீமன் - சபாபர்வம் பகுதி 41

Bhima leaped up impetuously | Sabha Parva - Section 41 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 03)

பதிவின் சுருக்கம் : சிசுபாலன் ஜராசந்தனின் மரணத்தைச் சுட்டிக் காட்டி கிருஷ்ணன், பீமன், அர்ஜுனன் ஆகியோரை இகழ்வது; பீஷ்மரைப் பெண்தன்மை உள்ளவர் என்று வசைபாடுவது; இதையெல்லாம் கேட்ட பீமன் கோபத்தால் மூர்க்கத்தனமாகக் குதிக்க எத்தனிப்பது; பீஷ்மர் அதைத் தடுப்பது; சிசுபாலன் அசட்டையாக அதைப் பார்ப்பது; பீஷ்மர் பீமனுக்கு ஆலோசனைகள் கூறுவது...

Bhimasena

சிசுபாலன் சொன்னான், "'இவன் ஓர் அடிமை {தாஸன்}[1]' என்று சொல்லி கிருஷ்ணனுடன் போரிட விரும்பாத பெரும்பலம் வாய்ந்த மன்னன் ஜராசந்தன் எனது உயர்ந்து மதிப்புக்குத் தகுதி வாய்ந்தவராக இருந்தார்.(1) ஜராசந்தனின் மரணத்தைப் பொறுத்தவரை, கேசவன் {கிருஷ்ணன்} செய்த காரியத்தையும், பீமனும் அர்ஜுனனும் செய்த காரியங்களையும் யார்தான் சரி என்று புகழ்வார்கள்?(2) முறையற்ற வாயில் வழியாக நுழைந்து, பிராமணர்களாக வேடம் பூண்டு, மன்னன் ஜராசந்தனின் ஆற்றலை இந்தக் கிருஷ்ணன் கண்டான்.(3) அந்த ஏகாதிபதி {ஜராசந்தன்} பாதங்களைக் கழுவ நீர் கொடுத்த  பிறகே தனது பிராமண வேடத்தை அறம்சார்ந்து வெளிப்படுத்தினான்.(4)

சிசுபாலன் சொன்ன கிழட்டு அன்னத்தின் கதை - சபாபர்வம் பகுதி 40

The story of the old swan as told by Sisupala | Sabha Parva - Section 40 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 02)

பதிவின் சுருக்கம் : பீஷ்மரை நிந்திக்க கிழட்டு அன்னத்தின் கதையைச் சொன்ன சிசுபாலன்...

old swan

சிசுபாலன், "உனது குலத்தில் புகழற்ற கிழப் பாவியே {பீஷ்மரே}, எண்ணற்ற போலிப் பயங்கரங்களைக் காட்டி இந்த ஏகாதிபதிகளை மிரட்ட உனக்கு வெட்கமாக இல்லையா?(1) குருக்களின் முதன்மையானவனான நீ, வாழ்வின் மூன்றாம் நிலையில் {பிரம்மச்சரியம்} வாழ்ந்து கொண்டு, அறம் குறித்து விரிவான ஆலோசனையை வழங்கிக் கொண்டிருக்கிறாய்.(2) ஒரு படகு மற்றொரு படகுடன் கட்டப்பட்டது போலவோ, ஒரு குருடன் இன்னொரு குருடனைத் தொடர்வதைப் போலவோ, குருக்கள் {குரு குலத்தவர்கள்} உன்னைத் தங்கள் வழிகாட்டியாகக் கொண்டுள்ளனர்.(3) பூதனயைக் கொன்றான் என்றும், இன்ன பிறச் செயல்களைச் செய்தான் என்றும் இவனை (கிருஷ்ணனைப்) பற்றிச் சொல்லி மேலும் ஒரு முறை எங்கள் இதயங்களைக் காயப்படுத்தியிருக்கிறாய்.(4)

சிசுபாலனை விமர்சித்த பீஷ்மர் - சபாபர்வம் பகுதி 39

Bhishma's critic on Sisupala | Sabha Parva - Section 39 | Mahabharata In Tamil

(சிசுபால வத பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : மன்னர்கள் சினமடைவதைக் கண்ட யுதிஷ்டிரன் பீஷ்மரிடம் ஆலோசனை கேட்பது; பீஷ்மர் யுதிஷ்டிரனுக்கு சமாதானம் கூறி, சிசுபாலனையும் மற்ற மன்னர்களையும் விமர்சிப்பது...

Bhishma's critic on Sisupala

வைசம்பாயனர் சொன்னார், "அந்தப் பெரும் கூட்டமான மன்னர்கள், அண்ட அழிவின் போது காற்றில் கொந்தளிக்கும் கடலென கோபத்தில் கொந்தளிப்பதைக் கண்ட யுதிஷ்டிரன், எதிரிகளைக் கொல்லும் புருஹிதன் (இந்திரன்) பெரும் சக்தி படைத்த பிருஹஸ்பதியிடம் சொல்வது போல அந்தக் குருகுல பெரும்பாட்டனிடம் {பீஷ்மரிடம்}, அந்தப் புத்திசாலி மனிதர்களின் தலைவரான முதிர்ந்த பீஷ்மரிடம், "கடல்போன்ற இந்த மன்னர்க்கூட்டம் கோபத்தால் கொந்தளிக்கிறது. ஓ பாட்டா, நான் இக்காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குச் சொல்வீராக.(1-3) ஓ பாட்டா, எனது வேள்வி தடைபடாதவாறும், எனது குடிகளுக்குக் காயம் ஏற்படாதவாறும் நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(4)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்