Wednesday, November 27, 2013

கிருஷ்ணனின் மகன்கள் வீரம் - வனபர்வம் பகுதி 16

The prowess of the sons of Krishna | Vana Parva - Section 16 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

சால்வனின் படைபலத்தை கிருஷ்ணன் விவரித்தல்; கிருஷ்ணனின் மகன்களான சாம்பன், சாருதேஷ்ணன், பிரத்யும்னன் ஆகியோர் சால்வப் படைகளிடம் காட்டிய வீரத்தைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனிடம் சொல்வது….

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "ஓ! மன்னர் மன்னா {யுதிஷ்டிரா}, சௌபத்தின் தலைவன் சால்வன், காலாட்படை, குதிரைப்படை மற்றும் யானைகள் கொண்ட பெரும் படையுடன் எங்கள் நகரத்தை நோக்கி வந்தான்! மன்னன் சால்வனின் தலைமையில் வந்த நால்வகைப் படைகளும் அதிகமான நீர் சூழ்ந்த சமவெளியில் நின்றன. கல்லறைகள், தேவர்களுக்கு அர்ப்பணித்திருந்த கோவில், புனிதமான மரங்கள், எறும்புப் புற்றுகள் ஆகியவற்றைத் தவிர்த்து மற்ற இடங்களில் எல்லாம் அவனது {சால்வனின்} படையே நிரம்பியிருந்தது. (நகரத்தை நோக்கி செல்லும்) சாலைகள் அனைத்தும் அந்தப் படைகளின் பிரிவுகளால் தடுக்கப்பட்டன. ரகசிய வழிகளும் எதிரிகளின் முகாமால் தடுக்கப்பட்டிருந்தது. கௌரவரே, மனிதர்களில் காளையே (யுதிஷ்டிரரே}, சௌபத்தின் ஆட்சியாளன் {சால்வன்}, அனைத்துவிதமான ஆயுதங்களுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவம் கொண்டவர்களுடனும், அடர்ந்த காட்சி கொண்ட, ரதங்கள், யானைகள், பதாகைகளுடன் கூடிய குதிரைப் படை, நல்ல முறையில் கூலி கொடுக்கப்பட்ட பலமும் அனைத்து நற்குறிகளும் கொண்ட காலாட்படை வீரர்கள், பறவைகளின் தலைவனைப் போல (கருடனைப் போல), அற்புதமான ரதங்களில் வில்லுடன் கூடிய ரதவீரர்கள் ஆகியோருடன் பறவைகளின் மன்னனைப் போல (கருடனைப் போல) துவாரகையை நோக்கி விரைவாக வந்தான்.


சால்வனின் படையைக் கண்ட விருஷ்ணி குலத்தின் {யாதவ குலத்தின்} இளைஞர்களான இளவரசர்கள், அவர்களுக்கு {சால்வ படையினருக்கு} நகருக்கு வெளியே பதிலடி கொடுப்பது என்று தீர்மானித்தனர். மன்னா {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணன், சம்பன், பெரும் வீரனான பிரதியும்னன் ஆகியோர் கவசம் பூண்டு, அனைத்துவித ஆபரணங்களும் பூண்டு  தங்கள் ரதங்களின் ஏறி சால்வனின் எண்ணிலடங்கா வீரர்களுடன் மோதுவதெனத் தீர்மானித்து சென்றனர்.

சாம்பன் தனது வில்லை எடுத்துக் கொண்டு சால்வனின் படைத்தளபதியும், அமைச்சருமான க்ஷேமவிருத்தியுடன் ஆர்வமாகப் போர்க்களத்தில் மோதினான். பாரதர்களில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, அந்த ^ஜாம்பவதியின் மகன் {சாம்பன்}, மழையைப் பொழியவைக்கும் இந்திரனைப் போல, தனது கணைகளை மழையெனப் பொழிந்தான். பெரும் பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரரே}, பிறகு சால்வப் படைகளின் தளபதியான க்ஷேமவிருத்தி, அந்தக் கணைமழையை, இமயம் போல நின்று அசையாமல் தாங்கிக் கொண்டான்.

மன்னர்களில் முதன்மையானவரே, க்ஷேமவிருத்தி, தனது பங்குக்கு, தன் மாயச் சக்தியைப் பயன்படுத்தி சாம்பன் மீது பலம்வாய்ந்த கணைகளைச் சரமாரியாகப் பொழிந்தான். அந்த மாயையால் ஈர்க்கப்பட்ட சாம்பன் தனது பதில் மாயையால் ஆயிரக்கணக்கான கணைகளை அவனது (எதிரியின்) {க்ஷேமவிருத்தியின்} ரதத்தின் மீது பொழிந்தான். சாம்பனின் கணைகளால் துளைக்கப்பட்டு, அதிக காயம் கொண்டு, தனது விரைவான குதிரையின் உதவியுடன் களத்தை விட்டு விலகினான் {க்ஷேமவிருத்தி}.

சால்வனின் {க்ஷேமவிருத்தி} தீய தளபதி களத்தை விட்டு விலகியதும், பெரும் பலம் வாய்ந்த தைத்தியனான வேகவத் எனது மகனை {சாம்பனை} நோக்கி விரைந்தான். ஏகாதிபதிகளில் சிறந்தவரே {யுதிஷ்டிரரே}, விருஷ்ணி குலத்தைத் தழைக்க வைக்கும் வீரனான சாம்பன், வேகவத்தின் தாக்குதலைப் பொறுத்து களத்தை விடாதிருந்தான். குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, குலைக்க முடியா வீரம் கொண்ட சாம்பன், விரைவாகச் செல்லும் ஒரு கதாயுதத்தைச் சுழற்றி, வேகவத்தின் மீது வேகமாக ஏறிந்தான். மன்னா {யுதிஷ்டிரரே}, அந்த கதாயுதத்தால் தாக்குண்ட வேகவத் சிதைந்த வேர்களைக் கொண்ட காட்டின் தலைவன் {ஆல மரம்} விழுவது போல தரையில் விழுந்தான். இப்படி அந்தப் பெரும் பலம்வாய்ந்த அசுரனைத் தனது கதாயுதத்தால் கொன்ற எனது மகன் {சாம்பன்} அந்தப் பெரும்படைக்குள் நுழைந்து, அனைவருடனும் போரிட்டான்.

பெரும் மன்னா {யுதிஷ்டிரரே}, நன்கு அறியப்பட்ட தானவனும் பெரும் பலம் வாய்ந்த வீரனுமான பிவிந்தியன் ஒரு பெரும் பலம்வாய்ந்த வில்லைத் தாங்கிக் கொண்டு, சாருதேஷ்ணனை எதிர்கொண்டான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, சாருதேஷ்ணனுக்கும் பிவிந்தியனுக்கும் இடையில் நடந்த போர் பழங்காலத்தில் விரித்திரனுக்கும் வாசவனுக்கும் இடையில் நடைபெற்ற போரைப் போல கடுமையானதாக இருந்தது! அவர்களிருவரும் ஒருவருக்கொருவர் தங்கள் கணைகளால் தாக்கிக் கொண்டு, ஒருவரை மற்றவர் துளைத்து, இரு பெரும் பலம் வாய்ந்த சிம்மங்களைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தனர்.

பிறகு ^ருக்மிணியின் மகன் {சாருதேஷ்ணன்}, தனது வில் நாணில் நெருப்பைப் போலவும் சூரியனைப் போலவும் பிரகாசித்த பெரும் ஆயுதம் ஒன்றைப் பொருத்தி தகுந்த மந்திரங்களை உச்சரித்து அதற்கு உயிருண்டாக்கினான். ஏகாதிபதியே {யுதிஷ்டிரரே}, எனது மகனான அந்த பெரும் போர் வீரன் {சாருதேஷ்ணன்}, கோபத்தால் எரிந்து, பவிந்தியனுக்குச் சவால் விட்டு, அந்த ஆயுதத்தை அவன் {பிவிந்தியன்} மீது ஏவினான். அந்த ஆயுதத்தால் தாக்குண்ட அந்த தானவன், உயிரற்ற சடலமாகக் கீழே தரையில் விழுந்தான். பவிந்தியன் கொல்லப்பட்டதை அறிந்த மொத்த படையும் நடுங்கியது.

அப்போது சால்வன், நினைத்த இடம் எங்கும் செல்லக்கூடிய தனது அழகான ரதத்தில் மேலும் முன்னேறி வந்தான். பெரும் பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட மன்னா {யுதிஷ்டிரரே}, அப்படி அழகான தேரில் வந்த சால்வனைக் கண்ட துவாரகையின் வீரர்கள் பயத்தால் நடுங்கினார்கள். ஆனால், குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் வெளியே வந்து, ஆனர்த்தர்களுக்கு ஊக்கம் கொடுத்து, "நடுங்காதீர்கள், நான் போர்புரியப்போவதைப் பாருங்கள். எனது சக்தியைக் கொண்டு தேரோடு கூடிய அந்தச் சால்வனைத் தடுப்பேன். யாதவர்களே, இந்த நாளில், பாம்புகள் போன்ற கணைகளை எனது வில்லில் இருந்து வெளியேற்றி, சௌபத்தின் தலைவனான {சால்வனை} இந்தப் புரவலனை அழிப்பேன்! அனைவரும் உற்சாகத்தோடு இருங்கள்! அஞ்சாதீர்கள்! சௌபத்தின் தலைவன் {சால்வன்} இன்று கொல்லப்படுவான்! என்னுடன் மோதியதும், அந்த இழிந்தவன், தனது தேருடன் சேர்ந்து அழிவைச் சந்திப்பான்" என்றான். பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரரே}, பிரத்யும்னன் இப்படி உற்சாகத்துடன் பேசியதும், யாதவப் புரவலர்கள், வீரரே {யுதிஷ்டிரரே}, களத்திலேயே நின்று, உற்சாகத்துடன் போர்புரியத் தொடங்கினார்கள்.

---------------------------------------------------------------------------------------------
^கிருஷ்ணரின்  எட்டு மனைவியர்களின் பெயர்கள்:

1.ருக்மினி, 2.மித்திரவிந்தை, 3.சத்தியை, 4.ஜாம்பவதி, 5.ரோகிணி, 6.சுசீலா, 7.சத்தியபாமா, 8.லக்ஷ்மனை என எட்டு மனைவியர் கிருஷ்ணருக்கு இருந்தனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்