Tuesday, February 25, 2014

பகீரதன் மகளாகிய கங்கை! - வனபர்வம் பகுதி 109

Bhagiratha made Ganga as his daughter! | Vana Parva - Section 109| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

பகீரதனிடம் சிவன் கங்கையைத் தாங்கிக் கொள்வதாக ஏற்பது; விண்ணிலிருந்த கங்கை மண்ணில் பாய்வது; பகீரதன் கங்கைக்கு வழி காட்டி கடலை அடையச் செய்தது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "பகீரதன் சொன்னதைக் கேட்ட அந்த அருளப்பட்ட தெய்வம் {சிவன்}, தேவலோகவாசிகளுக்கு ஏற்புடையதைச் செய்ய எண்ணி அம்மன்னனிடம் {பகீரதனிடம்}, "அப்படியே ஆகட்டும். ஓ! மனிதர்களைக் காப்பவர்களில் மிகவும் நேர்மையானவனே, ஓ! பெரும் பலம்வாய்ந்த வலுத்த கரம் கொண்டவனே (இளவரசனே), சுத்தமானவளும், அருளப்பட்டவளும், தெய்வீகமானவளுமான தேவர்களின் நதி {கங்கை} வானத்தில் இருந்து வீழும்போது, உனக்காக நான் அவளைத் தாங்கிக் கொள்கிறேன்" என்றான். இப்படிச் சொல்லிய அவன் {சிவன்}, வித்தியாசமான ஆயுதங்களை உயர்த்திப் பிடித்தவாறு, பரிதாபகரமான முகங்களுடன் இருந்த தனது சேவகர்களுடன் பனி மலைக்கு  வந்தான். அங்கேயே நின்றவாறு மனிதர்களில் மிகவும் போற்றத்தக்க பகீரதனிடம், "ஓ! பலம் நிறைந்த கரங்கள் கொண்டவனே (இளவரசனே), மலைகளின் மன்னனுடைய {சைலராஜன் = மலைகளின் மன்னன்} மகளான அந்த நதியை {கங்கையை} வேண்டிக் கொள். நதிகளில் மிகவும் போற்றத்தக்க அவள் {கங்கை} உலகத்தின் மூன்றாவது பகுதியில் {சொர்க்கத்தில்} இருந்து வீழும் போது, நான் அவளைத் தாங்கிக் கொள்வேன்" என்றான் {சிவன்}.

சிவனால் உச்சரிக்கப்பட்ட இந்த வார்த்தைகளைக் கேட்டதும் மன்னன் {பகீரதன்} (இதயத்தில்) பக்தியுடன் தனது வணக்கங்களைச் செய்து, தனது சிந்தனையைக் கங்கையை நோக்கித் திருப்பினான். பிறகு அந்தக் காண்பதற்கினிய (நதி) சுத்தமான நீரைக் கொண்டவள் மன்னனால் {பகீரதனால்} நினைக்கப்பட்டதும், அந்தப் பெரும் தெய்வம் (சிவன்), (வீழும் தன்னைப் பெற) நிற்பதைக் கண்டு, திடீரென வானத்தில் இருந்து கீழே வந்தாள். வானத்தில் இருந்து அவள் குதித்ததைக் கண்ட தேவர்கள் பெரும் தவசிகளுடனும், கந்தர்வர்களுடன், பாம்புகளுடனும், யக்ஷரகளுடனும் பார்வையாளர்களாக அங்கே கூடி நின்று பார்த்தனர். பிறகு பனி மலையின் மகளான கங்கை வானத்தில் இருந்து கீழே வந்தாள். மீன்களும் சுறாக்கள் நிறைந்த நீர்ச்சுழிகளுடன் பொங்கிப் பெருக வந்தாள்.

ஓ! மன்னா {யுதிஷ்டிரா}, கடலை நோக்கிச் சென்ற அவள் {கங்கை} தன்னை மூன்று ஓடைகளாகப் பிரித்துக் கொண்டாள். அவளது நீர் நுரைக்குவியலால் சூழப்பட்டிருந்தது. பல வெண் நாரைகளின் அணிவகுப்பைப் போல இருந்தது அது {நுரைக்குவியல்} இருந்தது. நுரை எனும் ஆடையை உடுத்திச் செல்லும் அவள் {கங்கை} ஓரிடத்தில் விரிந்தும், வேறிடத்தில் வளைந்தும், சில இடங்களில் தடுமாறியும் செல்லும் மது மயக்கத்திலுள்ள மங்கையைப் போல இருந்தாள். இன்னும் பிற இடங்களில் அவள் தனது நீரடிப்பின் தன்மையால் பெரும் கர்ஜனை செய்தாள். வானத்தில் இருந்து விழும்போதே இதுபோன்ற பல விதமான செயல்கள் புரிந்து பூமியை அடைந்த அவள் {கங்கை} பகீரதனிடம், "ஓ! பெரும் மன்னா {பகீரதா}, நான் செல்ல வேண்டிய பாதையை எனக்குக் காண்பி. ஓ பூமியின் தலைவா, நான் உனக்காகவே இந்தப் பூமியில் இறங்கினேன்" என்றாள் {கங்கை}.

அதனால், ஓ! மனிதர்களில் மிகவும் போற்றத்தக்கவனே {யுதிஷ்டிரா}, இந்த வார்த்தைகளைக் கேட்ட மன்னன் பகீரதன், பெரும் பலம்வாய்ந்த சகர மைந்தர்களின் உடல்களை அந்தப் புனிதமான நீர்,  நிறைக்கும் பொருட்டு அந்த உடல்கள் {உடல்களின் எச்சம்} கிடந்த இடத்தின் வழியாக செல்லுமாறு தனது பாதையை அமைத்துக் கொண்டான். மனிதர்களால் வழிபடப்பட்ட சிவன், கங்கையைத் தாங்கிக் கொண்ட பணியைச் சாதித்ததும், மலைகளில் போற்றத்தக்க கைலாசத்துக்குத் தேவர்களுடன் சென்றான். பிறகு அந்த மனிதர்களின் பாதுகாவலன் {பகீரதன்} கங்கையை அழைத்துக் கொண்டு கடலை அடைந்தான். வருணனின் வசிப்பிடமான அந்தக் கடலும் விரைவில் நிரம்பியது.

பிறகு அம்மன்னன் {பகீரதன்} கங்கையைத் தனது மகளாகச் சுவீகரித்துக் கொண்டு, தனது மூதாதையர்கள் பெயரில் நீர்க்கடன் செலுத்தி, இதய விருப்பம் நிறைவடைந்தவன் ஆனான். ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, நீ கேட்டுக் கொண்டதற்கிணங்க, கங்கை மூன்று ஓடைகளாகப் பிரிந்து ஓடி, பூமியை அடைந்து, எப்படி கடலை நிரப்பினாள்; குறித்த காரியத்திற்காக அகஸ்தியர் எப்படிக் கடலைக் குடித்தார்; அந்தணர்களைக் கொன்ற வாதாபியை அகஸ்தியர் எப்படி அழித்தார் என்ற வரலாற்றுகளைச் சொல்லிவிட்டேன்" என்றார் லோமசர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்