Thursday, October 10, 2013

"எட்டு பேர் சிரித்தனர்" என்றான் துரியோதனன் - சபாபர்வம் பகுதி 52

"Eight men laughed" said Duryodhana | Sabha Parva - Section 52 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 08)

பதிவின் சுருக்கம் : துரியோதனன் திருதராஷ்டிரனிடம் எதிரியின் செல்வச் செழிப்பையும், தனது துயரத்தையும் விபரித்தல்...

Dhritarashtra and Duryodhana

துரியோதனன் சொன்னான், "அனைத்துலகாலும் மதிப்பிற்குரிய மன்னர்களாகக் கருதப்படுபவர்களும், வாய்மைக்குத் தங்களை அர்ப்பணித்தவர்களும், கடும் நோன்புகள் நோற்றவர்களும், பெரும் கல்வியும், சொல்திறமும் பெற்றவர்களும், வேதங்களையும் அதன் கிளைகளையும் அறிந்தவர்களும், வேள்விகள் செய்தவர்களும், பக்தியும் அடக்கமும் கொண்டவர்களும், தங்கள் ஆன்மாவை அறத்திற்கு அர்ப்பணித்தவர்களும், பெரும் புகழ் படைத்தவர்களும், முடிதரிக்க பெரும் சடங்குகள் பலவற்றைக் கண்டவர்களுமான அவர்கள் {மன்னர்கள்} அனைவரும் யுதிஷ்டிரனுக்காகக் காத்திருந்து அவனை {யுதிஷ்டிரனை} வழிபட்டார்கள்.(1,2) வேள்வியில் யுதிஷ்டிரன் பிராமணர்களுக்குக் கொடையளிக்க, காட்டுப் பசுக்கள் பலவற்றையும், மேலும் அவற்றில் பால் கறப்பதற்கான வெண்தாமிரத்தாலான {வெண்கலத்தால் ஆன} பல பாத்திரங்களையும் அம்மன்னர்கள் கொண்டு வந்ததைக் கண்டேன்.(3)

ஓ பாரதரே, வேள்வியின் முடிவில் யுதிஷ்டிரன் குளிப்பதற்காக, பெரும் ஆயத்தத்துடன் கூடிய பல மன்னர்கள், பல அற்புதமான பாத்திரங்களில் தூய்மையான நீரைத் தங்கள் தங்கள் நாடுகளில் இருந்து கொண்டு வந்தனர்.(4) பாஹ்லீக மன்னர், பசும்பொன்னால் அலங்கரிக்கப்பட்ட தேரைக் கொண்டு வந்தார். மன்னன் ஸுதக்ஷிணன், காம்போஜ நாட்டைச் சார்ந்த உயர்ரக வெள்ளைக்குதிரைகள் நான்கை அந்தத் தேரில் தானே பூட்டினான்.(5) பெரும் பலம் வாய்ந்த சேதி நாட்டு ஆட்சியாளன் சுனிதன் {சிசுபாலன்}, தேர் அச்சையும், கொடிமரத்தையும், தன் கரத்தால் தானே அந்தத் தேரில் பூட்டினான்.(6) தென்னாட்டு மன்னன், கவசத்துடன் தயாராக நின்றான்; மகத ஆட்சியாளன் மலர் மாலையுடனும், கிரீடத்துடனும் நின்றான்; பெரும் போர்வீரனான வஸுதானன் அறுபது வயது யானையுடனும், மத்ஸ்ய நாட்டு மன்னன் {விராடன்} அத்தேருக்கு தங்கத்தாலான பக்க இணைப்புகளையும் {பொன் பாச்சிகைகளையும்}; மன்னன் ஏகலவ்யன் காலணிகளுடனும்; அவந்தி நாட்டு மன்னன், இறுதி நீராடலுக்கான பலவகைப்பட்ட நீர்களுடனும்;(7,8) மன்னன் சேகிதானன் அம்பறாத்தூணியுடனும்; காசி மன்னன் வில்லுடனும், சல்லியன் தங்கக் கைப்பிடி கொண்ட வாளையும் கொண்டு வந்தனர்.(9)

பிறகு, பெரும் ஆன்மத்தகுதி படைத்தவர்களான தௌமியர், வியாசர், நாரதர், அசிதரின் மகன் தேவலன் ஆகியோர், சடங்கு நடக்கும் இடத்தில் நின்று, தூய நீரை மன்னன் {யுதிஷ்டிரன்} தலையில் தெளித்தனர் {அபிஷேகஞ்செய்தனர்}.(10) பெரும் முனிவர்களான அவர்கள், அந்தச் சடங்கு நடக்கும் இடத்திலேயே மகிழ்சியுடன் அமர்ந்தனர். வேதமறிந்த மற்ற சிறப்புவாய்ந்த முனிவர்கள், ஜமதக்னியின் மகனுடனும் {பரசுராமருடனும்}, முனிவரெழுவருடனும் {ஸப்தரிஷிகளுடனும்} சேர்ந்து சொர்க்கத்தின் இந்திரனை அணுகுவதைப் போல பெரும் வேள்விப் பரிசுகள் கொடுப்பவனான யுதிஷ்டிரனை அணுகி, மந்திரங்களைச் சொன்னார்கள்.(11,12) தடுக்க முடியாத ஆற்றலை கொண்ட சாத்யகி (மன்னன் {யுதிஷ்டிரன்} தலைக்கு மேல்) குடை பிடித்தான். தனஞ்சயனும் {அர்ஜுனனும்}, பீமனும் மன்னனுக்கு {யுதிஷ்டிரனுக்கு} விசிறியால் வீசிவிட்டனர்;(13) இரட்டையர்கள் {நகுல சகாதேவர்கள்} தங்கள் கரங்களில் சாமரங்களை ஏந்தியிருந்தனர். 

முந்தைய கல்பத்தில் பிரஜாபதி {பிரம்மன்} இந்திரனுக்குக் கொடுத்ததும், ஆயிரம் நிஷ்க தங்கம் கொண்டு தேவதச்சன் விஸ்வகர்மனால் செய்யப்பட்டதுமான வருணின் பெரும் சங்கை {வருணசங்கத்தை}, கடலரசன் கொண்டு வந்தான் {திருப்பாற்கடல் கொணர்ந்து கொடுத்தது}.(14,15) அந்தச் சங்கைக் கொண்டுதான் வேள்வியின் முடிவில் கிருஷ்ணன் யுதிஷ்டிரனை நீராட்டினான். அதைக் கண்ட நான் {துரியோதனன்} சிறிதளவு மயக்கத்தை அடைந்தேன். மக்கள் கிழக்கிலும், மேற்கிலும், தெற்கிலும் உள்ள கடல்களுக்குச் செல்கின்றனர். ஆனால், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, பறவைகளைத் தவிர வேறு எவராலும் வடக்கு கடலை அடைய முடியாது என்றாலும், பாண்டவர்கள் தங்கள் ஆளுகையை அங்கு வரை விரிவடையச் செய்திருக்கிறார்கள். ஏனெனில், மக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அங்கிருந்து {வடக்கு கடலில் இருந்து} கொண்டு வரப்பட்ட நூற்றுக்கணக்கான சங்குகளை {வேள்வி மண்டபத்தில்} முழக்கியதை நான் கேட்டேன். அந்த சங்குகள் தொடர்ச்சியாக முழக்கப்பட்ட போது, என் உடலின் மயிர்க்கால்கள் சிலிர்த்தன. பலம் குறைந்த மன்னர்கள் {அம்முழக்கத்தைக் கேட்டு மயக்கமடைந்து} கீழேவிழுந்தனர்.(16-18) பலம் பொருந்தியவர்களும், ஆற்றல்மிக்கவர்களும்,  அழகானவர்களுமான திருஷ்டத்யும்னன், சாத்யகி, பாண்டுவின் மகன்கள், கேசவன் {கிருஷ்ணன்} ஆகிய எட்டு பேரும், மதியிழந்திருந்த அம்மன்னர்களையும், என்னையும் கண்டு வெளிப்படையாகவே சிரித்தனர்.(19)

பிறகு மகிழ்ச்சி நிறைந்த இதயம் கொண்ட பீபத்சு (அர்ஜுனன்), ஓ பாரதரே, கொம்புகளில் பொற்தகடு பொருத்தப்பட்ட ஐநூறு எருதுகளை முக்கியமான பிராமணர்களுக்குக் கொடுத்தான்.(20) குந்தியின் மகனான மன்னன் யுதிஷ்டிரன் ராஜசூய வேள்வியை நிறைவுசெய்த பிறகு, மேன்மையான ஹரிச்சந்திரன் அடைந்த பெருஞ்செழிப்பை அடைந்தான். அச்செழிப்பை ரந்திதேவனோ, நாபாகனோ, ஜௌவனாஸ்வனோ {யௌவனாஸ்வனோ / மாந்தாதாவோ}, மனுவோ, வேணுவின் மகனான மன்னன் பிருதுவோ, பகீரதனோ, யயாதியோ, நகுஷனோ கூட அடைந்ததில்லை.(21,22) ஓ மேன்மையானவரே, ஹரிச்சந்திரன் பெற்ற அதே செழிப்பை பிருதையின் {குந்தியின்} மகனும் அடைந்ததைக் கண்ட பிறகு, நான் இன்னும் வாழ்வதில் எந்த நன்மையையும் நான் காணவில்லை.(23,24) 

ஓ பாரதரே! மனிதர்களின் ஆட்சியாளரே, குருட்டு மனிதனால் (எருதின் தோள்களில்) பூட்டப்படும் நுகத்தடி தளர்வுறுவே செய்யும். அந்த நிலையே நமது நிலையும் கூட. மூத்தவர்கள் தேய்ந்து கொண்டிருக்கும்போது இளையவர்கள் வளர்கிறார்கள்.(25) ஓ குருக்களின் தலைவரே, இதையெல்லாம் கண்ட பிறகு, மனத்தளவில் கூட என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. ஓ மன்னா, இதன் காரணமாகவே நான் துயரத்தில் மூழ்கி, நிறம் மங்கியவனாக, உடல் மெலிந்திருக்கிறேன்" {என்றான் துரியோதனன்}.(26)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்