Friday, October 11, 2013

துரியோதன நீதி - சபாபர்வம் பகுதி 54

Proverb of Duryodhana | Sabha Parva - Section 54 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 10)

பதிவின் சுருக்கம் : திருதராஷ்டிரனுக்கு துரியோதனன் சொல்லும் நீதிகள்...

Duryodhana, Dhritarashtra

துரியோதனன் சொன்னான், "கறியைத் தீண்டும் அகப்பையானது அந்தக் கறிச்சுவையை அறியாததைப் போலவே அறிவாற்றல் இல்லாதவனும், பல பொருட்களைப் பற்றி கேள்வியறிவு மட்டுமே கொண்டிருப்பவனுமான ஒருவன், சாத்திரங்களின் கருத்தை அறியமாட்டான்.(1) நீர் அனைத்தையும் அறிந்தும் என்னைக் குழப்புகிறீர் {திகைக்க வைக்கிறீர்}. ஒரு படகில் கட்டப்பட்ட மற்றொரு படகு போல, நானும் நீரும் கட்டப்பட்டிருக்கிறோம். உம் சொந்த காரியத்தில் உமக்கு ஊக்கமில்லையா? அல்லது என்னிடம் பகையை வளர்க்கிறீரா?(2) உடனே செய்ய வேண்டியதை, எதிர்காலத்தில் செய்யலாம் என்று சொல்லும் உம்மை ஆட்சியாளராகப் பெற்ற உமது மகன்களும், கூட்டாளிகளும் அழிந்து போய் விடுவார்கள்.(3) 

பிறர் சொல் கேட்கும் ஒருவனை வழிகாட்டியாகக் கொண்டிருப்பவர்கள் அடிக்கடி வழி தவறுவார்கள். அவனைப் பின் தொடர்பவர்கள் சரியான பாதையை அடைவார்கள் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?(4) ஓ மன்னா, நீர் முதிர்ந்த ஞானம் உடையவர்; முதிர்ந்தவர்களின் வார்த்தைகளைக் கேட்கும் சந்தர்ப்பம் வாயக்கப் பெற்றவராகவும், உணர்வுகளை உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவராகவும் இருக்கிறீர். நமக்கு வேண்டிய காரியங்களைச் செய்யத் தயாராக இருக்கும் எங்களைக் குழப்பாதீர்.(5) மன்னர்களின் நடத்தை சாதாரண மக்களிலிருந்து வேறுபட்டது என்று பிருஹஸ்பதி {தேவ குரு} சொல்லியிருக்கிறார். எனவே மன்னர்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் தங்கள் சொந்த நலனை கவனத்தில் கொள்ள வேண்டும்.(6) 

வெற்றி அடைதலே க்ஷத்திரியர்களின் ஒழுக்கத்துக்கு வழிகாட்டும் ஒரே பிரமாணமாக இருக்க வேண்டும். எனவே, அறம் சார்ந்தவையாகவோ, அல்லாதவையாகவோ இருப்பினும், தனது சொந்த ஒழுங்குக்கு {தனது வகைக்கு} ஏற்ற கடமைகளில் ஐயம் என்ன இருக்கமுடியும்?(7) தன் பகைவனின் ஒளிமிக்க செல்வத்தைப் பறிக்க விரும்பும் ஒருவன், ஓ பாரத குலத்தின் காளையே, சாட்டையைச் சுழற்றித் தன் குதிரைகளை அடக்கும் தேரோட்டி போல, அனைத்து திசைகளையும் தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும்.(8) வெறுமனே வெட்டும் கருவி மட்டுமல்ல; வெளிப்படையாகவோ, மறைமுகமாவோ பகைவனை வீழ்த்தும் வழிமுறையும் ஆயுதமேயாகும் என ஆயுதங்கள் கையாள்வதை வழக்கமாகக் கொண்டோர் சொல்கின்றனர்.(9) 

பகைவனாகவோ, நண்பனாகவோ அறியப்பட்ட ஒருவனது வடிவமோ, உறுப்பிலக்கணமோ {அங்க லட்சணமோ} அவசியமல்ல. ஒருவனுக்கு வலியை {துன்பத்தை} உண்டாக்கும் மற்றொருவன், ஓ மன்னா, வலியை உணர்பவனுக்கு பகைவனாவான்.(10) நிறைவின்மையே செழிப்பின் வேராகும். எனவே, ஓ மன்னா, நான் நிறைவின்மையுடன் இருக்கவே விரும்புகிறேன். செழுமை கையகப் படுத்தப்பட்ட பிறகும், கடுமையாக முயற்சிப்பவனே உண்மையான கொள்கை கொண்ட மனிதனாவான்.(11) ஈட்டப்பட்ட செல்வம் பதுக்கப்படும்போதும் கொள்ளையடிக்கப்படலாம். எனவே, எவனும் செல்வத்திலும் செழுப்பிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக்கூடாது. இதுவே {இத்தகைய கொள்ளைகளே} மன்னர்களின் {வழக்கமான} நடத்தையாக இருக்கிறது.(12) இந்திரன், அமைதிக்கு உடன்பட்டு உறுதிமொழி கொடுத்த பிறகு நமுசியின் தலையைத் துண்டித்தான். பகைவனுக்கு எதிரான இந்த நிலையான ஒழுக்கத்தை அவனும் {இந்திரனும்} அங்கீகரிப்பதாகவே இச்செயல் உள்ளது.(13) 

தவளைகளையும், வளையில் வாழும் விலங்குகளையும் விழுங்கும் பாம்பைப் போல, அமைதியுடன் இருக்கும் மன்னனையும், வீட்டை விட்டு வெளியே வராத பிராமணனையும் இந்தப் பூமி விழுங்கிவிடுகிறது.(14) ஓ மன்னா, இயற்கையிலேயே எவனும் எவனுக்கும் பகைவனாக முடியாது. பொதுவான நாட்டங்களைக் கொண்டவனே {அதே நாட்டங்களைக் கொண்ட} மற்றொருவனுக்கு பகைவனாகிறான்.(15) அவனே வேறு நாட்டம் கொண்டவனுக்குப் பகைவனாவதில்லை. வளரும் பகைவனை தன் மூடத்தனத்தால் {அறியாமையால்} கவனிக்காதவன், சிகிச்சையற்ற நோயினால் உயிர்ப் பறிக்கப்படும் நோயாளியைப் போல அழிந்து போவான்.(16) 

அதிக முக்கியத்துவம் இல்லாத பகைவனாக இருப்பினும், அவனே ஆற்றலில் வளர்ந்து வந்தால், மரத்தின் வேரருகே இருக்கும் வெள்ளை எறும்புகள் மரத்தை விழுங்குவதைப் போல அவனை விழுங்கிவிடுவான்.(17) ஓ பாரதரே, ஓ அஜமீடரே {அஜமீட வம்சத்தவரே}, பகைவனின் செழிப்பு உமக்கு ஏற்பில்லாததாகவே இருக்கட்டும். ஞானமுள்ளோர், சுமையைப் போல இந்தக் கொள்கையை எப்போதும் தங்கள் தலையில் சுமக்க வேண்டும்.(18) தனது செல்வ வளர்ச்சியை எப்போதும் விரும்பும் ஒருவன், பிறப்பிலிருந்தே இயல்பாக வளரும் உடலைப் போலவே, தனது உறவினர்கள் மத்தியில் வளர்ந்து வருவான். ஆற்றல் விரைவான வளர்ச்சியைக் கொடுக்கும்.(19) 

பாண்டவர்களின் செல்வத்தை நான் விரும்பினாலும், இன்னும் அஃதை எனது சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. தற்சமயம், நான் எனது திறமையில் இருக்கும் ஐயங்களுக்கு இரையாகிக் கொண்டிருக்கிறேன். அவ்வையங்களைத் தீர்த்துக் கொள்ள நான் உறுதியான தீர்மானத்துடன் இருக்கிறேன். ஒன்று நான் அவர்களது {பாண்டவர்களது} செல்வத்தை அடைவேன், அல்லது போரில் மடிந்து வீழ்வேன்.(20) ஓ மன்னா, மனத்தின் நிலை இவ்வாறு உள்ள போதும், நாள்தோறும் பாண்டவர்கள் செல்வ நிலையில் வளரவும், நாம் வளராமலும் இருக்கும் போதும், நான் என் உயிருக்காக ஏன் கவலைப்படப் போகிறேன்?" என்றான் {துரியோதனன்}.(21)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்