Tuesday, October 08, 2013

திரௌபதி சிரித்தாளா? - சபாபர்வம் பகுதி 49

Did Draupadi laugh?| Sabha Parva - Section 49 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : ஜனமேஜயன் கேட்டுக்கொண்டதற்கேற்ப வைசம்பாயனர், துரியோதனன் திருதரஷ்டிரனிடம் சோகமாகப் பேசியதை முழுமையாகச் சொல்வது; பகடையாட்டம் வேண்டாம் என்று திருதராஷ்டிரன் துரியோதனனிடம் சொல்வது; விதுரனின் ஞானம் குறித்து சொல்வது; துரியோதனன் தனது தரப்பு சோகங்களைச் சொல்வது...

Duryodhan slipped

ஜனமேஜயன், "ஓ வேதங்களை அறிந்தவர்களில் முதன்மையானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டன்களான பாண்டுவின் மகன்களைத் துயரத்தில் ஆழ்த்திய, பங்காளிகளுக்குள் தீமையை விளைவித்த பகடை விளையாட்டு எப்படி நடைபெற்றது?(1) அந்தச் சபையில் எந்தெந்த மன்னர்கள் இருந்தனர். அவர்களில் அந்த விளையாட்டை அங்கீகரித்தவர்கள் யார்? அவர்களில் ஏற்காதவர் யார்?(2) ஓ பாவமற்றவரே {வைசம்பாயனரே}, ஓ மறுபிறப்பாளர்களின் {பிராமணர்களின்} தலைவரே, உலகத்தின் அழிவுக்குக் காரணமாக இருந்த இது குறித்து நான் விரிவாகக் கேட்க விரும்புகிறேன்." என்றான்".(3)

சௌதி சொன்னார், "இப்படி மன்னனால் {ஜனமேஜயனால்} கேட்கப்பட்ட போது, முழு வேதங்களையும் அறிந்தவரும், பெரும் சக்தி கொண்டவருமான வியாசரின் சீடர் {வைசம்பாயனர்}, நடந்தது அத்தனையும் விவரமாகக் கூறினார்.(4)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ பாரதர்களில் சிறந்தவனே {ஜனமேஜயா}, ஓ பெரும் மன்னா {ஜனமேஜயா}, நீ கேட்க விரும்பினால், நான் மறுபடி அனைத்தையும் விரிவாகச் சொல்கிறேன் கேட்பாயாக.(5)

விதுரனின் கருத்தை உறுதிப்படுத்திக் கொண்ட அம்பிகைமகன் திருதராஷ்டிரன், துரியோதனனைத் தனிமையில் அழைத்து,(6) "ஓ காந்தாரியின் மகனே, பகடையாட்டம் {த்யூதம்} வேண்டாம். விதுரன் அதுகுறித்து நன்றாகப் பேசவில்லை. பெரும் ஞானம் கொண்ட அவன், எனக்கு நன்மையல்லாத ஓர் ஆலோசனையை எனக்குச் சொல்லமாட்டான்.(7) விதுரன் எனக்கு அதிக நன்மை தரும் காரியத்தையே சொல்வான் என நான் கருதுகிறேன். ஓ மகனே {துரியோதனா}, அஃது உனது நன்மைக்காகவும் தான் என நான் கருதுவதால், அதையே செய்வாயாக.(8) வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஆன்ம குருவும், சிறப்புமிகுந்தவரும், கல்விமானும், ஞானியுமான பிருஹஸ்பதி, தேவர்கள் தலைவனுக்கு {இந்திரனுக்கு} விளக்கிச் சொன்ன அனைத்து (அரசியல் நீதிகளின்) அறிவியலையும் விதுரன் அறிவான்.(9) 

ஓ மகனே {துரியோதனா}, விதுரன் அறிவுறுத்துவதை நான் எப்போதும் ஏற்றுக் கொள்வேன். ஓ மன்னா {துரியோதனா}, விருஷ்ணி குலத்தோரின் {யாதவ குலத்தோரின்} மதிப்பிற்குரிய ஞானமுள்ள உத்தவரைப் போல, பெரும் புத்திசாலியான விதுரன், குரு குலத்தில் முதன்மையானவன் என்று கருதப்படுகிறான். ஆகையோல், ஓ மகனே {துரியோதனா}, பகடையாட்டம் வேண்டாம். பகடை வேற்றுமையை உண்டாக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.(10,11) வேற்றுமைகளே ஒரு நாட்டுக்கு அழிவை ஏற்படுத்தும். எனவே, ஓ மகனே {துரியோதனா} சூதாடும் உனது திட்டத்தைக் கைவிடுவாயாக. ஓ மகனே {துரியோதனா}, நீ தந்தையும் தாயுமான எங்களிடம் பெற விதிக்கப்பட்ட மூதாதையர்களின் தரம் மற்றும் உடைமைகளை அடைந்தாய். நீ கல்வியறிவு பெற்றவன், அனைத்து பிரிவு ஞானத்திலும் புத்திசாலியாக இருக்கிறாய். நீ உனது பெற்றோரின் வசிப்பிடத்தில் அன்புடனும் பாசத்துடனும் வளர்க்கப்பட்டிருக்கிறாய்.(12,13) 

தம்பிகளுக்கெல்லாம் மூத்தவனாகப் பிறந்து, உனது சொந்த நாட்டுக்குள்ளேயே வாழ்ந்தும் நீ ஏன் உன்னை மகிழ்ச்சியற்றவனாக கருதிக் கொள்கிறாய்? ஓ பலம்வாய்ந்த கரம் கொண்டவனே, சாதாரண மக்களால் பெற முடியாத உள்ளதில் மிகச் சிறந்த உணவையும் ஆடைகளையும் பெறுகிறாய்.(14) நீ ஏன் இவ்வளவு வருத்தப்படுகிறாய்? ஓ மகனே {துரியோதனா}, ஓ பெரும் பலம் வாய்ந்த கரம் கொண்டவனே, மக்களாலும் செல்வங்களாலும் நிறைந்த உனது மூதாதையர் நாட்டை ஆண்டு, விண்ணுலகில் இருக்கும் தேவர்கள் தலைவனைப் {இந்திரனைப்} போல நீ இருக்கிறாய். நீ ஞானம் கொண்டவனாக இருக்கிறாய். உன்னை மனச்சோர்வுக்குள்ளாக்கியிருக்கும் உனது துன்பத்துக்கான வேர் என்னவாக இருக்கும் என்பதை நீ எனக்குச் சொல்ல வேண்டும்", என்றான் {திருதராஷ்டிரன்}.(15,16)

துரியோதனன், "ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, அனைத்தையும் (எதிரிகளின் செல்வச் செழிப்பைக்) கண்டும், உண்டும், உடுத்தியும் வரும் நான் பாவம் நிறைந்த இழிந்தவனாவேன். பகைவனின் செழிப்பைக் கண்டும் பொறாமை அடையாதவனை இழிந்தவன் என்றே சொல்கிறார்கள்.(17) ஓ மேன்மையானவரே, இது போன்ற செல்வச்செழிப்பு எனக்குத் நிறைவைத் தரவில்லை. குந்தி மகனின் {யுதிஷ்டிரனின்} பிரகாசமிக்க செழிப்பைக் கண்டு நான் பெருந்துன்பத்தில் இருக்கிறேன்.(18) பூமி முழுமையும் யுதிஷ்டிரனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதைக் கண்டும், உயிரோடு இருக்கும் எனது ஆன்மா வலிமையானதுதான்.(19) நீபர்கள், சித்ரகர்கள், குகுரர்கள், காரஸ்கரர்கள், லோகஜங்கர்கள் ஆகியோர் {ஆகிய அரசர்கள்} யுதிஷ்திரனின் அரண்மனையில் அடிமைகளைப் போல இருக்கின்றனர்.(20) 

இமயம், கடல், கடற்கரைப் பகுதிகள், ரத்தினங்களையும் தங்கத்தையும் தரும் கணக்கற்ற இடங்கள், ஆகியவற்றின் அதிபதிகளும் யுதிஷ்டிரனின் செழிப்பை அங்கீகரித்துள்ளனர்.(21) ஓ ஏகாதிபதி, மூத்தவனாகவும், சிறந்தவனாகக் கருதி மதிப்புடன் வரவேற்கப்பட்டு, (காணிக்கையாக வரும்) ரத்தினங்களையும் நகைகளையும் ஏற்கும் பணியில் நான் நியமிக்கப்பட்டேன்.(22) ஓ பாரதரே, அங்கே இருந்த கூட்டம் கொண்டு வந்திருந்த மதிப்புமிக்க நகைகளின் பெரும் அளவை யாரும் கண்டதில்லை.(23) ஓ மன்னா, அந்தச் செல்வங்களைப் பெற்று பெற்றே எனது கரங்கள் சோர்ந்தன. நான் களைப்புற்ற போது, அந்த மதிப்புமிக்க பொருட்களைக் கொண்டு வந்தவர்கள் நான் இயல்புநிலை அடையும் வரை காத்திருந்தனர்.(24) 

பிந்து {பிந்துசரஸ்) ஆற்றில் இருந்து ரத்தினங்கள் மற்றும் தங்கங்களைக் கொண்டுவந்து, ஏரி போன்ற தரையை கொண்ட மாளிகையை அசுரத்தச்சன் மயன் (பாண்டவர்களுக்காக) பளிங்காலேயே கட்டிக் கொடுத்திருக்கிறான். அங்கு நிறைந்திருந்த (செயற்கை) தாமரைகளைக் கண்டு, ஓ மன்னா, அங்கு நீர் இருக்கிறது என்று தவறுதலாக நினைத்தேன்.(25) (அதைக் கடக்கும் போது) நான் எனது ஆடைகளைத் தூக்கியதைக் கண்ட விருகோதரன் (பீமன்), எதிரியின் செழிப்பைக் கண்டு மயங்கினேன் என்றும், எனக்கு அது போன்ற ரத்தினங்கள் கிடையாது என்றும் கருதி என்னைப் பார்த்து நகைத்தான்.(26) என்னால் முடிந்திருந்தால், ஓ மன்னா, அதன் காரணமாக அங்கேயை விருகோதரனை {பீமனைக்} கொன்றிருப்பேன். ஆனால், ஓ ஏகாதிபதி, ஆனால் நாம் பீமனைக் கொல்ல முயன்றால், நமது நிலையும் சிசுபாலனைப் போலத் தான் ஆகியிருக்கும் என்பதில் ஐயமில்லை.(27,28) 

ஓ பாரதரே, பகைவனால் ஏற்பட்ட அந்த அவமானம் என்னை எரிக்கிறது. மீண்டும் ஒருமுறை, ஓ மன்னா, அதேபோன்ற ஒரு குளம், ஆனால் உண்மையில் அங்கு நீர் நிறைந்திருக்கிறது. நான் அதை பளிங்குத் தரை என்று தவறுதலாக நினைத்து அந்த நீருக்குள் விழுந்தேன்.(29) இதைக் கண்ட பீமனும், அர்ஜுனனும் கேலியாகச் சிரித்தனர். மற்ற மங்கையருடன் வந்த திரௌபதியும் அவர்களது சிரிப்பில் பங்கு கொண்டாள்.(30) அஃது என் இதயத்தை பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கியது. எனது ஆடைகள் நனைந்தன, மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில் பணியாட்கள் வேறு ஆடைகள் கொடுத்தனர். அதுவும் எனக்குப் பெரும் துயரத்தைக் கொடுத்தது.(31) 

ஓ மன்னா, இன்னொரு தவறைக் குறித்தும் சொல்கிறேன் கேளும். சரியாகக் கதவு போலவே இருந்த ஒன்றின் ஊடாக நான் கடந்து செல்ல நினைத்தபோது, அங்கு பாதை இல்லை,(32) நான் சுவற்றில் எனது நெற்றியால் முட்டிக் கொண்டு காயமடைந்தேன். எனக்கு தலையில் அடிபட்டத்தைத் தூரத்திலிருந்தே கண்ட இரட்டையர்களான நகுலனும் சகாதேவனும் ஓடிவந்து அவர்கள் கரத்தால் தாங்கிப் பிடித்து அவர்களுக்கு என்னிடம் உள்ள அக்கறையைக் வெளிப்படுத்தினர்.(33) 

சகாதேவன் மீண்டும் மீண்டும் புன்னகைத்தது போல, ஓ மன்னா, இது தான் கதவு, இந்த வழியாகச் செல்வீராக" என்றான்.[1](35) ஓ மன்னா, நான் அந்த மாளிகையில் கண்ட பல ரத்தினங்களின் பெயர்களைக் கூட கேள்விப்பட்டது இல்லை. இதன் காரணமாகவே எனது இதயம் வலிக்கிறது" என்றான் {துரியோதனன்}.(36)

[1] கும்பகோணம் பதிப்பில், "அங்கே அவ்வாறு அடிபட்ட என்னை, சேர்ந்திருந்த நகுலஸஹதேவர்களிருவரும் தூரத்திலிருந்து பார்த்து வ்யஸனப்பட்டுக் கைகளால் அணைத்தனர். அந்த ஸமயத்தில் ஸஹதேவன், என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டு, "திருதராஷ்டிரபுத்திரனே, வாயில் இங்கேயிருக்கிறது; அங்கே போகாதே" என்று அடிக்கடி சொன்னான். அந்த ஸமயத்தில் பீமஸேனனும், "திருதராஷ்டிர புத்திரனே" என்றழைத்து, சிரித்து, "ராஜாவே, வாயில் இங்கே" என்று சொன்னான். அந்த ஸபையில் நான் கண்ட ரத்னங்களுக்குப் பெயர்களைக் கூட இதற்கு முன் நான் கேட்டதில்லை. அதுவும் என் மனத்தைச் சுடுகிறது" என்றிருக்கிறது.

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்