Wednesday, January 08, 2014

வணிகர்களைத் தாக்கிய யானைக் கூட்டம் - வனபர்வம் பகுதி 65அ

Herd of elephants attaked the merchants | Vana Parva - Section 65a | Mahabharata In Tamil

(நளோபாக்யான பர்வத் தொடர்ச்சி)

தமயந்தி சேதி நாட்டுக்குச் செல்லும் வணிகர்கள் கூட்டத்தோடு நளனைக் காணும் ஆவலில் செல்வது; ஒரு தடாகத்தைக் கண்டு அந்த வணிகர் கூட்டம் அங்கே தங்குவது; இரவில் உறங்கிக் கொண்டிருந்த போது ஒரு பெரும் யானைக் கூட்டம் வணிகர்களைத் தாக்கியது...


பிருகதஸ்வர் சொன்னார், "கவிகைகள் தலைவனின் வார்த்தைகளைக் கேட்ட குற்றமற்ற அங்கங்கள் கொண்ட தமயந்தி, தனது தலைவனை {நளனைக்} காணும் ஆவலில் அந்தக் கவிகைகளுடன் சேர்ந்து முன்னேறினாள். இப்படியே பல நாட்கள் சென்ற போது அந்த வணிகர்கள், அந்தப் பயங்கரமான அடர்த்தியான கானகத்தின் நடுவே தாமரை மணம் கமழும் பெரிய தடாகத்தைக் கண்டனர். அது புற்கள் நிறைந்தும், விறகு, கனிகள் மற்றும் மலர்கள் நிறைந்தும், மிக அழகாகவும், காண்பதற்கு மிக இனிமையாகவும் இருந்தது. 


அதில் பல வகைப்பட்ட நீர்க்கோழிகளும், பறவைகளும் வசித்தன. அதில் விழுந்து கொண்டிருந்த நீர் சுத்தமானதாகவும் இனிமையானதாகவும் இருந்தது. மொத்தத்தில் அந்த இடம் முழுவதும் இதயத்தைக் கவர்வதாக இருந்தது. கவிகைகளில் வந்த அந்தக் கூட்டம் மிகவும் களைத்திருந்ததால், அங்கேயே தங்குவதென முடிவெடுத்தது.

அவர்களது தலைவனின் அனுமதியைப் பெற்று, அந்த அழகிய கானகத்தில் ஓய்வெடுத்துக் கொண்டனர். அந்தப் பெரும் கூட்டம் மாலைப் பொழுதிலும் அங்கேயே தங்கினர். நடு இரவில் எல்லாம் அடங்கி அமைதி அடைந்த போது, களைப்பாக இருந்த அந்தக் கூட்டத்தினர் அனைவரும் தூங்கினர். அப்போது மதப்பெருக்கால் கலங்கிய ஒரு யானைக்கூட்டம் அந்தத் தடாகத்தில் நீர் அருந்த வந்து, அங்கிருந்த கூட்டத்தையும் அவர்களுக்குச் சொந்தமான எண்ணிலடங்கா யானைகளையும் கண்டது. மனிதர்களால் பழக்கப்பட்ட அந்த யானைகளைக் கண்ட காட்டு யானைகள் கோபம் கொண்டு மதம் பெருகி கோபத்தோடும் அவற்றைக் கொல்லும் நோக்கத்தோடும் நாட்டு யானைகளை நோக்கி விரைந்தன. மலை முகடுகளில் இருந்து பெயர்ந்த சிகரங்கள் சமவெளியை நோக்கி விரைவது போல விரைந்த அந்த யானைகளின் சக்தி தாங்க முடியாததாக இருந்தது. அந்தத் தாமரைக்குளத்தைச் சுற்றி இருந்த பாதைகளையெல்லாம் அடைத்துக்கொண்டு கவிகைகளில் வந்தக் கூட்டத்தினர் உறங்கிக் கொண்டிருந்தனர். விரைந்து வந்த யானைகள் காட்டுப் பாதைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்டன. திடீரென அந்த யானைகள் அனைத்தும் தரையில் உணர்வற்றுக் கிடந்த மனிதர்களை நசுக்க ஆரம்பித்தன.

"ஓ" "ஐயோ" என்று கதறிய உறக்கத்தால் குருடான அந்த வணிகர்கள், ஆபத்திலிருந்து தப்பிப்பதற்காக பிணங்களையும், புதர்களையும் புகலிடமாகக் கொண்டனர். சிலர் தந்தங்களாலும், சிலர் துதிக்கைகளாலும், சிலர் அந்த யானைகளின் கால்களாலும் கொல்லப்பட்டனர். எண்ணிலடங்கா ஒட்டகங்களும், குதிரைகளும் கொல்லப்பட்டன, நடந்து வந்த மனிதக் கூட்டம் பயத்தால் ஓடி ஒருவரை ஒருவர் {மிதித்து} கொன்றனர். உரக்க கதறிய அவர்களில் சிலர் தரையில் விழுந்தனர். சிலர் பயத்தால் மரங்களில் ஏறினர், சிலர் சமமற்ற தரையில் விழுந்தனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, இப்படி யானைக் கூட்டத்தால் தாக்கப்பட்ட அந்த விபத்தால் அந்தப் பெரும் கூட்டம் பெரிய இழப்பைச் சந்தித்தது. அங்கே எழுந்த பயங்கரமான கதறல் மூன்று உலகங்களையும் பயமுறுத்தியது.

"அதோ பார், பெரும் நெருப்பு", "காப்பாற்றுங்கள்!" "விரைவாக ஓடுங்கள்", "ஏன் ஓடுகிறீர்கள்?". "குவியலில் இருந்து ரத்தினங்கள் விழுகின்றன, எடுங்கள்", "இந்த செல்வம் அனைத்தும் அற்பமாய் போகிறதே", "நான் பொய் சொல்ல மாட்டேன்", "ஓ கவனம் கலைந்தவனே, நான் மறுபடியும் சொல்கிறேன், எனது வார்த்தைகளை நினைத்துப் பார்" இப்படிப்பட்ட கூக்குரல்களுடன் அவர்கள் பயத்தில் ஓடிக் கொண்டிருந்தனர். தமயந்தி பயத்துடனும் துயரத்துடனும் விழித்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த உயிரிழப்புகளைக் கண்டாள். எதிர்பாராமல் நடைபெற்றதும், மூவுலகங்களின் பயத்தைத் தூண்டுவதுமான அந்தப் படுகொலைகளைக் கண்டு, தாமரை இதழ் கண்களைக் கொண்ட அந்த மங்கை {தமயந்தி}, பயத்தால் கடுமையடைந்து, கிட்டத்தட்ட மூச்சை நிறுத்தியபடி விழித்தாள்.

அந்தக் கூட்டத்தில் அடிபடாமல் தப்பியவர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து, தங்களுக்குள், "இந்த நிலை நமக்கு ஏற்பட, நாம் என்ன செய்தோம்? நிச்சயமாக, நாம் சிறப்புமிக்க மணிபத்திரர்களை வணங்கத் தவறிவிட்டோம். அதே போல மேன்மையான அருள் நிறைந்த யக்ஷமன்னன் வைஸ்ரவணனையும் {குபேரனையும்} வணங்கவில்லை. அந்தத் தெய்வங்களை வணங்காததால் தான் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது. நாம் அவர்களுக்குத் தக்க மரியாதை வழங்கவில்லை. ஒருவேளை, நாம் சில பறவைகளைக் கண்டோமே அதனால் இது நிகழ்ந்ததா? நமக்கு நட்சத்திர பலன் நன்மையாய் இல்லை. வேறு எந்தக் காரணத்தால் நமக்கு இந்தப் பேரிடர் சம்பவித்தது?" என்று கேட்டுக் கொண்டனர்.

செல்வங்களையும் உறவினர்களையும் இழந்த வேறு சிலர், "நமது பெரும் கவிகைகளுடன் வந்தாளே ஒரு பைத்தியக்காரி {தமயந்தி}, அவள் மானுடப்பிறவி போலவே இல்லை. அவள் வித்தியாசமாக இருக்கிறாள். அவளின் காரணமாகவே இந்தப் பயங்கர மாயை நடந்தேறியுள்ளது. இது ஏற்கனவே திட்டமிடப் பட்டதாகத்தான் இருக்கும். அவள் {தமயந்தி} நிச்சயமாக ராட்சசியோ அல்லது யக்ஷப் பெண்ணோ அல்லது பிசாசாகவோதான் இருப்பாள். இந்த தீமைகள் அனைத்தும் அவள் வேலைதான். இதில் சந்தேகமென்ன? வணிகர்களை அழித்தவளும், எண்ணிலடங்கா துயரங்களைக் கொடுத்தவளுமான அந்தத் தீயவளை மறுபடியும் கண்டால், நமக்குத் தீங்கைச் செய்த அவளை, கற்களாலும், புழுதியாலும், புற்களாலும், மரத்தாலும், கைமுஷ்டிகளாலும் அடித்துக் கொல்ல வேண்டும்" என்றனர்.

அந்த வணிகர்களின் பயங்கர வார்த்தைகளைக் கேட்ட தமயந்தி, பயத்தாலும், வெட்கத்தாலும், துயராலும், இதன்காரணமாக நமக்குத் தீமை வருமோ என்று எண்ணியும் காட்டுக்குள் ஓடினாள். தன்னைத் தானே நிந்தித்துக் கொண்ட அவள், "ஐயோ, கடவுள் என்னிடம் கொண்டுள்ள கோபம் அதிகமாகவும் கடுமையாகவும் இருக்கிறதே. எனது வழியில் அமைதி ஏற்படவில்லையே. எந்தத் தீச்செயலால் இந்த நிகழ்ச்சி நடந்தது? நினைவாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாருக்கும் சிறு தீமை செய்ததாகவும் எனக்கு நினைவில்லையே. எனது எந்த செயலால் இந்தச் சம்பவம் நடந்தது? நிச்சயமாக, முற்பிறவியில் நான் செய்த பெரும்பாவங்களுக்காகவே நான் இந்தப் பேரிடரில் மூழ்கியுள்ளேன். எனது கணவரின் {நளனின்} நாடு பறிபோனது. தனது உறவினரிடமே அவர் {எனது கணவர்} தோல்வியுற்றார். தலைவன், மகன், மகள் ஆகியோரைப் பிரிந்து, பாதுகாப்பற்ற நிலையில் இரைதேடும் விலங்குகள் நிறைந்த இந்தக் கானகத்தில் இருக்கிறேன்." என்று சொல்லிக் கொண்டாள் {தமயந்தி}.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அடுத்த நாள், அந்தக் கூட்டத்தில் எஞ்சிய வணிகர்கள், இறந்து போன தங்கள் சகோதரர்கள், தந்தைகள், மகன்கள், நண்பர்கள் ஆகியோருக்காக வருந்தி அழுது, பிறகு அந்த இடத்தை விட்டுச் சென்றனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்