Sunday, October 13, 2013

ஆட்டம் ஆரம்பம் - சபாபர்வம் பகுதி 58

The game started | Sabha Parva - Section 58 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 14)

பதிவின் சுருக்கம் : பகடைக்காக உண்டாக்கப்பட்ட சபாமண்டபத்துக்குள் பாண்டவர்கள் நுழைவது; யுதிஷ்டிரன் சூதின் தீமையை விளக்குவது; சகுனி சமாதானம் கூறுவது; யாருடன் தான் விளையாட வேண்டும் என்று யுதிஷ்டிரன் கேட்பது; விளையாட்டு ஆரம்பமாவது...


வைசம்பாயனர் சொன்னார், "யுதிஷ்டிரனைத் தலைமையாகக் கொண்ட பிருதையின் மகன்கள் {பாண்டவர்கள்} அந்தச் சபா மண்டபத்துக்குள் நுழைந்து, அங்கே இருந்த அனைத்து மன்னர்களையும் அணுகினர். வழிபடத்தகுந்தவர்களை வழிபட்டும், வயதுக்குத் தகுந்தபடி ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக் கொண்டும், விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப்பட்டவையும், தூய்மையானவையுமான தங்கள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தனர்.(1,2) அவர்களும் {பாண்டவர்களும்} மற்ற மன்னர்களும் இருக்கைகளில் அமர்ந்த பிறகு, சுபலனின் மகனான சகுனி யுதிஷ்டிரனிடம்,(3) "ஓ மன்னா, இந்த சபா மண்டபம் நிறைந்திருக்கிறது. இவர்கள் அனைவரும் உனக்காகவே காத்திருக்கின்றனர். எனவே, பகடை விரிக்கப்படட்டும், ஓ யுதிஷ்டிரா, விளையாட்டுக்கான விதிகளும் நிர்ணயிக்கப்படட்டும்" என்றான்.(4)

யுதிஷ்டிரன், "ஏமாற்று நிறைந்த சூதாட்டம் பாவகரமானது. அதில் எந்த க்ஷத்திரிய ஆற்றலும் கிடையாது. நிச்சயமாக அதில் எந்த நீதிநெறியும் கிடையாது. ஓ மன்னா {சகுனி}, பிறகு நீ ஏன் சூதை இப்படிப் புகழ்கிறாய்?(5) ஏமாற்று விளையாட்டில் பெருமைப்படும் சூதாடிகளை ஞானமுள்ளோர் பாராட்டுவதில்லை. ஓ சகுனி, இழிந்தவனைப் போல ஏமாற்றுகரமான வழிகளில் எங்களை வீழ்த்தாதே" என்றான்.(6)

சகுனி, "வெல்வதிலும், வீழ்வதிலும் உள்ள ரகசியங்களை அறிந்த அந்த உயர் ஆன்ம விளையாட்டு வீரன், எதிரியின் ஏமாற்றும் கலைகளை சூனியமாக்கும் நிபுணத்துவம் வாய்ந்த, சூதின் மாறுதல்களை உன்னிப்பாகக் கவனிப்பதில் ஒருமுகம் கொண்ட, விளையாடத் தெரிந்தவன் பாதிப்படைவதில்லை. ஓ பிருதையின் {குந்தியின்} மகனே, பகடையில் பந்தயம் வைக்கும்போது, வெற்றி தோல்வியால் நமக்குக் காயம் ஏற்படுகிறது. அதன் காரணமாகவே சூது குற்றமாகக் கருதப்படுகிறது. எனவே, ஓ மன்னா {யுதிஷ்டிரா}, விளையாட்டை ஆரம்பிக்கலாம். அஞ்சாதே. பந்தயம் நிச்சயிக்கப்படட்டும், தாமதம் செய்யாதே!" என்றான்.(7,8)

யுதிஷ்டிரன், "சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நாம் செல்ல வழி வகுக்கும் செயல்களைக் குறித்து நமக்கு எப்போதும் சொல்லும் அசிதனின் மகனான முனிவர்களில் சிறந்த தேவலன், சூதாடிகளைக் கொண்டு ஏமாற்றுகரமாக விளையாடுவது மிகப்பாவகரமானது என்று சொல்கிறார். தந்திரமில்லா போர் செய்து பெரும் வெற்றியே சிறந்த விளையாட்டாகும். இருப்பினும், விளையாட்டின் ஒரு வகையாகக் கருதப்படும் சூதாட்டம் அப்படிப்பட்டதல்ல.(9,10) மரியாதைக்குரியவர்கள் ஒரு போதும் மிலேச்ச மொழியைப் பேசவோ, அல்லது தங்கள் நடத்தையில் ஏமாற்றுத்தனத்தையோ கொள்ள மாட்டார்கள். தந்திரமும் குறுக்கு புத்தியும் இல்லாத போர் செய்வதே நேர்மையான மனிதர்களின் செயல்பாடாகும்.(11) ஓ சகுனி, எங்கள் தகுதிக்கேற்ப பிராமணர்களுக்கு நன்மை செய்வது எவ்வாறு என்று கற்க நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் செல்வத்தை, வேண்டுமென்றே விளையாடி எங்களிடம் இருந்து வெற்றி கொள்ளாதே. எதிரிகள் கூட பந்தயம் வைத்து ஏமாற்றி விளையாடி இவ்வகையில் வீழ்த்தப்படக்கூடாது. நான் தந்திரத்தின் மூலமாக மகிழ்ச்சியையோ செல்வத்தையோ அடைய விரும்பவில்லை. சூதாடியின் நடத்தை, ஏமாற்றுத்தனம் இல்லாத நடத்தையாக இருந்தாலும் பாராட்டத்தகுந்தது அல்ல" என்றான்.(12,13)

சகுனி, "ஓ யுதிஷ்டிரா, நேர்மையற்ற நோக்கமான வெற்றியடைவதில் இருக்கும் விருப்பத்தால், உயர் பிறப்பு பிறந்த ஒருவன் மற்றவனை நாடுகிறான் (போட்டி, மேன்மைக்கான பந்தயம்).(14) அதே போல மற்றொரு நேர்மையற்ற நோக்கமான வீழ்த்துவதில் உள்ள விருப்பத்தால், ஒரு கற்ற மனிதன் மற்றவனை அணுகுகிறான் (கல்விப் போட்டியில்). இருப்பினும், இது போன்ற நோக்கங்கள் உண்மையில் நேர்மையற்றதாக மதிக்கப்படவில்லையே.(15) ஓ யுதிஷ்டிரா, ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவன், நிபுணத்துவம் இல்லாதவனை அணுகுகிறான்; வலுத்தவன் பலவீனனை அணுகுகிறான். இது தான் எல்லா போட்டிகளிலும் உள்ள நடைமுறையாகும்.(16) ஓ யுதிஷ்டிரா, நோக்கம் என்பது வெற்றியே. எனவே, நீ கொண்டிருக்கும் அச்சத்தால், நான் நேர்மையற்ற முறையில் உன்னை அணுகுவதாக நீ கருதினால், ஆட்டத்தில் இருந்து விலகுவாயாக" என்றான்.(17)

யுதிஷ்டிரன், "அறைகூவி அழைக்கப்பட்ட பிறகு, நான் பின்வாங்குவதில்லை. இது எனக்கு நானே நிறுவிக் கொண்ட நோன்பாகும். மேலும், ஓ மன்னா {சகுனி}, விதி மிக வலியது. விதியின் கட்டுப்பாட்டிலேயே நாம் அனைவரும் இருக்கிறோம்.(18) இந்தச் சபையில் இருக்கும் யாருடன் நான் விளையாட வேண்டும்? என்னுடன் சமமாக பந்தயம் வைக்கத்தகுந்த நபர் யார் இருக்கிறார்? ஆட்டம் தொடங்கட்டும்" என்றான்.(19)

அதற்கு துரியோதனன், "ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, நான் அனைத்து நகைகளையும், ரத்தினங்களையும், அனைத்து வகை செல்வத்தையும் அளிக்கிறேன். எனக்காக, எனது மாமாவான இந்தச் சகுனி விளையாடுவார்" என்றான்.(20) 

யுதிஷ்டிரன், "ஒருவருக்காக மற்றவர் விளையாடுவது என்பது விதிக்கு முரணாக எனக்குத் தெரிகிறது. ஓ கல்விமானே, நீயேகூட இதை ஏற்றுக் கொள்வாய். இருப்பினும், இதையே நீ விரும்பினால் விளையாட்டுத் தொடங்கட்டும்" என்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(21)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்