Friday, November 29, 2013

பிரத்யும்னன் சால்வன் போர் - வனபர்வம் பகுதி 17

Encounter between Pradyumna and Salwa | Vana Parva - Section 17 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

பிரத்யும்னனுக்கும் சால்வனுக்கும் இடையில் நடந்த போரைக் குறித்து கிருஷ்ணன் யுதிஷ்டிரனுக்கு விவரித்தல்.

வாசுதேவன் தொடர்ந்தான், "பாரத குலத்தின் காளையே, யாதவர்களிடம் இப்படிப் பேசிய ருக்மிணியின் மகன் (பிரத்யும்னன்) தனது தங்க ரதத்தில் ஏறினான். அவனது {பிரத்யும்னன்} தேரை இழுத்துச் சென்ற குதிரைகள் அற்புதமான வகையைச் சேர்ந்தவை. அந்தத் தேரில் யமனைப் போன்ற கடுமையுடன் திறந்த வாய் உள்ள மகரம் பொறிக்கப்பட்ட கொடி பொருத்தப்பட்டிருந்தது. தரையில் ஓடுவதை விட பறப்பதைப் போல இருக்கும் குதிரைகளுடன் அவன் {பிரத்யும்னன்} எதிரியை நோக்கி விரைந்தான். அந்த வீரன் அம்பறாத்தூணி, வாள் ஆகியவற்றை அணிந்து கொண்டு, விரல்களுக்கு தோல் கவசம் பூண்டு, மின்னலைப் போன்ற பிரகாசமிக்க தனது வில்லை எடுத்துச் சுண்டினான். பெரும் பலத்துடன் அந்த வில்லை ஒரு கரத்தைவிட்டு மறு கரத்திற்கு மாற்றிக் கொண்டு எதிரியை அவமதிப்பது போல, தானவர்களுக்கு மத்தியிலும் சௌப நகரத்தின் போர்வீரர்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தினான்.


மேலும் எதிரியை அவமதிப்பது போல, போர்க்களத்தில் தானவர்களைத் தொடர்ந்து கொன்ற போது, அவன் சரமெனத் தொடர்ந்து கணையடித்ததில் யாரும் சிறு இடைவெளியையும் காணவில்லை. அவனது {பிரத்யும்னனின்} முகத்தின் நிறம் மாறவில்லை. அவனது உறுப்புகள் நடுங்கவில்லை. அவனது அற்புதமான வீரத்தைப் பறைசாற்றும் விதத்தில் அவனால் எழுப்பப்பட்ட சிம்ம கர்ஜனைகளை மட்டுமே மக்கள் கேட்டனர். வாயை அகல விரித்திருக்கும் நீர்மிருகம் அனைத்து மீன்களையும் விழுங்குவது போல, ரதங்களில் சிறந்த தனது ரதத்தின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடி, சால்வனின் போர் வீரர்கள் இதயங்கள் பயங்கரத்தை உணர்ந்தனர். மன்னா {யுதிஷ்டிரா}, எதிரிகளை வெட்டித் தள்ளும் பிரத்யும்னன், சால்வனிடம் போர் புரிய விரும்பி அவனிடம் {சால்வனிடம்} விரைந்து சென்றான்.

குரு குலத்தைத் தழைக்க வைப்பவரே {யுதிஷ்டிரரே}, அந்தப் போர்க்களத்தில் தனது வீரத்தைப் பறைசாற்றிய பிரத்யும்னனைக் கண்டு கோபம் கொண்ட சால்வனால் அந்தச் சவாலைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எதரிகளின் நகரங்களை வெல்லும் சால்வன், கோபத்தால் வெறிகொண்டு, கட்டற்ற வேகம் கொண்ட தனது அழகிய ரதத்தில் இருந்து இறங்கி, பிரத்யும்னனிடம் போர்புரியத் தீர்மானித்தான். சால்வனுக்கும், விருஷ்ணி வீரர்களில் முதன்மையானவனுக்கும் {பிரத்யும்னனுக்கும்} இடையில் நடந்த போர், பழங்காலத்தில் இந்திரனுக்கும் பலிக்கும் {மஹாபலிக்கும்} இடையில் நடந்த போரைப் போல இருப்பதை மக்கள் கண்டனர்.

வீரரே {யுதிஷ்டிரரே}, தங்கத்தாலானதும், கொடிகளும், கொடிக்கம்பங்களும், அம்பறாத்தூணிகளும் கொண்ட தனது அழகிய தேரில் ஏறிய சிறப்புமிக்கவனும் பலம் பொருந்தியவனுமான சால்வன் பிரத்யும்னனை நோக்கித் தனது கணைகளை அடிக்கத் தொடங்கினான். பிரத்யும்னன் தனது கரங்களின் சக்தியால் அடர்த்தியான கணை மழையால் சால்வனை மூடினான். பிரத்யும்னனால் இவ்வளவு தாக்கப்பட்டும் சௌபத்தின் மன்னன், அவனைப் பொறுத்துக் கொள்ளாமல், எனது மகனை {பிரத்யும்னனை} நோக்கி சுடர்விட்டு எரியும் நெருப்பு போன்ற கணைகளை அடித்தான்.

ஏகாதிபதிகளில் முதன்மையானவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் துளைக்கப்பட்ட ருக்மிணியின் மகன் {பிரத்யும்னன்}, நேரத்தைத் தவற விடாது, எதிரியின் உயிர்ப்பகுதிக்குள் நுழையும் ஆற்றல் கொண்ட கணையை அடித்தான். எனது மகனால் {பிரத்யும்னனால்} அடிக்கப்பட்ட இறகுகள் கொண்ட அந்தக் கணை, சால்வனின் கவசத்தைத் துளைத்து, இதயத்திற்குள் நுழைந்தது. இதனால் சால்வன் மயக்கம் அடைந்து கீழே விழுந்தான். வீரனான மன்னன் சால்வன் உணர்விழந்து கீழே விழுந்ததைக் கண்ட தானவர்களில் முதன்மையானவர்கள் பூமியை மறைப்பது போல ஓடிப் போனார்கள். பூமியின் தலைவரே {யுதிஷ்டிரரே}, சால்வனின் படை, சௌபத்தின் தலைவனான தங்கள் மன்னன் உணர்வின்றி கீழே விழுவதைக் கொண்டு  "ஓ...." "ஐயோ" என்று சொல்லி ஓலமிட்டனர்.

குரு குலத்தவரே {யுதிஷ்டிரரே}, மீண்டும் உணர்வைப் பெற்ற, பெரும் பலம் வாய்ந்த சால்வன் எழுந்து, பிரத்யும்னனை நோக்கி தனது கணைகளை அடித்தான். வீரனும், பலம் வாய்ந்த கரம் கொண்டவனுமான பிரத்யும்னன், தனது எதிரியால் {சால்வனால்} தொண்டையில் துளைக்கப்பட்டு, தளர்ந்து போய் தனது தேரில் இருந்தான். பெரும் பலம் வாய்ந்த மன்னரே, ருக்மிணியின் மகனைக் {பிரத்யும்னனைக்} காயப்படுத்திய சால்வன், சிம்மத்தைப் போல உரக்க கர்ஜித்து, உலகம் முழுவதையும் அந்தச் சத்தத்தால் நிறைத்தான்! பாரதரே {யுதிஷ்டிரரே}, எனது மகன் {பிரத்யும்ன்ன} உணர்விழந்த போது, அந்தச் சந்தர்ப்பத்தைத் தவறவிடாத சால்வன், தாங்க முடியாத கணைகளை அவன்  {பிரத்யும்னன்} மீது ஏவினான். குரு குலத்தின் தலைவா {யுதிஷ்டிரரே}, இப்படி எண்ணிலடங்கா கணைகளால் துளைக்கப்பட்ட பிரத்யும்னன், போர்க்களத்தில் அசைவற்றுக் கிடந்தான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்