Thursday, February 06, 2014

கிழக்கு திசையின் புண்ணிய இடங்கள்! - வனபர்வம் பகுதி 87

Sacred spots of the eastern quarter! | Vana Parva - Section 87| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

கிழக்கு திசையில் உள்ள புனிதமான இடங்களைக் குறித்து யுதிஷ்டிரனுக்குச் சொல்லும் தௌமியர்.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "துயருற்று, ஊக்கங்குறைந்தவர்களாகப் பாண்டவர்கள் இருப்பதைக் கண்ட பிருஹஸ்பதி போன்ற தௌமியர், அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக, "ஓ பாரதக் குலத்தின் காளையே, ஓ பாவங்களற்றவனே {யுதிஷ்டிரனே}, நான் அந்தணர்களால் அங்கீகரிக்கப்பட்ட புனிதமான ஆசிரமங்களையும், பகுதிகளையும், தீர்த்தங்களையும், மலைகளையும் சொல்லும்போது கேட்டுக் கொள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, நான் அவற்றை உரைக்கும்போது, துருபதன் மகளுடனும் {திரௌபதியுடனும்}, உனது தம்பிமாருடன் சேர்ந்து கேட்கும் நீ, ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா} உனது துயரத்தில் இருந்து விடுபடுவாய். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, இதைக் கேட்பதாலேயே நீ பலன்களை அடைவாய். ஓ மனிதர்களில் சிறந்தவனே, நான் சொல்லும் அந்த இடங்களுக்குப் பயணிப்பதால் அதை விட நூறு மடங்கு பலன்களை அடைவாய்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, முதலில் எனது நினைவில் உள்ளவரை, ஓ யுதிஷ்டிரா, முனிவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அழகான கிழக்குத் திசை நாடுகளைக் குறித்துச் சொல்கிறேன். ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் திசையில், தேவர்களாலும் மதிக்கப்படும் நைமிஷம் என்ற இடம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தேவர்களுக்குச் சொந்தமான பல புனிதமான தீர்த்தங்கள் இருக்கின்றன. அங்கே தேவர்களால் வழிபடப்படும் அழகான மற்றும் புனிதமான கோமதி {நதி} இருக்கிறது. தேவர்களின் வேள்விப் பகுதியும், சூரியனின் வேள்விக் கம்பமும் அங்குதான் இருக்கின்றன. அந்தப் பகுதியில் அரசத் துறவிகளால் பெரிதாக மதிக்கப்பட்டுக் கயை என்று அழைக்கப்படும் மலைகளில் சிறந்த புனிதமான மலை இருக்கிறது. அந்த மலையில் தேவர்களால் வழிபடப்பட்டுப் பிரம்மசரம் என்று அழைக்கப்படும் மங்களகரமான தடாகம் ஒன்று இருக்கிறது. ஒரு மனிதனின் மகன்களில் ஒருவனாவது கயைக்குப் பயணப்பட வேண்டும் அல்லது குதிரை வேள்வியைச் செய்ய வேண்டும் அல்லது நீலக் காளையைத் தானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்வதால் ஒருவனுக்கு முன்பும் பின்புமான பத்துத் தலைமுறைகள் விடுதலை பெறும் என்பதால் தான், பழங்காலத்தவர்கள், ஒரு மனிதன் பல மகன்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கின்றனர்.

ஓ ஏகாதிபதி {யுதிஷ்டிரா}, கயசிரம் என்ற பெயர் கொண்ட அந்தப் பகுதியில் ஒரு பெரும் நதி ஓடுகிறது. கயசிரத்தில் ஓர் ஆல மரம் இருக்கிறது. அங்குப் பித்ருக்குக்குப் படைக்கப்படும் உணவு நித்திய தன்மை பெறுவதால் அந்த ஆல மரத்தை நித்திய ஆலம் என்று அந்தணர்கள் அழைக்கிறார்கள். அந்த இடத்தின் வழியாக ஓடும் பெரும் நதி பல்கு என்று பெயரால் அறியப்படுகிறது. அதன் நீர் புனிதத்தன்மை வாய்ந்தது. ஓ பாரதர்களில் காளையே, அந்த இடத்தில் அதிகமான கிழங்குகளும், பல வகையான கனிகளையும் தனது கரையில் கொண்ட கௌசிகி என்ற நதியும் ஓடுகிறது. அங்கேதான் தவத்தைச் செல்வமாகக் கொண்ட விஸ்வாமித்திரர் தனது அந்தணத் தன்மையை அடைந்தார். அந்தத் திசையில் {கிழக்கில்} தான் புனிதமான கங்கையும் இருக்கிறது. அதன் கரையில் தான் {அந்தணர்களுக்கு} ஏராளமான பரிசுகளுடன் பல வேள்விகளைச் செய்தான் பகீரதன்.

பாஞ்சால நாட்டில் உத்பலாவனம் என்ற காடு இருக்கிறது எனவும், குசிக குலத்தைச் சேர்ந்த விஸ்வாமித்திரர் தனது மகனுடன் சேர்ந்து அங்கு வேள்விகளைச் செய்தார் எனவும், அங்கு மனித சக்திக்கு மீறிய விஸ்வாமித்திரரின் நினைவுச்சின்னத்தைக் கண்ட ஜமதக்னியின் மகன் ராமன் {பரசுராமன்}, தனது வம்சாவளியின் புகழை உரைத்தார் எனவும் சொல்கிறார்கள். காம்யகத்தில், குசிகரின் மகன் {விசுவாமித்திரர்} இந்திரனுடன் சேர்ந்து சோமச்சாற்றைப் பெருமடக்காகக் குடித்தார். பிறகு தனது க்ஷத்திரிய வகையைக் கைவிட்ட அவர் {விசுவாமித்திரர்}, "நான் ஓர் அந்தணன்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

பிரயாகை_அலகாபாத்
உத்திரபிரதேசம்
ஓ வீரனே {யுதிஷ்டிரா}, அந்த இடத்தில் தான் உலகத்தால் கொண்டாடப்படும் கங்கை மற்றும் யமுனையின் சங்கமம் இருக்கிறது. புனிதமானதும், பாவங்களை அழிப்பதுமான அத்தீர்த்தம் முனிவர்களால் மதிக்கப்படுகிறது. பிரயாகை என்று அழைக்கப்படலாயிற்று. ஓ மன்னர்களில் முதன்மையானவனே, இந்தத் திசையில் தான் {கிழக்கு} அகஸ்தியரின் அற்புதமான ஆசிரமமும், பல முனிவர்கள் வசிக்கும் தாபசம் என்ற கானகமும் இருக்கின்றன. அங்கே காலஞ்சர மலைகளில் ஹிரண்யவிந்தம் என்ற பெரும் தீர்த்தம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலைகளில் சிறந்த அகஸ்திய மலை அழகானதும், புனிதமானதும், மங்களகரமானதுமாக இருக்கிறது.



அனைத்துப் பொருட்களுக்கும் ஆன்மாவாக இருக்கும் பெருந்தகப்பனே {பிரம்மனே} பழங்காலத்தில் இங்கே வேள்வி செய்திருக்கிறான். ஓ பாரதக் குலத்தின் தலைவா {யுதிஷ்டிரா} இதன் காரணமாகவே அந்த இடம்

ஓ குருகுலத்தவனே, அங்கே தான், பிருகு குலத்தில் சிறப்புமிக்க ராமனுக்குப் {பரசுராமனுக்குப்} புனிதமான மகேந்திரம் என்றழைக்கப்படும் மலையும் இருக்கிறது. ஓ குந்தியின் மகனே {யுதிஷ்டிரா}, அங்கே பழங்காலத்தில் பெருந்தகப்பன் {பிரம்மா} வேள்விகளை நடத்தியிருக்கிறான். ஓ யுதிஷ்டிரா, அங்கேதான் புனிதமான பாகீரதி ஒரு தடாகத்துக்குள் நுழைந்து, புனிதமான ஆறாக, பலன்கள் அளிக்கும் பிரம்மசரமாக ஆகிறது. பாவங்கள் கழுவப்பட்ட மனிதர்களால் வசிக்கப்படும் அதன் கரையைப் பார்ப்பதாலேயே ஒருவன் பலன்களை அடைந்து விடுகிறான். அந்தத் திசையில் {கிழக்கில்}, கேதாரம் என்று அழைக்கப்படும் உயர் ஆன்ம மதங்கரின் அற்புதமான ஆசிரமம் இருக்கிறது. அது {கேதாரம்} புனிதமானது என்றும், மங்களகரமானது என்றும் உலகத்தால் கொண்டாடப்படுகிறது.

நிஷாதர்களின் மன்னன் {நளன்} தனது தாகத்தைத் தணித்துக் கொண்டு சிறிது நேரம் ஓய்ந்திருந்ததும், கனிகளும், கிழங்குகளும், நீர் நிலைகளும் நிறைந்து இருந்ததும் காண்பதற்கினியதாகவும் இருக்கும் குண்டோதம் என்று அழைக்கப்படும் மலை அங்கேதான் இருக்கிறது. அங்கேதான் துறவிகளால் அருளப்பட்டிருக்கும் காண்பதற்கினிய தேவ வனம் இருக்கிறது. அங்கே இருக்கும் மலையின் உச்சியில்தான் பாகுகா மற்றும் நந்தா நதிகள் இருக்கின்றன. ஓ பெரும் பலம் வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, நான் கிழக்குத் திசையில் இருக்கும் அனைத்துத் தீர்த்தங்கள் மற்றும் புனிதமான இடங்களைச் சொல்லிவிட்டேன். மற்ற மூன்று திசைகளிலும் இருக்கும் புனிதமான தீர்த்தங்கள், நதிகள், மலைகள், மற்றும் புனிதமான இடங்களைக் குறித்துக் கேள்" என்றார் தௌமியர்.



இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்