Saturday, October 12, 2013

பகடைக்கான மாளிகை தயாரானது - சபாபர்வம் பகுதி 55

Assembly house was constructed for dice play | Sabha Parva - Section 55 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 11)

பதிவின் சுருக்கம் : சகுனி துரியோதனனுக்கு உற்சாகம் கொடுப்பது; துரியோதனன் மீண்டும் தனது தந்தை திருதராஷ்டிரனிடம் வேண்டுவது; திருதராஷ்டிரன் மறுப்பது; மீண்டும் துரியோதனன் வலியுறுத்துவது; விதுரனைக் கேட்க வேண்டும் என்று திருதராஷ்டிரன் சொல்வது; துரியோதன் அதை ஏற்காதது; சபா மண்டபம் தயாராவது...

Assembly House

சகுனி சொன்னான், "ஓ வெற்றியாளர்களில் சிறந்தவனே {துரியோதனா}, நீ எதைக் கண்டு துயர் அடைகிறாயோ அந்தப் பாண்டுவின் மகன் யுதிஷ்டிரனின் செழிப்பை {பகடையாட்டத்தின் மூலம்} நான் (உனக்காகக்) பறிப்பேன்.(1) எனவே, ஓ மன்னா {துரியோதனா}, குந்தியின் மகனான யுதிஷ்டிரனை இங்கே அழைப்பாயாக. திறன்நிறைந்த ஒருவன் பகடை வீசுவதன் மூலம், தனக்கு எந்தக் காயமும் ஏற்படாமல் திறனற்ற ஒருவனை வீழ்த்திவிட முடியும்.(2,3) ஓ பாரதா {துரியோதனா}, பந்தயமே எனது வில், பகடைக் காய்கள் எனது கணைகள், அந்தப் பகடையில் இருக்கும் குறிகளே எனது வில்லின் நாண், பகடைப் பலகையே எனது தேருமாகும்", {என்றான் சகுனி}[1].(4)

[1] கும்பகோணம் பதிப்பில், "நான் படைத்தலையில் யுத்தஞ்செய்யாமலும், பிராணஸம்சயத்தையடையாமலும், புண்படாமலும் பாச்சிகைகளை இறைத்து, தெரியாதவனான தர்மராஜனை ஜயிப்பதில் ஸமர்த்தன். பாரதனே, எனது பந்தயங்கள்தாம் விற்களென்றும், காய்கள்தாம் அம்புகளென்றும், சூதாட்டத் திறனுடைய ரஹஸ்யந்தான் நாண்கயிறென்றும், காய்களைப் போடும் வகைதான் தேரென்றும் அறி" என்றிருக்கிறது.

துரியோதனன், "பகடையில் திறன்பெற்றவரான இந்தச் சகுனி, ஓ மன்னா, பகடை விளையாட்டில் பாண்டு மகனின் {யுதிஷ்டிரனின்} செல்வத்தைப் அபகரிக்கத் தாயாராக இருக்கிறார். அவருக்கு {சகுனிக்கு} அனுமதி அளிப்பதே உமக்குத் தகும்" என்றான்.(5)
திருதராஷ்டிரன், "எனது தம்பியான சிறப்பு மிகுந்த விதுரனின் ஆலோசனைகளுக்கே நான் எப்போதும் கீழ்ப்படிவேன். அவனுடன் கலந்தாலோசித்த பிறகு, இக்காரியத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நான் சொல்கிறேன்" என்றான்.(6)

துரியோதனன், "விதுரர், பாண்டு மகன்களுக்கு நன்மை செய்வதிலேயே எப்போதும் ஈடுபடுபவராவார். ஓ கௌரவரே, என்னிடம் அவரது {விதுரரது} உணர்வுகள் வேறு வகையில் உள்ளன {அவ்வாறில்லை}.(7) எனவே, இப்போது முன்மொழியப்பட்ட செயலை உமது இதயத்திலிருந்து அவர் விலக்கி விடுவார் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை[2]. ஓ குரு குலத்தின் மகனே, ஒரு குறிப்பிட்ட காரியத்தில் இரு வேறு மனிதர்களின் மனங்கள் ஒரே வகையில் இருக்காது என்பதால் அடுத்தவர் ஆலோசனையின் பேரில் எந்தக் காரியத்தையும் செய்யும் நிலையை எந்த மனிதனும் அடையக்கூடாது.(8) ஆபத்திற்கான அனைத்துக் காரணங்களையும் காணாது இருக்கும் மூடன், மழைக்காலத்தில் அழியும் ஒரு பூச்சியைப் போல அழிவடைவான்.(9) ஒருவன் செழிப்படையும் வரை நோயோ, யமனோ காத்திருப்பதில்லை. எனவே, வாழ்வும் உடல்நலமும் இருக்கும்வரை, ஒருவன் (செழிப்புக்காக காத்திராமல்) தனது காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்" என்றான் {துரியோதனன்}.(10)

[2] கும்பகோணம் பதிப்பில் இன்னும் அதிக சொற்களுடன், "ராஜாவே, அந்த விதுரரும், வியாஸரைவிட அதிகமாகத் தெரிந்தவர்தாம்; ஆனால் வெறுந்தர்மத்தையே சொல்லுவர். அது ஜயத்துக்கு ஸாதகமாகாது. பரதச்ரேஷ்சரே, ஜயம் தர்மத்திற்கு மாறானது. ஆதலால், தந்திரமுள்ளவன்தான் ஜயிப்பான். (வியாஸரும், விதுரருமாகிய) அவர்களிருவரும் (ஜயத்துக்கு) விரோதிகள். நிச்சயபுத்தியுள்ள விதுரர் உமது எண்ணத்தை மாற்றிவிடுவார். கௌரவரே, அவர் பாண்டவர்களின் விஷயத்தில் நன்மை செய்ய ஊக்கத்தோடிருப்பது போல என் விஷயத்திலில்லை" என்றிருக்கிறது.

திருதராஷ்டிரன், "ஓ மகனே {துரியோதனா}, பலவான்களிடம் பகைமை என்பதை நான் ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டேன். பகைமை நமது உணர்வுகளில் மாற்றங்களைக் ஏற்படுத்துகிறது. அஃது இரும்பால் செய்யப்படாதது எனினும், அதுவும் {பகைமை} ஒரு ஆயுதமே ஆகும்.(11) ஓ இளவரசனே, கொடும்போரின் விளைவுகளைத் தனக்குப் பின்னால் கொண்டு வருவதெதுவோ, இழப்புகள் நிறைந்ததெதுவோ, அதை நீ பேரருளெனக் கருதுகிறாய். தொடங்கிய உடனேயே அது கூரிய வாள்களையும், கூர்முனைக் கணைகளையும் உண்டாக்கும்[3] " என்றான்.(12)

[3] கும்பகோணம் பதிப்பில், "சூதாட்டமென்னும் அனர்த்தத்தை ஸாதகமென்று நினைக்கிறாய். அந்தச் சூதாட்டம் ஆரம்பிக்கப்படுமாயின் எவ்வகையிலாவது கூர்மையான கத்திகளையும், அம்புகளையும் உண்டாக்கிவிடும்" என்றிருக்கிறது.

துரியோதனன், "தொல்பழங்காலத்து மனிதர்களே பகடைப் பயன்பாட்டைக் கண்டுபிடித்தவர்கள் ஆவர். அதில் எந்த அழிவுமில்லை, எந்த ஆயுதத்தாக்குதலும் அதிலில்லை. எனவே, சகுனியின் சொற்கள் உமக்கு ஏற்புடையதாகட்டும், சபா மண்டபம் கட்டுவதற்கு விரைவாக ஆணையிடுவீராக.(13) நம் மகிழ்ச்சிக்கு வழிகாட்டும் சொர்க்கத்தின் கதவு, சூதின் மூலம் நமக்குத் திறக்கப்படும். உண்மையில், (இத்தகு துணையுடன்) சூதாட்டத்தை மேற்கொள்பவர்கள், நற்பேறு பெறும் தகுதியை அடைவார்கள். அப்போது பாண்டவர்கள், (உமக்கு மேன்மையானவர்களாக இல்லாமல்) உமக்கு சரி நிகரானவர்களாவார்கள். எனவே பாண்டவர்களுடன் சூதாடுவீராக {எங்களை அனுமதிப்பீராக}" என்றான்.(14)

திருதராஷ்டிரன், "உன்னால் சொல்லப்படும் சொற்கள் எனக்கு உவப்பாக இல்லை. ஓ மனிதர்களின் ஆட்சியாளா {துரியோதனா}, உனக்கு ஏற்புடையதை நீ செய்வாயாக. ஆனால், இந்த சொற்களுக்கு இணக்கமாக செயல்பட்டால் நீ வருந்த வேண்டியிருக்கும்; நீதியற்ற இத்தகு வார்த்தைகளால், பிற்காலத்தின் செழிப்பைக் கொண்டு வர முடியாது.(15) வாய்மை மற்றும் ஞானத்தின் பாதையில் நடக்கும் விதுரன் இதை முன்பே அறிந்திருந்தான். பெரும் துயரங்களையும், க்ஷத்திரியர்களின் உயிர் நாசத்தையும் விதியே தீர்மானிக்கிறது" என்றான் {திருதராஷ்டிரன்}".(16)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இதைச்சொன்னவனும், பலமற்ற மனத்தைக் கொண்டவனுமான திருதராஷ்டிரன், பிறகு, விதியைத் தவிர்க்க முடியாது எனவும், அதுவே மிக மேலானது எனவும் கருதினான். விதியால் இப்படி மதியிழந்த மன்னன், தனது மகனின் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்து, உரத்த குரலில்,(17) "தங்கம் மற்றும் வைடூரியத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஆயிரம் தூண்களுடனும், நூறு வாயில்களுடனும் கூடியதும், முழுமையாக இரண்டு மைல்கள் (ஒரு குரோசம்} நீளமும், அதே அளவு அகலமும் கொண்டதும்,  ஆயிரந்தூண்களுடன் கூடிய பளிங்கு வளைவு அரண்மனையென்று அழைக்கக்கூடியதும், அழகிய வர்ணனைக்குகந்ததுமான ஒரு சபா மண்டபத்தை காலந்தாழ்த்தாமல் மிகக் கவனமாகக் கட்டுவீராக." என்றான் {திருதராஷ்டிரன்}.(18)

அவனது {திருதராஷ்டிரனின்} சொற்களைக் கேட்டவர்களும், புத்தியும், திறனும் கொண்டவர்களுமான ஆயிரக்கணக்கான கலைஞர்கள், மிக விரைவாக அந்த அரண்மனையைக் கட்டி, அதில் அனைத்துப் பொருட்களையும் நிரப்பினர்.(19) விரைவில் மன்னனிடம் வந்து அரண்மனை கட்டும் வேலை முடிந்தது என்றும், அது காண்பதற்கினியதாகவும், அழகாகவும், அனைத்து வகை ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பதாகவும், தங்கத்தால் ஊடு இழை பொருத்தப்பட்ட பல வண்ணங்களில் ஆன தரைவிரிப்புகள் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.(20) 

பெரும் கல்விமானான மன்னன் திருதராஷ்டிரன், பிறகு, முதல் அமைச்சர் விதுரனை அழைத்து, "நீ {காண்டவப்பிரஸ்தம்} சென்று, காலந்தாழ்த்தாமல் இளவரசன் யுதிஷ்டிரனை இங்கே அழைத்து வருவாயாக.(21) அவன் {யுதிஷ்டிரன்} தனது தம்பிகளுடன் இங்கே வந்து, என்னுடைய இந்த அழகான சபாமண்டபத்தையும், கணக்கற்ற நகைகளையும், ரத்தினங்களையும், விலையுயர்ந்த படுக்கைகள் மற்றும் தரைவிரிப்புகளையும் கண்டு, நட்பு ரீதியிலான ஒரு பகடை ஆட்டத்தில் கலந்து கொள்ளட்டும்" என்றான் {திருதராஷ்டிரன்}.(22)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்