Saturday, January 04, 2014

விதர்ப்பம் சென்ற பிள்ளைகள் - வனபர்வம் பகுதி 60

Children were sent toVidarbha | Vana Parva - Section 60 | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

நளன் சூதில் அனைத்தையும் இழந்துவிடுவான் என்று எதிர்பார்த்த தமயந்தி, தேரோட்டியை அழைத்து தனது பிள்ளைகளை விதரப்ப்ப நாட்டில் இருக்கும் தனது தந்தை பீமனிடம் அழைத்துச் செல்ல வேண்டுவது. தேரோட்டியும் அவ்வாறே செய்வது...

பிருகதஸ்வர் சொன்னார், "ஓ மன்னா {யுதிஷ்டிரா} பீமனின் மகளான கலக்கமற்ற தமயந்தி, நேர்மையான மன்னன் {நளன்} பகடையால் உணர்விழந்திருப்பதைக் கண்டு, அச்சத்திலும் துயரத்திலும் மூழ்கினாள். மன்னன் செய்யும் இக்காரியம் மிகத்தீவிரமானது என்று அவள் {தமயந்தி} நினைத்தாள். நளனை அச்சுறுத்திக் கொண்டிருந்த பேரிடரின் தொடர்ச்சியைக் கண்டு, தனது தலைவன் {நளன்} அனைத்தையும் தொலைத்துவிட்டான் என்பதைப் புரிந்து, அவனுக்கு {நளனுக்கு} நன்மை செய்ய வேண்டி, பெரும் புகழ்வாய்ந்த, தன் மேல் நல்ல நோக்கம் கொண்ட, அனைத்துக் கடமைகளையும் குதூகலமாகச் செய்யும், நம்பிக்கையும் இனிமையான பேச்சும் கொண்ட பிருகத்சேனை என்ற பணிப்பெண்ணை அழைத்து, "ஓ பிருஹத்சேனா, இங்கிருந்து சென்று நளரின் பெயரால் அமைச்சர்களை அழைத்து, செல்வத்தில் எதுவெல்லாம் தோற்கப்பட்டது, எவை நம்மிடம் மீதம் எஞ்சியிருக்கிறது என்பதைச் சொல்" என்று சொல்லி அனுப்பினாள்.


நளனின் அழைப்பைக் கேட்ட அமைச்சர்கள், "இது நமக்கு நற்பேறே" என்று சொல்லி மன்னனை அணுகினர். இரண்டாவது முறையும் வந்த குடிமக்களைக் கண்ட பீமனின் மகள் {தமயந்தி}, நளனிடம் அதைத் தெரிவித்தாள். ஆனால் மன்னன் {நளன்} அவளை மதிக்கவில்லை. தனது வார்த்தைகளை தனது கணவன் கருதவில்லை என்பதைக் கண்டு, மிகவும் நாணி, தனது உள் அறைக்கு {அந்தப்புரத்திற்குத்} திரும்பினாள். தொடர்ச்சியாக பகடை அறம்சார்ந்த நளனுக்குச் சாதகமாக இல்லை, அவன் அனைத்தையும் இழந்துவிட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் தனது பணிப்பெண்ணிடம், "ஓ பிருஹத்சேனா, திரும்பவும் நளரின் வார்த்தைகளை, ஓ அருளப்பட்டவளே, தேரோட்டியான வார்ஷ்ணேயனிடம் சுமந்து செல். இப்போது கையில் இருக்கும் காரியம் மிகவும் தீவிரமானது" என்றாள். தமயந்தியின் வார்த்தைகளைக் கேட்ட பிருஹத்சேனை, வார்ஷ்ணேயனை நம்பிக்கைக்குரிய பணியாட்களை அனுப்பி அழைத்தாள்.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ற நடத்தையுள்ள களங்கமற்ற பீமனின் மகள் {தமயந்தி}, அந்தச்சூழ்நிலைக்குத் தக்கவாறு மென்மையான வார்த்தைகளால், "உன்னிடம் மன்னர் எப்படி நடந்து கொள்வார் என்பது உனக்குத் தெரியும். அவர் இப்போது சிரமத்தில் இருக்கிறார். ஆகவே அவருக்கு உதவுவதே உனக்குத் தகும். * புஷ்கரனிடம் மன்னர் {நளர்} எந்த அளவு தோற்கிறாரோ அவ்வளவு அந்த விளையாட்டின் மீதான தீவிரம் அதிகரிக்கிறது. புஷ்கரனுக்குக் கீழ்ப்படிந்தே பகடை விழுகிறது. அவை {பகடை} விளையாட்டில் நளருக்குச் சாதகமாக இல்லை என்று காணப்படுகிறது. அந்த {பகடை} விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வார்த்தையை அவர் கேட்பதில்லை. ஏன் எனது வார்த்தைகளையே கூட அவர் {நளர்} கேட்பதில்லை. இருப்பினும், விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, எனது வார்த்தைகளை அவர் கருதிப்பார்க்க வில்லையெனினும், அந்த உயர் ஆன்ம நிஷாதர் {நளர்} பழிச்சொல்லுக்கு உரியவர் இல்லை. ஓ தேரோட்டியே {வார்ஷ்ணேயரே}, நான் உனது பாதுகாப்பை நாடுகிறேன். என் கட்டளைப்படி நட. என் மனம் எனக்கு ஐயமூட்டுகிறது. மன்னர் துயரத்தை அடையலாம். ஆகவே, நளருக்குப் பிடித்தமான மனோவேகம் கொண்ட குதிரைகளையும், இந்த இரட்டையர்களையும் {எனது மகன் மற்றும் மகளையும்) தேரில் அழைத்துக் கொண்டு குண்டினபுரம் செல். எனது உறவினர்களிடம் {பிறப்பால் உண்டான உறவுகளிடம்{ எனது பிள்ளைகளையும் தேரையும் குதிரைகளையும் கொடுத்துவிட்டு, நீ அங்கேயே தங்கினாலும் சரிதான், அல்லது வேறு ஏதாவது இடத்திற்கு உனது விருப்பபடி செல்வதாக இருந்தாலும் சரிதான்" என்றாள் {தமயந்தி}.

நளனின் தேரோட்டியான வார்ஷ்ணேயன், தமயந்தியின் இவ்வார்த்தைகளை விவரமாக மன்னனின் தலைமை அதிகாரிகளிடம் தெரிவித்தான். அவர்களிடம் ஆலோசித்து அவர்களது ஏற்பையும் பெற்றுக் கொண்டு, ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, {நளனின்} குழந்தைகளைத் தேரில் அழைத்துக் கொண்டு விதர்ப்பத்திற்குக் கிளம்பினான். இந்திரசேனன் என்ற ஆண்பிள்ளையையும், இந்திரசேனை என்ற பெண்பிள்ளையையும், தேர்களில் சிறந்த தேரையும், குதிரைகளையும், கொடுத்துவிட்டு, நளனைக் குறித்து இதயத்தில் வருந்திய அந்தத் தேரோட்டி, பீமனிடம் {தமயந்தியின் தந்தையிடம்} பிரியாவிடை பெற்று சென்றான். சிலகாலம் பயணத்தில் உலவிக்கொண்டிருந்தவிட்டு, அயோத்தியா நகரம் சென்றான். அங்கு துக்கம் நிறைந்த இதயத்துடன் மன்னன் ருதுபர்ணனின் முன்னிலையில் நின்று, அந்த ஏகாதிபதிக்குத் தேரோட்டியாகப் பணியில் சேர்ந்தான்.

---------------------------------------------------------
* புஷ்கரன் - நளனுடைய தம்பி


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்