Wednesday, October 23, 2013

எங்கள் அண்ணன் எங்கள் தலைவன் | சபா பர்வம் - பகுதி 69

Our elder brother is our lord | Sabha Parva - Section 69 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 25)

பதிவின் சுருக்கம் : திரௌபதியின் கேள்விகளுக்கு அச்சபை பதில் சொல்லாததுது; துரியோதனன், திரௌபதியிடம் உன் கணவன்மார்கள் யுதிஷ்டிரனைத் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும், உன்னை அடிமை வாழ்வில் இருந்து விடுவிக்கிறேன் என்று கூறல்; பீமன் யுதிஷ்டிரன் எங்கள் தலைவனே என்று கூறல்...

Bhima

வைசம்பாயனர் சொன்னார் "துரியோதனன் மீதிருந்த பயத்தால், அன்றில் பேட்டைப் போல {பெண் விரலடிப்பான் பறவை போல}, பாவமாக அழுதுகொண்டு திரும்பத் திரும்பக் கோரிக்கை வைத்த திரௌபதியைக் கண்டும், அந்தச் சபையில் இருந்த மன்னர்கள் யாரும் நன்மையாகவோ தீமையாகவோ ஒரு வார்த்தையும் பேசவில்லை.(1) 

அந்த மன்னர்களும், அவர்களின் மகன்களும், பேரன்களும் அமைதியாக இருப்பதைக் கண்ட திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்}, மெல்லச் சிரித்து, பாஞ்சால மன்னனின் மகளிடம் {திரௌபதியிடம்},(2) "ஓ யக்ஞசேனி, நீ கேட்டிருக்கும் கேள்வி உனது கணவர்களான பெரும் பலம் வாய்ந்த பீமன், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோரைச் சார்ந்து இருக்கிறது. அவர்களே {பாண்டவர்களே} உனது கேள்விக்கு பதிலளிக்கட்டும்.(3) ஓ பாஞ்சாலி, அவர்கள் {பாண்டவர்கள்} உனக்காக, இந்த மதிப்பு மிக்க மனிதர்களின் முன்னிலையில், யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை எனத் தீர்மானித்து, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரனைப் பொய்யனாக ஆக்கட்டும். பிறகு நீ இந்த அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாய்.(4) தர்மனின் இந்த சிறப்பு மிகுந்த மகன் யுதிஷ்டிரன், எப்போதும் அறம் சார்ந்து இருப்பவன். இந்திரனைப் போல இருக்கும் யுதிஷ்டிரனே உனக்குத் தான் தலைவனா இல்லையா என்று தீர்மானிக்கட்டும். அவனது {யுதிஷ்டிரனது} வார்த்தைகளைக் கொண்டு, நீ பாண்டவர்களையோ, எங்களையோ தாமதமில்லாமல் ஏற்றுக் கொள்வாயாக.(5) உண்மையில், இந்தச் சபையில் இருக்கும் கௌரவர்கள் அனைவரும் உனது துயரம் எனும் கடலில் மிதந்து கொண்டிருக்கின்றனர். துரதிர்ஷ்டசாலிகளான உனது கணவர்களைக் கண்டு, பெருந்தன்மையுடன் இருக்கும் சபையோர்களால் உனது கேள்விக்கு பதிலளிக்க இயலவில்லை" என்றான் {துரியோதனன்}".(6) 

வைசம்பாயனர் தொடர்ந்தார், "குரு மன்னனின் {துரியோதனனின்} வார்த்தைகளைக் கேட்டு, அந்த சபையில் இருந்தவர்கள் உரக்கப் பாராட்டினார்கள். அங்கீகரிக்கும் வகையில் கூச்சலிட்டு, தங்கள் கண் மற்றும் உதட்டு அசைவுகளால் ஒருவருக்கொருவர் குறிப்பால் பேசிக்கொண்டனர். மேலும், அவர்களில் சிலரிடம் இருந்து "ஓ", "ஐயோ" என்ற குரல்கள் கேட்டன.(7) மகிழ்ச்சிகரமான துரியோதனனின் வார்த்தைகளால், அங்கிருந்த (அவனைச் சார்ந்த) கௌரவர்கள், மிக மகிழ்ச்சியடைந்தனர். நிறைவடைந்த மன்னர்கள் அனைவரும் குருக்களின் அறம் சார்ந்த மன்னனை {துரியோதனனை} மெச்சினார்கள்.(8) அந்த மன்னர்கள் அனைவரும் தங்கள் முகங்களை அறத்தின் விதிகளை அறிந்த யுதிஷ்டிரன் பக்கம் திருப்பி, அவன் {யுதிஷ்டிரன்} என்ன சொல்லப்போகிறான் என்று ஆவலாகப் பார்த்தனர்.(9) அந்த சபையில் இருந்த அனைவரும், போர்க்களத்தில் தோற்காத பாண்டுவின் மகனான அர்ஜுனன் என்ன சொல்வான் என்றும், பீமசேனன் என்ன சொல்வான் என்றும், இரட்டையர்கள் என்ன சொல்வார்கள் என்றும் கேட்க ஆவலாக இருந்தனர்.(10) 

அங்கே கேட்ட பல குரல்களின் ஹூங்காரம் நின்றதும், பீமசேனன், சந்தனம் பூசப்பட்டவையும், பலம்வாய்ந்தவையும் நன்கு அமைந்தவையுமான தனது கரங்களை ஆட்டி,(11) "நீதிமானும், உயர் ஆன்மாவும், எங்கள் அண்ணனுமாகிய இந்த மன்னன் யுதிஷ்டிரன், எங்களுக்கு தலைவனாக இல்லையெனில், நாங்கள் இந்த குருக்கள் குலத்தை (இவை அனைத்திற்காகவும்) மன்னித்திருக்கவே மாட்டோம்.(12) எங்களது அறம் மற்றும் தவத்தகுதிகள் அனைத்திற்கும், ஏன் எங்கள் உயிர்களுக்கும் கூட அவரே {யுதிஷ்டிரரே} தலைவராவார். அவர் தாம் வெல்லப்பட்டதாகக் கருதினால், நாங்கள் அனைவரும் வெல்லப்பட்டவர்களே ஆவோம்.(13) அஃது அப்படியில்லையெனில், இந்தப் பூமியைத் தங்கள் பாதங்களால் தொடும் எந்த உயிரினமாக இருந்தாலும், அது பாஞ்சால இளவரசியின் கூந்தலைத் தொட்ட பிறகு, என்னிடம் இருந்து உயிருடன் தப்ப முடியாது.(14) இரும்புத் தடிகளை {பரிகாயுதங்களைப்} போல இருப்பவையும், நன்கு அமைந்தவையுமான என் பலமிக்க கரங்களைப் பாருங்கள், இவற்றுக்குள் அகப்பட்டால் சதக்ரதுவாலும் (இந்திரனாலும்) அவற்றினிடமிருந்து தப்ப முடியாது.(15) அறத்தின் முடிச்சுகளால் {தர்மமெனும் கயிற்றால்} கட்டப்பட்டு, எங்கள் அண்ணன் {யுதிஷ்டிரன்} மீதிருக்கும் மரியாதையாலும், அமைதியாக இருக்குமாறு அர்ஜுனன் தொடர்ந்து கேட்டுக் கொள்வதாலும், நான் எந்தப் பயங்கரத்தையும் செய்யவில்லை.(16) எனினும் நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் கட்டளையிட்டால், சிறு விலங்குகளைக் கொல்லும் சிங்கத்தைப் போல, வாளின் வேலையை எனது கைவீச்சால் {அறைகளால்} செய்து, திருதராஷ்டிரரின் இந்தக் கேடுகெட்ட மகன்களைக் கொல்வேன்" என்றான் {பீமன்}".(17)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைப் பேசிய பீமனிடம், பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகியோர், "ஓ பீமா, பொறுத்துக் கொள்வாயாக. உன்னால் அனைத்தும் சாத்தியப்படும்" என்றனர்[1].(18)

[1] இரண்டு பகடை ஆட்டங்களும் சர்வதாரி வருடம் ஆவணி மாத தேய்பிறை 3ம் நாள் முதல் 7ம் நாள் வரை நடைபெற்றது. யுதிஷ்டிரனுக்கு அப்போது வயது 76 வருடம் 10 மாதம் 2 நாள். பகடை ஆட்டம் நடைபெற்றபோது யுதிஷ்டிரனுக்கு வயது: 76 ; பீமனுக்கு வயது: 75 ; அர்ஜுனனுக்கு வயது: 74 ; நகுல சகாதேவர்களுகு: 73 ; துரியோதனனுக்கு வயது: 75 ; கர்ணனுக்கு வயது: 92 ; கிருஷ்ணனுக்கு வயது: 74 என்கிறது ஓர் ஆய்வு

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்