Friday, December 13, 2013

கறை படிந்தவனா கடவுள்? - வனபர்வம் பகுதி 30

Is God stained with sin | Vana Parva - Section 30 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரனுடன் திரௌபதியின் விவாதம்...

திரௌபதி சொன்னாள், "உமது உணர்வுகளை மூடியிருக்கும் {மறைக்கும்} தத்திரியையும் (ஆதித்தியர்களில் [சூரியர்களில்] ஒருவன் = ஆரோக்கியத்திற்கான தேவன்} விதத்திரியையும் {பெண் தெய்வம் [துர்கை என்றும் கொள்ளலாம்]} நான் வணங்குகிறேன். நீர் தாங்கும் சுமையைச் சுமப்பதில், உமது தந்தைமாரும் பாட்டன்மாரும் பின்பற்றிய வழிகளில் இருந்து நீர் மாறுபடுகிறீர்! மனிதர்களுடைய செயல்களின் தாக்கம் {செயல்களினால் உண்டாகும் பாவத்தின் விளைவு} வாழ்வின் வெவ்வேறு சூழ்நிலைகளில் நம்மைத் தாக்குகிறது. செயல்கள் தவிர்க்க முடியாத  விளைவுகளை {பின் விளைவுகளை} ஏற்படுத்துகின்றன; விடுதலை என்பது வெறும் மடமையின் காரணமாகவே விரும்பப்படுகிறது. அறம், மென்மை, பொறுமை {மன்னிக்கும் தன்மை}, முற்போக்கு, கண்டிக்கப்படுவோம் என்ற பயம் ஆகியவற்றின் மூலம் மனிதன் செழிப்பை அடைய முடியாது என்றே காணப்படுகிறது.


ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அது அப்படியில்லை என்றால், இந்தத் தாங்கிக் கொள்ள முடியாத பேரிடர், அதற்குத் தகுதியில்லாத உமக்கும், பெரும் சக்திகள் கொண்ட உமது தம்பிகளுக்கும் ஏற்பட்டிருக்காது! செழிப்புடன் இருந்த அந்நாட்களிலும் சரி, தீயூழ் {துரதிர்ஷ்டம்} வாய்ந்த இந்நாட்களிலும் சரி, ஓ பாரதரே, அறத்தைவிட உகந்தது உமக்கு வேறு எதுவும் இருந்ததில்லை. அறத்தை உமது உயிரைவிட அதிகமாகக் கருதி வருகிறீர். உமது நாடும், உமது சுயமும் அந்தணர்களாலும், உமக்கு மூத்தவர்களாலும், தேவர்களாலும் அறத்திற்காக மட்டுமே கருதப்படுகின்றன.

நீர், பீமசேனரையும், அர்ஜுனரையும், மாத்ரி மகன்களான இரட்டையர்களையும் {நகுல சகாதேவர்களையும்}, அவர்களுடன் சேர்த்து என்னையும் கைவிட்டாலும் விடுவீரே ஒழிய அறத்தைக் கைவிட மாட்டீர்! மன்னன் அறத்தைக் காப்பான் என்றும், அப்படி அவனால் காக்கப்பட்ட அறம் (பதிலுக்கு) அவனைக் காக்கும் என்றும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இருப்பினும் அறம் உம்மைக் காக்காததையே நான் கண்டு வருகிறேன்! ஓ மனிதர்களில் புலி போன்றவரே {யுதிஷ்டிரரே}, மனிதனைத் தொடரும் அவனது நிழல் போல, உமது இதயம், ஒரே நோக்கோடு அறத்தையே நாடுகிறது. நீர் உமக்குச் சமமானவர்களையோ, தாழ்ந்தவர்களையோ, மேன்மையானவர்களையோ என்றும் அவமதித்ததில்லை. முழு உலகத்தை நீர் அடைந்தும், உமக்கு கர்வம் அதிகரிக்கவில்லை!

ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நீர் எப்போதும் அந்தணர்களையும், தேவர்களையும், பித்ருக்களையும், சுவதங்களுடனும் மற்ற வகையான வழிபாடுகளாலும் வழிபட்டு வருகிறீர்! ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, நீர் எப்போதும் அந்தணர்களின் விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுத்து, அவர்களைத் திருப்தி செய்திருக்கிறீர். யதிகளுக்கும், சந்நியாசிகளுக்கும், இல்லறத்துறவிகளுக்கும் உமது இல்லத்தில் தங்கத்தாலான தட்டில் வைத்து உணவு பரிமாறியிருக்கிறீர். வானப்பிரஸ்தர்களுக்கு தங்கமும் உணவும் எப்போதும் கொடுத்திருக்கிறீர். அந்தணர்களுக்கு நீர் கொடுக்க மாட்டீர் என்று சொல்லும்படி எந்தப் பொருளும் உமது வீட்டில் இல்லை.

உமது {மன} அமைதிக்காக, உமது இல்லத்தில் நடைபெற்ற விஸ்வதேவ வேள்வியில், சுத்தம் செய்யப்பட்ட பொருட்களை முதலில் உமது விருந்தினர்களுக்கும், மற்ற எல்லா உயிர்களுக்கும் கொடுத்து மீந்ததையே நீர் உண்டீர்! விருப்பத்தை ஈடேற்றும், இஷ்டிகளையும், பாசுபந்தங்கள் எனும் வேள்விகளையும், இல்லறக் கடமைகளுக்கான சடங்குகளையும், பக வேள்விகளையும், அனைத்து வகையான பிற வேள்விகளையும் உமது வீட்டில் நீர் நடத்தியிருக்கிறீர். திருடர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்தத் தனிமையான கானகத்திற்கு நாடுகடத்தப்பட்டும், சொந்த நாட்டை இழந்தும் உமது அறம் கெடவில்லை!

பெரும் பரிசுகள் கொடுத்து நடத்தப்பட வேண்டிய அஸ்வமேதம், ராஜசுயம், புண்டரீகம், கோஸ்வம் ஆகிய பெரும் வேள்விகளை நீர் செய்திருக்கிறீர்! விபரீத உணர்வுகளால் உந்தப்பட்ட அந்தக் கடுமையான நேரத்தில், பகடையில் தோற்று, உமது நாட்டையும், உமது செல்வங்களையும், உமது ஆயுதங்களையும், உமது தம்பிகளையும், ஏன் என்னையும் இழந்தீர்! ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எளிமை, மென்மை, அடக்கம், உண்மை ஆகியவற்றைக் கொண்டிருந்தும், தீமை நிறைந்த சூதில் உமது மனம் ஈர்க்கப்பட்டது எவ்வாறு?  ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது இந்தத் துயரையும் பேரிடரையும் கண்டு எனது இதயம் துயரத்தில் மூழ்குகிறது. நான் எனது உணர்வுகளை இழக்கும் நிலையில் இருக்கிறேன்.

மனிதர்கள் அனைவரும் கடவுளின் விருப்பத்திற்கு இணங்கி நடக்க முடியுமே தவிர, தங்கள் விருப்பங்கள் படி நடக்க முடியாது என்பதற்கு ஒரு பழைய வரலாறு இருக்கிறது. மரத்தால் செய்யப்பட்ட மரப் பதுமையைக் {பொம்மையைக்} கட்டி, நூல் கொண்டு ஆட்டி வைப்பது போல, அனைத்து துன்பங்களையும், இன்பங்களையும் விதிப்பவனான மேலான கடவுள், தான் படைத்த மக்களை ஆட்டி வைக்கிறான். ஓ பாரதரே {யுதிஷ்டிரரே}, அனைத்துப் பொருட்களையும் மூடியிருக்கும் வெளியைப் போல, கடவுளும் அனைத்து உயிர்களுக்குள்ளும் ஊடுருவி இருந்து இன்பத்தையும் துன்பத்தையும் விதிக்கிறான். நூலால் கட்டப்பட்ட பறவை போல, அனைத்து உயிரினங்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. அனைவரும் கடவுளுக்குக் கட்டுப்பட்டவர்களே அன்றி வேறு யாருக்கும் அல்ல. யாரும் தனக்குத் தானே விதித்துக் கொள்பவனாக இருக்க முடியாது.

நூலில் உள்ள முத்தைப் போல அல்லது, கயிற்றால் கட்டப்பட்ட காளையைப் போல அல்லது நீர்ச்சுழலில் சிக்கிய மரத்தைப் போல, அனைத்து உயிர்களும் படைப்பாளனின் கட்டளைகளைத் தொடர்கின்றன. அந்தப் அண்ட ஆன்மாவை {கடவுளை} நம்பியிருக்கும் மனிதன், ஒருக்கணம் கூட சுதந்திரமாக எதையும் செய்ய முடியாது. இருளால் சூழப்பட்ட எந்த மனிதனும், தானே தனது துன்பத்திற்கும் இனபத்திற்கும் தலைவனாக இருக்க முடியாது. கடவுளால் உந்தப்பட்டே அவர்கள் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் அனுப்பப்படுவார்கள். லேசான வைக்கோல் பலமான காற்றை நம்பியிருப்பது போல, ஓ பாரதரே {யுதிஷ்டிரரே} அனைத்து உயிர்களும் கடவுளை நம்பியே இருக்கின்றன. இதுதான் கடவுள் என்று யாராலும் சொல்ல முடியாதெனினும், அனைத்து உயிர்களுக்குள்ளும் இருக்கும் கடவுள், அண்டத்தில் நகர்ந்து நல்லது கெட்டதைச் செய்து வருகிறான். இந்த நமது உடலை ஆயுதமாகக் கொண்டு, தலைவர்களுக்குத் தலைவன் {கடவுள்} நன்மை மற்றும் தீமையின் கனிகளைப் பறிக்கிறான்.

கடவுளால் பரப்பப்பட்டிருக்கும் மாயையின் சக்தியைப் பாரும். கடவுள் தனது மாயையால் குழப்புவதன் மூலமாக, உயிர்களைத் தங்கள் நண்பர்களையே கொல்ல வைக்கிறான். உண்மை அறிந்த முனிவர்கள் அவற்றை வித்தியாசமாகக் காண்கிறார்கள். அவை அவர்களுக்கு சூரிய ஒளியைப் போல வேறு ஒளியில் தெரிகின்றன (சாதாரணக் கண்களுக்கு ஒளிக்கீற்று போலத் தெரிபவை, ஆழ்ந்த பார்வை கொண்டோருக்கு உணவிலும் பானகங்களிலும் இருக்கும் பூச்சிகளைப் பார்ப்பது போலத் தெரிகிறது). சாதாரண மனிதர்கள் இவ்வுலகத்தை வேறுமாதிரியாகப் பார்க்கிறார்கள். இங்கு படைப்பிலும் அழிப்பிலும் வேறு வேறு செயல்வகைகளைக் கைக்கொண்டு, அனைத்தையும் செய்பவன் இறைவனே ஆவான்.

யுதிஷ்டிரரே, சுயம்புவான பெருந்தகப்பன் {பிரம்மா}, அந்தப் பெரும் தெய்வம், ஒரு மரத்தின் மந்தமான உணர்வற்ற பகுதியை, மரத்தை வைத்தே உடைப்பது போலவும், கல்லைக் கல்லால் உடைப்பது போலவும், இரும்பை இரும்பால் உடைப்பது போலவும், தான் படைத்த உயிரை தானே கொல்கிறான். அந்தத் தலைவர்களுக்குத் தலைவன் {பிரம்மன்}, தன் சித்தத்தின் படி உயிரினங்களை உற்பத்தி செய்து, அவற்றை அழித்து, ஒரு குழந்தை களிமண் பொம்மையுடன் விளையாடுவது போல, தான் படைத்த உயிரினங்களுடன் விளையாடுகிறான்.

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, கடவுள் தான் படைத்த உயிரினங்களுடன் ஒரு தந்தையைப் போலவோ அல்லது ஒரு தாயைப் போலவோ நடந்து கொள்கிறான் என எனக்குத் தோன்றவில்லை. ஒரு தீய மனிதனைப் போல, அவன், தான் படைத்தவை மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்! மேன்மையான, நன்னடத்தையுள்ள, எளிமையான மனிதர்கள் துன்புற்று, பாவிகள் மகிழ்ச்சியாக இருப்பதைக் கண்டு நான் வருத்தமடைகிறேன். உமது துயரத்தையும், சுயோதனனின் {துரியோதனனின்} செழிப்பையும் நான் காண்பதால், பாரபட்சத்துடன் நடக்கும் அந்தப் பெரும் ஆணையாளனைக் {கடவுளைக்} குறித்து நான் உயர்வாகப் பேச மாட்டேன்.

ஐயா {யுதிஷ்டிரரே}, விதிகள் அனைத்தையும் மீறி, நியாயமற்று, பேராசையுடன் நடந்து கொண்டு, அறத்தையும் நல்லொழுக்கத்தையும் காயப்படுத்தும் திருதராஷ்டிரனின் மகனுக்குப் {துரியோதனனுக்கு} பெரும் செழிப்பை வழங்கி என்ன பெரும் கனியை {பலனை} அடைந்து விடப்போகிறான் அந்த பெரும் ஆணையாளன் {கடவுள்}? ஒரு செயலின் பலன் {வினை} செய்தவனை மட்டுமே தொடரும்; மற்றவரைத் தொடராது என்றால், நிச்சயமாக செய்யப்படும் ஒவ்வொரு செயலாலும் ஏற்படும் பாவத்தால் கடவுளே கறைபடுகிறான். எனினும், செய்யப்பட்ட செயலின் பாவம் செய்தவனைச் சாரவில்லை என்றால், பலமே (தனியொருவனின் பலமே) செயல்களுக்கான உண்மையான காரணமாகும் (கடவுள் இல்லையென்றாகிவிடும்). நான் பலமற்றவர்களுக்காக வருந்துகிறேன்!" என்றாள் {திரௌபதி}.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்