Tuesday, November 19, 2013

கிருஷ்ணனைத் துதித்த அர்ஜுனன் - வனபர்வம் பகுதி 12அ

Arjuna's eulogy to Krishna | Vana Parva - Section 12a | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வம்)

விருஷ்ணிகள், பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டதை அறிந்து கோபத்துடன் இருந்த பாண்டவர்களைக் கானகத்தில் சந்தித்தல்; பாண்டவர்களின் நிலை கண்டு கிருஷ்ணன் கோபம் கொள்ளுதல்; கிருஷ்ணனைச் சமாதானப்படுத்த அர்ஜுனன் துதி பாடல்...

வைசம்பாயனர் சொன்னார், "பாண்டவர்கள் வெளியேற்றப்பட்டனர் என்பதைக் கேள்விப்பட்ட போஜர்கள், விருஷ்ணிகள், அந்தகர்கள் ஆகியோர் அந்தப் பெரும் வனத்தில் துயரத்தில் இருந்த வீரர்களிடம் சென்றனர். பாஞ்சாலர்களுக்கு இரத்த உறவுகளும், சேதி நாட்டு மன்னன் திருஷ்டகேதுவும், உலகத்தால் கொண்டாடப்படும் பலம் நிறைந்த சகோதரர்களான கேகேயர்களும், கோபத்தால் எரியும் இதயங்களுடன், பிருதையின் {குந்தியின்} மகன்களைக் காண அந்தக் கானகத்திற்குச் சென்றனர். திருதராஷ்டிரன் மகன்களை நிந்தித்த அவர்கள், "நாம் என்ன செய்வது?" என்றனர். க்ஷத்திரிய குலத்தின் அந்தக் காளைகள், வாசுதேவனைத் {கிருஷ்ணனைத்} தலைமையாகக் கொண்டு, நீதிமானான யுதிஷ்டிரனைச் சுற்றி அமர்ந்தனர். குருக்களில் முதன்மையானவர்களை மரியாதையுடன் வணங்கிய கேசவன் {கிருஷ்ணன்} துக்கத்துடன், "இந்தப் பூமி, துரியோதனன், கர்ணன், துட்சாசனன், தீய சகுனி ஆகியோரது இரத்தத்தைக் குடிக்கும்! இவர்களைப் போர்க்களத்தில் கொன்று, அவர்களைப் பின்பற்றுபவர்களையும், அரசு முறை கூட்டாளிகளையும் வீழ்த்தி, நாம் நீதிமானான யுதிஷ்டிரனை அரியணையில் அமர்த்தலாம்! தீயவர்கள் கொல்லப்படத்தக்கவர்கள்! இதுவே நிலைத்த அறநெறியாகும்" என்றான்.


வைசம்பாயனர் தொடர்ந்தார், "பிருதையின் {குந்தியின்} மகன்களுக்கு நடந்த அநீதியின் காரணமாக, ஜனார்த்தனன் {கிருஷ்ணன்} படைக்கப்பட்ட அத்தனைப் பொருட்களையும் எரிக்கும்படி கோபம் கொண்டான். அர்ஜுனன் அவனைச் சமாதானப் படுத்தினான். கேசவன் {கிருஷ்ணன்} கோபமடைந்ததைக் கண்ட பல்குனன் {அர்ஜுனன்}, அனைத்து பொருட்களுக்கும் ஆன்மாவானவன் {கிருஷ்ணன்}, அளக்க முடியாதவன், நிலையானவன், எல்லையற்ற சக்தி கொண்டவன், பிரஜாபதியின் தலைவன், அனைத்து உலகங்களின் முதன்மை ஆளுனாகிய ஆழமான ஞானம் கொண்ட விஷ்ணு {கிருஷ்ணன்} முற்பிறவிகளில் சாதித்த சாதனைகளை உரைக்க ஆரம்பித்தான்"

"அர்ஜுனன், "பழங்காலத்தில், ஓ கிருஷ்ணா, மாலை சந்திக்கும் இடத்தை வீடாகக் கொண்ட முனிவனாக பத்தாயிரம் {10000} வருடம் கந்தமாதன மலைகளில் உலவினாய்! பழங்காலத்தில் நீரை மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து, புஷ்கரா ஏரியின் அருகில் பதினோராயிரம் {11000} வருடங்கள் வசித்திருந்தாய்! ஓ மதுவைக் கொன்றவனே, கரங்களை உயர்த்தி, ஒற்றைக் காலில் உயர்ந்த மலைகளான பதரிகா மலைகளில் காற்றை மட்டுமே உட்கொண்டு நூறு {100} வருடங்கள் நின்று கழித்தாய். மேலாடை களைந்து, உடல் மெலிந்து, நரம்புகளால் ஆன உருவம் போல சரஸ்வதி நதிக்கரையில் இருந்து, பனிரெண்டு {12} வருட வேள்வியைச் செய்தாய்! ஓ பெரும் பலமும் சக்தியும் கொண்ட கிருஷ்ணா, ஆயிரம் {1000} தேவ வருடங்கள் நெடுக ஒற்றைக் காலில் அறவோர் வந்து போகும் பிரபாசம் என்ற சமவெளியில் நின்றிருந்தாய். 

நீயே படைப்புகளுக்கு காரணமும் வழியுமாக இருக்கிறாய் என்று வியாசர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஓ கேசவா, க்ஷேத்திரத்தின் தலைவா {நினைவு நிலை, அறிவு, அத்தியாவசிய உறுப்புகள், பத்து உணர்வுகள், பஞ்சபூதங்கள், ஆசை, வெறுப்பு, இன்பம், வலி, உறுப்புகளின் கலவை மற்றும் சைத்தன்யம் ஆகியவை அடங்கிய மகாபூதத்தின் தலைவா}, நீ அனைத்து மனங்களையும் அசைப்பவன், அனைத்துப் பொருட்களுக்கு ஆதியும் அந்தமும் ஆனவன்! அனைத்து தவங்களும் உன்னிலேயே ஓய்கின்றன. நீயே அனைத்து வேள்விகளையும் உள்ளடக்கிய நித்தியமானவன்! இந்த பூமியின் முதல் வாரிசான அசுரன் நரகனைக் கொன்று, அவனது காது குண்டலங்களை அடைந்தாய். முதல் குதிரை வேள்வியை {அசுவமேத யாகத்தை} {அந்த அசுரனையே வேள்விக் குதிரையாக்கி} நீயே செய்தாய். 

ஓ அனைத்து உலகங்களின் காளையே, இச்சாதனையைச் செய்து, அனைத்தையும் வென்றவன் நீ! தைத்தியர்கள் மற்றும் தானவர்களைப் போரில் கொன்றவன் நீ. பெரும் கரம் கொண்ட கேசவா {கிருஷ்ணா}, சச்சியின் தலைவனுக்கு {இந்திரனுக்கு} அண்ட ஆளுகையைக் கொடுத்து, மனிதர்களுக்கு மத்தியில் நீ பிறந்திருக்கிறாய்! ஓ எதிரிகளைக் கொல்பவனே, ஆதி நீரில் மிதந்து, அதன் தொடர்ச்சியாக ஹரி, பிரம்மன், சூரியன், தர்மன், தத்ரி, யமன், அனலன், வசு, வைஸ்ரவணன், ருத்ரன், காலன், வானம் மற்றும் பத்து திக்குகள் ஆகியவர்களாக ஆனாய். சுயம்புவாக உருவாகி, இந்த அண்டத்தில் உள்ள அசைவன மற்றும் அசையாதனை ஆகியவற்றின் தலைவனாக இருக்கிறாய். அனைத்து பொருட்களின் படைப்பாளனாய் இருக்கிறாய். இருப்பு கொண்டுள்ளவைகளில் முதன்மையானவன் நீயே! 

ஓ மதுவைக் {மது என்ற அசுரனைக்} கொன்றவனே, ஓ அபரிமிதமான சக்தி படைத்தவனே, ஓ கிருஷ்ணா, சைத்திரரத வனத்தில், அனைத்து தேவர்களின் தலைவனை வேள்வி செய்து திருப்தி செய்தாய்! ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, ஒவ்வொரு வேள்வியிலும், நூற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் தங்கத்தை பகிர்ந்து கொடுத்தாய். ஓ யாதவகுலத்தின் மகனே, ஓ முதன்மையான தன்மைகள் கொண்ட மேன்மையானவனே, *அதிதியின் மகனாகி, நீ இந்திரனுக்குத் தம்பியானாய்! ஓ எதிரிகளைத் தண்டிப்பவனே, ஓ கிருஷ்ணா, நீ குழந்தையாய் இருக்கும்போதே, உனது சக்தியால், சொர்க்கத்தையும், வானத்தையும் பூமியையையும் மூன்று அடியால் அளந்தாய்! சொர்க்கத்தையும் வானத்தையும் மூடும் ஆன்மா கொண்டவனே, சூரியனின் உடலில் தங்கி, அவனுக்கு உள்ளிருந்து நீயே பிரகாசிக்கின்றாய். 

ஓ மேன்மையானவனே, ஆயிரக்கணக்கான உனது அவதாரங்களில், ஓ கிருஷ்ணா, நீ, நூற்றுக்கணக்கான அசுரர்களைக் கொன்றிருக்கிறாய். மௌரவர்களையும், பாஷர்களையும் அழித்து, நிசுந்தன் மற்றும் நரகனைக் கொன்று, பிராக்ஜோதிஷத்திற்குச் செல்லும் வழியைப் பாதுகாப்பாக்கினாய்! ஜாருதியில் அஹ்பிருத்தியையும், கிராதன் மற்றும் சிசுபாலனையும், அவர்களின் ஆதரவாளர்களையும், ஜராசந்தன் மற்றும் சைப்பியன் மற்றும் சததன்வன் ஆகியோரையும் நீயே கொன்றாய். மேகங்களைப் போல கர்ஜிக்கும் உனது ரதத்தில், சூரியனைப் போலப் பிரகாசித்து, போர்க்களத்தில் ருக்மியை வீழ்த்தி, போஜரின் மகளை {ருக்மிணியை} உனது ராணியாகக் கொண்டாய். இந்திரத்தியும்னனையும், யவனனான கசேருமனையும் நீயே கொன்றாய்! சௌபாவின் தலைவனான சால்வனைக் கொன்று, சௌபா நகரத்தை அழித்தவன் நீயே! உன்னால் கொல்லப்பட்டவர்களின் பட்டியலை மேலும் சொல்கிறேன் கேள். கார்த்தவீர்யனுக்கு நிகரான மன்னன் போஜனை ஐராவதியில் வைத்துக் கொன்றாய், கோபதியும், தலகேதுவும் உன்னால் கொல்லப்பட்டனர்! 

ஓ ஜனார்த்தனா {கிருஷ்ணா}, புனிதமான நகரமும், செல்வச்செழிப்பும், முனிவர்களுக்கு ஏற்புடையதுமான துவாரகையை நீயே உண்டாக்கினாய், கடைசியில் நீயே அந்நகரத்தை கடலுக்குள் மூழ்கடிப்பாய். ஓ மதுவைக் கொன்றவனே, கோபம், பொறாமை, பொய்மை, கொடுமை ஆகியவற்றைக் களைந்திருக்கும் உன்னில் எப்படி கபடம் இருக்க முடியும்? ஓ தேய்மானத்தை அறியாதவனே, வேள்விக்களத்தில் அமர்ந்திருக்கும் உன்னை முனிவர்கள் அணுகி, உனது பாதுகாப்பைக் கோருகின்றனர். ஓ மதுவைக் கொன்றவனே, யுக முடிவில்,அனைத்தையும் அழித்து, அனைத்தையும் உனக்குள் நீயே ஏற்றுக் கொள்கிறாய். 

ஓ விருஷ்ணி குலத்தவனே, யுக ஆரம்பத்தில், தாமரை போன்ற உனது தொப்புளில் இருந்து அசையும் மற்றும் அசையா பொருட்களின் தலைவனான பிரம்மன் உதிக்கிறான். இந்த முழு அண்ட மும் உன்னுடையதே! கொடும் தானவர்களான மது கைதவன் ஆகியோர் பிரம்மனைக் கொல்ல நினைத்த போது, ஓ ஹரி, நீ அதைக் கண்டு, உனது நெற்றியில் இருந்து திரிசூலம் தாங்கும் சம்புவை {சிவனை} ஊற்றெடுக்கச் செய்தாய். இப்படியே இந்த இரு தெய்வங்களும் உனது உடலில் இருந்து, அவர்கள் வேலையைச் செய்ய எழுந்தனர்! இவை யாவையும் நாரதரே எனக்குச் சொன்னார். 

ஓ நாராயணா, பல்வேறு சடங்குகள் கொண்ட பெரும் வேள்வியை பல பரிசுகள் கொடுத்து கொண்டாடி சித்திரரத வனத்தில் நீயே செய்தாய்! ஓ தெய்வமே, ஓ தாமரை இலைகளைப் போன்ற கண்களை உடையவனே, குழந்தையாய் இருக்கும்போதே உனது பலத்தைக் கொண்டும், பலதேவரின் {பலராமரின்} உதவியைக் கொண்டும் நீ செய்த சாதனைகள் யாராலும் செய்ய முடியாதவை. அந்தணர்கள் சூழ கைலாசத்திலும் வசித்தவன் நீயே!" என்று வழிபட்டான் {அர்ஜுனன்}.
------------------------------------------------------------------------------------------------
 * ஓ! கிருஷ்ணா,அதிதியின் மகனாகி, நீ இந்திரனுக்குத் தம்பியானாய்!

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
அனைத்துயிர்களின் பிறப்பு | ஆதிபர்வம் - பகுதி 65
பரம்பரைகள் ஆய்வு | ஆதிபர்வம் - பகுதி 66

இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்