Thursday, December 19, 2013

கைப்பிடி புல்லால் மலைகளை மறைப்பீரா? - வனபர்வம் பகுதி 35

Will you hide Himavat mountains with handful of grass| Vana Parva - Section 35 | Mahabharata In Tamil

(அர்ஜுனாபிகமன பர்வத் தொடர்ச்சி)

வனவாசத்தை முடிக்காமலேயே துரியோதனனை வெல்ல வேண்டும் என்று பீமன் யுதிஷ்டிரனிடம் சொல்வது...

பீமன் சொன்னான், "ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நுரை போலவும், (எப்போதும் விழத்தயாராக இருக்கும்) கனிந்த கனி போலவும், நீர் காலத்தை நம்பி அழியும் தன்மை பெற்று இருக்கிறீர். வேகமான கணையைப் போன்றும், வேகமாக ஓடும் நீரூற்றைப் போன்றும், மரணத்தைப் போன்றும் உள்ள எல்லையற்ற, அளவிடமுடியாத காலத்திற்குட்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் நுழைந்தால்,  நம்மிடம் உள்ள அனைத்தும் அதில் அடித்துச் செல்லப்படுகிறது. அவை எல்லாம் உம்மிடம் இருக்கும் என்று எப்படி நீர் கருதுகிறீர்? ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, ஊசியால் குத்தி எடுக்கப்படும் மைப்பொடி போல ஒவ்வொரு கணமும் வாழ்நாள் குறையும் ஒருவன், எப்படி காலத்தை எதிர்பார்க்கலாம்? அளவற்ற ஆயுள் கொண்டவனோ அல்லது தனது வாழ்நாள் எவ்வளவு என்ற நிச்சயம் கொண்டவனோ, எதிர்காலத்தைத் தன் கண் முன் நடக்கும் நிகழ்வு போல அறிபவனுமே (எதிர்பார்த்த) காலத்தின் வருகைக்காகக் காத்திருக்கலாம்.


ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நாம் நமது வாழ்நாட்களைக் குறைத்து பதிமூன்று {13} வருடங்கள் காத்திருந்தோமானால், அது நம்மை மரணத்திற்கு அருகில் கொண்டு செல்லும். உடலுள்ள எந்த உயிரினத்திற்கும் மரணம் நிச்சயம் வரும். ஆகையால், நாம் இறக்கும் முன்பு நமது நாட்டை அடைய நாம் முயற்சிக்க வேண்டும். எதிரிகளைத் தண்டிக்கத் தவறி, புகழடைவதில் தோல்வியுறுபவன், அசுத்தமான ஒரு பொருளைப் போன்றவனாவான். தடுமாறும் காளையைப் போல புகழற்று அழிந்து போகக்கூடியவன் இந்தப் பூமிக்குத் தேவையற்ற பாரமாகவே இருப்பான். எதிரிகளைத் தண்டிக்காமல் பலமற்று, வீரமற்று வீணாக ஒருவன் வாழ்ந்தால், அவன் தாழ்ந்த பிறவியாகவே கருதப்படுவான். போர்க்களத்தில் எதிரிகளைக் கொன்று உமது கரத்தின் பலத்தால் பெற்ற செல்வத்தை அனுபவியும். உமது கரங்களால் தங்கத்தைப் பொழிய முடியும்; உமது புகழ் உலகெங்கும் பரவும்.

ஓ அனைத்து எதிரிகளையும் ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, ஓ மன்னா, தனக்குத் தீங்கிழைத்தவனைக் கொல்வதால் ஒருவன் அன்றே நரகத்திற்குச் சென்றாலும், அந்த நரகம் கூட அவனுக்கு சொர்க்கமாக மாறும். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, ஒருவன் கோபத்தை அடக்குவதால் உண்டாகும் வலி உணர்ச்சி நெருப்பை விட எரிச்சல் நிறைந்ததாக இருக்கும். இப்போது கூட நான் அதனால் எரிந்து கொண்டுதான் இருக்கிறேன். என்னால் பகலிலோ இரவிலோ உறங்க முடிவதில்லை. பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்} என்று அழைக்கப்படும் பிருதையின் {குந்தியின்} இந்த மகன், வில் நாணை இழுப்பதில் முதன்மையானவனாவான். அவன் {அர்ஜுனன்} குகைக்குள் வாழும் சிங்கத்தைப் போல இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், நிச்சயமாக துக்கம் அவனை எரித்துக் கொண்டுதான் இருக்கிறது. பூமியில் உள்ள அனைத்து வில்லாளிகளின் துணையும் இல்லாமல் எதிரிகளைக் கொல்ல நினைக்கும் அவன், பலம் வாய்ந்த யானையைப் போல, தனது நெஞ்சத்தில் எழும் கோபத்தை அடக்கிக் கொண்டிருக்கிறான்.

நகுலன், சகாதேவன், வீரர்களின் தாயான முதிர்ந்த குந்தி ஆகியோர் உம்மைத் திருப்திப்படுத்தவே ஊமையாக இருக்கின்றனர். அவர்களுக்குச் சமமாக சிரீன்ஜயர்களும் நமது நண்பர்கள் அனைவரும், உம்மைத் திருப்தி செய்ய எண்ணுகின்றனர். நானும் பிரதிவிந்தியனின் தாயும் {திரௌபதியும்} மட்டுமே துயரத்தில் எரிந்து உம்மிடம் இதுகுறித்துப் பேசுகிறோம். நான் உம்மிடம் என்னவெல்லாம் பேசுகிறேனோ, அவையெல்லாம் துக்கத்தில் மூழ்கி போருக்கு ஆவலாகக் காத்திருக்கும் இவர்கள் அனைவருக்கும் ஏற்புடையதே. ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரரே}, அலட்சியப்படுத்தத்தக்க பலவீனமானவர்களால் நமது நாடு கவரப்பட்டு, அவர்களால் அந்த நாடு அனுபவிக்கப்படுவதை விட வேறு என்ன பேரிடர் நமக்கு வர வேண்டும்?

ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது பலவீனமான மனதாலேயே, நீர் செய்து கொடுத்த உறுதிமொழியை மீற வெட்கப்படுகிறீர். ஆனால், ஓ எதிரிகளைக் கொல்பவரே, இந்த உமது மனநிலையாலும் உமது அன்பாலும் இந்தக் கொடிய வலியைத் தாங்கிக் கொள்வதை யாரும் மெச்சமாட்டார்கள். வேதங்களை அதன் பொருள் உணராது மனப்பாடம் செய்யும் மடமையும் அறியாமையும் கொண்ட உயர் பிறவிகளைப் போல, உமது அறிவு உண்மையைக் காணவில்லை. நீர் அந்தணர்களைப் போல அன்பாக இருக்கிறீர். நீர் எப்படி க்ஷத்திரியக் குலத்தில் பிறந்தீர்? க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவர்கள் பொதுவாக குரூர புத்தி உள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

நீர், மனுவால் உரைக்கப்பட்ட குரூரமான, கபடமான, அமைதிவழிகளுக்கும் அறத்திற்கும் எதிரான அரச கடமைகளைக் கேட்டிருக்கிறீர். பிறகு ஏன், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நீர் தீய திருதராஷ்டிரன் மகன்களை மன்னிக்கிறீர்? உமக்கு அறிவும், வீரமும் கல்வியும், உயர்ந்த பிறப்பும் இருக்கிறது. ஓ மனிதர்களில் புலியே, செய்ய வேண்டிய காரியத்தில் முயற்சியில்லாமல் பெரும்பாம்பு போல அசையாமல் ஏன் இருக்கிறீர்?

ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரரே}, எங்களை மறைக்க விரும்புபவன், இமயத்தின் மலைகளை, கைப்பிடி புல்லால் மறைக்க விரும்புகிறான். ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, உலகம் முழுவதும் நீர் அறியப்பட்டவராதலால், மனிதர்களை அறியாமல் எப்படி சூரியனால் முழு வானத்தைக் கடக்க முடியாதோ அப்படி உம்மால் யாராலும் அறியப்படாமல் இருக்க முடியாது. நீர் நிறைந்த இடத்தில் கிளை பரப்பி, மலர்களுடனும், இலைகளுடனும் இருக்கும் பெரும் மரம் போல அல்லது இந்திரனின் யானையைப் {ஐராவதத்தைப்} போல இருக்கும் ஜிஷ்ணுவால் {அர்ஜுனானால்} எப்படி யாராலும் அறியப்படாமல் இருக்க முடியும்? இளம் சிங்கங்களைப் போல இருக்கும் நமது தம்பிகளான இந்தப் பிள்ளைகள் நகுலனும் சகாதேவனும் எப்படி கமுக்கமாக {இரகசியமாக} வாழ முடியும்? ஓ பிருதையின் {குந்தியின்} மகனே {யுதிஷ்டிரரே}, துருபதனின் மகளும் , இளவரசியும் , வீரர்களின் தாயும், அறச் செயல்களுக்காக உலகம் முழுவதும் அறியப்பட்ட இந்தக் கிருஷ்ணை {திரௌபதி} எப்படி யாரும் அறியாமல் வாழ முடியும்? என்னைப் பிள்ளைப் பருவத்தில் இருந்து அனைவரும் அறிவர். யாரும் அறியாமல் நான் எப்படி வாழ முடியும் என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தச் செயல் மேருவின் மலைகளை மறைக்க முயல்வதற்குச் சமமானது.

நம்மால் அவர்களது நாடுகளில் இருந்து விரட்டப்பட்ட பல மன்னர்கள் இருக்கிறார்கள். நம்மால் நாடுகடத்தப்பட்ட, செல்வங்கள் அபகரிக்கப்பட்ட இந்த மன்னர்களும் இளவரசர்களும் நமக்கு நண்பர்கள் இல்லையாகையால், அவர்கள்,  திருதராஷ்டிரனின் தீய மகன்களைத் தொடர்வார்கள். திருதராஷ்டிரனுக்கு நன்மை செய்ய விரும்பும் அவர்கள், நிச்சயம் நம்மைக் காயப்படுத்தவே எண்ணுவார்கள். நிச்சயம் அவர்கள் நமக்கு எதிராக எண்ணிலடங்கா ஒற்றர்களை ஏவுவார்கள். அவர்கள் நம்மைக் கண்டுபிடித்து அவர்களுக்குச் சொன்னால், பெரும் ஆபத்தில் நாம் மூழ்குவோம். நாம் ஏற்கனவே பதிமூன்று {13} மாதங்களைக் கானகத்தில் கழித்துவிட்டோம். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, அவற்றையே பதிமூன்று வருடங்களாகக் கருதிக் கொள்ளும். சோமத்திற்கு ஈடாக மூலிகைப்பானை கருதப்படுவதைப் போல, ஒரு வருடத்திற்கு ஒரு மாதம் ஈடாகும் என்று ஞானமுள்ளவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அல்லது, ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, புனிதமான சுமைகளைச் சுமக்கும் அமைதியான காளைக்கு நல்ல சுவையான உணவைக் கொடுத்து இந்தப் பாவத்தில் இருந்து நீர் விடுபடலாம். ஆகையால், ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, உமது எதிரிகளைக் கொல்லத் தீர்மானியும். ஒவ்வொரு க்ஷத்திரியனுக்கும் போரைத் தவிர உயர்ந்த அறம் கிடையாது!" என்றான் {பீமன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்