Monday, February 10, 2014

துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திரும்பட்டும் - வனபர்வம் பகுதி 92

Let the Brahmanas incapable of toil resist! | Vana Parva - Section 92| Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

அர்ஜுனனின் வார்த்தைகளை யுதிஷ்டிரனிடம் சொன்ன லோமசர்; பரிவாரத்தின் அளவைக் குறைக்கச் சொன்ன லோமசர்; துன்பம் பொறுக்காத அந்தணர்கள் திருதராஷ்டிரனிடம் சென்றது...

லோமசர் {யுதிஷ்டிரனிடம்} தொடர்ந்தார், "ஓ யுதிஷ்டிரா, தனஞ்சயன் {அர்ஜுனன்} என்ன சொன்னான் என்பதை இப்போது கேள். அவன், "எனது அண்ணன் யுதிஷ்டிரனை செழிப்புக்கு வழிகாட்டும் அறப்பயிற்சியில் பங்கெடுக்கச் செய்யும். தவத்தைச் செல்வமாகக் கொண்ட {லோமசரே} நீர்  உயர்ந்த அற நெறிகளையும், அனைத்துவிதமான தவச்சடங்குகளையும், செழிப்பால் அருளப்பட்ட மன்னர்களின் நித்தியமான கடமைகளையும், தீர்த்தங்களால் மனிதர்கள் அடையும் புனிதப்பயன்களையும் அறிந்தவர். தீர்த்தங்கள் சம்பந்தமான பலன்களை அடைய பாண்டுவின் மகன்களைச் சம்மதிக்க வைக்கக் கடவீர். உமது முழு ஆன்மாவுடன் மன்னன் {யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணித்துப் பசுக்களைத் தானம் செய்யச் சம்மதிக்க வைக்கக் கடவீர்." என்றான் {அர்ஜுனன்}.


இதுவே அர்ஜுனன் என்னிடம் சொன்னது. மேலும் அவன் {அர்ஜுனன்}, "உம்மால் பாதுகாக்கப்பட்ட அவர் {மன்னனான அண்ணன் யுதிஷ்டிரன்} தீர்த்தங்களுக்குப் பயணிக்கட்டும். நீர் அவர் கடக்கமுடியா பகுதிகளையும் முரட்டு மலைகளையும் கடக்கும்போதும் கண்காணித்து, ராட்சசர்களிடம் இருந்து அவரைப் பாதுகாப்பீராக. ததீச, இந்திரனைக் காத்தது போலவும், அங்கிரஸ், சூரியனைக் காத்தது போலவும், ஓ மறுபிறப்பாளர்களில் {பிராமணர்களில்} சிறந்தவரே, குந்தியின் மகன்களை நீர் ராட்சசர்களிடம் இருந்து காக்க வேண்டும். வழியில் மலை முகடுகளைப் போன்ற பெரும் ராட்சசர்கள் இருக்கின்றனர். ஆனால் உம்மால் பாதுகாக்கப்பட்ட குந்தியின் மகன்களை அவர்களால் அணுக முடியாது" என்றான் {அர்ஜுனன்}.

இந்திரனின் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்தும், உன்னை ஆபத்துகளில் இருந்து காக்கும்படியான அர்ஜுனனின் பரிந்துரையின் பேரிலும், நானும் உன்னுடன் பயணிப்பேன். ஓ குரு குலத்தின் மகனே {யுதிஷ்டிரனே}, நான் இதற்கு முன் இரு முறை தீர்த்தப்பயணம் {தீர்த்தயாத்திரை} மேற்கொண்டிருக்கிறேன். உன்னுடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நான் பயணப்படப் போகிறேன். ஓ யுதிஷ்டிரா, மனுவும், மெச்சத்தகுந்த செயல்கள் செய்த மற்ற அரச முனிகளும் தீர்த்தங்களுக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டிருக்கின்றனர். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அவற்றுக்குப் பயணம் மேற்கொள்வதால் ஒருவனது பயங்கள் விலகுகின்றன. ஓ கௌரவ்யா {குந்தியின் மகனே யுதிஷ்டிரா} நேர்மையற்ற மனதுடையவர்களும், தங்கள் ஆன்மாவைக் கட்டுக்குள் வைக்காதவர்களும், சொற்கேளாத கல்லாதவர்களும் தீர்த்தங்களில் நீராடுவதில்லை. ஆனால் நீ எப்போதும் அறம்சார்ந்த மனநிலையில் இருக்கிறாய். அறநெறிகளை அறிந்திருக்கிறாய். சத்தியங்களில் உறுதியுடன் இருக்கிறாய். உன்னால் இந்த உலகத்தில் இருந்து நிச்சயம் விடுபட முடியும். ஓ பாண்டுவின் மகனே {யுதிஷ்டிரா}, மன்னன் பகீரதன், கயன், யயாதி அல்லது அவர்களைப் போன்றோரைப் போன்றவன் நீ" என்றார் {லோமசர்}.

யுதிஷ்டிரன், "ஓ அந்தணரே, உமக்குப் பதிலுரைப்பதற்கான வார்த்தைகள் கிடைக்காத அளவுக்கு, எனக்கு மகிழ்ச்சி அதிகரிக்கின்றது. தேவர்கள் தலைவன் {இந்திரன்} என்னை நினைவில் வைத்திருப்பதால், என்னைப் போன்ற நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? உமது சேர்க்கை கிடைத்தவனும், தனஞ்சயனை {அர்ஜுனனைத்} தம்பியாகக் கொண்டவனும், வாசவனால் {இந்திரனால்} நினைக்கப்படுபவனுமான என்னைக் காட்டிலும் நற்பேறு பெற்றவர்கள் யார் இருக்க முடியும்? ஓ சிறப்புமிக்கவரே, தீர்த்தங்களுக்கான புனிதப்பயணத்தைக் குறித்து நீர் சொன்னதுபோலவே, தௌமியரது வார்த்தைகளால் எனது மனது ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது. ஓ அந்தணரே, பரிந்துரைக்கப்பட்டுள்ள தீர்த்தங்களுக்கான புனிதப் பயணத்தை எந்த நேரத்திலும் மேற்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இஃது எனது உறுதியான தீர்மானமாகும்" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "பரிந்துரைக்கப்பட்ட பயணத்துக்காக மனதைத் தயார் செய்திருந்த யுதிஷ்டிரனிடம் லோமசர், "ஓ பலம்வாய்ந்த மன்னா {யுதிஷ்டிரா}, உனது பரிவாரத்தைப் பொறுத்தவரை, அதன் அளவைக் குறைத்துக் கொள். இதனால் நீ செல்வது எளிதாக இருக்கும்" என்றார்.

பிறகு யுதிஷ்டிரன், "பசி தாகத்தைப் பொறுத்துக் கொள்ள இயலாத, பயணத்தால் களைப்படைகிற, துன்பம் பொறுக்காத, குளிர்காலத்தின் கடுமையைப் பொறுக்காத, இரந்துண்டு வாழ்பவர்களும் {பிச்சைக்காரர்களும்}, அந்தணர்களும், யோகிகளும் விலகிக் கொள்ளட்டும். இனிய இறைச்சிகளிலும், உறிஞ்சுதல் மற்றும் குடித்தலுக்குரிய உணவுகள் மற்றும் சமைத்த உணவுகளிலும் விருப்பமுடைய அந்தணர்களும் விலகிக் கொள்ளட்டும். விசுவாசத்தின் காரணமாக என்னைத் தொடர்ந்து வந்த குடிமக்களும், இதுவரை முறையான ஊதியம் கொடுத்து நான் வைத்திருந்தவர்களும் மன்னன் திருதராஷ்டிரரிடம் திரும்பிச் செல்லட்டும். அவர் {திருதராஷ்டிரர்} குறித்த நேரத்தில் அவர்களுக்குப் படிகளைக் கொடுப்பார். அந்த மன்னன் சரியான படிகளைக் {ஊதியம்} கொடுக்க மறுத்தால், எங்கள் மனநிறைவுக்காகவும், நன்மைக்காகவும் பாஞ்சாலர்களின் மன்னன் {திரௌபதியின் தந்தையும்,யுதிஷ்டிரனின் மாமனாருமான துருபதன்} அவற்றை அவர்களுக்குக் கொடுப்பார்" என்றான் {யுதிஷ்டிரன்}.

வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} தொடர்ந்தார், "இதனால் துன்புற்ற குடிமக்களும், முக்கியமான அந்தணர்களும், யதிகளும் ஹஸ்தினாபுரம் சென்றனர். நீதிமானான யுதிஷ்டிரன் மீதிருந்த பாசத்தால், அம்பிகையின் அரச மகன் {திருதராஷ்டிரன்} அவர்களை முறையாக வரவேற்று, உரிய படிகளைக் கொடுத்து அவர்களைத் திருப்தி செய்தான். பிறகு குந்தியின் மகன் {யுதிஷ்டிரன்}, சிறு எண்ணிக்கையிலான அந்தணர்களுடன், லோமசரால் உற்சாகப்படுத்தப்பட்டு, காம்யகத்தில் மூன்று இரவுகள் வசித்தான்."


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்னி அக்ருதவ்ரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்ஜுனன் அர்வாவசு அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆஜகரர் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரஜித் இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதன் ஏகதர் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கனகன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலன் காலவர் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகன் கீசகர்கள் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமன் கௌதமர் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியஜித் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சனத்சுஜாதர் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகன்யா சுகர் சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதன்வான் சுதர்சனன் சுதர்மை சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுனந்தை சுனஸ்ஸகன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியன் சூரியவர்மன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜாஜலி ஜாம்பவதி ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தனு தபதி தபஸ் தமனர் தமயந்தி தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிஜடை திரிதர் திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்ஜயன் துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணன் நாராயணர்கள் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகன் பகர் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலன் பலராமன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்னஸ்வன் பிரத்யும்னன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூஜனி பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மனு மயன் மருத்தன் மலயத்வஜன் மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாஜ்ஞவல்கியர் யாதுதானி யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராஜதர்மன் ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வஜ்ரன் வஜ்ரவேகன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் வினதை விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைனியன் வைவஸ்வத மனு ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹனுமான் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்