Wednesday, December 18, 2013

கடும் வார்த்தைகளால் என்ன பயன்? - வனபர்வம் பகுதி 34

What use of harsh words | Vana Parva - Section 34 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் தனது சபதத்தை விடமுடியாது என்று சொல்வது; சபதத்தின் முடிவுக்காலத்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என்று பீமனிடம் சொல்வது...

வைசம்பாயனர் சொன்னார் "பீமசேனனால் இப்படிச் சொல்லப்பட்ட, உண்மைக்குத் தன்னை உறுதியாக அர்ப்பணித்திருந்த, உயர் ஆன்ம மன்னனான அஜாதசத்ரு {யுதிஷ்டிரன்} பொறுமையுடன் இருந்து சில கணம் பொறுத்து, "ஓ பாரதா {பீமா}, சந்தேகமற இவையெல்லாம் உண்மையே. அம்பு போன்ற உனது வார்த்தைகளால் துளைத்து என்னைச் சித்திரவதைச் செய்யும் உன்னை என்னால் நிந்திக்க முடியாது. எனது முட்டாள்தனத்தால் மட்டுமே இந்தப் பேரிடர் உங்களுக்கு வந்திருக்கிறது.  திருதராஷ்டிரன் மகனின் {துரியோதனனின்} நாட்டையும் அரசுரிமையையும் பறிக்க விரும்பியே நான் பகடை வீச முற்பட்டேன். அதனால்தான், தந்திரம் கொண்ட சூதாடியான சுபலனின் மகன் {சகுனி}, சுயோதனன் {துரியோதனன்} சார்பாக என்னை எதிர்த்து விளையாடினான்.

மலைநாட்டுக்காரனான {காந்தார நாட்டுக்காரனான} சகுனி, ஏய்ப்பதில் மிகவும் தந்திரம் மிக்கவன். எந்த யுக்தியும் தெரியாமல் சபை நடுவே நான் பகடை வீசினேன். அவன் {சகுனி} தந்திரமாக என்னை வீழ்த்திவிட்டான். அதனாலேயே, ஓ பீமசேனா, நாம் இந்தப் பேரிடரில் மூழ்கினோம். சகுனியின் விருப்பத்திற்கேற்றபடி பகடைகள் இரட்டைப் படையாகவும், ஒற்றைப்படையாகவும் விழுவதைப் பார்த்தாவது நான் எனது மனதை அடக்கியிருக்க வேண்டும். இருப்பினும், கோபம் ஒரு மனிதனின் பொறுமையை விரட்டிவிடுகிறது. ஓ குழந்தாய் {பீமா}, ஆணவம், தற்பெருமை, கர்வம் ஆகியவற்றின் வசமாக இருக்கும்போது மனதை கட்டுக்குள் வைக்க முடியவில்லை.

ஓ பீமசேனா, நீ பயன்படுத்திய வார்த்தைகளுக்காக நான் உன்னை நிந்திக்கவில்லை. இவ்விதம் நமக்குக் நடக்க வேண்டியது முன்பே விதிக்கப்பட்டது என்றுதான் நான் கருதுகிறேன். திருதராஷ்டிரன் மகனான மன்னன் துரியோதனன் நமது நாட்டை விரும்பி, நம்மை துன்பத்திலும் அடிமைத்தனத்திலும் தள்ளியபோது, திரௌபதியே நம்மைக் காத்தாள். மீண்டும் பகடை விளையாட சபைக்கு அழைக்கப்பட்ட போது, அனைத்து பாரதர்கள் முன்னிலையிலும், திருதராஷ்டிரன் மகன் {துரியோதனன்}, பந்தயப் பொருள் குறித்து என்ன சொன்னான் என்பதை நீயும் அறிவாய் அர்ஜுனனும் அறிவான்.

துரியோதனன் "ஓ இளவரசே, அஜாதசத்ரு {யுதிஷ்டிரா}, (வீழ்த்தப்பட்டால்) நீ உனது அனைத்து தம்பிகளுடன், அனைவரும் அறியும்படி பனிரெண்டு {12} வருடங்களுக்கு நீ தேர்ந்தெடுக்கும் கானகத்தில் வாழ வேண்டும். பதிமூன்றாவது {13வது} வருடத்தை தலைமறைவாகக் கழிக்க வேண்டும். அந்தக் கடைசி காலத்தில், பாரதர்களின் ஒற்றர்கள் உங்களைப் பற்றி கேள்விப்பட்டு நீங்கள் இருக்கும் இடத்தில் உங்களைக் கண்டுபிடித்து விட்டால், நீ மீண்டும் கானகத்தில் அதே அளவு காலம் வாழ வேண்டும். மேலும் கடைசி வருடத்தை தலைமறைவாக வாழ வேண்டும். இது குறித்து சிந்தித்து அதை சபதமாக ஏற்றுக் கொள். {துரியோதனனாகிய} என்னைப் பொறுத்தவரை, எனது ஒற்றர்களைக் குழப்பி அவர்களால் கண்டுபிடிக்க முடியாதவாறு நீங்கள் இருந்தீர்களானால், ஓ பாரதா, ஐந்து நதிகள் பாயும் இந்த நாடு மீண்டும் உனதாகும் நான் இந்தக் குருக்களின் சபையில் சத்தியம் செய்கிறேன். அதே போல, ஓ பாரதா, உன்னால் நான் வீழ்த்தப்பட்டால், நாங்கள் அனைவரும், எங்கள் செல்வங்களைத் துறந்து, அதே காலத்திற்கு, அதே விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்வோம்." என்று சொன்னான் {துரியோதனன்}.

அந்த இளவரசனால் {துரியோதனனால்} அப்படிச் சொல்லப்பட்டதும், நான் அனைத்து குருக்களுக்கும் மத்தியில் "அப்படியே ஆகட்டும்'' என்றேன். அந்த இழிந்த விளையாட்டு அதன்பிறகு தொடங்கியது. நாம் வீழ்த்தப்பட்டு நாடு கடத்தப்பட்டோம். அதனாலேயே நாம் பல வனங்களில் துயரத்துடனும், அசௌகரியத்துடனும் சுற்றி வருகிறோம். எனினும் திருப்தியடையாத சுயோதனன் {துரியோதனன்} கோபத்திற்குத் தன்னைக் கொடுத்து, நமது இடரைக் கண்டு அனைத்து குருக்களையும் மகிழ்ச்சி தெரிவிக்க வைத்தான். நல்லோர் முன்னிலையில் இப்படிப்பட்ட ஒப்பந்தத்தில் நுழைந்த பிறகு, பூமியில் உள்ள நாட்டிற்காக யார்தான் அந்த ஒப்பந்தத்தை உடைக்க முடியும்?

ஒரு மரியாதைக்குரிய மனிதனுக்கு, ஒப்பந்தத்தை மீறி அரசை அடைவதை விட மரணமே மேலானது என்று நான் நினைக்கிறேன். அந்த விளையாட்டின் போது, *நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். அர்ஜுனனால் நீ தடுக்கப்பட்டு, உனது கரங்களையே பிசைந்து நின்றாய். நீ விரும்பியதைச் செய்திருந்தாயானால், இந்தப் பேரிடர் நம்மேல் விழுந்திருக்குமா? ஓ பீமா, உனது வீரத்தை உணர்ந்த நீ, இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முன்னரே ஏன் அதைச் சொல்லவில்லை? ஏற்ற சபதத்தினால் துயரில் மூழ்கி, நேரமும் கடந்து பிறகு, என்னிடம் இத்தகு கடும் வார்த்தைகள் பேசி என்ன பயன்?

ஓ பீமா, திரௌபதி அப்படித் துன்பப்படுத்தப்பட்டதைக் கண்டும் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்பதுதான் எனது பெரும் கவலை. நான் ஏதோ விஷ பானத்தை அருந்தியதைப் போல எனது இதயம் எரிகிறது. இருப்பினும் குரு வீரர்களுக்கு மத்தியில் சபதமேற்ற பிறகு, என்னால் அதை மீற முடியாது. விதைகளைத் தூவியவன் அறுவடைக்காகக் காத்திருப்பது போல, ஓ பீமா, பொறுத்திரு. நமது சிறந்த நாட்கள் மீண்டும் வரும். முதலில் காயப்பட்டவன், எதிரிகள் கனிகளுடனும் மலர்களுடன் இருப்பதை அறிந்து, அவனைத் தனது வீரத்தால் பழிவாங்குவது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது. அப்படிப்பட்ட வீரன் சாகாப்புகழடைகிறான். அப்படிப்பட்ட மனிதன் பெரும் செழிப்பை அடைகிறான். அவனது எதிரிகள் அவனுக்கு தலைவணங்கி, இந்திரனைச் சுற்றி பாதுகாப்புக்காக நிற்கும் தேவர்களைப் போல, நண்பர்கள் அவனைச் சூழ்ந்து நிற்பார்கள்.

ஆனால், ஓ பீமா, எனது சத்தியம் பொய்யாகாது என்பதை அறிந்து கொள். நான் அறத்தை உயிரினும், தேவத்தன்மையினும் மேலாகக் கருதுகிறேன். நாடு, மகன்கள், புகழ், செல்வம் ஆகியவை அனைத்தும் உண்மையின் {சத்தியத்தின்} பதினாறில் ஒரு பங்குக்கு ஈடாகாது." என்றான் {யுதிஷ்டிரன்}.

***********************************************************************
*நீ எனது கரங்களை எரிக்க விரும்பினாய். 

மேலும் பார்க்க கீழே சொடுக்கவும்:
மானம் காத்த மாயவன் | சபா பர்வம் - பகுதி 67அ

பீமன் சொன்னான் "ஓ யுதிஷ்டிரரே, சூதாடிகளின் இல்லத்தில் தளர்ந்த நடத்தை கொண்ட பல பெண்கள் இருந்தாலும், அவர்கள்கூட அப்பெண்கள் மீது கொண்டிருக்கும் அன்பால் பந்தயப் பொருளாக வைக்கமாட்டார்கள்.

இருப்பினும், திரௌபதியைப் பந்தயமாக வைத்த உமது செயல் பெரிதும் முறையற்றது என நான் கருதுகிறேன். இந்த அப்பாவிப் பெண் {திரௌபதி} இப்படி நடத்தப்படுவதற்குத் தகுதியானவள் கிடையாது. அவள் காரணமாகவே, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, எனது கோபம் உம்மீது விழுகிறது. **நான் அந்த உமது கரங்களை எரித்துவிடுகிறேன். சகாதேவா, கொஞ்சம் நெருப்பைக் கொண்டு வா**" என்றான். {இந்த வரிகளை பாரதியாரின் வார்த்தைகளில்- பாரதியாரின் பாஞ்சாலி சபததில் Footnoteல் பாருங்கள்}
இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்