Saturday, October 26, 2013

பாண்டவர்கள் மீண்டும் அழைக்கப்பட்டனர் | சபா பர்வம் - பகுதி 73

Pandavas were asked to return | Sabha Parva - Section 73 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 01)

பதிவின் சுருக்கம் : பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்திற்குப் புறப்பட்டனர் என்று கேள்விப்பட்ட துச்சாசனன், துரியோதனனிடம் விரைந்து சென்று சொல்வது; உடனே துரியோதனன், கர்ணன், சகுனி ஆகியோர் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து முறையிடுவது; பாண்டவர்களை மீண்டும் விளையாட அழைப்பது...

Duryodhana, Dhritarashtra, Dussasana

ஜனமேஜயன் சொன்னான், "தங்கள் ரத்தினங்கள் மற்றும் செல்வங்களுடன், திருதராஷ்டிரனிடம் விடைபெற்றுக் கொண்டு, பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் புறப்பட்டனர் என்று தெரிய வந்த போது திருதராஷ்டிரன் மகன்களின் உணர்வு எப்படி இருந்தது?" என்று கேட்டான்.(1)

வைசம்பாயனர் சொன்னார், "ஓ மன்னா {ஜனமேஜயா}, பாண்டவர்கள் அவர்களது தலைநகருக்குத் திரும்பலாம் என ஞானமுள்ள திருதராஷ்டிரன் ஆணை கொடுத்தான் என்பதை அறிந்த துச்சாசனன் நேரங்கடத்தாமல் தனது அண்ணனிடம் {துரியோதனனிடம்} சென்றான்.(2) மேலும், ஓ பாரதகுலத்தின் காளையே {ஜனமேஜயா}, தனது ஆலோசகருடன் இருந்த துரியோதனன் முன்னிலைக்கு வந்து, துயரத்துடன்,(3) "பெரும் பலம் வாய்ந்த வீரர்களே, நாம் இவ்வளவு சிரமப்பட்டு வென்றதையெல்லாம், அந்தக் கிழவர் {திருதராஷ்டிரன்} வீசி எறிந்துவிட்டார். மொத்த செல்வத்தையும் அவர் நமது எதிரிகளிடம் கொடுத்துவிட்டார்" என்றான்.(4) செருக்கால் வழிநடத்தப்பட்ட துரியோதனன், கர்ணன், சுபலனின் மகனான சகுனி ஆகியோர் இந்த வார்த்தைகளைக் கேட்டு, பாண்டவர்களுக்கு பதிலடி கொடுக்க விரும்பி, ஒன்று கூடி விரைந்து சென்று விசித்திர வீரியனின் மகனான ஞானமுள்ள மன்னன் திருதராஷ்டிரனைத் தனிமையில் சந்தித்து, அவனை {திருதராஷ்டிரனை} மகிழ்விக்கும் தந்திரமான வார்த்தைகளால் பேசினர்.(5,6)

துரியோதனன், "ஓ மன்னா, தேவர்களுக்கு ஆசானான பிருஹஸ்பதி, சக்ரனிடம் {இந்திரனிடம்}, மனிதர்கள் மற்றும் அரசியல் குறித்து பேசியதை நீர் கேள்விப்பட்டதில்லையா?(7) ஓ எதிரிகளைக் கொல்பவரே, "தவறு செய்யும் எதிரிகளை, எப்போதும் தந்திரம் மூலமாகவும், பலத்தின் மூலமாகவும், எந்த உபாயத்தைக் கைக்கொண்டும் கொன்றுவிட வேண்டும்" இது தான் பிருஹஸ்பதி சொன்ன வார்த்தைகள்.(8)

எனவே நாம், பாண்டவர்களின் செல்வத்தைக் கொண்டு பூமியின் மன்னர்களை நிறைவடையச் செய்து பிறகு பாண்டுவின் மகன்களுடன் போரிட்டால், என்ன எதிர்விளைவுகள் வந்துவிடப் போகிறது?(9) ஒருவனுடைய கழுத்திலும் முதுகிலும் கோபத்திலிருக்கும் கடும் விஷம் கொண்ட பாம்புகள் இருக்கும்போது, அவனால் அதை எடுத்துவிட முடியுமா?(10) ஆயுதம் பொருந்திய தங்கள் தேர்களில் அமர்ந்திருக்கும் பாண்டுவின் கோபக்கார மகன்கள், ஓ தந்தையே {திருதராஷ்டிரரே}, நிச்சயமாக நம்மை அழித்துவிடுவார்கள்.(11) 

இப்போது கூட, கவச உடை தரித்தவனும், இரு அம்பறாதூணிகளுடன் கூடியவனுமான அர்ஜுனன், அடிக்கடி தனது காண்டீபத்தை எடுத்து நீண்ட மூச்சுகளை விட்டு, தனது கோபப்பார்வையை சுற்றிலும் சுழற்றிக் கொண்டு முன்னேறுகிறான்.(12) விருகோதரன் {பீமன்}, விரைவாகத் தனது தேரை ஆயத்தம் செய்ய ஆணையிட்டு, அதன் மீது ஏறி, பெரும் எடை கொண்ட தனது கதாயுதத்தைச் சுழற்றிக் கொண்டே பயணிக்கிறான் என்றும் கேள்விப் படுகிறோம்.(13) நகுலன் வாளில் தனது பிடியை வைத்துக் கொண்டும், கரத்தில் தனது அரைவட்ட கேடயத்தைப் பிடித்துக் கொண்டும் பயணிக்கிறான். சகாதேவனும், மன்னனும் (யுதிஷ்டிரனும்), தங்கள் நோக்கங்களை {ஒருவருக்கொருவர்} தங்கள் அறிகுறிகளால் தெளிவாகக் காட்டியபடியே செல்கின்றனர்.(14) அவர்கள் அனைவரும் அனைத்துவித ஆயுதங்களைத் தங்கள் தேர்களில் நிரப்பி, தங்கள் குதிரைகளைச் சவுக்கால் அடித்து, (காண்டவத்திற்கு விரைவாக சென்று} தங்கள் படைகளை ஒன்றுசேர்க்கப் போகின்றனர்.(15)

நம்மால் இவ்வாறு துன்புறுத்தப்பட்ட அவர்கள் {பாண்டவர்கள்}, தங்களுக்கு ஏற்பட்ட காயங்களால், நம்மை மன்னிக்கும் திறனற்று இருக்கிறார்கள். திரௌபதிக்கு நேர்ந்த அவமானத்தை அவர்களில் யார்தான் மன்னிக்க முடியும்?(16) நீர் அருளப்பட்டிருப்பீராக. நாம் மீண்டும் பாண்டுவின் மகன்களோடு பகடையாடி அவர்களை நாடு கடத்துவோம். ஓ மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரரே}, இப்படியே நாம் அவர்களை {பாண்டவர்களை} வசப்படுத்தி நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.(17) பகடையில் தோற்கும் நாமோ அவர்களோ தோலாடை பூண்டு, பனிரெண்டு வருடம் வனம் செல்ல வேண்டும்.(18) பதிமூன்றாவது வருடம், யாருக்கும் தெரியாமல், யாருக்கும் தெரியாத தேசத்தில் வாழ வேண்டும். அப்படி அவர்கள் வாழ்வது வெளிப்பட்டால், மற்றுமொரு பனிரெண்டு வருட காலம் கானகத்தில் இருக்க வேண்டும்.(19) {இவ்வுடன்பாட்டின்படி} நாமோ, அவர்களோ இப்படியே வாழ வேண்டும். பகடை வீசி விளையாட்டு தொடங்கட்டும், பாண்டுவின் மகன்கள் மீண்டும் விளையாடட்டும்.(20) 

ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ஓ மன்னா, இதுவே நமது மேலான கடமையாகும். இந்தச் சகுனி பகடையின் முழு அறிவியலையும் அறிவார்.(21) அவர்கள் பதிமூன்று வருடங்களை வெற்றிகரமான முடித்துத் திரும்பினாலும், நாம் அதற்குள் நாட்டில் நன்கு வேரூன்றி, பலருடன் கூட்டணி அமைத்து, அவர்களால் அணுக முடியாத பெரும் படையைக் கொண்டு அவர்களை அடக்கிவிடலாம்.(22) ஓ மன்னா, இதனால், பாண்டுவின் மகன்கள் திரும்ப வந்தாலும் அவர்களை வீழ்த்தி விடலாம். ஓ எதிரிளைக் கொல்பவனே, இந்தத் திட்டமே உமக்கு பரிந்துரைப்பதாக இருக்கட்டும்" என்றான் {துரியோதனன்}.(23)

திருதராஷ்டிரன் சொன்னான், "உண்மையில் பாண்டவர்கள் வெகு தொலைவு சென்றிருந்தாலும், அவர்களைத் திரும்ப அழைத்து வாருங்கள். பகடை வீச அவர்கள் உடனே வரட்டும்" என்றான்".(24)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிறகு துரோணர், சோமதத்தன், பாஹ்லீகர், கௌதமர் {கிருபர்}, விதுரர், துரோணரின் மகன் {அஸ்வத்தாமன்}, வைசிய மனைவிக்குப் பிறந்த திருதராஷ்டிரனின் பெரும் பலம் வாய்ந்த மகன் {யுயுத்சு} ஆகியோர், "விளையாட்டைத் தொடங்க வேண்டாம். அமைதி நிலவட்டும்" என்றனர்.(26) ஆனால் பிள்ளைகளிடம் பாகுபாடு கொண்ட திருதராஷ்டிரன், ஞானமுள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்களின் இவ்வாலோசனைகளைக் கருதாமல் பாண்டுவின் மகன்களை அழைத்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(27)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்