Wednesday, January 01, 2014

நளனைக் கண்டு எழுந்த பெண்கள் - வனபர்வம் பகுதி 55

The women sprang up seeing Nala | Vana Parva - Section 55 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தேவர்கள் நளனை தமயந்தியிடம் தூது அனுப்புதல்; நளனைக் கண்டு ஆச்சரியமடைந்த பெண்கள் எழும்புதல்; தமயந்தி நளன் உரையாடல்...

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "ஓ பாரதா {யுதிஷ்டிரா}, நளன் தேவர்களிடம், "நான் அதைச் செய்வேன்" என்று வாக்குறுதி கொடுத்தான். அதன் பிறகு அவர்கள் முன் கை கட்டியபடி அணுகி, "நீங்கள் யார்? என்னைத் தூதுவனாகக் கொள்ள விரும்பும் நபர் யார்? மேலும், இனி நான் உங்களுக்குச் செய்ய வேண்டியது என்ன? உண்மையாக எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். நிஷாத மன்னன் {நளன்} இப்படிப் பேசியதும் மகவத் {இந்திரன்} அவனிடம் {நளனிடம்}, "நாங்கள் தமயந்திக்காக இங்கு வந்திருக்கும் இறவாதவர்கள் {Immortals தேவர்கள்} என்று அறிந்து கொள். நான் இந்திரன், இவன் அக்னி, இவன் நீர்த்தேவன் {வருணன்}, ஓ மன்னா {நளனே}, இவனே மனிதர்களின் உடலை அழிக்கும் யமன். எங்கள் வருகையை தமயந்தியிடம் "உலகப் பாதுகாவலர்களான, பெரும் இந்திரனும் மற்றவர்களும் {உனது} சுயம்வரத்தைக்காண விரும்பி சபைக்கு வர இருக்கின்றனர். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்கள் உன்னை அடைய விரும்புகின்றனர். ஆகையால், அவர்களில் ஒருவரை நீ தலைவனாகக் கொள்" என்ற வார்த்தைகளில் சொல்" என்றான் {இந்திரன்}.


சக்ரனால் {இந்திரனால்} இப்படிச்சொல்லப்பட்ட நளன் கூப்பிய கரங்களுடன், "நானும் அதே காரியத்தை நாடியே வந்திருக்கிறேன். என்னை நீங்கள் (தூது) அனுப்புவது தகாது. ஒருவன் தானே காதலின் ஆளுகையில் இருக்கும் போது, அவன் ஒரு {அந்த} மங்கையிடம் மற்றவர்களுக்காக எப்படி பரிந்து பேச முடியும்? ஆகையால் தேவர்களே என்னை விட்டுவிடுங்கள்" என்றான். இருப்பினும் தேவர்கள், "ஓ நிஷாதர்களின் ஆட்சியாளனே {நளனே}, "நான் செய்வேன்" என்று முதலில் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதன் படி நடக்க ஏன் இப்போது மறுக்கிறாய்? ஓ நிஷாதர்களின் ஆட்சியாளனே {நளனே} காலந்தாழ்த்தாமல் இதைக் குறித்து எங்களுக்குச் சொல்" என்றனர்.

பிருகதஸ்வர் தொடர்ந்தார், "தேவர்களால் இப்படிச் சொல்லப்பட்ட நிஷாதர்களின் ஆட்சியாளன் {நளன்}, "அந்த மாளிகைகள் நன்றாக பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்குள் நுழைய முடியும் என்று எவ்வாறு நான் நம்புவது?" என்று மீண்டும் பேசினான். அதற்கு இந்திரன், "உன்னால் நுழைய முடியும்" என்று மறுமொழி கூறினான். "அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன நளன் அதன் பிறகு தமயந்தியின் அரண்மனைக்குச் சென்றான். அங்கே வந்து, அழகால் பிரகாசிப்பவளும், அங்கங்கள் யாவும் உரிய உருவத்தில் அற்புதமாகக் கொண்டவளும், மிக மென்மையான உறுப்புகள் கொண்டவளும், கொடியிடையும், அழகான கண்களும் கொண்டவளான விதரப்ப மன்னனின் மகள் {தமயந்தி},  பணிப்பெண்களால் சூழப்பட்டிருப்பதைக் கண்டான். தனது சுய பிரகாசத்தால், சந்திரனின் ஒளியைப் பழிப்பது போல அவள் தெரிந்தாள். இனிய புன்னகை கொண்ட அந்த மங்கையை அப்படியே அவன் பார்த்துக் கொண்டிருந்ததால் நளனின் காதல் அதிகரித்தது. ஆனால் உண்மையைக் காக்க விரும்பிய அவன், தனது ஆசையை அடக்கிக் கொண்டான்.

பிரகாசமிக்க அந்த நிஷாதனைப் {நளனைப்} பார்வையில் கண்டதும், பெண்களின் முதன்மையான அவர்கள், ஆச்சரியமடைந்து, தங்கள் இருக்கைகளில் இருந்து ஊற்றென எழும்பினர். (அவனைக் {நளனைக்} கண்ட பார்வையில்) ஆச்சரியத்தால் நிறைந்து, இதய மகிழ்ச்சியோடு நளனைப் புகழ்ந்தனர். எதையும் பேசாமல் அவர்கள் "ஓ, என்ன அலங்காரம்? ஓ, இந்த உயர் ஆன்மா கொண்டவனுக்கு என்ன கனிவு? யாரிவன்? தேவனா? யக்ஷனா? அல்லது கந்தர்வனா?" என்று மானசீகமாக நினைத்து அவனுக்கு மரியாதை செலுத்தினர். அந்தப் பெண்களில் முதன்மையானவர்கள் நளனின் பிரகாசத்தாலும், அவர்களுக்கு ஏற்பட்ட நாணத்தாலும் ஆச்சரியத்துடன் கூடிய குழப்பமடைந்து, அவனை அணுகிப் பேசாதிருந்தனர்.

தமயந்தியும் வியப்பால் தாக்கப்பட்டிருந்தாலும், போர்க்குணமுள்ள நளன் புன்னகைத்தவாறே தானும் புன்னகைத்துக் கொண்டு, "ஓ களங்கமற்ற குணங்கள் கொண்டவரே, காதலை எனக்குத் தூண்டி விட வந்திருக்கும் நீர் யார்? ஓ பாவமற்றவரே, ஓ தேவ உரு கொண்ட வீரரே, இங்கு வந்திருக்கும் நீர் யார் என்று அறிய ஆவலாய் இருக்கிறேன். மேலும், நீர் ஏன் இங்கு வந்திருக்கிறீர்? எனது மாளிகை நன்கு பாதுகாக்கப்பட்டது என்றும் மன்னரின் ஆணைகள் கடுமையானவை என்று கருதி வரும் வேளையில், நீர் எப்படி யாரும் அறியாமல் இருக்கிறீர்?" என்று கேட்டாள்.

விதரப்ப மன்னனின் மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட நளன், "ஓ அழகான மங்கையே, எனது பெயர் நளன் என்பதை அறிந்து கொள். நான் இங்கு தேவர்களின் தூதுவனாக வந்திருக்கிறேன். சக்ரன் {இந்திரன்}, அக்னி, வருணன், யமன் ஆகிய தேவர்கள் உன்னை அடைய விரும்புகிறார்கள். ஓ அழகான மங்கையே, அவர்களில் ஒருவரை நீ உனது தலைவனாகத் தேர்ந்தெடு. அவர்களின் சக்தியாலேயே நான் யாரும் பார்க்காதவாறு நான் இங்கு நுழைந்தேன். இதன் காரணமாகவே எனது வழியில் என்னை யாரும் காணவில்லை அல்லது எனது நுழைவைத் தடுக்கவில்லை. ஓ கனிவானவளே {தமயந்தி}, இந்த காரியத்துக்காகவே நான் தேவர்களில் முதன்மையானவர்களால் அனுப்பப்பட்டேன். ஓ பேறு பெற்றவளே, இதைக் கேட்டு, உனக்கு மகிழ்ச்சி தருவதைச் செய்" என்றான் {நளன்}.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்