Wednesday, January 01, 2014

உமக்காகவே நான் உயிர் விடுவேன் - வனபர்வம் பகுதி 56

I will die for thy sake | Vana Parva - Section 56 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளனிடம் தமயந்தி, தான் அவனை விரும்புவதாகச் சொல்வது; நளன் தேவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்குமாறு தமயந்தியிடம் சொல்வது;  தமயந்தி பழியற்ற ஒரு வழியைச் சொல்வது; தமயந்தியைச் சந்தித்த செய்தியை தேவர்களிடம் நளன் கூறுவது...

பிருகதஸ்வர் சொன்னார், "தேவர்களை வணங்கிய தமயந்தி, இப்படிச் சொன்ன நளனிடம் புன்னகையுடன், "ஓ மன்னா {நளரே}, உரிய முறையில் என்னிடம் அன்பு கொண்டு {காதல் கொண்டு}, நான் உமக்கு என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு கட்டளையிடுவீராக. நானும், எனக்கு உரியதாக இருக்கும் எல்லா செல்வங்களும் உமதே. ஓ மேன்மையானவரே, முழு நம்பிக்கையுடன் கூடிய உமது அன்பை {காதலை} எனக்கு அருளும். ஓ மன்னா, அன்னங்கள் பேசிய மொழி என்னை எரித்துக் கொண்டிருக்கின்றன. ஓ வீரரே, உமக்காகவே நான் இந்த மன்னர்களின் கூடுகையைக் கூட்டியிருக்கிறேன். ஓ உரிய மரியாதை தருபவரே, உம்மை வணங்கும் என்னை நீர் கைவிட்டீரென்றால், உமக்காகவே நான் விஷத்தையோ, நெருப்பையோ, நீரையோ, {தூக்கு} கயிறையோ நாடுவேன்" என்றாள் {தமயந்தி}.

விதரப்ப மன்னனின் {பீமனின்} மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட நளன், அவளிடம், "லோகபாலர்கள் இருக்கும்போது, நீ மனிதனையா தேர்ந்தெடுப்பாய்? உனது இதயத்தை அந்த உயர் ஆன்ம தலைவர்களிடம், உலகத்தை உண்டாக்கிவர்களிடம் திருப்பு. அவர்களின் பாத தூசுக்குக்கூட நான் சமானமாக மாட்டேன். இறப்பைக் கொண்ட மனிதன் {mortal}, தேவர்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தினால் மரணத்தைச் சந்திப்பான். ஓ களங்கமற்ற உறுப்புகளைக் கொண்டவளே {தமயந்தி}, என்னைக் காப்பாற்று! எல்லாவற்றையும் விஞ்சும் தேவர்களைத் தேர்ந்தெடு. தேவர்களை ஏற்பதால், நீ கறையில்லா ஆடைகளையும், பலவண்ண தெய்வீக மாலைகளையும், அற்புதமான ஆபரணங்களையும் அனுபவிப்பாய். பூமி முழுவதையும் சுருக்கி, திரும்பவும் விழுங்குகின்ற தேவர்களில் தலைவனான ஹுதாசனனை {அக்னியை} எந்தப் பெண்தான் தனது தலைனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? தனது கதாயுத்தின் அசைவால், அனைத்து உயிரினங்களையும் அறத்தின் பாதையில் நடத்துபவனை {யமனை}, எந்தப் பெண்தான் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? தேவர்களுக்குத் தலைவனும், தைத்தியர்கள் மற்றும் தானவர்களைத் தண்டிப்பவனும், அறம்சார்ந்த உயர் ஆன்ம மகேந்திரனை {இந்திரனை}, எந்தப் பெண்தான் தனது தலைவனாகத் தேர்ந்தெடுக்க மாட்டாள்? அல்லது, உனது இதயத்தில் லோகபாலர்களில் ஒருவனான வருணனைத் தேர்ந்தெடுத்தால், தயக்கமின்றி அதைச் செய். இதை நட்பின் அறிவுரையாக ஏற்றுக் கொள்" என்றான் {நளன்}.

இப்படி அந்த நிஷாதனால் {நளனால்} சொல்லப்பட்ட தமயந்தி, கண்ணீரால் கண்கள் நீராட, துயரத்துடன் நளனிடம், "ஓ பூமியின் தலைவா, அனைத்து தேவர்களையும் வணங்கி, நான் உம்மை என் தலைவனாகத் தேர்ந்தெடுக்கிறேன். இதை நான் உமக்கு உண்மையாகவே சொல்கிறேன்" என்றாள். தேவர்களின் தூதுவனாக வந்த அந்த மன்னன், கரங்கள் கூப்பி நடுங்கிக் கொண்டிருந்த தமயந்தியிடம், "ஓ இனியவளே, நீ விரும்பியவாறே செய். ஓ அருளப்பட்டவளே, நான் தேவர்களுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு, மற்றவர் காரியமாக வந்து, எனது சொந்த நலனை நான் எப்படி நாட முடியும்? அறம் சார்ந்து எனது நலனை நாட முடியும் என்றால் நான் நாடுவேன். ஓ அழகானவளே, நீயும் அதன்படியே செய்" என்றான் {நளன்}.

பிறகு, பிரகாசமிக்க புன்னகை கொண்ட தமயந்தி, மன்னன் நளனிடம் கண்ணீரால் தடைபற்ற குரலுடன் மெதுவாக, "ஓ மனிதர்களின் தலைவா, நான் பழியற்ற வழியொன்றைக் காண்கிறேன். அப்படிச் செய்தால் எந்தப் பாவமும் உம்மை அணுகாது. ஓ மன்னா {நளனே}, ஓ மனிதர்களில் முதன்மையானவரே, இந்திரனின் தலைமையில் வந்துள்ள அனைத்து தேவர்களுடன் நீரும் சுயம்வரத்திற்கு வாரும். ஓ ஏகாதிபதி {நளரே}, அங்கே, அந்த லோகபாலர்களின் முன்னிலையில், ஓ மனிதர்களில் புலியே, நான் உம்மைத் தேர்ந்தெடுப்பேன். அப்போது உம்மீது எந்தப் பழியும் ஏற்படாது" என்றாள்.

ஓ ஏகாதிபதியே {யுதிஷ்டிரா}, விதரப்ப மன்னனின் மகளால் {தமயந்தியால்} இப்படிச் சொல்லப்பட்ட மன்னன் நளன், தேவர்கள் ஒன்றாகத் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினான். அந்தப் பெரும் தேவர்களை அவன் அணுகுவதைக் கண்ட லோகபாலர்கள், ஆர்வத்துடன் என்ன நடந்தது என்பதை விசாரிக்க, அவனிடம், "ஓ மன்னா {நளா}, இனிய புன்னகை கொண்ட தமயந்தியைக் கண்டாயா? அவள் எங்களைக் குறித்து என்ன சொன்னாள்? ஓ பாவமற்ற ஏகாதிபதியே {நளா}, எங்களுக்கு அனைத்தையும் சொல்" என்று கேட்டனர்.

நளன், "உங்களால் கட்டளையிடப்பட்ட நான், கோலைக் {தடியைக்} கைகளில் தாங்கி, மூத்த {அனுபவம் வாய்ந்த} காவலர்களால் காக்கப்பட்ட, உயர்ந்த நுழைவாயில்களைக் கொண்ட தமயந்தியின் அரண்மனைக்குள் நுழைந்தேன். உங்களது சக்தியின் தன்மையால், நான் அங்கு நுழைந்த போது, அந்த இளவரசியைத் {தமயந்தியைத்} தவிர யாரும் என்னைக் காண வில்லை. நான் அவளது பணிப்பெண்களைக் கண்டேன். அவர்களும் என்னைக் கண்டார்கள். ஓ மேன்மையான தேவர்களே, மேலும், என்னைக்கண்டதும் அவர்கள் அனைவரும் ஆச்சரியத்தால் நிறைந்தனர். நான் அவளிடம் பேசிய போது, அந்த அழகான முகம் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, ஓ தேவர்களில் சிறந்தவர்களே, அவளது விருப்பத்தை என் மேல் நிலைக்க வைத்து என்னை {அவளுக்கான துணையாகத்} தேர்ந்தெடுத்தாள். அந்த மங்கை {தமயந்தி}, "ஓ மனிதர்களில் புலியே, தேவர்கள் உம்முடன் சுயம்வரத்திற்கு வரட்டும். அவர்களது முன்னிலையில் நாம் உம்மைத் தேர்ந்தெடுக்கிறேன். இதனால், ஓ பலம்வாய்ந்த கரங்கள் கொண்டவரே {நளரே}, உம்மை எந்தப் பழியும் சேராது" என்றாள். தேவர்களே, இதுவே நான் சொன்னவாறு அங்கு நடந்தது. தேவர்களில் முதன்மையானவர்களே {லோகபாலர்களே}, கடைசியாக {இனி} அனைத்தும் உங்களைச் சார்ந்தே இருக்கிறது" என்றான் {நளன்}.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்