Wednesday, February 05, 2014

தௌமியரிடம் பேசிய யுதிஷ்டிரன்! - வனபர்வம் பகுதி 86

TamilYudhishthira spoke to Dhaumya | Vana Parva - Section 86 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனன் இல்லாத துயரத்தில் இருந்த யுதிஷ்டிரன், தௌமியரிடம் காம்யகத்தில் வசிக்க தனக்கு விருப்பமில்லை எனவும், வேறு இடம் ஏதாவது சொல்லுங்கள் எனவும் கோருதல்.... 

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "புத்திகூர்மை கொண்ட நாரதரின் கருத்தையும், தனது தம்பிகளின் கருத்துகளையும், உறுதிபடுத்திக் கொண்ட மன்னன் யுதிஷ்டிரன், பெருந்தகப்பனைப் {பிரம்மாவைப்} போல இருந்த தௌமியரிடம், "வீழ்த்தப்பட முடியாத வீரமும், நீண்ட கரங்களும், அளவிடமுடியாத புத்திகூர்மையும் கொண்ட மனிதர்களில் புலியான ஜிஷ்ணுவை {அர்ஜுனனை} ஆயுதங்கள் அடைவதற்காக நான் அனுப்பிவிட்டேன். ஓ துறவை செல்வமாகக் கொண்டவரே {தௌமியரே}, திறனுடனும், ஆயுதங்களில் நிபுணத்துவத்துடனும், மேன்மையான வாசுதேவனுக்கு {கிருஷ்ணனுக்கு} இணையான தன்மையுடனும், எனக்கு அர்ப்பணிப்புள்ளவனுமாக அந்த வீரன் {அர்ஜுனன்} இருந்தான்.


ஓ அந்தணரே {தௌமியரே}, எதிரிகளை அழிப்பவர்களும், பராக்கிரமம் நிறைந்தவர்களுமான கிருஷ்ணனையும், அர்ஜுனனையும், சக்தி வாய்ந்த வியாசர் எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறாரோ அந்த அளவு நானும் அவர்கள் இருவரையும் குறித்து அறிந்து வைத்திருக்கிறேன். வாசுதேவனும், தனஞ்சயனும் {அர்ஜுனனும்} ஆறு பண்புகள் கொண்ட விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் இல்லை என்பதையும் அறிந்திருக்கிறேன். இது நாரதரும் அறிந்ததே. அவர் {நாரதர்} என்னிடம் இது குறித்து எப்போதும் பேசியிருக்கிறார். அவர்கள் இருவரும் நரன், நாராயணன் என்ற முனிவர்கள் என்பதையும் நான் அறிவேன். திறனுள்ளவன் {அர்ஜுனன்} என்பதை அறிந்தும் நான் அவனை {அர்ஜுனனை} (இப்பணிக்காக {ஆயுதம் அடையும் பணிக்காக}) அனுப்பினேன். இந்திரனுக்குச் சற்றும் குறையாத (பணி முடிக்க) முழுத் திறமை கொண்ட அந்தத் தெய்வ மகனை {son of god}, தேவர்கள் தலைவனைக் {இந்திரனைக்} காணவும், அவனிடம் {இந்திரனிடம்} இருந்து ஆயுதங்களைப் பெறவும் அனுப்பி வைத்தேன்.

பீஷ்மரும் துரோணரும் அதிரதர்கள். கிருபரும், துரோணரின் மகனும் {அஸ்வத்தாமனும்} வெல்லப்படமுடியாதவர்கள்; பெரும்பலம் வாய்ந்த இந்த வீரர்களைத் திருதராஷ்டிரனின் மகன் {துரியோதனன்} தனது படைத்தலைவர்களாக நியமித்திருக்கிறான். இவர்கள் அனைவரும் வேதமறிந்தவர்கள்; வீரர்கள்; அனைத்து ஆயுதங்களின் அறிவையும் பெற்றவர்கள். பெரும் பலம் கொண்ட இவர்கள் அனைவரும் அர்ஜுனனிடம் போரிட எப்போதும் விருப்பமுடியவர்கள்.

தெய்வீக ஆயுதங்களை அறிந்த சூத சாதியைச் சேர்ந்த கர்ணனும், பெரும் பலம் வாய்ந்த போர்வீரனாவான். ஊக்கம் கொண்ட அவனது ஆயுதங்களின் நிமித்தமாக அவன் வாயுத்தேவனின் பலத்தைக் கொண்டிருக்கிறான். அவனே {கர்ணனே} நெருப்புச் சுடராக இருக்கும்போது அவனது அம்புகள் அந்நெருப்பின் நாக்குகளாக இருக்கின்றன. தோலுறையிட்ட அவனது இடது கையின் அறைகள் {slaps - அடிகள்} சுடரின் படப் படவெனும் சத்தத்தைக் கொடுக்கின்றன. {கர்ணன் என்ற நெருப்புக்கு} போர்க்களத்தின் தூசியே புகையாக இருக்கிறது. காற்றால் உந்தப்பட்ட நெருப்பு போல, திருதராஷ்டிரனின் மகன்களால் உந்தப்பட்ட கர்ணன், யுக முடிவில் அனைத்தையும் எரிக்கும் மரணத்தால் அனுப்பப்பட்ட நெருப்பைப் போல, வைக்கோல் குவியலைப் போன்ற எனது துருப்புகள் அத்தனையையும் சந்தேகமற உட்கொண்டுவிடுவான்.

தாங்க முடியாத காண்டீவம் என்ற வானவில்லுக்கு  அடியில் வரிசையாகத் தெரியும் வெண் குதிரைகள் என்ற வெண்நாரைகளுடனும், தெய்வீக ஆயுதங்கள் என்ற கடும் மின்னலுடனும், அர்ஜுனன் என்ற பலம்பொருந்திய மேகக்குவியல், கிருஷ்ணன் என்ற பலம்வாய்ந்த காற்றின் துணை கொண்டு,  கர்ணன் எனும் பிரகாசிக்கும் சுடரைத் தனது {அர்ஜுனனின்} கணைகள் என்ற மழையால் தடுமாற்றமில்லாத உறுதியுடன் அணைக்க முடியும்.

மேற்கண்ட வாக்கியம் படிக்கச் சிரமமாக இருப்பதாக எனக்குப் படுகிறது. ஆகையால் ஒரு சிறு விளக்கம். {காண்டீவம் = வானவில், வெண்குதிரைகள் = வெண் நாரைகள், அர்ஜுனன் = மேகக்குவியல், கிருஷ்ணன் = காற்று, கர்ணன் = நெருப்பு, அர்ஜுனனின் கணைகள் = மழை. இதை,}

{"தான் ஏந்தியிருக்கும் வானவில்லுக்கடியில் தெரியும் வெண் நாரைகளால் இழுக்கப்படும் மேகக்குவியல், காற்றின் உந்துதலால் நெருப்பிடம் சென்று கடும் மின்னலுடன் மழையைப் பொழிந்து அந்நெருப்பை அணைப்பது போல,  காண்டீவத்துக்கு அடியில் தெரியும் வெண்குதிரைகளால் இழுக்கப்படும் அர்ஜுனன், கிருஷ்ணனால் உந்தப்பட்டு, தெய்வீக ஆயுதங்களுடன் கர்ணனிடம் சென்று கணைகளைப் பொழிந்து அவனைக் கொல்ல முடியும்" என்றும் படிக்கலாம்.}

{"மேகக்குவியலான அர்ஜுனன், வானவில்லான காண்டீவத்தைப் பிடிக்கும்போது, அந்த வானவில்லான காண்டீவத்துக்கு அடியில் தெய்வீக ஆயுதங்கள் மின்னலைப் போலவும், மேகக்குவியலான அவனை இழுத்துச் செல்லும் குதிரைகள் நாரைகள் [கொக்குகள்] போலவும் தெரியும். அப்போது, கிருஷ்ணன் என்ற காற்றின் உந்துதலால், கர்ணன் என்ற நெருப்பினிடம், அர்ஜுனன் என்ற மேகக்குவியல் சென்று, தனது கணைகள் என்ற மழையைப் பொழியும்போது கர்ணன் என்ற நெருப்பு அணைந்துவிடும்" என்றும் படிக்கலாம்.}

எதிரி நகரங்களைக் கைப்பற்றும் பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}, இந்திரனிடம் இருந்து அனைத்து தெய்வீக ஆயுதங்களையும் முழுமையுடனும் உயிரோட்டத்துடனும் அடைவான் என்பதில் சந்தேகமில்லை. தனி ஆளாகவே அவன் அவர்கள் {மேற்சொன்ன வீரர்கள்} அனைவருக்கும் சமம் என்றே நான் நினைக்கிறேன். இல்லையென்றால் போரில் அந்த எதிரிகளை வீழ்த்துவது (எங்களுக்கு) இயலாது. அனைத்து நோக்கங்களிலும் சிறந்த வெற்றியை அடைந்தவர்கள் அவர்கள். தான் ஏற்றுக் கொண்ட பணியில், அதன் பாரம் தாங்காது விழுபவனல்ல பீபத்சு {பீபத்சு} {அர்ஜுனன்}. ஆகையால், எதிரிகளை அடக்கும் அந்த அர்ஜுனன், தெய்வீக ஆயுதங்களின் முழுமையான வசதிகளுடன் திரும்பி வருவதை நாம் காண்போம்.

இருப்பினும், மனிதர்களில் சிறந்த அந்த வீரன் இல்லாமல், கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய எங்களால் {பாண்டவர்களால்}, இந்தக் காம்யகத்தில் {காம்யக வனத்தில்} ஓய்ந்திருக்க இயலவில்லை. ஆகையால், உணவும் கனிகளும் நிறைந்த காண்பதற்கினிய வேறு புனிதமான வனத்தை எங்களுக்குக் குறிப்பிட்டுச் சொல்லும். மேகங்கள் கூடுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கும் *சாதகப் பறவை போலக் கலைக்க முடியாத பராக்கிரமமும், போர்க்குணமும் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கப் போகிறோம். அப்படி நாங்கள் காத்திருக்க பக்திமான்கள் வசிக்கும் கானகமாக அஃது இருக்க வேண்டும். மேலும், மறு பிறப்பாளர்களுக்காக {பிராமணர்களுக்காகத்} திறந்திருக்கும் சில ஆசிரமங்களையும், தடாகங்கள், ஓடைகள், அழகான மலைகள் ஆகியவற்றையும் எங்களுக்குச் சொல்லும். ஓ அந்தணரே {தௌமியரே}, அர்ஜுனன் இல்லாததால், இந்தக் காம்யக வனத்தில் வசிக்க எனக்கு விருப்பமில்லை. நாங்கள் வேறு எங்காவது செல்ல விரும்புகிறோம்" என்றான் {யுதிஷ்டிரன்}.

*********************************************************
* சாதகப் பறவை = கொண்டைக் குயில் = சுத்தமான மழை நீரை மட்டும் அருந்தும் பறவை


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்