Tuesday, February 11, 2014

புனிதப்பயணம் ஆரம்பம் - வனபர்வம் பகுதி 93

Pilgrimage begun! | Vana Parva - Section 93| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

யுதிஷ்டிரன் தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைத் தொடங்கல்; அந்தணர்கள் தங்களையும் அழைத்துச் செல்லுமாறு கேட்டல்; யுதிஷ்டிரன் அவர்களை ஏற்றல்; வியாசர், பர்வதர், நாரதர் ஆகியோர் வருகையும் அவர்களது வாழ்த்துகளும்...

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார், "அந்தக் கானகத்தில் (யுதிஷ்டிரனுடன்) வசித்து வந்த அந்தணர்கள், குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்} (பக்திமயமான புனிதப்பயணத்திற்கு) புறப்படுவதைக் கண்டு, ஓ மன்னா {ஜனமேஜயா}, அவனை {யுதிஷ்டிரனை} அணுகி, "ஓ மன்னா {யுதிஷ்டிரா}, புனிதமான தீர்த்தங்களை நோக்கிய உனது பயணத்திற்கு, உனது தம்பிகளுடனும், சிறப்புமிக்க முனிவர் லோமசருடனும் புறப்பட்டுவிட்டாய். ஓ! மன்னா, ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, எங்களையும் உன்னுடன் அழைத்துச் செல். ஓ குரு குலத்தின் மகனே, நீ இல்லாமல் எங்களால் அத்தீர்த்தங்களுக்குப் பயணம் செய்ய முடியாது. ஆபத்துகள் சூழ்ந்ததும், அடைவதற்கு அரிதானதுமான அவற்றில் {தீர்த்தங்கள்} இரை தேடும் விலங்குகளின் தொந்தரவுகளும் அதிகம் இருக்கும்.

ஓ! மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்கள் சிறு குழுக்களில் உள்ள மனிதர்களால் {அந்தணர்களைச் சிறு குழு என்கிறார்களோ என்னவோ} அடைய முடியாதனவாக இருக்கின்றன. வில்லைத் தாங்குபவர்களில் முதன்மையான உனது தம்பிகள் எப்போதும் வீரம் மிகுந்தவர்களாக இருக்கின்றனர். உங்களைப் போன்ற வீரர்களால் பாதுகாக்கப்பட்டு, நாங்களும் அவற்றுக்கு {தீர்த்தங்களுக்கு} முன்னேறுவோம். ஓ பூமியின் தலைவா {யுதிஷ்டிரா}, உனது கருணையால், தீர்த்தங்களால் கிடைக்கும் அருள்நிறைந்த கனியை அடைய அனுமதி கொடு. ஓ மன்னா {யுதிஷ்டிரா}, உனது சக்தியால் பாதுகாக்கப்பட்ட நாங்கள், அந்தத் தீர்த்தங்களை அடைந்து, நீராடி எங்கள் பாவங்களைக் கழுவி கொள்ள விடு. ஓ பாரதா {யுதிஷ்டிரா}, அந்தத் தீர்த்தங்களில் நீராடுவதால், கார்த்தவீரியனும், அஷ்டகனும், அரசமுனியான லோம்பதரும், ஏகாதிபத்திய வீரனுமான பரதனும் மட்டுமே அடைந்திருக்கும் அடைவதற்குக் கடினமான பகுதிகளைச் {உலகங்களைச்} சந்தேகமற நீயும் அடைவாய்.

ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிரபாசத்தையும் மற்றத் தீர்த்தங்களையும், மகேந்திரத்தையும் மற்ற மலைகளையும், கங்கையையும் மற்ற நதிகளையும், பிலக்ஷத்தையும் மற்ற மரங்களையும் {தலவிருட்சங்களையும்- gigantic trees} உன்னுடன் காண விரும்புகிறோம். ஓ மனிதர்களின் தலைவா {யுதிஷ்டிரா}, உனக்கு அந்தணர்களிடத்தில் ஏதும் மதிப்பு இருக்குமானால், தக்க நடவடிக்கையை எடு. இதனால் நீ நிச்சயம் செழிப்பை அடைவாய். ஓ பெரும் பலம் வாய்ந்த கரங்கள் கொண்டவனே {யுதிஷ்டிரா}, அத்தீர்த்தங்கள், தவ நோன்புகளுக்கு எப்போதும் தடையை ஏற்படுத்தும் ராட்சசர்களின் தொல்லைகளால் நிரம்பியிருக்கின்றன. எங்களை அவர்களிடம் இருந்து காத்தலே உமக்குத் தகும். லோமசரால் பாதுகாக்கப்பட்டு, எங்களையும் உடன் அழைத்துக் கொண்டு, தௌமியரும், புத்திகூர்மை கொண்ட நாரதரும் பேசிய தீர்த்தங்களுக்கும், பெரும் தவச் செல்வம் கொண்ட தெய்வீக முனிவரான லோமசர் சொன்னவற்றிற்கும் செல். அப்படிச் செல்வதால் உனது பாவங்கள் அனைத்தும் விலகும்" என்றனர்.

அவர்களால் இப்படி மரியாதையுடன் சொல்லப்பட்ட பாண்டுவின் மகன்களில் காளையான மன்னன் {யுதிஷ்டிரன்}, பீமனால் தலைமைதாங்கப்பட்ட தனது தம்பிகளால் சூழப்பட்டு, ஆனந்தக் கண்ணீருடன் அந்தத் தவசிகளிடம், "அப்படியே ஆகட்டும்" என்றான். பிறகு லோமசர் மற்றும் புரோகிதரான தௌமியரின் அனுமதியுடன், பாண்டு மகன்களில் முதன்மையானவன் {யுதிஷ்டிரன்}, முழு ஆன்மக் கட்டுப்பாட்டுடனும் தீர்மானத்துடனும், தனது தம்பிகளுடனும், துருபதனின் களங்கமற்ற மகளுடனும் {திரௌபதியுடனும்} புறப்பட்டுச் சென்றான். சரியாக அந்த நேரத்தில், அருள்நிறைந்த வியாசரும், புத்திகூர்மை நிறைந்த பர்வதர் மற்றும் நாரதரும் பாண்டுவின் மகனை {யுதிஷ்டிரனைக்} காண அங்கே காம்யகத்திற்கு வந்தனர். அவர்களைக் கண்ட மன்னன் யுதிஷ்டிரன், அவர்களை உரியச் சடங்குகளுடன் வழிபட்டான்.

அந்த ஏகாதிபதியால் {யுதிஷ்டிரனால்} இப்படி வழிபடப்பட்ட அந்த அருளப்பட்டவர்கள் யுதிஷ்டிரனிடம், "ஓ யுதிஷ்டிரா, ஓ பீமா, இரட்டையர்களே {நகுல சகாதேவர்களே}, உங்கள் மனதில் இருந்து தீய எண்ணங்களை அகற்றுங்கள். உங்கள் இதயங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, தீர்த்தங்களுக்குச் செல்லுங்கள். உடல் ரீதியாக விதிகளைக் கடைப்பிடிப்பது பூலோக விரதம் என்றழைக்கப்படுகிறது; அதே வேளையில், தீய எண்ணங்களில் இருந்து விடுபெற இதயத்தைச் சுத்திகரிக்கும் முயற்சி தெய்வீக விரதம் என்று அழைக்கப்படுகிறது என்று அந்தணர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, தீய எண்ணங்களில் இருந்து விடுபட்ட மனது உயர்ந்த தூய்மையைக் கொண்டது. ஆகையால், உங்களைச் சுத்திகரித்துக் கொண்டு, நட்புணர்வுகளை மட்டுமே வளர்த்துத் தீர்த்தங்களைக் காணுங்கள். உடல் சார்ந்து பூலோக விரதங்களைக் கடைப்பிடித்துக் கொண்டே, தெய்வீக விரதங்களால் மனதைச் சுத்திகரிப்பவர்களாக இருந்து, ஏற்கனவே உரைகளில் கேட்டவாறு புனிதப்பயணங்களின் கனிகளை அடைந்து கொள்ளுங்கள்" என்றனர்.

"அப்படியே ஆகட்டும்" என்று சொன்ன கிருஷ்ணையுடன் {திரௌபதியுடன்} கூடிய பாண்டவர்கள், தெய்வீக மற்றும் மனித முனிவர்களை வழக்கமான சடங்குகளைச் {மங்கல வாழ்த்துகளைச்} செய்ய வைத்தனர். ஓ மன்னா {ஜனமேஜயா}, பிறகு அந்த வீரர்கள் {பாண்டவர்கள்}, லோமசர், துவைபாயனர்{வியாசர்}, நாரதர் மற்றும் தெய்வீக முனிவரான பர்வதர் ஆகியோரின் பாதங்களை வழிபட்டு தௌமியருடனும், தங்களுடன் கானகத்தில் இருந்த தவசிகளுடனும் மார்கழியின் {Agrahayana} முழு நிலவிற்கு {பௌர்ணமிக்கு} அடுத்த நாளில் {the day following the full moon of Agrahayana} பூசம் நட்சத்திரத்தில் {Pushya} புறப்பட்டனர். மரவுரியும், மான்தோலும், சடா முடியும் தரித்து, துளைக்கமுடியாத கவசத்துடன் வாள்கள் ஏந்தியவாறு அவர்கள் அனைவரும் இருந்தனர். ஓ ஜனமேஜயா, அம்பறாத்தூணிகளுடனும், கணைகளுடனும், குறுவாள்களுடனும், மற்ற ஆயுதங்களுடனும் இருந்த பாண்டுவின் வீர மகன்கள், இந்திரசேனனுடனும், மற்றப் பணியாட்களுடனும், பல சமையற்காரர்களுடனும், பிற வகைகளைச் சேர்ந்த ஊழியர்களுடனும் பதினைந்து தேர்களில் {fourteen and one cars}, கிழக்கு நோக்கிய முகங்களுடன் புறப்பட்டுச் சென்றனர்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்