Sunday, January 19, 2014

காம்யகத்தை விட்டுப் பெயரலாம் என்றான் சகாதேவன்! - வனபர்வம் பகுதி 80

"We may migrate Kamyaka" said Sahadeva! | Vana Parva - Section 80 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வம்)

அர்ஜுனன் இல்லாத கானகத்தைக் கண்டு யுதிஷ்டிரனிடம் புலம்பும் திரௌபதியும், பாண்டவர்களும்…

ஜனமேஜயன் சொன்னான், "ஓ புனிதமானவரே {வைசம்பாயனரே}, எனது முப்பாட்டனான பார்த்தன் {அர்ஜுனன்}, காம்யக வனத்தைவிட்டுச் சென்ற பிறகு, இடது கையாலும் வில்லை இழுக்கும் அந்த வீரன் {அர்ஜுனன்} தங்களுடன் இல்லாத போது {மற்ற} பாண்டுவின் மகன்கள் என்ன செய்தார்கள்? எதிரிகளை வீழ்த்தும் அந்தப் பெரும் பலம்வாய்ந்த வில்லாளியே, தேவர்களுக்கு விஷ்ணுவைப் போல, அவர்களுக்கு {பாண்டவர்களுக்கு} ஒரே புகலிடம் என்று எனக்குத் தெரிகிறது. இந்திரனைப் போன்ற வீரம் கொண்டு போரில் புறமுதுகிடாத அந்த வீரனின் {அர்ஜுனனின்} துணையில்லாதிருந்த எனது பாட்டன்கள், தங்கள் நாட்களை எப்படிக் கடத்தினர்?"


வைசம்பாயனர் சொன்னார், "கலங்கடிக்க முடியாத வீரம் கொண்ட அர்ஜுனன் காம்யக வனத்தை விட்டுச் சென்றதும், ஓ மகனே {ஜனமேஜயா}, பாண்டுவின் மகன்கள் துக்கத்திலும் துயரத்திலும் மூழ்கினர். உற்சாகமற்ற இதயம் கொண்ட அந்தப் பாண்டவர்கள், சரத்தில் இருந்து உதிர்ந்த முத்துக்கள் போலவும், சிறகிழந்த பறவைகள் போலவும் இருந்தனர். குபேரன் இல்லாத சைத்திரரத வனம் போல, வெண்குதிரைகளைக் கொண்ட அந்த வீரன் இல்லாத கானகம் இருந்தது. ஓ ஜனமேஜயா, அந்த மனிதர்களில் புலிகளான பாண்டுவின் மகன்கள் அர்ஜுனனின் துணையை இழந்து உற்சாகமற்ற மனநிலையுடனேயே அந்தக் காம்யக வனத்தில் தொடர்ந்து வாழ்ந்தனர். ஓ பாரதகுலத்தின் தலைவா {ஜனமேஜயனே}, அந்தப் பலம் பொருந்திய போர் வீரர்கள், சுத்தமான கணைகளைக் கொண்டு, பெரும் பராக்கிரமத்துடன் அந்தணர்களின் வேள்விக்கான விலங்குகளை அடித்தனர். அந்த மனிதர்களில் புலிகளான எதிரிகளை ஒடுக்குபவர்கள், தினமும் காட்டு விலங்குகளைக் கொன்று, முறைப்படி அதைச் சுத்தப்படுத்தி, அந்தணர்களிடம் கொடுத்தனர்.

ஓ மன்னா {ஜனமேஜயா}, இப்படியே அந்த மனிதக் காளைகள், அர்ஜுனனின் பிரிவால் துயரத்துடனும் உற்சாகமற்ற இதயங்களுடனும் வாழ்ந்தனர். குறிப்பாக பாஞ்சால இளவரசி {திரௌபதி}, தனது மூன்றாவது தலைவனை நினைத்து வருந்தி, யுதிஷ்டிரனிடம், "தனது இருகரங்களால், ஆயிரம் கரம் கொண்ட (பழங்கால) அர்ஜுனனையே {கார்த்தவீரியார்ஜுனன்} எதிர்க்கவல்லவர் அர்ஜுனர். பாண்டு மகன்களில் முதன்மையான அவர் இல்லாத இந்தக் கானகம் அழகற்றதாக எனது கண்களுக்குத் தெரிகிறது. அவரில்லாத இடத்தில் எனது பார்வை படும்போது, பூமி களையிழந்து காணப்படுகிறது. பூத்துக் குலுங்கும் மரங்களாலும், அற்புதங்கள் நிறைய வைத்திருந்தாலும் அர்ஜுனர் இல்லாத இந்தக் கானகம் மகிழ்ச்சியற்றதாகவே இருக்கிறது. நீல மேகக் குவியல் போலவும், மதம் கொண்ட யானையின் பராக்கிரமத்துடனும், தாமரை இதழ்கள் போன்ற கண்களும் உடைய அந்த வீரர் இல்லாத இந்தக் காம்யக வனம் எனக்கு அழகாகத் தெரியவில்லை. ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, இடியைப் போன்ற கர்ஜனையைக் கொடுக்கும் வில்லொலியை எழுப்புபவரும், இடது கையாலும் வில்லை இழுக்கவல்லவரும், அந்த வீரரை {அர்ஜுனரை} நினைத்து, என்னால் மகிழ்ச்சி கொள்ள முடியவில்லை" என்றாள் {திரௌபதி}.

ஓ ஏகாதிபதி {ஜனமேஜயா}, மன அழுத்தத்தால் உண்டான அவளது புலம்பலைக் கேட்ட எதிரி வீரர்களைக் கொல்பவனான பீமன், திரௌபதியிடம், "ஓ கொடியிடை கொண்ட அருளப்பட்ட மங்கையே, அமுதத்தைப் பெருமடக்காகக் குடிப்பது போல உள்ள உனது ஏற்புடைய வார்த்தைகளைக் கேட்டு எனது இதயம் மகிழ்கிறது. சமச்சீராக நீண்டு, இரண்டு இரும்பு கதாயுதங்கள் போல பருத்து, உருண்டு, வில்லின் நாணால் உண்டான காயங்களுடனும், வில் வாள், மற்ற ஆயுதங்களுடன் இரண்டு ஐந்து தலை நாகங்களைப் போல இருக்கும் கரங்களைக் கொண்ட அந்த மனிதப் புலி இல்லாமல், சூரியன் இல்லா வானம் போல இருக்கிறோம். அந்த பெரும் பலம்வாய்ந்த கரங்களைக் கொண்டவனை நம்பியே பாஞ்சாலர்களும் கௌரவர்களும், கடும் முயற்சியுடைய தேவர்களுக்குக் கூடப் பயப்படுவதில்லை. அந்த வீரனை நம்பியே நாம் நமது எதிரிகள் ஏற்கனவே வீழ்த்தப்பட்டதாகவும், பூமி ஏற்கனவே அடையப்பட்டதாகவும் கருதி வருகிறோம். அப்படிப்பட்ட அந்த பல்குனன் {அர்ஜுனன்} இல்லாமல் நான் இந்த காம்யக வனத்தில் அமைதியை அடைய முடியவில்லை. வேறு பக்கங்களில் நான் எனது பார்வையைத் திருப்பினாலும், அனைத்தும் எனக்கு வெறுமையாகவே தெரிகிறது.

பீமன் முடித்ததும், பாண்டுவின் மகனான நகுலன் கண்ணீரால் தடைபட்ட குரலுடன், "போர்க்களத்தில் இயல்புக்குமிக்க சாதனைகள் செய்து தேவர்களையும் பேச வைக்கும் அந்த வீரர்களில் முதன்மையானவர் {அர்ஜுனர்} இல்லாத இந்த வனத்தில் நாம் என்ன இன்பங்களை அடைய முடியும்? வடதிசை சென்று நூற்றுக்கணக்கன கந்தர்வத் தலைவர்களை வீழ்த்தி, காற்று போன்ற பெரும் வேகம் கொண்ட எண்ணிலடங்கா தித்திரி, கல்மாஷ வகையிலான அழகான குதிரைகளைக் கொணர்ந்தார். அப்படிக் கொணர்ந்து, பெரும் ராஜசூய வேள்வியின் போது, தனது அண்ணனான மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பாசத்தால் பரிசளித்த அந்தச் சிறப்புமிக்கவரும், பீமருக்குப் பின் பிறந்த அந்தப் பயங்கரப் போர்வீரரும், தேவர்களுக்கு இணையானவருமான அந்த வீரர் {அர்ஜுனர்} இல்லாத இந்தக் காம்யக வனத்தில் மேலும் வாழ எனக்கு விருப்பமில்லை" என்றான் {நகுலன்}.

நகுலனின் புலம்பல்களுக்குப் பிறகு, சகாதேவன், "போர்க்களத்தில் பல பலம்பொருந்திய வீரர்களை வீழ்த்தி, பெரும் செல்வத்தையும், கன்னிகைகளையும் கொண்டு வந்து, மன்னனுக்கு {யுதிஷ்டிரருக்கு} பெரும் ராஜசூய வேள்வியின் போது கொடுத்தவர், அந்த அளவில்லா பிரகாசம் கொண்ட வீரர், போர்க்களத்தில் அணிவகுத்து நின்ற *யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர். சிறப்புமிக்க துருபதனின் பகுதியின் மேல் படையெடுத்து, ஓ பாரதரே {யுதிஷ்டிர்ரே} துரோணருக்குத் தனது குரு தட்சணையைக் கொடுத்தவர் அந்த வீரர். ஓ மன்னா {யுதிஷ்டிரரே}, நமது ஆசிரமத்தில் இருக்கும் அந்த ஜிஷ்ணுவின் {அர்ஜுனரின்} புல் படுக்கையைக் கண்டு எனது இதயம் ஆறுதல் இல்லாமல் தவிக்கிறது. ஓ எதிரிகளை ஒடுக்குபவரே {யுதிஷ்டிரரே}, அந்த வீரர் இல்லாத இந்தக் கானகம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. ஆகவே இந்தக் கானகத்தை விட்டு சென்றுவிடுவதே நலம் என நான் கருதுகிறேன்" என்றான் {சகாதேவன்}.
***********************************************************************
*யாதவர்களை தனியொருவராக வீழ்த்தி, வாசுதேவனின் {கிருஷ்ணனின்} சம்மதத்துடன் சுபத்திரையைக் கடத்தி வந்தவர்.

மேலும் விவரங்களுக்கு கீழே சொடுக்கவும்:
"சுபத்திரையைக் கடத்து!" என்றான் கிருஷ்ணன் - ஆதிபர்வம் பகுதி 221

சுபத்திரையைக் கடத்தினான் அர்ஜுனன் - ஆதிபர்வம் பகுதி 222


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்