Sunday, November 17, 2013

கொல்லப்பட்டான் கிர்மீரன்! - வனபர்வம் பகுதி 11ஆ

Kirmira slained! | Vana Parva - Section 11b | Mahabharata In Tamil

(கிர்மீரவத பர்வத் தொடர்ச்சி)

கிர்மீரன் பீமன் மோதல், பீமன் கிர்மீரனைக் கொல்வது; விதுரன் இவை யாவற்றையும் திருதராஷ்டிரனுக்கு சொல்வது; திருதராஷ்டிரன் துக்கமடைந்து சிந்தனையில் ஆழ்வது...

விதுரன் தொடர்ந்தான், "தனது உறுதிமொழிகளில் உறுதியான அறம்சார்ந்த யுதிஷ்டிரன், இப்படி ராட்சசனால் சொல்லப்பட்டதும், "அப்படி ஆகவே முடியாது" என்று ராட்சசனை {கிர்மீரனைக்} கண்டித்தான். பிறகு பெரும் பலம்வாய்ந்த பீமன், தன்னைப் போல பத்து பாகம் நீளமுள்ள ஒரு மரத்தை வேகமாகப் பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தான். எப்போதும் வெற்றிவாகை சூடும் அர்ஜுனன், சிறு காலத்திற்குள் இடியின் விசையைக் கொண்ட தனது காண்டீவத்தின் நாணை ஏற்றினான். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, ஜிஷ்ணுவைத் {அர்ஜுனனைத்} தடுத்த பீமன், மேகத்தைப் போன்று கர்ஜித்துக் கொண்டிருந்த ராட்சசனை அணுகி, அவனிடம், "நில்! நில்!" என்று அந்த நரமாமிச உண்ணியிடம் தெரிவித்தான். 


இடுப்பைச் சுற்றித் தனது ஆடைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டு, தனது உள்ளங்கைகளைத் தேய்த்துக் கொண்டு, உதடுகளைப் பற்களால் கடித்து, மரத்தை எடுத்துக் கைகளில் ஏந்தி எதிரியை நோக்கி முன்னேறினான் பலம்வாய்ந்த பீமன். இடியைச் சுழற்றிச் செல்லும் மகவத்தைப் {இந்திரனைப்} போல, பீமன் அந்த மரத்தை, யமனின் கதாயுதம் போலத் தோன்றச் செய்து, பெரும் பலத்துடன் அதை அந்த நரமாமிச உண்ணியின் தலையில் இறக்கினான். அடியால் தாக்குண்ட அந்த ராட்சசன் சற்றும் அசராமல் நின்றான். மறுபுறம், தனது கைகளில் இருந்த எரிகொள்ளியைச் சுழற்ற, மின்னலைப் போல் இருந்த அதை பீமன் மீது வீசினான். ஆனால் அந்த வீரர்களில் முதன்மையானவன் {பீமன்}, தனது இடது காலால் அதை அணைத்து, வந்த வேகத்தில் அது ராட்சசனை {கிர்மீரனை} நோக்கி செல்லுமாறு செய்தான்.

 பிறகு அந்தக் கொடுமையான கிர்மீரன், தனது பங்குக்கு ஒரு மரத்தைத் திடீரெனப் பிடுங்கி கதையுடன் கூடிய யமனைப் போலப் போர்புரியத் தொடங்கினான். மரங்களுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கிய அந்தச் சண்டை பழங்காலத்தில் ஒரு பெண்ணுக்காக, வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையில் நடந்த சண்டை போல இருந்தது. போரிடுபவர்களின் தலையில் அடிக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் யானையின் தலையில் தூவப்பட்ட தாமரைத் துணுக்குகள் போல துண்டு துண்டாகின. அந்தப் பெரும் வனத்தில் இருந்த கணக்கிலடங்கா மரங்கள், நாணல் போல நசுக்கப்பட்டு, கந்தலாகத் தரையில் கிடந்தன. 

ஓ பாரத குலத்தின் காளையே {திருதராஷ்டிரரே}, ராட்சசர்களில் முதன்மையானவனுக்கும் {கிர்மீரனுக்கும்}, மனிதர்களில் சிறந்தவனுக்கும் {பீமனுக்கும்} இடையில் நடந்த மரங்களைக் கொண்டு நடத்தப்பட்ட அந்தச் சண்டை சிறிது நேரமே நீடித்தது. பிறகு செங்குத்தான ஒரு பாறையைத் தூக்கிய அந்தக் கோபம் நிறைந்த ராட்சசன் தனது எதிரில் நின்று கொண்டிருந்த பீமன் மீது வீசினான். ஆனால் பீமன் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. பிறகு, பாறையின் தாக்குதலில் அசையாது நின்ற பீமனை நோக்கி கதிர்களை வெளியேற்றும் சூரியனை விழுங்கச் செல்லும் ராகுவைப் போல தனது நீண்ட கரங்களை நீட்டினான். முட்டிக் கொண்டும் கட்டிக் கொண்டும் இரு கோபக்கார களைகள் போல இருவரும் ஒருவருக்கு எதிராகப் போராடினர். அல்லது இரு பெரும் பலம் வாய்ந்த புலிகள் தங்கள் பற்களாலும் கூரிய நகங்களாலும் போரிடுவதுபோல கடுமையாகப் போரிட்டனர். 

துரியோதனன் கைகளில் (முன்பு) அவமானப்பட்டதை நினைத்தும், தனது பலம் நிறைந்த கரங்களில் கர்வம் கொண்டும், கிருஷ்ணை {திரௌபதி} தன்னை நோக்குவதை உணர்ந்தும், விருகோதரன் மிகுந்த ஆவேசம் அடைந்தான். கோபத்தால் பொறிந்த பீமன் தனது கரங்களால் அந்த ராட்சசனை மதம் கொண்ட யானை மற்றொரு யானையைப் பற்றுவது போல பற்றினான். அந்தப் பலம் நிறைந்த ராட்சசனும் தனது எதிரியைப் பற்றினான். ஆனால், மனிதர்களில் முதன்மையான பலம் நிறைந்த பீமசேனன், அந்த நரமாமிச உண்ணியை வன்முறையுடன் தூக்கி எறிந்தான். அந்த இரு பெரும் போராளிகளும் ஒருவர் கரத்தை ஒருவர் பற்றுவது, மூங்கில் முறிவது போன்ற பயங்கரமான ஒலியை உண்டாக்கியது. அந்த ராட்சசனைக் கீழே தள்ளி, அவனது இடையைப் பற்றி, கடும்புயல் மரத்தைச் சுழற்றுவது போல அந்த ராட்சசனைச் சுழற்றத் தொடங்கினான் {பீமன்}. 

இப்படி பலம் நிறைந்த பீமனால் பற்றப்பட்ட ராட்சசன் {கிர்மீரன்} சோர்வடைத் தொடங்கி நடுங்கினான். இருப்பினும் தனது பலம் முழுவதையும் செலுத்தி எதிர்த்தான். அவன் {கிர்மீரன்} களைப்படைவதைக் கண்ட விருகோதரன் {பீமன்}, மிருகத்தை கயிறால் கட்டுவது போல தனது கரங்களைக் கொண்டு அந்த எதிரியைக் கட்டினான். அதனால் அந்த மிருகம் பழுதான ஊதுகுழலைப் போல பயங்கரமாக கத்தினான். பிறகு பலம் நிறைந்த விருகோதரன் {பீமன்} நீண்ட நேரத்திற்குச் சுழற்றினான். ராட்சசன் உணர்வற்றவன் போல கலங்கிப் போய் நடந்தான். சக்தியிழந்த ராட்சசனைக் கண்ட பாண்டுவின் மகன் {பீமன்} நேரத்தைக் கடத்தாமல் மிருகத்தைக் கொல்வது போலக் கொன்றான். 

தனது கால் முட்டியை அந்த இழிந்த ராட்சசனின் இடுப்பில் வைத்த விருகோதரன், அந்த எதிரியின் கழுத்தைத் தனது கைகளால் அழுத்தினான். கண்கள் மூடும் நிலையில் ராட்சசனின் நசுக்கப்பட்ட உடலை இழுத்துச் சென்ற பீமன் "ஓ இழிந்த பாவியே {கிர்மீரனே}, இனி நீ ஹிடிம்பன் அல்லது பகனின் கண்ணீரை துடைக்க வேண்டியதில்லை. ஏனென்றால், நீ எமனுலகு செல்லப் போகிறாய்" என்று சொன்னான். இதைச் சொன்ன அந்த மனிதர்களில் முதன்மையானவன், இதயத்தில் கோபம் நிறைந்து, ஆடை ஆபரணம் மற்றும் உணர்வு ஆகியவற்றை இழந்த அந்த ராட்சசன் {கிர்மீரன்} வலிப்புடன் இருந்த போது, அவனைச் சாகும்படி விட்டான். மேக நிறம் கொண்ட அந்த ராட்சசனை {கிர்மீரனைக்} கொன்ற பிறகு, மன்னர்களில் சிறந்தவனின் {பாண்டுவின்} மகன் {யுதிஷ்டிரன்}, பீமனை அவனது பல குணங்களுக்காகப் புகழ்ந்து, கிருஷ்ணையை {திரௌபதியை} அவர்கள் முன்பு விட்டு, துவைத வனத்திற்குக் கிளம்பினர்.

விதுரன் சொன்னான், "ஓ மனிதர்களின் தலைவா {திருதராஷ்டிரா}, இப்படியே அந்தச் சண்டையில் நீதிமானான யுதிஷ்டிரனின் கட்டளைக்கு இணங்கி பீமனால் கிர்மீரன் கொல்லப்பட்டான். பாரத குலத்தைச் சேர்ந்த அந்தக் காளைகள் திரௌபதியை வசதியாக விட்டு, மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன் பீமனை அதிகமாகப் புகழ்ந்தனர். பீமனுடைய கரங்களின் வலிமையால் ராட்சசன் கொல்லப்பட்ட பிறகு, அந்த வீரர்கள் தொல்லைகளில் இருந்து விடுபட்ட அந்த அமைதியான காட்டில் நுழைந்தனர். அந்தப் பெரும் வனத்திற்குள் நுழைந்த போது, பீமனால் அச்சமின்றி கொல்லப்பட்ட அந்தத் தீய ராட்சசனின் {கிர்மீரனின்} உடலை நான் கண்டேன். ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, பீமனின் இந்தச் சாதனையை, பாண்டவர்களைச் சூழ்ந்து இருக்கும் அந்தணர்களிடம் இருந்து கேள்விப்பட்டேன்"

வைசம்பாயனர் தொடர்ந்தார், "ராட்சசர்களில் முதன்மையான கிர்மீரன் சண்டையில் கொல்லப்பட்டதை அறிந்த மன்னன் {திருதராஷ்டிரன்} துக்கத்தால் பெருமூச்சு விட்டு, சிந்தனையில் ஆழ்ந்தான்.

******************கிர்மீரவத பர்வம் முற்றிற்று******************


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்