Thursday, October 24, 2013

பாண்டவர்களை மீட்டாள் திரௌபதி | சபா பர்வம் - பகுதி 70

Draupadi rescued the Pandavas | Sabha Parva - Section 70 | Mahabharata In Tamil

(தியூத பர்வம் - 26)

பதிவின் சுருக்கம் : கர்ணன் மேலும் திரௌபதியை அவமதிப்பது; பீமன் கோபம் கொள்வது; அர்ஜுனன் பதில் சொல்வது; தீய சகுனங்களை விதுரரும் காந்தாரியும் உணர்ந்து திருதராஷ்டிரனுக்கு உணர்த்துவது; திருதராஷ்டிரனிடம் இரண்டு வரங்கள் கேட்டு திரௌபதி பாண்டவர்களை மீட்பது...

Dhritarashtra and Draupadi

கர்ணன், "இந்தச் சபையில் உள்ள அனைவரிலும், பீஷ்மர், விதுரர், மற்றும் குருக்களின் ஆசான் (துரோணர்) ஆகியோர் சுதந்திரமானவர்களாக இருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில், இவர்கள்தான் எப்போதும் தங்கள் தலைவனை {திருதராஷ்டிரனை} துன்மார்க்கன் போலப் பேசி, எப்போதும் அவரைக் கண்டித்து, எப்போதும் அவரது {திருதராஷ்டிரரின்} செழிப்பை விரும்பாமலிருக்கிறார்கள்.(1) ஓ சிறந்தவளே {திரௌபதியே}, ஓர் அடிமை, அவனது மகன் மற்றும் அவனது மனைவி ஆகியோர் சுதந்திரமில்லாதவர்கள். அவர்கள் {அடிமைகள்} செல்வம் ஈட்ட முடியாது. அப்படியே ஈட்டினாலும் அஃது அவர்களின் தலைவருடையது. தனது கணக்கில் ஒரு உடைமையையும் சேர்த்துக் கொள்ள முடியாத ஓர் அடிமையின் {யுதிஷ்டிரனின்} மனைவியாவாய் நீ.(2) மன்னர் திருதராஷ்டிரரின் அந்தப்புரத்திற்குச் சென்று, அங்கிருக்கும் மன்னரின் உறவினர்களுக்குப் பணிவிடை செய்வாயாக. அதுவே உனக்குச் சரியான காரியம் என நாங்கள் வழிகாட்டுகிறோம். ஓ இளவரசி {திரௌபதி}, திருதராஷ்டிரரின் அனைத்து மகன்களும்தான் இப்போது உனக்குத் தலைவர்கள் ஆவர், பிருதையின் {குந்தியின்} மகன்கள் அல்ல.(3) 

ஓ அழகானவளே {திரௌபதியே}, உனக்கான கணவனை நீ இப்போது தேர்ந்தெடுத்துக் கொள்வாயாக. அவன் {இப்போது உன்னால் தேர்ந்தெடுக்கப்படுபவன்} உன்னை சூதில் வைத்தாடி அடிமையாக்க மாட்டான். பெண்கள், குறிப்பாக அடிமையாக இருப்பவர்கள் சுதந்திரமாகத் தனது கணவரைத் தேர்ந்தெடுக்கத் துணியும் போது நிந்திக்கப்படுவதில்லை.(4) எனவே, நீ அதைச் செய்வயாக. நகுலன், பீமசேனன், யுதிஷ்டிரன், சகாதேவன், அர்ஜுனன் ஆகியோர் {எங்களால்} வெல்லப்பட்டனர். மேலும், ஓ யக்ஞசேனி {யக்ஞசேன என்றழைக்கப்படும் துருபதனின் மகளே திரௌபதி} நீ இப்போது அடிமையாக இருக்கிறாய். அடிமையாக இருக்கும் உனது கணவர்கள் இனிமேலும் உனக்குத் தலைவர்களாகத் தொடர முடியாது.(5) ஐயோ, பாஞ்சால மன்னன் துருபதன் மகளை {திரௌபதியை} இந்தச் சபையின் முன்னால் பகடைப் பணயமாக வைத்தாடிய பிருதையின் {குந்தியின்} மகன் {யுதிஷ்டிரன்} தன் வாழ்வையும், ஆற்றலையும், ஆண்மையையும் பயனற்றதெனக் கருதவில்லையா?" என்று கேட்டான்".(6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இந்த வார்த்தைகளைக் கேட்டவனும், கோபம் நிறைந்தவனுமான, பீமன் துயரத்தால் பெரும் மூச்சிரைத்தான். மன்னனுக்குக் {யுதிஷ்டிரனுக்குக்} கீழ்ப்படிந்து, அறம் மற்றும் கடமையால் கட்டப்பட்டு, கோபத்தால் அனைத்தையும் தனது பார்வையால் எரித்துக் கொண்டே,(7) "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இந்தச் சூத மகனின் {கர்ணனின்} வார்த்தைகளால் எனக்குக் கோபம் வரவில்லை, ஏனெனில் உண்மையிலேயே நாம் அடிமைத்தனத்திற்குள் நுழைந்துவிட்டோம். நீர் இளவரசியை {திரௌபதியைப்} பந்தயமாக வைத்து விளையாடவில்லையெனில் நமது எதிரிகளால் என்னிடம் இப்படிப் பேச முடியுமா?" என்று கேட்டான்".(8)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பீமசேனனின் இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் துரியோதனன் அமைதியாக உணர்விழந்து இருந்த யுதிஷ்டிரனிடம்,(9) "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பீமன் அர்ஜுனன் ஆகிய இருவரும், இரட்டையர்களும் கூட உனது கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றனர். (திரௌபதி கேட்ட) கேள்விக்கு நீ பதிலளி. கிருஷ்ணை {திரௌபதி} வெல்லப்படவில்லை என்று நீ கருதுகிறாயா என்பதைச் சொல்வாயாக" என்றான்.(10) 

குந்தியின் மகனிடம் {யுதிஷ்டிரனிடம்} இப்படிப் பேசிய துரியோதனன், ராதையின் மகனை {கர்ணனை} ஊக்குவித்து பீமனை அவமதிக்க விரும்பி, வாழை மரம் போலவும், யானையின் துதிக்கையைப் போலவும் இருப்பதும், அனைத்து அதிர்ஷ்ட குறிகளையும் கொண்டதும், இடியைப் போன்ற பலமுடையதுமான தனது இடது தொடையை {ஆடை விலக்கித்} திரௌபதியின் பார்வையில் படும்படி வெளிக்காட்டினான்.(11,12) 

இதைக் கண்ட பீமசேனன், தனது சிவந்த கண்களை அகல விரித்து, அனைத்து மன்னர்களுக்கு மத்தியில் துரியோதனனிடம் (கணை போன்ற வார்த்தைகளால்) துளைப்பது போல,(13) "பெரும்போரில் உன்னுடைய இந்தத் தொடையை உடைக்கவில்லையென்றால், விருகோதரன் {பீமன்} தனது மூதாதையர்களின் நல்லுலகத்தை அடையமாட்டான்" என்றான்.(14) 

கொழுந்துவிட்டெரியும் மரத்தின் அனைத்துப் பகுதியிலிருந்தும் தீப்பொறிகள் வெளிப்படுவது போல, கோபம் நிறைந்த பீமனின் அனைத்து உறுப்புகளில் இருந்தும் தீப்பொறிகள் வெளிப்பட்டன.(15)

பிறகு விதுரன் அனைவரிடமும், "பிரதீபரின் குலத்தைச் சேர்ந்த மன்னர்களே, பீமசேனனிடம் இருந்து எழும் பேரபாயத்தைக் காண்பீராக. பாரதர்களை விஞ்ச அச்சுறுத்தும் இந்தப் பெரும்போர் நிச்சயம் விதியால் அனுப்பப்பட்டது என்பதை அறிந்து கொள்வீராக.(16) திருதராஷ்டிரரின் மகன்கள், நிச்சயமாக, ஒவ்வொரு சரியான கருத்தையும் கருத்தில் கொள்ளாமல் சூதாடினார்கள். அவர்கள் இப்போதும் ஒரு {அரச குலத்தைச் சேர்ந்த} பெண்மணியை {திரௌபதியைக்} குறித்து சர்ச்சை செய்து வருகின்றனர். நமது நாட்டின் செழிப்பு முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஐயோ, கௌரவர்கள் இன்னும் பாவகர ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.(17) கௌரவர்களே, நான் அறிவிக்கப்போகும் உயர்ந்த கட்டளைகளை உங்கள் மனத்தில் கொள்ளுங்கள். அறத்துக்கு கொடுமை செய்தால், இந்த முழு சபையும் மாசுபடும். யுதிஷ்டிரன், அவனே வெல்லப்படுவதற்கு முன் அவளைப் {திரௌபதியை} பணயம் வைத்திருந்தானானால், அவன் {யுதிஷ்டிரன்} நிச்சயமாக அவளது {திரௌபதியின்} தலைவனாகக் கருதப்பட்டிருப்பான்.(18) எந்த செல்வத்தையும் வைத்துக் கொள்ள முடியாத நிலையில் இருக்கும் ஒருவன் எந்த நேரத்தில் பணயம் வைத்தாலும், அதை வெல்வது என்பது கனவில் செல்வத்தை வெற்றிகொள்வது போன்றதாகும். காந்தார மன்னனின் {சகுனியின்} வார்த்தைகளைக் கேட்ட, இந்த சந்தேகமற்ற உண்மையில் இருந்து வீழ்ந்துவிடாதீர்கள்" என்றான் {விதுரன்}.(19)

விதுரர் இப்படிப் பேசுவதைக் கேட்ட துரியோதனன், "பீமன், அர்ஜுனன், இரட்டையர்கள் ஆகியோரின் சொற்களுக்கு நான் இணங்குகிறேன். அவர்கள் யுதிஷ்டிரன் தங்கள் தலைவன் இல்லை என்று சொல்லட்டும். அப்போது, யக்ஞசேனி {திரௌபதி} தனது அடிமை நிலையில் இருந்து விடுவிக்கப்படுவாள்" என்றான்.(20)

இதைக் கேட்ட அர்ஜுனன், "குந்தியின் சிறப்பு வாய்ந்த மகனும், நீதிமானுமான இந்த மன்னன் யுதிஷ்டிரர், விளையாட்டு தொடங்குவதற்கு முன்பு வரை நிச்சயம் எங்கள் தலைவராகவே இருந்தார். ஆனால், அவரே {யுதிஷ்டிரரே} தன்னைத் தோற்ற பிறகு, அவர் யாருடைய தலைவர் என்று கௌரவர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்" என்றான்".(21)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "அந்த நேரத்தில், திருதராஷ்டிரன் அரண்மனையில் இருந்த ஹோமம் செய்யும் அறையில் {அக்னி ஹோத்ர சாலையில்} இருந்து ஒரு நரி உரக்க ஊளையிட்டது. மேலும், ஓ மன்னா {ஜனமேஜயா}, அப்படி நரி ஊளையிட்டதைத் தொடர்ந்து, கழுதைகள் கத்தின. எல்லா புறங்களில் இருந்தும் கொடும் பறவைகள் தங்கள் கதறல்களால் பதில் சொல்லத் தொடங்கின.(22) அனைத்தையும் அறிந்த விதுரன், சுபலனின் மகள் {காந்தாரி} ஆகிய இருவரும் அந்தக் கொடும் ஒலியின் பொருளை உணர்ந்து கொண்டனர். பீஷ்மர், துரோணர், மற்றும் கல்விமானான கௌதமர் {கிருபர்} ஆகியோர் உரக்க "சுவஷ்டி! சுவஷ்டி!" {அமைதி, நல்லதே நடக்கட்டும்} என்றனர்.(23)

பிறகு காந்தாரியும், கல்விமானான விதுரனும் இந்தப் பயங்கர சகுனத்தைக் குறித்த அனைத்தையும் பெரும் துயரத்துடன் மன்னனுக்குத் தெரியப்படுத்தினர். அதன்பேரில் மன்னன் {திருதராஷ்டிரன்},(24) "தீய மனம் கொண்ட துரியோதனா, ஓ பாவியே, குருக்களில் காளையரின் மனைவியை {திரௌபதியை}, குறிப்பாக அவர்கள் {பாண்டவர்கள்} மணந்த மனைவியான திரௌபதியை, இப்படி அவமதிப்பாகப் பேசியதால், ஏற்கனவே அழிவு ஏற்பட்டுவிட்டது" என்று சொன்னான்.(25) 

ஞானம் கொண்ட திருதராஷ்டிரன், தனது ஞானத்தின் துணை கொண்டு, தனது உறவினர்களையும், நண்பர்களையும் அழிவில் இருந்து காக்கும் பொருட்டு, பாஞ்சால இளவரசியான கிருஷ்ணையை {திரௌபதியைச்} சமாதானப் படுத்தத் தொடங்கினான்.(26) 

அவளிடம் {திரௌபதியிடம்} அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்}, "ஓ பாஞ்சால இளவரசி {திரௌபதி}, என்னிடம் ஒரு வரத்தைக் கேட்பாயாக. கற்புள்ளவளும், அறம் சார்ந்தவளுமான நீ, எனது மருமகள்களில் மூத்தவளாவாய்" என்றான்.(27)

திரௌபதி, "ஓ பாரதகுலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, நீர் எனக்கு ஒரு வரம் அருளுவதாக இருந்தால், அனைத்துக் கடமைகளுக்கும் கீழ்ப்படியும், அழகான யுதிஷ்டிரர், அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெறட்டும்.(28) அறியாச் சிறுவர்கள், பெரும் மனோ சக்தி கொண்ட பிரதிவிந்தியனை {யுதிஷ்டிரனுக்கும், திரௌபதிக்கும் பிறந்த மகனை} அடிமையின் மகனே என அழைக்காதிருக்கட்டும்.(29) அவன் {பிரதிவிந்தியன்} இளவரசனாக இருப்பதால், அனைத்து மனிதர்களுக்கும் மேன்மையானவனாக இருக்க வேண்டும். அனைத்து மன்னர்களாலும் வளர்க்கப்பட வேண்டியவனை அடிமையின் மகனே என்று அழைப்பது முறையாகாது" என்றாள்.(30)

திருதராஷ்டிரன் அவளிடம் {திரௌபதியிடம்}, "ஓ மங்கலமானவளே, நீ சொல்வது போலவே ஆகட்டும். ஓ சிறந்தவளே, இன்னுமொரு வரத்தைக் கேட்பாயாக, நான் அதைத் தருவேன். உனக்கு இரண்டாவது வரம் கொடுக்கச் சொல்கிறது எனது மனம். நீ ஒரே ஒரு வரம் பெறக்கூடியவள் இல்லை" என்றான்.(31)

திரௌபதி, "ஓ மன்னா, பீமசேனர், தனஞ்சயர் {அர்ஜுனர்}, இரட்டையர்கள் ஆகியோர் தங்கள் தேர்கள் மற்றும் விற்களுடன், கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, தங்கள் சுதந்திரத்தை மீண்டும் அடையட்டும்" என்று கேட்டாள்.(32) 

திருதராஷ்டிரன், "ஓ அருளப்பட்ட மகளே, நீ விரும்பியவாறே ஆகட்டும், மூன்றாவது ஒரு வரத்தைக் கேட்பாயாக, இரு வரங்கள் உனக்குப் போதுமானதல்ல. அறம் சார்ந்த நடத்தையுடைய நீ, எனது மருமகள்களில் முதன்மையானவள் ஆவாய்" என்றான்.(33)

திரௌபதி, "ஓ மன்னர்களில் சிறந்தவரே, ஓ சிறந்தவரே, பேராசை எப்போதும் அறவீழ்ச்சியைக் கொண்டு வருகிறது. மூன்றாவது வரம் பெறும் தகுதி எனக்கு இல்லை. எனவே நான் எதுவும் கேட்கத் துணிய மாட்டேன்.(34) ஓ மன்னர்களுக்கு மன்னா, வைசியன் ஒரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரியப் பெண் இரு வரம் கேட்கலாம் என்றும்; க்ஷத்திரிய ஆண் மூன்று வரம் கேட்கலாம் என்றும்; பிராமணன் நூறு வரம் கேட்கலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.(35) ஓ மன்னா, கட்டுப்பட்ட இழிந்த நிலையில் இருந்து எனது கணவர்கள் விடுபட்டனர். அவர்களின் அறச்செயல்களால் நாங்கள் செழிப்பை அடைவோம்!" என்றாள் {திரௌபதி}.(36)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்