Saturday, October 05, 2013

"நான் சாகிறேன்" என்றான் யுதிஷ்டிரன் -சபாபர்வம் பகுதி 45

"I should die" said Yudhishthira | Sabha Parva - Section 45 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் சிசுபாலனின் துர்மரணம் குறித்து வியாசரிடம் வினவுவது; வியாசர் இந்த சகுனத்தால் பதிமூன்று வருடத்தில் க்ஷத்திரிய குலத்தின் அழிவு ஏற்படும் என்று சொல்வது; வியாசர் கைலாசம் செல்வது; யுதிஷ்டிரன் அனைத்துக்கும் காரணமான நான் சாகிறேன் என்றது; அர்ஜுனன் அதை மறுத்துப் பேசியது; யுதிஷ்டிரன் புதிய நோன்பை உண்டாக்கியது...

The sorrow of Yudhishthira

வைசம்பாயனர் சொன்னார், "வேள்விகளில் முதன்மையானதும், சாதிப்பதற்குக் கடினமானதுமான ராஜசூய வேள்வி முடிவடைந்ததும், வியாசர் தனது சீடர்களுடன் யுதிஷ்டிரனிடம் வந்தார்.(1) அவரைக் கண்ட யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன் எழுந்து தனது பாட்டனான அந்த முனிவரை {வியாசரை} வழிபட்டு, அவரது கால்களைக் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து, அமர ஆசனமும் கொடுத்தான்.(2) அந்தச் சிறப்புமிகுந்தவர் {வியாசர்}, விலையுயர்ந்த தங்க ஆசனத்தில் அமர்ந்து பிறகு, நீதிமானான யுதிஷ்டிரனிடம், "உனது இருக்கையில் அமர்வாயாக", என்றார்.(3)

தனது தம்பிகள் சூழ இருக்கையில் யுதிஷ்டிரன் அமர்ந்ததும், உண்மை பேசுபவரான வியாசர்,(4) "ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரனே} நற்பேற்றின் பொருட்டு செழிப்பில் வளர்வாயாக. அடைவதற்கு கடினமான ஏகாதிபத்திய மாட்சிமையை அடைந்துவிட்டாய். ஓ குரு குலத்தைத் தழைக்கச் செய்பவனே, உன்னால் குரு குலம் செழிப்படையும்.(5) ஓ சக்கரவரத்தி {யுதிஷ்டிரா}, நான் முறையாக வணங்கப்பட்டேன். நான் உன்னிடம் விடைபெற விரும்புகிறேன்", என்றார். 

நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன், கறுத்த நிறம் கொண்ட அந்த முனிவரால் {வியாசரால்} இப்படி சொல்லப்பட்டதும்,(6) தனது பாட்டனின் கால்களைத் தொட்டு வணங்கி, அவரிடம், "ஓ மனிதர்களின் தலைவரே {வியாசரே}, களைவதற்கு கடினமான ஐயம் எனக்குள் எழுந்திருக்கிறது.(7) ஓ மறுபிறப்பாளர்களில் காளையே {வியாசரே}, இதிலிருந்து என்னைக் காக்க உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை. சிறப்பு மிகுந்த முனிவரான நாரதர், {இந்த ராஜசூயம் நடைபெற்றால்} தெய்வீகச் சூழல், நடைமுறைச் சூழல், இம்மை என்ற மூன்று விதமான தீய சகுனங்களை தெரிவித்திருக்கிறார். ஓ பாட்டா {வியாசரே}, சேதி மன்னனின் {சிசுபாலனின்} வீழ்ச்சியாக அந்த முற்குறிகள் முடிந்துவிட்டனவா?", என்று கேட்டான் {யுதிஷ்டிரன்}.(8,9)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, மன்னனின் {யுதிஷ்டிரனின்} இந்த வார்த்தைகளைக் கேட்டவரும், மேன்மையானவரும், பராசரரின் மைந்தரும்[1], கறுத்த நிறத்தவரும், தீவில் பிறந்தவருமான வியாசர்,(10) "ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, பதிமூன்று வருடங்களில் அந்த தீய சகுனங்கள் அனைத்து க்ஷத்திரியர்களுக்கும் அழிவைக் கொண்டு வரும்.(11) ஓ பாரத குலத்தின் காளையே {யுதிஷ்டிரா}, காலத்தின் ஓட்டத்தில், உன்னையாக முதன்மைக் காரணமாகக் கொண்டு, ஓ பாரதா, துரியோதனனின் பாவங்களுக்காக, பீமன் மற்றும் அர்ஜுனனின் பலத்தால் உலகத்தின் க்ஷத்திரியர்கள் அழிக்கப்படுவார்கள்.(12) ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, திரிபுரனைக் கொன்றவனும், நீலத்தொண்டையுடையவனுமான பவனை {சிவனை} நீ உனது கனவில் காண்பாய். காளையைத் தனது குறியாகக் கொண்டவனை, மனித மண்டை ஓட்டை உறிஞ்சிக் குடிப்பவனை {சிவனை}, அந்தப் பயங்கரமானவனை, கடுமையானவனை, அனைத்து உயிர்களின் தலைவனை, தேவர்களுக்குத் தேவனை, உமையின் கணவனை, ஹரன் என்றும் சர்வன் என்றும் விருஷன் என்று அழைக்கப்பட்டு, கைகளில் திரிசூலத்துடனும், பினாகை என்ற வில்லுடனும், புலித் தோல் போர்த்தியிருப்பவனை நீ உனது கனவில் காண்பாய். காளையில் அமர்ந்த படி கைலாச மலை போன்ற வெள்ளை நிறத்தில், விடாமல் பித்ருக்களின் உலகத்தின் பக்கமாகத் {தென் திசையாகத்} தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் அந்தச் சிவனை நீ காண்பாய்.(13-15) 


ஓ மன்னர்களுக்கு மன்னா {யுதிஷ்டிரா}, அதுதான் இன்றைய உனது கனவாக இருக்கும். அந்தக் கனவைக் காண்பதால் நீ துயருறாதே. காலத்தைவிட மேன்மையானது எதுவும் இல்லை.(16) நீ அருளப்பட்டிரு. நான் இப்போது கைலாச மலையை நோக்கிப் போகிறேன். பூமியைக் கண்ணும் கருத்துமாக உறுதியுடன், பொறுமையாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு ஆண்டு வா!" என்றார் {வியாசர்}".(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச் சொன்ன. அந்தத் தீவில் பிறந்த சிறப்புமிகுந்த கறுப்பு நிற வியாசர், தனது சீடர்களுடன், வேதங்களின் அனைத்து விதிகளையும் கடைப்பிடித்தபடி கைலாசத்தை நோக்கிச் சென்றார்.(18) தனது பாட்டன் இப்படிச் சென்றதும், துயரத்தால் உந்தப்பட்ட மன்னன் {யுதிஷ்டிரன்}, தொடர்ந்து அந்த முனிவர் {வியாசர்} சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தான்.(19) அதன் பிறகு அவன் {யுதிஷ்டிரன்} தனக்குள்ளேயே, "நிச்சயமாக முனிவர் {வியாசர்} சொன்னது நடந்தே தீரும். முயற்சியால் மட்டுமே விதியை வெல்ல முடியுமா?", என்று நினைத்துக் கொண்டான்.(20)

பிறகு, பெரும் சக்தி கொண்ட அந்த யுதிஷ்டிரன் தனது தம்பிகளை அழைத்து, "மனிதர்களில் புலிகளே, தீவில் பிறந்த முனிவர் {வியாசர்} என்னிடம் பேசியதைக் கேட்டீர்கள்.(21) முனிவரின் {வியாசரின்} வார்த்தைகளைக் கேட்ட பிறகு நான் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கிறேன். க்ஷத்திரியர்களின் சாவுக்குக் காரணமாக இருக்கும் நான் சாவதுதான் அத்தீர்மானம்.(22) எனது அன்புக்கு உரியவர்களே, காலம் இப்படித்தான் வகுத்திருக்கிறது என்றால், நான் வாழ்வதில் பயன் என்ன?" என்று கேட்டான். 

மன்னனின் {யுதிஷ்டிரனின்} இவ்வார்த்தைகளைக் கேட்ட அர்ஜுனன்,(23) "ஓ மன்னா, நினைவை அழிக்கும் இந்த பயங்கர மன அழுத்தத்துக்கு ஆளாகாதீர். தாங்கும் திறனை ஒன்றுகூட்டி, ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, எது நன்மையோ அதைச் செய்யும்" என்றான்.(24)

உண்மையில் உறுதியான யுதிஷ்டிரன், துவைபாயனரின் {வியாசரின்} வார்த்தைகளைச் சிறிது நேரம் சிந்தித்துவிட்டு, தனது தம்பிகளிடம்,(25) "அருளப்பட்டு இருப்பீராக. இந்த நாளில் இருந்து நான் மேற்கொள்ளப் போகும் நோன்பைக் குறித்துக் கேளுங்கள். நான் எந்தக் காரணத்திற்காக வாழ்ந்தாலும், இனி வரும் பதிமூன்று வருடங்களுக்கு, எனது தம்பிகளிடமோ, அல்லது பூமியின் மற்ற மன்னர்களிடமோ கடுஞ்சொல்லைப் பேசமாட்டேன். எனது உறவினர்களின் கட்டளைக்குக் கீழ் வாழ்ந்து, அறம் பயின்று,(26,27) எனது நோன்புக்கு முன்மாதிரியாக வாழப் போகிறேன். எனது பிள்ளைகளுக்கும் மற்ற பிள்ளைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல், நான் இந்த முறையில் வாழ்ந்தால், (எனக்கும் மற்றவர்களுக்கும் இடையில்) எந்த ஒரு ஏற்பின்மையும் {முரண்பாடும்} ஏற்படாது. ஏற்பின்மையே {முரண்பாடே} உலகத்தில் போர் ஏற்படுவதற்கான காரணமாகும்.(28) மனிதர்களில் காளைகளே, போரை தொலைவில் வைத்துவிட்டு, அனைவருக்கும் நான் ஏற்புடையதைச் செய்தால், உலகத்தில் என்னைக் குறித்து எந்தத் தீய கருத்தும் ஏற்படாது" என்று சொன்னான்.(29) 

தங்கள் அண்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டவர்களும், அண்ணனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} ஏற்புடையதையே எப்போதும் செய்பவர்களுமான பாண்டவர்கள் {பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன்} அவற்றை அங்கீகரித்து ஏற்றனர்.(30) நீதிமானான யுதிஷ்டிரன், தனது தம்பிகளுடன், சபைக்கு மத்தியில் இப்படிப்பட்ட சபதத்தை ஏற்று, புரோகிதர்களை நிறைவடையச் செய்து, உரிய சடங்குகளால் தேவர்களையும், பித்ருக்களையும் நிறைவடையச் செய்தான்.(31) ஓ பாரத குலத்தின் காளையே {ஜனமேஜயா}, அனைத்த ஏகாதிபதிகளும் சென்ற பிறகு யுதிஷ்டிரன் தனது தம்பிகளுடன், அமைச்சர்களுடன், தனது அன்றாட நற்சடங்குகளைச் செய்து, தனது அரண்மனைக்குள் நுழைந்தான். ஓ மனிதர்களின் ஆட்சியாளா {ஜனமேஜயா}, மன்னன் துரியோதனன், சுபலனின் மகன் சகுனி ஆகியோர் அந்த மகிழ்ச்சிகரமான சபாமண்டபத்துடன் கூடிய வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தனர்" {என்றார் வைசம்பாயனர்}.(32,33)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்