Thursday, October 10, 2013

சோழனும் பாண்டியனும் என்ன பரிசளித்தனர்? - சபாபர்வம் பகுதி 51

What present did Cholas and Pandyas made? | Sabha Parva - Section 51 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 07)

பதிவின் சுருக்கம் : ராஜசூய வேள்விக்காக யுதிஷ்டிரனுக்கு காணிக்கையாக வந்த விலை உயர்ந்த பொருட்களைக் குறித்து துரியோதனன் விரிவாக திருதராஷ்டிரனுக்கு உரைத்தது...

Yudhishthira in his court

துரியோதனன் சொன்னான், "ஓ பாவமற்றவரே, யுதிஷ்டிரனுக்கு பூமியின் மன்னர்கள் கொடுத்த பல்வேறு காணிக்கைகளான பெரும் செல்வத்தை நான் சொல்கிறேன் கேட்பீராக.(1) மேருவுக்கும், மந்தர மலைக்கும் நடுவில் பாயும் சைலோதை ஆற்றுக்கு அருகில் கீசகம் என்ற மூங்கில்களின் நிழலில் வசிக்கும்(2) கஷர்கள், ஏகாஸனாத்யர்கள், அர்ஹர்கள், பிரதரர்கள், தீர்க்கவேணுக்கள், பாரடாக்கள், குலிந்தர்கள், தங்கணர்கள் {பரதங்கணர்கள்} ஆகியோர்(3) எறும்புப்புற்றிலிருந்து வெளிக்கொணரப்படும் {பிபீலிகம் என்ற பெயரில் அழைக்கப்படும்} சிறந்த தங்கத்தைக் காணிக்கையாகக் குவியல் குவியல்களாகக் கொண்டு வந்தனர். அவை துரோணங்களில் (பாத்திரங்களில்) அளக்கப்பட்டன.(4)

பெரும் பலம் வாய்ந்த மலைவாழ் பழங்குடிகள் எண்ணிலடங்கா மென்மையான சாமரங்களைக் (நீண்ட தூரிகைகள்) கொண்டு வந்தனர். அவை கருப்பாகவும், சில சந்திரபிம்பத்தைப் போன்று வெள்ளையாகவும் இருந்தன. மேலும் அவர்கள் இமயத்தில் விளையும் பூக்களிலிலும், மிசேலிய சம்பகம் என்ற பூக்களிலும் {சண்பக மலர்களிலும்} எடுக்கப்பட்ட இனிமையான தேனையும், வடகுருக்கள் பகுதியிலிருந்து மலர் மாலைகளையும், இன்னும் வடக்கே கைலாசத்தில் இருந்து வித்தியாசமான செடிவகைகளையும் கொண்டு வந்து உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், மன்னன் யுதிஷ்டிரனின் மாளிகை வாசலில் தலையைக் கவிழ்ந்தவாறு காத்திருந்தனர்.(5-7) 

இமய மலைக்குப் பின்புறத்திலும், சூரியன் உதயமாகிற மலைச்சாரலிலும், கடற்கரையிலும், லௌஹித்ய மலைகளின் இருபுறத்தில் இருந்தும் வந்திருந்தவர்களும், கொடும் ஆயுதங்களைத் தாங்கியவர்களும், கொடுஞ்செயல்களைச் செய்பவர்களும், கனிகளும் கிழங்குகளும் உண்பவர்களும், தோலாடை உடுத்துபவர்களுமான எண்ணிலடங்காத கிராதர்களின் தலைவர்களையும் நான் அங்கு கண்டேன்.(8,9) 

ஓ மன்னா, பெரும் அளவிலான {உயர்ரக} சந்தனத்தையும், பல வகை கற்றாழைகளுடன், கருப்பு கற்றாழையும், {அகில்களையும்} குவியல் குவியலாக மதிப்பு மிக்க தோல்களும், தங்கங்களும், நறுமணப்பொருட்களும், தங்கள் குலத்தைச் சார்ந்த பத்தாயிரம் பணிப்பெண்களையும், பல தொலைதூர நாடுகளில் உள்ள பல அழகான விலங்குகள் மற்றும் பறவைகளையும், மலைகளில் இருந்து கொணரப்பட்ட பெரும் பிரகாசமுள்ள தங்கத்தையும் கொண்டு வந்த அந்த கிராதர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வாயிலிலேயே காத்திருந்தனர்.(10-12)

ஆயுதங்களில் நல்ல பயிற்சியுடையவர்களும், நற்குடியில் பிறந்த க்ஷத்திரியர்களுமான கைராதர்கள் {காபவ்யர்கள்}, தரதர்கள், தர்வர்கள், சூரர்கள், வையமகர்கள், ஔதும்பரர்கள், துர்விபாகர்கள், குமாரர்கள், பாரடர்களுடன் கூடிய பாஹ்லீகர்கள்,(13) காச்மீரர்கள், கௌரகர்கள், ஹம்சகயணர்கள், சிபிக்கள், திரிகர்த்தர்கள், யௌதேயர்கள், மத்ர நாட்டு ஆட்சியாளர்கள், கைகேயர்கள்,(14) அம்பஷ்டர்கள், கௌகுரர்கள் {கௌரகர்கள்}, தார்க்ஷியர்கள், வஸ்திரபர்கள், பஹ்லவர்கள், வஸாதயர்கள் {வஸுதேயர்கள்}, மௌலேயர்கள் க்ஷுத்ரகர்கள், மாலவர்கள்,(15) பௌண்ட்ரயர்கள் {ஸௌண்டிகர்கள்}, குக்குரர்கள், சகர்கள், அங்கர்கள், வங்கர்கள், புண்ட்ரர்கள், சஸானவத்யர்கள், கயர்கள் ஆகியோர் மன்னன் யுதிஷ்டிரனுக்கு நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான காணிக்கைகளைக் கொண்டு வந்தனர்.(16,17)

வங்கர்கள், கலிங்கர்கள், மகதர்கள், தாம்ரலிப்தர்கள், புண்ட்ரகர்கள், தௌவாலிகர்கள் {துகூலர்கள்}, சகரகர்கள், பத்ரோர்டர்கள், சைசவர்கள்,(18) எண்ணிலடங்கா கர்ணபிராவரானர்கள் ஆகியோர் வாயில் முன் திரண்டனர். மன்னனின் {யுதிஷ்டிரனின்} உத்தரவின் பேரில், அவர்களிடம், ’காக்க முடிந்தவர்களும், நல்ல காணிக்கை கொண்டு வருபவர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவர்’ என்று வாயில் காப்போர் கூறினர்.(19) பிறகு அந்த நாடுகளின் மன்னர்கள், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையும், உயர்ந்த விரிப்புகளால் போர்த்தப்பட்டவையும், ஏர் போன்ற தந்தங்களை உடையவையுமான யானைகளைக் ஆளுக்கு ஆயிரம் என கொடுத்தனர். அவை தாமரையின் வண்ணத்தில் இருந்தன. பாறைகள் போன்று கருமையாகவும், எப்போதும் மந்தமாகவும் இருக்கும் அவை, காம்யக தடாகத்தின் அருகிலிருந்து பெறப்பட்டு கவசங்கள் பூட்டப்பட்டவை ஆகும். அந்த யானைகள் அதிக பொறுமை உடையனவாகவும், உயர்ந்த வகையைச் சேர்ந்தவையாகவும் இருந்தன. இந்தக் காணிக்கைகளைக் கொடுத்த பிறகு, அந்த மன்னர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர்.(20,21) ஓ மன்னா, இவர்களும், பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த இன்னும் பலரும், இன்னும் எண்ணிலடங்கா சிறப்பு மிகுந்த மன்னர்களும், வேள்விக்காக நகைகளையும், ரத்தினங்களையும் கொண்டு வந்தனர்.(22] 

இந்திரனின் நண்பனும் கந்தர்வர்களின் மன்னனுமான சித்திரரதன்[1] காற்றின் வேகம் கொண்ட நானூறு குதிரைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான்.(23) தும்புரு என்ற கந்தர்வன், மாவிலையின் நிறம் கொண்டவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான நூறு  குதிரைகளை மகிழ்ச்சியாக கொடுத்தான்.(24) ஓ குரு குலத்தவரே, மிலேச்ச பழங்குடிகளால் கொண்டாடப்படும் மன்னன் சூகரன், பல நூற்றுக் கணக்கான அற்புதமான யானைகளைக் கொடுத்தான்.(25) மத்ஸ்ய நாட்டு மன்னன் விராடன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட இரண்டாயிரம் யானைகளைக் காணிக்கையாகக் கொடுத்தான்.(26) பாம்சு நாட்டைச் சேர்ந்த மன்னன் வஸுதானன், பாண்டுவின் மகனுக்கு இருபத்தாறு யானைகளையும், இருநூறு குதிரைகளையும் காணிக்கையாகக் கொடுத்தான்.(27) அவை அனைத்தும் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு, இளமையுடன் பெரும் வேகம் செல்லக்கூடியதாகவும் இருந்தது. அவன் இவற்றையும் இன்னும் பல செல்வங்களையும் கொடுத்தான்.(28)

[1] சித்திரரதன் என்பவன் அர்ஜுனனுடன் போரிட்ட கந்தர்வனாவான் - மேலும் விபரங்களுக்கு : அங்காரபர்ணனும் {சித்திரரதனும்} அர்ஜுனனும் - ஆதிபர்வம் பகுதி 172 காண்க

யக்ஞசேனன் {துருபதன்}, அந்த வேள்வியில் பாண்டுவின் மகன்களுக்கு, பதினாலாயிரம் பணிப்பெண்களையும், அவரவர் மனைவிகளுடன் பத்தாயிரம் ஆண் பணியாட்களையும், பல நூறு அற்புதமான யானைகளையும், யானைகளால் இழுக்கப்பட்ட இருபத்தாறு  தேர்களையும், மேலும் தனது முழு நாட்டையும் கொடுத்தான். பிறகு விருஷ்ணி குலத்தின் வாசுதேவன் {கிருஷ்ணன்}, அர்ஜுனனின் பெருமையை உயர்த்த, பதினாலாயிரம் அற்புதமான யானைகளைக் கொடுத்தான். உண்மையில், கிருஷ்ணனின் ஆன்மாவாகவே அர்ஜுனன் இருக்கிறான். அர்ஜுனனின் ஆன்மாவாகவே கிருஷ்ணனும் இருக்கிறான். அர்ஜுனன் சொல்லும் எதையும் கிருஷ்ணன் சாதிப்பான். கிருஷ்ணன், அர்ஜுனனுக்காக சொர்க்கத்தையே கூட புறக்கணிக்கும் தகுதி படைத்தவனாவான்.(29-32) அர்ஜுனனும், கிருஷ்ணனுக்காகத் தனது உயிரையே கொடுப்பான்.

தங்கப்பாத்திரங்களில் நிரப்பப்பட்டதும், மலைய மலைகளில் மட்டுமே விளைக்கூடியதுமான சந்தனச் சாற்றையும், பெரும் அளவிலான சந்தனக் கட்டைகளையும், தர்ததுரா மலைகளிலிருந்து அகிற்கட்டைகளையும், அதிக பிரகாசமுடைய ரத்தினங்களையும், தங்கத்தால் பிண்ணபட்ட அற்புதமான ஆடைகளையும் கொண்டு வந்தும் கூட, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களுக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்கவில்லை[2]. கடலில் விளையும் சிறந்த ரத்தினங்களையும், கூடவே குவியல் குவியலாக முத்துகளையும், (33-35) யானைகளுக்கான நூற்றுக்கணக்கான விரிப்புகளையும், ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட ஆடைகள் உடுத்தியவர்களும், கண்களின் ஓரம் தாமிரம் போலச் சிவந்தவர்களுமான எண்ணிலடங்கா கருநிற மனிதர்களையும் {சிங்களர்களையும்}(36) கொண்டு வந்தும் அந்தக் காணிக்கைகளுடன் சிம்ஹள {சிங்கள} மன்னன் வாயிலில் காத்திருந்தான். 

[2] பாண்டிய, சோழ, சேர அரசர்கள் என்ன கொடுத்தனர் எனக் கும்பகோணம் பதிப்பின் ஓரிடத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது பின்வருமாறு, "பாண்டியராஜன் தர்ததுர மலையிலுண்டான தொண்ணாற்றாறு பாரம் நிறையுள்ள முதல் தரமான சந்தனக் கட்டளைகளையும், தொண்ணூற்றாறு சங்கங்களையும் தர்மராஜாவுக்கு விரைந்து கொடுத்தான். சோள{ழ}ராஜன், கேரளராஜன் இருவரும் கணக்கில்லாத சந்தனங்களையும், அகில்களையும், பலவகையான முத்துக்களையும், வைடூரியங்களையும் பாண்டுபுத்ரனுக்குக் கொடுத்தனர்" என்றிருக்கிறது.

எண்ணிலடங்கா பிராமணர்களும், வீழ்த்தப்பட்ட க்ஷத்திரியர்களும், வைசியர்களும், தொண்டுபுரியும் சூத்திரர்களும், யுதிஷ்டிரன் மீதிருந்த அன்பால் அந்தப் பாண்டுவின் மகனுக்காகக் காணிக்கைகளைக் கொண்டு வந்தனர். பல்வேறு நிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் சிறந்த, மத்திம, தாழ்ந்த என அனைத்துத் தரப்பு மக்களும்,(37,38) யுதிஷ்டிரனின் வசிப்பிடத்தையே மற்றொரு உலகமாக மாற்றினர். பூமியின் மன்னர்கள் இப்படி அற்புதமான மற்றும் மதிப்புமிக்க காணிக்கைகளைக் கொடுப்பதைக் கண்ட நான் துக்கத்தால் மரணத்தை விரும்பினேன். 

ஓ மன்னா, நான் இனி யுதிஷ்டிரன் எவருக்குச் சமைத்த மற்றும் சமைக்காத உணவு கொடுப்பானோ அந்தப் பாண்டவப் பணியாட்களைப் பற்றிச் சொல்கிறேன் கேட்பீராக. அங்கே நூறு லட்சம் கோடி {மூன்று கோடியே பதினாயிரவர் என்று சொல்கிறது கும்பகோணம் பதிப்பு}  யானையும், குதிரைகளும்,(39-42) பத்து கோடி தேர்களும், எண்ணிலடங்கா காலாட்படை வீரர்களும் இருந்தனர். சமைக்கப்படாத மூலப்பொருட்கள் ஓர் இடத்தில் அளக்கப்பட்டன; மற்றோர் இடத்தில் அவை சமைக்கப்பட்டன;(43) வேறோர் இடத்தில் அவை பரிமாறப்பட்டன. அந்தக் கோலாகல விழாவின் இசை எல்லா இடங்களிலும் கேட்கப்பட்டது. யுதிஷ்டிரனின் மாளிகையில் இருந்த அனைத்து வகை மனிதர்களில் உணவில்லை என்றோ ஆபரணங்கள் இல்லை என்றோ ஒருவரையும் நான் காணவில்லை. 

இல்லற வாழ்வு வாழும் எண்பத்தெட்டாயிரம் ஸ்நாதக பிராமணர்கள்(44,45) யுதிஷ்டிரனால் ஆதரிக்கப்படுகின்றனர். அவன் {யுதிஷ்டிரன்} அவர்கள் ஒவ்வொருக்கும் முப்பது பணிப்பெண்களைக் கொடுத்து நிறைவடையச் செய்தான். அப்படி நிறைவடைந்த அவர்கள் {அந்தப் பிராமணர்கள்}, அவனது பகைவர்களின் அழிவுக்கு இதயத்தால் வேண்டுகிறார்கள்.(46) 

உணர்வுகளை முழுக்கட்டுப்பாட்டில் கொண்ட வேறு பத்தாயிரம் தவசிகள் நாள்தோறும் யுதிஷ்டிரனின் அரண்மனையில் தங்கத் தட்டுங்களில் உணவுண்கின்றனர்.(47) ஓ மன்னா  யக்ஞசேனி {திரௌபதி}, தான் உண்ணவில்லை என்றாலும், பழுதுள்ள உறுப்புகள் கொண்டவர்களும், குள்ளர்களும் உள்ளிட்ட மற்ற அனைவரும் உண்டுவிட்டார்களா என்பதை நாள்தோறும் கவனிக்கிறாள்.(48) 
ஓ பாரதரே, திருமணத்தாலான உறவு நிலையால் பாஞ்சாலர்களும், நட்பு நிலையால் அந்தக விருஷ்ணிக்களும் {யாதவர்களும்} என அவ்விரு குலங்கள் மட்டுமே எதையும் கப்பமாகக் கொடுக்கவில்லை[3]" {என்றான் துரியோதனன்}.(49)

[3] இதற்கு முன்பு 29-33 ஸ்லோகங்களில் இவர்கள் இருவரும் பெரும் செல்வத்தைக் கொடையாகக் கொடுத்ததாக குறிப்பிருக்கிறது. என்றாலும், அவர்கள் அவற்றைக் கப்பமாக அல்லாமல் அன்பால் கொடுத்தனர் எனக் கொள்ளலாம்.

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்