Sunday, October 27, 2013

குந்தியின் அழுகை | சபா பர்வம் - பகுதி 78

Kunti's lamentation | Sabha Parva - Section 78 | Mahabharata In Tamil

(அனுத்யூத பர்வம் - 06)

பதிவின் சுருக்கம் : திரௌபதி குந்தியிடமும் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை பெறுவது; குந்தி திரௌபதியைச் சமாதானப்படுத்தியது; பாண்டவர்களைக் கண்ட குந்தி துக்கம் கொண்டது; பாண்டவர்கள் குந்தியைச் சமாதானப்படுத்தியது, பாண்டவர்கள் கிளம்பியது; விதுரன் குந்தியைத் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றது; திருதராஷ்டிரன் விதுரைரை அழைத்தது...

Draupadi, Kunti

வைசம்பாயனர் சொன்னார், "பின்பு அனைவரும் புறப்படத் தயாரான போது, சிறப்புமிக்கப் பிருதையிடம் {குந்தியிடம்} சென்று திரௌபதி பிரியாவிடை கோரினாள். துயரத்தில் மூழ்கியிருந்த அந்த வீட்டின் மற்ற பெண்களிடமும் பிரியாவிடை கோரினாள்.(1) தகுதியுடையவர்கள் அனைவரையும் வணங்கி, ஆரத்தழுவி செல்ல அவள் {திரௌபதி} விரும்பினாள். பின்னர் பாண்டவர்களின் அந்தப்புரத்திற்குள் இருந்து ஒப்பாரியும், அழுகையும் பேரொலியுடன் எழுந்தது.(2) அவர்கள் பயணப்படுவதற்கு முன்னர், திரௌபதியைக் கண்ட குந்தி, மிகவும் துன்புற்றவளாக, துயரத்தால் அடைபட்ட குரலுடன் இந்த வார்த்தைகளைச் சொன்னாள்.(3)

அவள் {குந்தி}, "ஓ குழந்தாய் {திரௌபதி}, இந்தப் பேரிடரைக் கண்டு அஞ்சாதே. பெண்களின் கடமைகளை நன்கு அறிந்தவள் நீ. நடத்தைகள் எவ்வாறே இருக்க வேண்டுமோ அவ்வாறே உன்னிடம் இருக்கின்றன.(4) ஓ இனிய புன்னகை உடையவளே, உனது தலைவர்களுக்கு நீ ஆற்ற வேண்டிய கடமையை நான் சொல்லி நீ தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை. நீ கற்புடையவளாகவும், சாதனைகளைக் கொண்டவளாகவும் இருக்கிறாய். உனது குலத்துக்கு ஏற்ற வகையிலும், புகுந்த வீட்டின் குலத்துக்கு ஏற்ற வகையிலும் உன் பண்புகள் இருக்கின்றன.(5) 

உனது கோபத்தால் எரியாது போன கௌரவர்கள் நற்பேறு பெற்றவர்களே. ஓ குழந்தாய், எனது வேண்டுதல்களால் {ஜபங்களால்} நீ பாதுகாப்பாகச் சென்று வருவாயாக.(6) தவிர்க்கப்பட முடியாத காரியங்களில் நல்ல பெண்கள் மனவேற்றுமை கொள்வதில்லை. அனைத்திற்கும் மேலான அறத்தால் காக்கப்பட்டு, விரைவில் நீ நற்பேறு பெறுவாயாக.(7) கானகத்தில் வாழும்போது, எனது மகன் சகாதேவனைக் கவனித்துக் கொள்வாயாக. அவனது {சகாதேவனது} மனம் இந்த பேரிடரில் மூழ்கிப்போகாமல் பார்த்துக் கொள்வாயாக" என்றாள்.(8) 

திரௌபதி, "அப்படியே ஆகட்டும்" என்று சொல்லி, கண்ணீரால் நனைந்து, ஒற்றையாடையில் குருதிக்கறையுடன், மயிர்க் கலைந்தவளாக தனது மாமியாரை விட்டு சென்றாள்.(9) அழுது ஒப்பாரி வைத்து சென்ற அவளை {திரௌபதியை} பிருதை {குந்தி} துயரத்துடன் பின்தொடர்ந்தாள். அவள் {குந்தி} அப்படி வெகுதூரம் சென்றிருக்கமாட்டாள், அதற்குள் அவள் {குந்தி} ஆபரணங்களாலும் ஆடைகளாலும் பிரகாசிக்கும் தனது மகன்கள் மான் தோலை உடுத்தி, அவமானத்தால் தலையைத் தொங்கப் போட்டு வருவதைக் கண்டாள். அவர்களைச் சுற்றி எதிரிகள் மகிழ்ச்சியுடன் இருப்பதையும், நண்பர்கள் பரிதாபகரமாக நிற்பதையும் கண்டாள்.(10,11) தாயுணர்ச்சி மேலிட்டதன் காரணமாக, குந்தி அந்த நிலையில் இருந்த தனது மகன்கள் அனைவரையும் ஆரத்தழுவி துயரத்தால் தடைபட்ட சொற்களுடன் இப்படிச் சொன்னாள்.(12)

அவள் {குந்தி}, "அறம் சார்ந்த நல்லொழுக்கத்துடன், அனைத்து அற்புதமான குணங்களும், மரியாதைக்குரிய நடத்தையும் கொண்டவர்கள் நீங்கள். நீங்கள் அனைவரும் உயர்ந்த மனம் படைத்தவர்கள்.(13,) எப்போதும் பெரியவர்களின் பணிவிடைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள். தேவர்களுக்கும் வேள்விகளுக்கும் அர்ப்பணிப்புடன் இருந்த உங்களை இந்தப் பேரிடர் எப்படி ஆட்கொண்டது? இந்தப் பேறு மாறுவது எப்போது? யாருடைய தீமையால் இந்தப் பாவம் உங்களை ஆட்கொண்டது என்பது எனக்குத் தெரியவில்லை.(14) ஐயோ நானே உங்களை ஈன்றவள். என்னுடைய கெட்ட காலத்தால் தான் உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கிறது. இதனால் தான் அற்புதமான அறங்களைக் கொண்ட உங்களுக்கு இந்தப் பேரிடர் நேர்ந்தது.(15) சக்தியால், ஆற்றலால், பலத்தால், உறுதியால், பராக்கிரமத்தால் நீங்கள் குறைந்தவர்களல்லர். சொத்துகளையும் உடைமைகளையும் இழந்து, பாதைகளற்ற கானகத்தில் எப்படி ஏழ்மையில் வாழப்போகிறீர்கள்?(16)

கானக வாழ்க்கைதான் உங்களுக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்திருந்தால், {எனது கணவர்} பாண்டு இறந்த போது, சதசிருங்க மலையில் இருந்து ஹஸ்தினாபுரத்திருக்கு வந்திருக்கவே மாட்டேன்.(17) உங்கள் தந்தை {பாண்டு} நற்பேறு பெற்றவர், அவர் வருநலம் தெரிந்தவராக {தீர்க்க தரிசனுத்துடன்} தனது தவ வாழ்க்கையின் கனிகளை {பலன்களை} அனுபவித்து, விருப்பம் நிறைவேறி, மகன்களைப் பற்றி எந்தத் துன்பமும் இல்லாமல் சொர்க்கத்திற்கு உயர்ந்தார்.(18) அறம் சார்ந்த மாத்ரியும் நற்பேறு பெற்றவளே, அவள் {மாத்ரியும்} பின்னால் நடக்கப் போவதை அறிந்தே உயர்ந்த பாதையை அடைந்து, அனைத்து அருளையும் பெற்றாள்.(19) மாத்ரி என்னை அவளது வசிப்பிடமாகவும், தனது மனமாகவும் நினைத்து, அவளது அன்பை என்னில் நிலைக்கச் செய்தாள். ஓ.. சீ... சீ... எனக்கு உயிரின் மேலிருந்த ஆசையினால் அல்லவா இன்று துயரத்தை அனுபவிக்கிறேன்?(20) குழந்தைகளே, நீங்கள் எனக்கு அற்புதமானவர்கள், அன்பானவர்கள். உங்களை நான் பெரும் சிரமத்திற்கிடையில் பெற்றேன். என்னால் உங்களை விட முடியாது. நானும் உங்களுடன் வருகிறேன். ஐயோ, ஓ கிருஷ்ணையே {திரௌபதி} என்னை ஏன் விட்டுச் செல்கிறாய்?(21) உயிருடன் கூடிய அனைத்தும் நிச்சயம் அழியும். தத்தா {பிரம்மா} எனது இறப்பை விதிக்க மறந்துவிட்டாரா? அப்படித்தான் இருக்கும். அதனால் தான் எனது உயிர் போகாமல் இன்னும் இருக்கிறது.(22)

ஓ கிருஷ்ணா {கிருஷ்ணன்}, துவாரகையில் இருப்பவனே, சங்கர்ஷணனின் {பலராமனின்} தம்பியே, நீ எங்கிருக்கிறாய்? இந்தத் துயரத்திலிருந்து என்னையும் இந்த மனிதர்களில் சிறந்தவர்களையும் ஏன் விடுவிக்காமல் இருக்கிறாய்?(23) ஆதியும் அந்தமும் இல்லாத நீ, உன்னை நினைப்பவர்களை விடுவிப்பாய் என்று சொல்கிறார்களே. அஃது ஏன் இப்போது பொய்யானது?(24) எனது மகன்களான இவர்கள், எப்போதும் அறத்துடன் இணைந்து, உயர்ந்தவர்களாக, நல்ல புகழும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்த துயரம் தகாது. அவர்களுக்கு கருணை காட்டுவாயாக.(25)

அறநெறிகளையும், உலகளாவிய நடைமுறைகளையும் அறிந்த பீஷ்மர், துரோணர், கிருபர் ஆகிய மூத்தவர்கள் இருக்கும்போது இந்த பேரிடர் எப்படி வந்தது?(26) ஓ பாண்டுவே, ஓ மன்னா, நீர் எங்கே இருக்கிறீர்? உமது பிள்ளைகள் பகடையில் வீழ்த்தப்பட்டு, நாடு கடத்தப்படும்போது நீர் அமைதியாக இருப்பதேன்?(27) ஓ சகாதேவா, போகாதே. நீயே எனக்கு அன்பான மகன், ஓ மாத்ரியின் மகனே, நீ எனக்கு எனது உடலைவிட அன்பானவன். என்னைக் கைவிடாதே. என்னிடம் கருணை காட்டுவாயாக.(28) அறத்தின் முடிச்சுகளால் கட்டப்பட்டவர்களாக உனது சகோதரர்கள் செல்லட்டும். ஆனால், நீ என்னிடம் இருந்து, எனக்காகக் காத்திருப்பதால் {என்னைப் பார்த்துக் கொள்வதால்} கிட்டும் அறத்தைப் பெற்றுக் கொள்வாயாக" என்றாள்".(29)

வைசம்பாயனர் தொடர்ந்தார், "பாண்டவர்கள், அழுது கொண்டிருந்த தங்கள் தாயை {குந்தியைச்} சமாதானப்படுத்திவிட்டு, இதயம் நிறைந்த துயரத்துடன் கானகம் சென்றனர்.(30) துயரத்தில் இருந்த விதுரனும், துயரத்தில் இருந்த குந்தியிடம் பல காரணங்களைச் சொல்லி சமாதானப் படுத்தி, அவளை மெதுவாகத் தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றான்.(31) திருதராஷ்டிரன் வீட்டுப் பெண்மணிகள், பாண்டவர்களின் நாடு கடத்தலையும், சபைக்கு கிருஷ்ணை {திரௌபதி} இழுத்துவரப்பட்டதையும் கேள்விப்பட்டு, கௌரவர்களை நிந்தித்துப் பேரொலியுடன் அழுதனர்.(32) அரசக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்மணிகளும் நீண்ட நேரம் அமைதியாக அமர்ந்து, தாமரை போன்ற தங்கள் முகங்களை தங்கள் அழகான கரங்களால் மூடிக் கொண்டனர்.(33) 

தனது மகன்களுக்கு வர இருக்கும் ஆபத்தை எண்ணிய மன்னன் திருதராஷ்டிரனும் துயரத்துக்கு இரையாகி, மனம் அமைதியில்லாமல் இருந்தான்.(34) ஒவ்வொன்றையும் கவனமாகத் தியானித்து, துயரத்தால் மன அமைதி இழந்தவனாக, ஒரு தூதரை விதுரனிடம் அனுப்பி, "ஒரு நொடியும் தாமதிக்காமல் க்ஷத்தன் {விதுரன்} இங்கே வரட்டும்" என்று சொன்னான்.(35) 

இந்த அழைப்பின் பேரில் திருதராஷ்டிரனின் அரண்மனைக்கு விதுரன் விரைவாக வந்தான். அவன் {விதுரன்} வந்ததும், அந்த ஏகாதிபதி {திருதராஷ்டிரன்} அவனிடம் பெரும் கவலையுடன், பாண்டவர்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டு எவ்வாறு சென்றார்கள் என்பதை விசாரித்தான்" {என்றார் வைசம்பாயனர்}.(36)

ஆங்கிலத்தில் | In English

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்