Sunday, October 27, 2013

பாண்டவர்கள் வெளியேறினர் | சபா பர்வம் - பகுதி 77

The Pandavas went away | Sabha Parva - Section 77 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 05)

பதிவின் சுருக்கம் : யுதிஷ்டிரன் அனைவரிடம் விடை பெறுதல்; விதுரன் குந்தி தன்னிடம் இருக்கட்டும் என்று கோருதல்; பாண்டவர்கள் சம்மதித்தல்; விதுரன் யுதிஷ்டிரனுக்கு நீதிகளைச் சொல்லல்; பாண்டவர்கள் வெளியேறுதல்...

Pandavas came out

யுதிஷ்டிரன், "எனது முதிர்ந்த பாட்டாவிடமும் {பீஷ்மரிடமும்}, மன்னர் சோமதத்தரிடமும், பெரும் மன்னன் பாஹ்லீகரிடமும்,(1) துரோணர், கிருபர் ஆகியோரிடமும், அனைத்து மன்னர்களிடமும், அஸ்வத்தாமன், விதுரர், திருதராஷ்டிரர் மற்றும் திருதராஷ்டிரரின் அனைத்தும் மகன்களிடமும்,(2) யுயுத்சு, சஞ்சயன், மற்றும் சபையோர் அனவரிடமும் நான் பிரியாவிடையைக் கோருகிறேன். நான் அனைத்து பாரதர்களிடமும் பிரியாவிடை கோருகிறேன். நான் திரும்பி வந்து உங்கள் அனைவரையும் காண்பேன்" என்றான்".(3)

வைசம்பயாணர் தொடர்ந்தார், "அங்கிருந்த அனைவரும் அவமானத்தால் குன்றிப்போனதால் யுதிஷ்டிரனுக்கு பதிலேதும் சொல்ல இயலவில்லை. இருப்பினும் அவர்களது மனத்திற்குள், அந்த புத்திசாலி இளவரசின் நன்மைக்காக வேண்டினார்கள்.(4) 

விதுரன், "மதிப்புக்குரிய பிருதை {குந்தி} பிறப்பிலேயே இளவரசி ஆவாள். அவள் {குந்தி} காட்டுக்குச் செல்வது தகாது. முதிர்ந்தவளாகவும், மிக மென்மையானவளாகவும், எப்போதும் மகிழ்ச்சியானவளாகவும் அறியப்படும் இந்த அருளுடையவள் என் வசிப்பிடத்தில், என்னால் வணங்கப்பட்டு வாழ்ந்து வருவாளாக. பாண்டவர்களே, இஃதை அறிந்து கொள்வீராக. எப்போதும் பாதுகாப்பு உங்களுடையதாக இருக்கட்டும்" என்றான்".(5,6)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள், "ஓ பாவமற்றவரே {விதுரரே}, நீர் சொல்வது போலவே ஆகட்டும். நீர் எங்கள் சிறிய தகப்பனார் ஆவீர். எனவே எங்களுக்கு நீர் தந்தையைப் போன்றவராவீர். நாங்கள் அனைவரும் உமக்குக் கீழ்ப்படிந்தவர்களே.(7) ஓ கல்விமானே, நீரே எங்கள் மதிப்பிற்குரிய பெரியவராவீர் {குருவாவீர்}. உமது ஆணைகளுக்கு நாங்கள் எப்போதும் கீழ்ப்படிவோம். ஓ உயர் ஆன்மாவே, செய்ய வேண்டியது வேறு ஏதேனும் இருப்பின் எங்களுக்கு ஆணையிடுவீராக" என்றனர்.(8)

விதுரன், "ஓ யுதிஷ்டிரா, ஓ பாரத குலத்தின் காளையே, பாவ வழிகளில் வீழ்த்தப்பட்டவன், அவ்வாறு அடையப்பட்ட தோல்வியின் வலியை உணர வேண்டியவனில்லை. இஃது எனது கருத்து.(9) அனைத்து அறநெறிகளையும் அறிந்தவன் நீ; போர்களத்தில் தனஞ்சயன் {அர்ஜுனன்} எப்போதும் வெற்றியாளன்; பீமசேனனோ பகைவரைக் கொல்பவன்; நகுலன் செல்வம் சேர்ப்பவன்;(10) சகாதேவன் நிர்வாகத் திறன் கொண்டவன்; தௌமியர் வேதம் அறிந்தவர்களில் முதன்மையானவர்; திரௌபதி அறம் மற்றும் பொருளியல் அறிந்தவள்.(11) 

நீங்கள் ஒருவருக்கொருவர் பிணைப்புடையவர்களாக இருக்கிறீர். ஒருவரைப் பார்த்து ஒருவர் மகிழ்பவர்களாக இருக்கிறீர். எதிரிகளால் உங்களைப் பிரிக்கவே முடியாது. மேலும் நீங்கள் அனைவரும் நிறைவுடையவர்களாக இருக்கிறீர்.(12) எனவே, உலகத்தில் உங்களைக் கண்டு பொறாமைப் படாதோர் யார் இருக்கக்கூடும்? ஓ பாரதா {யுதிஷ்டிரா}, இப்படி பொறுமையின் வடிவமாக இந்த பொருள்சார்ந்த உலகத்தில் இருப்பது உனக்கு பெரிய நன்மையைத் தரும். சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான எதிரிகூட அதற்கு எதிராக நிற்க முடியாது.(13) 

முன்பு இமயமலையில் மேருஸாவர்ணியாலும் {முனிவராலும்}, வாரணாவத நகரத்தில் கிருஷ்ண துவைபாயனராலும் {வியாசராலும்},(14) பிருகு மலை நெடும்பாறைகளில் {பிருகுதுங்கம் என்ற மலையில்} ராமரிடமும் {பரசுராமராலும்}, திருஷத்வதி கரைகளில் சம்புவிடமும் {ஜம்பு = பரமசிவனாலும்} உபதேசம் பெற்றிருக்கிறாய். மேலும் அஞ்சன மலையில் பெரும் முனிவரான அசிதரின் போதனையைக் கேட்டிருக்கிறாய்.(15) மேலும் கல்மாஷி {ஆற்றங்} கரையில் பிருகுவின் சீடனாகியிருந்தாய். நாரதரும், உனது புரோகிதரான தௌமியரும் இப்போது உனக்கு உபதேசிப்பவர்களாக இருக்கிறார்கள்.(16) 

முனிவர்களால் உனக்குக் கிடைக்கப்பெற்ற அற்புதமான பாடங்களை கைவிட்டுவிடாதே. அவை மறு உலகத்திற்கும் பயனுள்ளவையாக இருக்கும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரனே}, புத்திகூர்மையில் நீ இளையின் மகனான புரூரவசையே {புரூரவனையே} விஞ்சியவனாக இருக்கிறாய்.(17) பலத்தால் பல ஏகாதிபதிகளையும், அறத்தால் பல முனிவர்களையும் விஞ்சியிருக்கிறாய். எனவே, நீ இந்திரனுக்கு சொந்தமான வெற்றியை அடைவாயாக; யமனுக்கு சொந்தமான கோபத்தைக் கட்டுப்படுத்துவாயாக;(18) குபேரனுக்குச் சொந்தமானதை {செல்வத்தை} தானமாகக் கொடுப்பாயாக; வருணனுக்குச் சொந்தமான உனது உணர்ச்சிகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவாயாக. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, சந்திரனிடம் இருந்து மகிழ்ச்சிக்குரிய சக்தியைப் பெறுவாயாக.(19) நீரில் இருந்து அனைத்தையும் அடக்கும் சக்தியைப் பெறுவாயாக; பொறுமையை பூமியிடம் இருந்து பெறுவாயாக; சக்தியை மொத்த சூரிய வட்டிலில் இருந்து பெறுவாயக; பலத்தை காற்றிடம் {வாயு} இருந்து பெறுவாயாக; மற்ற பூதங்களிடம் இருந்து செழுமையைப் பெறுவாயாக.(20) நோயை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியும், உடல்நலனும் உனதாகட்டும்; நீ திரும்பி வருவதைக் காண்பேன் என்று நம்புகிறேன். ஓ யுதிஷ்டிரா, துன்பம், கடினம் போன்ற அனைத்து காலங்களிலும் கடமையின் படி சரியாக நடந்து கொள்வாயாக. ஓ யுதிஷ்டிரா, எங்களிடம் விடைபெற்று செல்வாயாக. ஓ பாரதா, அருள் உனதாகட்டும்.(21,22) இதற்கு முன்பு நீ பாவம் செய்தாய் என்று யாராலும் சொல்ல முடியாது. நாங்கள் உன்னைக் காண்போம் என நம்புகிறோம், எனவே, பாதுகாப்புடன் வெற்றி மகுடம் தரித்துக் கொண்டு திரும்பி வருவாயாக" என்றான் {விதுரன்}".(23)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "இப்படி விதுரனால் சொல்லப்பட்டவனும், தடுக்கப்பட முடியாத ஆற்றலைக் கொண்டவனும், பாண்டுவின் மகனுமான யுதிஷ்டிரன், "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி பீஷ்மரிடமும் துரோணரிடமும் பணிந்து வணங்கிச் சென்றான்" {என்றார் வைசம்பாயனர்}.(24)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்