Monday, February 24, 2014

கங்கையின் அருள் பெற்ற பகீரதன்! - வனபர்வம் பகுதி 108

Bhagiratha attained grace from Ganga! | Vana Parva - Section 108| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

தனது மூதாதையர்களின் நிலையை அறிந்த பகீரதன், ஆட்சியை அமைச்சரிடம் ஒப்படைத்து விட்டு இமயத்தில் தவம் செய்வது; கங்கையைக் கண்டு அவளது அருளைப் பெறுவது; கங்கை சொன்ன நிபந்தனை; பகீரதன் சிவனை நோக்கி தவம் இருந்தது; பகீரதன் சிவனின் அருளைப் பெற்றது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பெரும் பலம்வாய்ந்த வில்லையும், பலம்வாய்ந்த தேரையும் கொண்ட அம்மன்னன் {பகீரதன்}, அச்சூழ்நிலையில் தலைமையேற்று (அரியணை ஏறி) இந்த உலகத்தின் ஆன்மாவாகவும், அதன் கண்களுக்குக் காண்பதற்கு இனியவனாகவும் இருந்தான். அந்தப் பலம் நிறைந்த கரங்கள் கொண்டவன் பலம்வாய்ந்த ஆன்மாக் கொண்ட கபிலரால் தனது மூதாதையர்களுக்கு ஏற்பட்ட துயரமான நிலையையும், அவர்கள் தேவலோகம் அடைய முடியாத நிலையையும் அறிந்தான். ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} அவன் மன்னனுக்குரிய தனது அரச கடமைகளை அமைச்சரிடம் ஒப்படைத்துவிட்டு தவமியற்ற பனி நிறைந்த மலையை {இமயத்தை} அடைந்தான்.


ஓ! மனிதர்களில் புகழ்மிக்கவனே {யுதிஷ்டிரா}, தவ வாழ்வின் மூலம் தனது பாவங்களை அழித்து, அதன் காரணமாகக் கங்கையின் உதவியை அடைய அவன் {பகீரதன்} மலைகளில் முதன்மையான இமயத்தை அடைந்தான். அங்கே அவன் {பகீரதன்} அதன் சிகரங்களில் வித்தியாசமான தாதுக்களைக் கண்டான். அங்கே மேகத் துளிகள் சிதறி காற்றோடு பயணித்தன. நதிகள், தோப்புகள், (நகரத்தில் இருக்கும் பல} அரண்மனைகள் போன்ற பாறை முடுக்குகளுடன் அம்மலை இருந்தது. குகைகளிலும், பள்ளங்களிலும் சிங்கங்களும் புலிகளும் பதுங்கியிருந்தன. வித்தியாசமாக ஒலியெழுப்பும் பலவண்ண பறவைகளால் அவ்விடம் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. அங்கே வண்டுகளும், அன்னங்களும், நீர்க்காக்கைகளும், நீர்க்கோழிகளும், மயில்களும், நூறு இறகுகள் கொண்ட பறவைகளும், ஜீவஞ்சீவங்களாலும், குயில்களாலும், கருத்த நிறம் கொண்ட சக்கோரங்களாலும், குஞ்சுகளிடம் அன்பொழுகும் பறவைகளாலும் அவ்விடம் நிறைந்திருந்தது.

அந்த மலையில் நீர்நிறைந்த அழகிய இடங்களில் தாமரைகள் அடர்ந்திருப்பதைக் கண்டான் {பகீரதன்}. அங்கே நாரைகளின் இனிய ஒலிகளுடன், கின்னரர்களும் அப்சரஸ்களும் கற்பாறைகளில் அமர்ந்திருந்தனர். முக்கியமான இடங்களை ஆக்கிரமித்த யானைகள் அங்கிருந்த மரங்களைத் தங்கள் துதிக்கைகளால் திருடின. வித்தியாதர்கள் அங்கே அடிக்கடி வந்து சென்றனர். பலதரப்பட்ட ரத்தினங்கள் நிறைந்து, கடும் விஷம் கொண்ட பிரகாசிக்கும் நாக்குடைய பாம்புகள் நிறைந்தும் இருந்தது அம்மலை. அந்த மலையில் சில பகுதிகள் தங்கம் போலவும், மற்றவை வெள்ளி போவும் பிரகாசித்தன. சில இடங்களில் அது (பழுப்பு நிற) அஞ்சன {மருந்துக்} குவியல் போலவும் காட்சி அளித்தது. அந்தப் பனி நிறைந்த மலையில் மன்னன் {பகீரதன்} தன்னை அமர்த்திக் கொண்டான். மனிதர்களில் மிகவும் புகழத்தக்க அவன் அந்த இடத்தில் அமர்ந்து கடும் தவம் இயற்றினான். ஆயிரம் {1000} வருடங்களுக்கு அவன் நீர், கனி மற்றும் கிழங்குகள் தவிர வேறு எதையும் உட்கொள்ளவில்லை. இருப்பினும் தேவர்களின் கணக்குப்படி ஆயிரம் வருடங்கள் கழிந்ததும், பெரும் நதியான கங்கை, பொருளுரு கொண்டு {பௌதீக உருவெடுத்து [material form]}, அவனுக்கு (தெய்வீகக்) காட்சியளித்தாள்.

கங்கை {பகீரதனிடம்}, "ஓ! பெரும் மன்னா, நீ என்னிடம் என்ன விரும்புகிறாய்? நான் உனக்கு எதை அருள வேண்டும்? ஓ! மனிதர்களில் மிகவும் புகழத்தக்கவனே அதை என்னிடம் சொல்! நீ சொல்வதை நான் செய்கிறேன்" என்றாள். இப்படிச் சொல்லப்பட்ட அம்மன்னன் {பகீரதன்}, அந்தப் பனிநிறைந்த மலையின் மகளான கங்கையிடம், "ஓ! வரமருளுபவளே! ஓ பெரும் நதியே, எனது தந்தையின் தந்தைகள், குதிரையைத் தேடிய போது, கபிலரால் மரணத் தேவன் வசிப்பிடத்திற்கு அனுப்பப்பட்டார்கள். சகரனின் அந்த அறுபதாயிரம் மகன்களின் பலம் வாய்ந்த ஆன்மா, கம்பீரமான கபிலரால் ஒருக்கணத்தில் அழிக்கப்பட்டன. இப்படி அழிக்கப்பட்டதால் அவர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் கிடைக்கவில்லை. ஓ! பெரும் நதியே, நீ அவர்களின் உடலில் உனது நீரைத் தெளிக்காத வரை அவர்களுக்கு முக்தி கிடையாது. ஓ! அருளப்பட்ட தேவதையே, சகரனின் மகன்களான எனது மூதாதையார்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல். ஓ! பெரும் நதியே, அவர்கள் நிமித்தமாகவே நான் உன்னை வேண்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றான்.

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "உலகத்தால் வணங்கப்படும் தேவதையான கங்கை, மன்னனின் {பகீரதனின்} இவ்வார்த்தைகளைக் கேட்டு மிகவும் திருப்தி கொண்டு பகீரதனிடம், "ஓ! பெரும் மன்னா! நீ என்னிடம் கேட்பதை நான் செய்யத் தயாராக இருக்கிறேன்; அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், நான் வானத்தில் இருந்து பூமிக்கு இறங்கும் போது, நான் விழும் வேகம் தாங்க முடியாததாக இருக்கும். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {பகீரதா}! தெய்வங்களில் மிகவும் போற்றத்தக்க கருநீல மிடறு {தொண்டை} கொண்ட அந்தப் பெருந்தலைவனான சிவனைத் தவிர, அந்த வேகத்தைத் தாங்கும் சக்தி கொண்டவர் மூவுலகிலும் வேறு யாருமிலர். ஓ பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே)! தவம் பயில்வதன் மூலம் அந்த வரங்கள் அருள்பவரான சிவனின் உதவியை அடைய முயற்சி செய். அந்தத் தெய்வம் எனது வீழ்ச்சியைத் தனது தலையில் தாங்கிக் கொள்வார். ஓ! மன்னா {பகீரதா}, உனது தந்தைகளுக்கான சேவையின் நிமித்தமான உனது விருப்பத்தை அவர் நிறைவேற்றுவார்" என்றாள் {கங்கை}.

இதைக் கேட்ட பெரும் மன்னனான பகீரதன் கைலாச மலைக்குச் சென்று கடும் நோன்புகள் நோற்று, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அருளைக் கொடுப்பவனின் (சிவனின்) உதவியைப் பெற்றான். ஓ! மனிதர்களின் பாதுகாவலா {யுதிஷ்டிரா}, அந்த மனிதர்களில் சிறந்தவன் {பகீரதன்}, தனது மூதாதையர்களுக்குச் சொர்க்கத்தில் இடம் பெறுவதின் பொருட்டு, விழும் கங்கையைச் சிவன் தாங்கும் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டான்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்