Sunday, December 01, 2013

புறமுதுகிடுதல் கோழைத்தனம் - வனபர்வம் பகுதி 18

Showing your back is cowardice | Vana Parva - Section 18 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

உணர்வற்று விழுந்த பிரத்யும்னனை தேரோட்டி களத்தைவிட்டு வெளியேறுதல்; உணர்வு திரும்பிய பிரத்யும்னன் தேரோட்டியைக் கடிந்து கொள்ளல்

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "மன்னா {யுதிஷ்டிரரே}, சால்வனின் கணைகளால் பிரத்யும்னன் உணர்விழந்ததும், போரிட வந்திருந்த விருஷ்ணிகள் உள்ளம் உடைந்து துயரத்தில் மூழ்கினர். அந்த விருஷ்ணி குல, அந்தக குல வீரர்கள் துயரத்தில் ஓ என்றும் ஐயோ என்றும் அலறும்போது, எதிரிப் படையில் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. உணர்விழந்த பிரத்யும்னனைக் கண்ட தேரோட்டியான தாருகனின் மகன், வேகமாக செல்லும் குதிரைகளின் துணையுடன் அவனை {பிரத்யும்னனைக்} களத்தை விட்டு வெளியே கொண்டு சென்றான். அந்தத் தேர் சிறிது தூரம் செல்வதற்குள்ளேயே உணர்வைத் திரும்பப் பெற்ற பிரத்யும்னன், கைகளில் தனது வில்லை எடுத்துக் கொண்டு அந்தத் தேரோட்டியிடம், "சூத இனத்தின் மகனே, நீ என்ன செய்துவிட்டாய்? களத்தை விட்டு நீ ஏன் வெளியே செல்கிறாய்? போர்களத்தில் இது விருஷ்ணிகளின் வழக்கமில்லையே! சூத மகனே, கடும் போர் புரியும் சால்வனைக் கண்டதும் கலங்கிப் போனாயா? அல்லது இப்போரைக் கண்டு உள்ளம் ஒடிந்து போனாயா? உனது மனதை உண்மையாகச் சொல்!" என்று கேட்டான்.


அதற்கு அந்தத் தேரோட்டி, "ஜனார்த்தனரின் மகனே, "நாம் குழம்பவில்லை, அல்லது அச்சம் என்னைப் பீடிக்கவில்லை. மறுபுறம், கேசவரின் மகனே, சால்வனை வீழ்த்துவது உனக்குச் சிரமம் என்று நான் கருதுகிறேன்! ஆகையால், ஓ வீரனே, மெதுவாக நான் களத்தைவிட்டு அகலுகிறேன். அந்த இழிந்தவன் உன்னைவிட பலசாலியாக இருக்கிறான்! தேரில் இருக்கும் வீரனைக் காப்பது ஒரு தேரோட்டியின் கடமையாகும். நீ உணர்விழந்து வேறு இருந்தாய். நீண்ட ஆயுளைக் கொடையாகக் கொண்டவனே, நீ என்னைப் பாதுகாப்பது போல, நான் உன்னை எப்போதும் பாதுகாக்க வேண்டும்! தேரில் இருக்கும் வீரன் எப்போதும் (அவனது தேரோட்டியால்) காக்கப்பட வேண்டும் என்பதை நினைத்துப் பார்த்தே, நான் உன்னை வெளியே அழைத்து வந்தேன்.! மேலும், பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே, நீ தனியாளாக இருக்கிறாய், தானவர்களோ பலராக இருக்கின்றனர். ருக்மிணியின் மகனே {பிரத்யும்னனே}, இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து, சண்டையில் நீ அவர்களுக்குச் சமம் இல்லை என்று நினைத்து, நான் வெளியே செல்கிறேன்!" என்றான்.

வாசுதேவன் {கிருஷ்ணன்} தொடர்ந்தான், "அந்தத் தேரோட்டி இப்படிப் பேசியதும், ஓ கௌரவரே {யுதிஷ்டிரரே}, மகரத்தைக் கொடியாகக் கொண்டவன் {பிரத்யும்னன்}, "தேரைத் திருப்பு, ஓ தாருகனின் மகனே, மறுபடி இதைப் போல் செய்யாதே; அதை எப்போதும் செய்யாதே, சூதனே, நான் உயிருடன் இருக்கும்போது சண்டையை விட்டு விலகாதே! களத்தைக் கைவிட்டுச் செல்பவனோ, "நான் உனக்கு அடிமை" என்று சொல்லி, காலில் விழுந்த எதிரியைக் கொல்பவனோ அல்லது பெண்ணையோ, சிறுவனையோ, முதிர்ந்தவனையோ, தேரை இழந்து, ஆயுதங்கள் ஒடிந்து, துயரத்தில் இருக்கும் வீரனையோ கொல்பவன் விருஷ்ணி குல மகனாக இருக்க முடியாது. நீ தேரோட்டிகளின் குலத்தில் பிறந்தவன். உன் தொழிலில் பயிற்சி பெற்றவன்.

தாருகனின் மகனே, போர்க்களத்தில் விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்தவன் நீ! விருஷ்ணிகளின் முறைமைகளை அறிந்த நீ, ஓ சூதா, இப்போது செய்தது இனி எப்போதும் களத்தில் இருந்து விலகாதிருப்பாயாக! கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், கதனின் அண்ணனுமான மாதவர், நான் முதுகில் காயம்பட்டு கலங்கிப் போய் களத்தை விட்டு பின்வாங்கி வந்தேன் என்பதைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வார். கேசவரின் அண்ணனான பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரும், நீல நிற ஆடை உடுத்தி, மதுவால் உண்டான மயக்கத்துடன் இருக்கும் பலதேவர் {பலராமன்} திரும்பி வரும்போது என்ன சொல்வார்? சூதா, பெரும் போர் வீரனும் மனிதர்களில் சிங்கமான சினியின் பேரன் {சாத்யகி}, நான் போரில் இருந்து விலகினேன் என்பதைக் கேள்விப்பட்டால் என்ன சொல்வான்?

தேரோட்டியே, எப்போதும் வெற்றிவாகைச் சூடும் சம்பன், கட்டுப்படுத்தப்பட முடியாத சாருதேஷ்ணன், கதன், சரணன், அக்ரூரர் ஆகிய பெரும் பலம் வாய்ந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்கள் என்னிடம் என்ன சொல்வார்கள்! இதுவரை, எனது நடத்தைக்காகவும் வீரத்திற்காகவும், மரியாதைக்காகவும், ஆண்மைக்காகவும் கருத்தில் கொள்ளப்பட்டிருந்த என்னை, விருஷ்ணி குல வீரர்களின் மனைவிமார், தாங்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது, என்னைக் குறித்து என்ன பேசிக் கொள்வார்கள்? அவர்கள், போர்க்களத்தை விட்டு இங்கே வந்திருக்கும் இந்தப் பிரத்யும்னன் ஒரு கோழை! அவனுக்கு ஐயோ! என்றே சொல்வார்கள். நன்றாகச் செய்தாய் என்று அவர்கள் சொல்லவே மாட்டார்கள். நான் இகழ்ச்சிக்கும் பரிகசிப்புக்கும் ஆளானால், ஓ சூதா, அதைவிட நான் சாவதே மேல்!

ஆகையால், இன்னுமொரு முறை களத்தைவிட்டு வெளியேறாதே! எனக்குப் பொறுப்பைக் கொடுத்துவிட்டு, மதுவைக் கொன்றவரான {மதுசூதனர்} ஹரி, பாரத சிங்கத்தின் {யுதிஷ்டிரரின்} வேள்விக்குச் சென்றிருக்கிறார்! ஆகையால், என்னால் அமைதியாக இருக்க முடியாது! ஓ சூதா, வீரம் கொண்ட கிருதவர்மர் சால்வனை எதிர்த்து வந்தபோது, நான் சால்வனைத் தடுத்து நிறுத்துவேன் என்று அவரை நிறுத்தினேன். ஹிருதிகரின் மகனான அவரும் என்னைப் புகழ்ந்துவிட்டு சென்று விட்டார்! இப்படி போர்க்களத்தைவிட்டு வெளியேறினால், அந்த பெரும்பலம் வாய்ந்த போர்வீரரிடம் {கிருதவர்மரிடம்}, அவரைச் சந்திக்கும்போது என்ன சொல்வேன்? கட்டுப்படுத்தப்பட முடியாதவரும், பெரும்பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவரும், சங்கு, சக்கரம், கதாயுதம் ஆகியவற்றைச் சுமப்பவருமான அந்த தாமரை இதழ் போன்ற கண் கொண்டவரிடம் {கிருஷ்ணரிடம்} நான் என்ன சொல்வேன்?

சாத்யகி, பலதேவர், மற்றும் பிற விருஷ்ணி, அந்தக குலத்தைச் சேர்ந்தவர்கள் என்னைப் பெருமையாகவே எப்போதும் சொல்வர்! அவர்களுக்கெல்லாம் நான் என்ன சொல்வேன்? சூதனே, போர்க்களத்தை விட்டு அகன்று, முதுகில் கணைகளால் ஏற்பட்ட காயத்துடன், நான் உன்னால் வெளியே கொண்டு செல்லப்பட்டால், எக்காரணம் கொண்டும் என்னால் உயிர்வாழ முடியாது! ஆகையால், தாருகனின் மகனே, விரைவாகத் தேரைத் திருப்பு. பேராபத்தில் கூட இனிமேல் இப்படிச் செய்யாதே. சூதா, கோழைப் போல ஓடிச் சென்று, முதுகில் {எதிரிகளின்} கணைகளால் துளைக்கபடும் அளவுக்கு நான் வாழ விரும்பவில்லை. சூத மகனே, போர்க்களத்தில் இருந்து கோழை போல நான் ஓடுவதை நீ எப்போதாவது பார்த்திருக்கிறாயா? தாருகனின் மகனே, நான் போரில் ஆர்வம் கொண்டு, போர்த்தாகம் தணியாமல் இருக்கும்போது களத்தைக் கைவிடுவதை நீ செய்யலாகாது! ஆகையால், களத்திற்குத் திரும்பிப் போ!" என்றான் {பிரத்யும்னன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்