Friday, October 18, 2013

பார்வையில் விஷம் கொண்ட பாம்புகளைக் கோபப்படுத்தாதே - சபாபர்வம் பகுதி 63

Never enrage adders having venom in their very glances | Sabha Parva - Section 46 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 19)

பதிவின் சுருக்கம் : துரியோதனை விதுரனைக் கண்டித்து, அவமானப்படுத்துவது; விதுரன் திருதராஷ்டிரனிடம் தனது உள்ளத்தைத் தெரியப்படுத்துதல்...

Vidura and Duryodhana

துரியோதனன் சொன்னான், "ஓ க்ஷத்தரே {விதுரரே}, நீர் எப்போதும் நமது எதிரிகளின் புகழைப் பெருமையாகவும், திருதராஷ்டிரர் மகன்களை தாழ்த்தியுமே பேசி வருகிறீர். ஓ விதுரரே, உமக்கு யாரைப் பிடிக்கும் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். நீர் எப்போதும் எங்களை சிறுவர்களாகவே தாழ்த்திக் கருதி(1), உமக்கு நெருக்கமானவர்களின் வெற்றியை விரும்பி, உமக்கு விருப்பமில்லாவதவர்களின் தோல்வியையும் விரும்பி வருபவர் ஆவீர். உமது நாவும் மனமும் உமது இதயத்தைக் காட்டிக் கொடுக்கின்றன. உமது பேச்சில் நீர் காட்டும் பகைமை, உமது இதயத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.(2) பாம்பைப் போன்ற உம்மை எங்கள் மடியில் வைத்துப் பேணி வளர்த்திருக்கிறோம். வளர்ப்பவருக்கு தீமையை விரும்பும் பூனையைப் போன்றவர் நீர். முதலாளியைக் {எஜமானைக்} காயப்படுத்துவதைவிட கொடும்பாவம் ஏதுமில்லை என்பது ஞானமுள்ளோர் வாக்காகும். ஓ க்ஷத்தரே, எப்படி இந்தப் பாவத்திற்கு நீர் அஞ்சாமல் இருக்கிறீர்?(3) 

எங்கள் எதிரிகளை வீழ்த்தியதால் நாங்கள் பெரும் நன்மைகளை அடைந்துள்ளோம். எங்களைக் குறித்து கடும் வார்த்தைகளைப் பயன் படுத்தாதீர். நீர் எப்போதும் எதிரியுடன் அமைதியை ஏற்படுத்திக் கொள்ளும் விருப்பத்திலேயே இருக்கிறீர். இந்த காரணத்திற்காகவே நீர் எங்களை எப்போதும் வெறுக்கிறீர்.(4) மன்னிக்க முடியாத வார்த்தைகளைப் பேசுவதால் ஒரு மனிதன் பகைவனாகிறான். மேலும் எதிரியைப் புகழ்ந்து, ஒருவனது சொந்த அணியின் ரகசியங்களைப் பகிரங்கப்படுத்தக்கூடாது. (எப்படியிருந்தாலும் நீர், இந்த விதியை மீறிவிட்டீர்). எனவே, ஓ ஒட்டுண்ணியே {விதுரரே}, நீர் ஏன் இப்படி எங்களைத் தடுக்கிறீர்? நீர் விரும்பியதை எல்லாம் சொல்கிறீர்.(5) ஓ விதுரரே, எங்களை அவமதிக்காதீர். உமது மனத்தை நாங்கள் அறிவோம். சென்று முதியவர்களின் பாதங்கள் அருகே அமர்ந்து கற்றுக்கொள்வீராக. நீர் அடைந்திருக்கும் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்வீராக. மற்றவர்கள் காரியங்களில் கூப்பிடாமலே தலையிடாதீர்.(6) 

எங்களின் தலைவராக உம்மை நீரே நினைத்துக் கொள்ளாதீர். ஓ விதுரரே, எங்களிடம் எப்போதும் கடுமையான வார்த்தைகளைச் சொல்லாதீர். எங்களுக்கு எது நன்மை என்று நாங்கள் உம்மிடம் கேட்கவில்லை. ஓ க்ஷத்தரே, உமது கரங்களில் நிறைய அனுபவித்த எங்களை எரிச்சல் படுத்தாமல் பேசுவதை நிறுத்துவீராக.(7) ஒரு கட்டுப்பாட்டாளனே உண்டு. இரண்டாமவன் கிடையாது. அவன் தாயின் கருவறையில் இருக்கும் சிசுவையும் கட்டுப்படுத்துவான். நானும் அவனாலேயே கட்டுப்படுத்தப் படுகிறேன். தாழ்ந்த நிலைகளை நோக்கிப் பாயும் நீரைப் போல, அவன் என்னை இயக்கும் வழியில் நான் துல்லியமாகச் செயல்படுகிறேன்.(8) கற்சுவற்றில் தனது தலையை மோதி உடைத்துக் கொள்பவரும், பாம்புக்கு தீனி கொடுப்பவரும், தங்கள் சொந்த அறிவின் வழிகாட்டுதல்படி அந்தச் செயல்களில் ஈடுபடுகின்றனர். (ஆகையல், இந்தக் காரியத்தில் எனது அறிவாலேயே நான் வழிகாட்டப்படுகிறேன்). அடுத்தவரை பலவந்தமாகக் கட்டுப்படுத்த முயலும் ஒருவன் பகைவனாகிறான்.(9) 

நட்பு ரீதியாகக் கொடுக்கப்படும் ஆலோசனையாக இருப்பின், கற்றவர்களை அதைத் தாங்கிக் கொள்வர். எளிதில் தீப்பற்றிக்கொள்ளக் கூடிய கற்பூரம் போன்ற பொருளுக்குத் தீயிடுபவன், அதை அணைக்க விரைவாக ஓடினாலும், அதன் சாம்பலைக்கூடக் காண்பதில்லை.(10) தனது எதிரியின் நண்பனுக்கோ, தனது காப்பாளன் குறித்து எப்போதும் பொறாமையுடன் இருப்பவனுக்கோ, அல்லது தீய மனமுடைய ஒருவனுக்கோ அடைக்கலம் கொடுக்கக்கூடாது. எனவே, ஓ விதுரரே, நீங்கள் எங்கு விரும்புகிறீரோ அங்கு செல்லும். கற்பற்ற மனைவியை, என்னதான் நன்றாக நடத்தினாலும், அவள் தனது கணவனை கைவிட்டுவிடுவாள்" என்றான் {துரியோதனன்}.(11)

விதுரர் திருதராஷ்டிரனிடம், "ஓ ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, தனக்கு அறிவுறுத்தியதால், தனது தொண்டர்களைக் கைவிடும் மனிதர்களின் நடத்தை குறித்து நீர் என்ன நினைக்கிறீர் என்று (பாகுபாடில்லாமல்) சாட்சி போல இருந்து எங்களுக்குச் சொல்லும். உண்மையில், மன்னர்களின் இதயங்கள் மிக நிலையற்றன ஆகும். முதலில் பாதுகாப்பைக் கொடுத்து, கடைசியாகத் தங்கள் கதாயுதங்களால் அடிப்பார்கள்.(12) ஓ இளவரசனே (துரியோதனா}, அறிவாற்றலில் முதிர்ச்சியுடையவனாக உன்னை நீ கருதிக் கொள்கிறாய், மேலும், ஓ தீய இதயம் கொண்டவனே, என்னை நீ சிறுபிள்ளையாகக் கருதுகிறாய். ஆனால், முதலில் ஒருவனை நண்பனாக ஏற்றுக் கொண்டு பிறகு அவனிடம் தொடர்ந்து குறை கண்டு கொண்டிருப்பவனையே சிறுவனாகக் கருத வேண்டும்.(13) நற்குலத்தில் பிறந்த மனிதனின் வீட்டில் இருக்கும் கற்பற்ற மனைவி போல, தீய இதயம் கொண்ட மனிதனை நேர்மையான பாதைக்குக் கொண்டு வர முடியாது. இளம் மங்கையின் அறுபது வயது கணவனுக்கு எப்படி அறிவுரைகள் ஏற்புடையதாக இருக்காதோ அப்படி இந்த பாரதகுலத்தின் காளைக்கும் {துரியோதனனுக்கு} நிச்சயம் ஏற்புடையதாக இருக்காது.(14) 

ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, இதன்பிறகும், செயல்களின் நன்மை தீமை குறித்து, நீர் உமக்கு ஏற்புடைய சொற்களைக் கேட்க விரும்பினால், பெண்களிடமும், முட்டாள்களிடமும், முடவர்களிடமும், மேலும் இது போன்ற விளக்கங்களுக்குப் பொருந்தும் மனிதர்களிடமும் கேட்டுக் கொள்வீராக.(15) ஏற்றுக் கொள்ளும் வார்த்தைகளைப் பேசும் பாவியை இந்த உலகம் பெற்றிருக்கிறது. ஆனால், ஏற்பில்லா வார்த்தைகள் மருந்துகள் போல இருந்தாலும், அதைப் பேசுபவனும், அதைக் கேட்பவனும் மிக அரிதானவர்களாகவே உள்ளனர்.(16) உண்மையில், தனது முதலாளிக்கு ஏற்போ, ஏற்பில்லையோ, அதைக் கருதில் கொள்ளாமல், அறம்சார்ந்து நின்று மருந்து போல இருக்கும் ஏற்பில்லாத கருத்தைச் சொல்பவனே ஒரு மன்னனின் உண்மையான கூட்டாளியாவான்.(17) 

ஓ பெரும் மன்னா, நேர்மையாளர்கள் குடிக்கும், நேர்மையற்றவர்கள் தவிர்க்கும் கசப்பான, காரமான, எரிச்சலுள்ள, போதையற்ற, ஏற்பில்லாத, கலகம் செய்யும் மருந்தான அடக்கம் என்ற பானத்தைக் குடிப்பீராக. அதைக் குடித்து, ஓ மன்னா {திருதராஷ்டிரா}, நீர் உமது புகழை மீட்டெடுப்பீராக.(18) நான் எப்போதும் திருதராஷ்டிரருக்கும் அவரது மகன்களும் செல்வாக்கையும் புகழையுமே விரும்புபவன். இவை உமக்கு நடக்கட்டும், நான் உம்மைப் பணிகிறேன் (நான் விடைபெறுகிறேன்). பிராமணர்கள் எனக்கு நன்மையை வாழ்த்தட்டும்.(19) ஓ குருவின் மகனே {திருதராஷ்டிரரே}, ஞானமுள்ள ஒருவன், பார்வையிலேயே விஷம் கொண்ட பாம்புகளை கோபப்படுத்தக்கூடாது. இதுவே நான் என் மனத்தில் ஆழமாகப் பதிய வைக்கும் பாடம்" என்றான் {விதுரன்}.(20)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்