Sunday, March 09, 2014

தாயின் சிரம் கொய்த பரசுராமர் - வனபர்வம் பகுதி 116

Rama severed his mother's head! | Vana Parva - Section 116 | Mahabharata In Tamil

(தீர்த்தயாத்ரா பர்வத் தொடர்ச்சி)

வேதம் கற்ற ஜமதக்னி; பிரசேனஜித்தின் மகள் ரேணுகையை மணப்பது; ரேணுகை சித்திரரதனைக் கண்டு மயங்குவது; இதை அறிந்த ஜமதக்னி பரசுராமரை, அவளது தலையைக் கொய்யச் செய்வது; பரசுராமர் வரமாகத் தாயின் உயிரைக் கோருவது; கார்த்தவீரியார்ஜுனன் ஜமதக்னியிடம் இருந்து பசுவைக் கவர்வது; இதை அறிந்த பரசுராமர் கார்த்தவீரியார்ஜுனன் கரங்களை அறுத்து வீழ்த்துவது; கார்த்தவீர்யார்ஜுனன் மகன்கள் ஜமதக்னியைக் கொல்வது; பரசுராமர் புலம்பி அழுவது…

அக்ருதவ்ரணர் {யுதிஷ்டிரனிடம்} சொன்னார், "ஜமதக்னி தன்னை வேத கல்விக்கும், புனிதமான தவம் பயிலவும் அர்ப்பணித்துக் கொண்டார். அவர் தனது பெரும் தவங்கள் நிமித்தமாகப் புகழடைந்தார். பிறகு அவர் {ஜமதக்னி} ஒரு முறைசார்ந்த போக்கைத் தொடர்ந்து முழு வேதத்திலும் தேர்ச்சி பெற்றார். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, பிறகு அவர் {ஜமதக்னி} பிரசேனஜித்திடம் சென்று, ரேணுகையின் கரத்தை திருமணத்திற்காகக் கேட்டார். அவரது வேண்டுதல் அம்மன்னனால் {பிரசேனஜித்தால்} அளிக்கப்பட்டது. பிருகு குலத்தின் இனியவர் {ஜமதக்னி} இப்படியே ரேணுகையைத் தனது மனைவியாக அடைந்து, அவளை {ரேணுகையைத்} தனது ஆசிரமத்தில் வசிக்க வைத்து, அவளால் உதவப்பட்டுத் தவம்பயின்றார். அவள் மூலமாக நான்கு மகன்கள் பிறந்தனர். ஐந்தாவதாக ராமர் {பரசுராமர்} பிறந்தார். ராமர் {பரசுராமர்} அனைவரிலும் இளையவராக இருந்தாலும், தகுதியில் அனைவரையும் விஞ்சியிருந்தார்.


ஒரு காலத்தில், அவளது {ரேணுகையின்} மகன்கள் கனிகள் சேகரிக்க வெளியே சென்றிருந்தபோது, தூய கடினமான வாழ்க்கை வாழ்ந்து வந்த ரேணுகை, நீராடுவதற்காக வெளியே சென்றாள். ஓ மன்னா {யுதிஷ்டிரா}, அப்படி அவள் இல்லம் திரும்பிக் கொண்டிருந்தபோது, சித்திரரதன் என்ற பெயர் கொண்ட மார்த்திகாவத நாட்டு அரசனை அவள் காண நேரந்தது. தாமரை மலர்மாலை அணிந்திருந்த அந்த மன்னன் {சித்திரரதன்} தனது மனைவியருடன் நீரில் விளையாடிக் கொண்டிருந்தான். அவனின் {சித்திரரதனின்} அற்புதமான வடிவத்தைக் கண்ட ரேணுகைக்கு அவன் மீது ஆசை உண்டானது. விதிக்குப்புறம்பான அந்த ஆசையை அவளால் கட்டுப்படுத்தமுடியாமல், நீரிலே மாசடைந்து, இதயத்தால் பயந்து மீண்டும் ஆசிரமம் திரும்பினாள்.

அவளது கணவர் {ஜமதக்னி}, அவளைக் கண்ட உடனேயே, அவளது நிலையை உணர்ந்தார். மயக்கத்துடன் இருந்த அவளிடம் கற்பின் காந்தம் இல்லாததைக் கண்டு வலிமைமிக்க, சக்திவாய்ந்த, மனதில் மிகுந்த கோபம் கொண்ட அவர் {ஜமதக்னி}, அவளை {ரேணுகையை} நிந்தித்து "சீச்சி" என்றார். சரியாக அதே நேரத்தில் ஜமதக்னியின் மகன்களில் மூத்தவரான ருமண்வான் வந்தார்; பிறகு சுஷேணரும், வசுவும், அதேபோல விசுவாவசுவும் வந்தனர். அந்தப் பெரும்பலம் வாய்ந்த தவசி அவர்கள் அனைவரிடமும் ஒருவர் பின் ஒருவராக, அவர்களது தாயின் உயிருக்கு ஒரு முடிவுகட்டச் சொன்னார்.

இருப்பினும் அவர்கள், மதிமயங்கி, இதயம் தொலைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் ஒருவார்த்தையையேனும் சொல்லவில்லை. பிறகு அவர் {ஜமதக்னி} சினம் கொண்டு அவர்களைச் சபித்தார். அப்படிச் சபிக்கப்பட்ட அவர்கள் தங்கள் உணர்வுகளை இழந்து, விலங்குகள் மற்றும் பறவைகளின் நடத்தைக்கு ஒப்பாக அசையாமல் இருந்தனர். பிறகு, அனைவரிலும் கடைசியாக எதிரி வீரர்களைக் கொல்லும் ராமர் {பரசுராமர்} ஆசிரமத்திற்கு வந்தார். அவரிடம், பலம்வாய்ந்த கரங்கள் கொண்ட பெரும் தவசியான ஜமதக்னி, "ஓ! மகனே {பரசுராமா}, மனவுறுத்தல் இன்றி உனது தீய அன்னையை {ரேணுகையைக்} கொல்" என்றார்.

அதன்பேரில், ராமர் {பரசுராமர்} உடனடியாகத் தனது கோடரியை எடுத்து தனது தாயின் தலையைக் கொய்தார். ஓ பெரும் மன்னா {யுதிஷ்டிரா}, பலம் வாய்ந்த ஆன்மா கொண்ட ஜமதக்னியின் கோபம் தணிந்தது. பிறகு அவர் மனத்திருப்தியுடன், "எனது மகனே, அறம் அறிந்த நீ, எனது ஆணையின் பேரில் கடும் சாதனையைச் செய்தாய். ஆகையால், உனது இதயத்தில் இருக்கும் விருப்பங்களைச் சொல், நான் அவற்றைத் தரத் தயாராக இருக்கிறேன். என்னிடம் கேள்" என்றார்.

அதன்பேரில், ராமர் {பரசுராமர்}, தனது தாய் {ரேணுகை} உயிர் பெற வேண்டும் என்றும், இந்தக் கொடூரச் செயலை நினைத்து தான் பீதியடையாதிருக்க வேண்டும் என்றும், தான் எந்தப் பாவத்தாலும் பீடிக்கப்படாதவராக இருக்க வேண்டும் என்றும், தனது சகோதரர்கள் பழைய நிலையை அடைய வேண்டும் என்றும், போர்க்களத்தில் தான் ஒப்பிலாதவராக இருக்க வேண்டும் என்றும், தனக்கு நீண்ட ஆயுள் வேண்டும் என்றும் கேட்டார். ஓ பரதனின் மகனே {யுதிஷ்டிரா}, கடுமை நிறைந்த தவம் பயின்ற ஜமதக்னி, தனது மகனின் அனைத்து விருப்பங்களையும் அருளினார்.

ஓ! தலைவா {யுதிஷ்டிரா}, ஒரு முறை, முன்பு போலவே அனைத்து மகன்களும் வெளியே சென்றிருந்த போது, கடற்கரையின் அருகே இருக்கும் நாட்டின் {அனூப நாடு} தலைவனான கார்த்தவீரியனின் வீரமிக்க மகன் {அர்ஜுனன்}, ஆசிரமத்திற்கு வந்தான். அப்படி அவன் அந்த ஆசிரமத்திற்கு வந்தபோது, அந்தத் தவசியின் {ஜமதக்னியின்} மனைவி {ரேணுகை} அவனை {கார்த்தவீரியனின் மகன் அர்ஜுனனை} விருந்தோம்பலுடன் வரவேற்றாள். எனினும், அவன் போர்வீரனுக்குரிய பெருமையால் போதை கொண்டு, தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் மகிழ்ச்சி கொள்ளவில்லை. பிறகு வலுக்கட்டாயமாக, அனைத்து எதிர்ப்பையும் மீறி, தனது பாலால் புனித நெய் வழங்கிய தலைமைப் பசுவை {பசுவின் கன்றை என்று வேறு பதிப்பில் படித்ததாக ஞாபகம்}, அதன் {தாய்ப்பசுவின்} அலறலையும் பொருட்படுத்தாமல் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றிச் சென்றான். வேண்டுமென்றே அந்த வனத்தில் இருந்த பல பெரிய மரங்களை ஒடித்துச் சென்றான்.

ராமர் {பரசுராமர்} வீடு திரும்பியதும், அவரது தந்தை {ஜமதக்னி} நடந்தது யாவற்றையும் சொன்னார். கன்றின் பிரிவால் அலறும் பசுவைக் கண்ட ராமருக்கு {பரசுராமருக்கு} இதயத்தில் அதிருப்தி எழுந்தது. அவர் {பரசுராமர்} கடைசிக் காலம் நெருங்கியிருந்த கார்த்தவீரியனின் மகனிடம் {அர்ஜுனனிடம்} விரைந்தார். பிறகு அந்தப் பிருகுவின் வழி வந்தவர் {பரசுராமர்}, அந்த எதிரி வீரர்களை அழிப்பவர், போர்க்களத்தில் தனது அழகிய வில்லில் இருந்து அடிக்கப்பட்ட, தட்டை முனை கொண்ட கூர்மையான கணைகளால் தனது வீரத்தைக் காண்பித்து, கதவைத் தடுக்கும் மர ஆணிகள் போல இருந்த அர்ஜுனனின் ஆயிரம் கரங்களை அறுத்தெரிந்தார். ஏற்கனவே மரணத்தின் கரங்களில் இருந்த அவனும் {அர்ஜுனனும்}, தனது எதிரியான ராமரால் {பரசுராமரால்} வெற்றிகொள்ளப்பட்டான்.

பிறகு அந்த அர்ஜுனனின் உறவுகள் ராமருக்கு {பரசுராமருக்கு} எதிராகத் தங்கள் கோபத்தைத் திருப்பி, ராமர் {பரசுராமர்} இல்லாத நேரத்தில் ஜமதக்னியின் ஆசிரமத்திற்கு விரைந்தனர். அங்கே அவரைக் {ஜமதக்னியைக்} கண்டு கொன்றனர். அவர் பெரும் பலம் கொண்டவராக இருப்பினும், அந்நேரத்தில் தவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் சண்டையிடவில்லை. இப்படி எதிரிகளால் தாக்கப்பட்டபோது, அவர் உதவியின்றிப் பரிதாபகரமாகத் தொடர்ந்து ராமனின் {பரசுராமனின்} பெயரை உரக்க அழைத்தார்.

ஓ! யுதிஷ்டிரா, மேலும், கார்த்தவீரியனின் மகன்கள் ஜமதக்னியின் மேல் தங்கள் கணைகளை அடித்துத் தங்கள் எதிரியைத் {பரசுராமரைத்} தண்டித்து வந்த வழியே சென்றனர். அப்படி அவர்கள் சென்ற பிறகு, ஜமதக்னி தனது கடைசி மூச்சை சுவாசித்த போது, பிருகு குலத்தில் இனியவரான, ராமர் {பரசுராமர்}, கைகளில் விறகுகளுடன் ஆசிரமத்திற்குத் திரும்பினார். அந்த வீரர் தனது தந்தை கொல்லப்பட்டிருப்பதைக் கண்டார். மிகுந்த துக்கமடைந்த அவர் தனது தந்தைக்கு ஏற்பட்ட தகாத விதியை நினைத்து புலம்பி அழுதார்.


இப்பதிவு குறித்து முகநூலில் Like/Comment/Share செய்யலாமே!


மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அகம்பனன் அகலிகை அகஸ்தியர் அகிருதவரணர் அக்ருதவ்ரணர் அக்னி அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ் அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அஞ்சனபர்வன் அதிரதன் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அபிமன்யு அம்பரீஷன் அம்பா அம்பாலிகை அம்பிகை அம்பை அயோதா தௌம்யா அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததி அர்வாவசு அர்ஜுனன் அலம்பலன் அலம்புசன் அலம்புசை அலர்க்கன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அனுகம்பகன் அனுவிந்தன் அன்சுமான் அஷ்டகன் அஷ்டவக்கிரர் அஸ்மர் அஸ்வசேனன் அஸ்வத்தாமன் அஸ்வபதி அஹல்யை ஆங்கரிஷ்டன் ஆணிமாண்டவ்யர் ஆதிசேஷன் ஆத்ரேயர் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஜகரர் ஆஸ்தீகர் இக்ஷ்வாகு இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இந்திரோதர் இராவான் {அரவான்} இல்வலன் உக்கிரசேனன் உக்தன் உக்ரசேனன் உசீநரன் உச்சைஸ்ரவஸ் உதங்கர் உதங்கா உதத்யர் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உமை உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகதர் ஏகதன் ஏகலவ்யன் ஐராவதன் ஓகவதி ஔத்தாலகர் ஔத்தாலகி கங்கன் கங்கை கசன் கசியபர் கடோத்கசன் கணிகர் கண்வர் கதன் கத்ரு கந்தன் கபிலர் கபோதரோமன் கயன் கராளன் கருடன் கர்ணன் கலி கல்கி கல்மாஷபாதன் கவந்தன் கனகன் கஹோடர் காகமா காக்ஷிவத் காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரி காயவ்யன் கார்க்கோடகன் கார்க்யர் கார்த்தவீரியார்ஜுனன் கார்த்திகை காலகவிருக்ஷீயர் காலகேயர் காலவர் காலன் காளி கிந்தமா கிரது கிரந்திகன் கிராதன் கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருபி கிருஷ்ணன் கிர்மீரன் கீசகர்கள் கீசகன் குசிகன் குணகேசி குணி-கர்க்கர் குண்டதாரன் குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரு குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசினி கேசின் கேதுவர்மன் கைகேயன் கைகேயி கைடபன் கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் கௌதமன் கௌதமி க்ஷத்ரபந்து க்ஷேமதர்சின் க்ஷேமதூர்த்தி சகரன் சகாதேவன் சகுந்தலை சகுனி சக்திரி சக்ரதேவன் சங்கன் சசபிந்து சச்சி சஞ்சயன் சஞ்சயன் 1 சதயூபன் சதானீகன் சத்தியசேனன் சத்தியபாமா சத்தியர் சத்தியவதி சத்தியஜித் சத்யசேனன் சத்யபாமா சத்யவான் சத்ருஞ்சயன் சந்தனு சந்திரன் சமங்கர் சமீகர் சம்சப்தகர்கள் சம்பரன் சம்பா சம்பாகர் சம்பை சம்வர்ணன் சம்வர்த்தர் சரபன் சரஸ்வதி சர்மின் சர்மிஷ்டை சர்யாதி சலன் சல்லியன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாண்டில்யர் சாத்யகி சாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரஸ்வதர் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சார்வாகன் சால்வன் சாவித்ரி சிகண்டி சிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திரன் சித்திராங்கதை சித்ரகுப்தன் சித்ரவாஹனன் சிநி சிந்துத்வீபன் சிபி சியவணன் சியவனர் சிரிகாரின் சிரிங்கின் சிருஞ்சயன் சிவன் சீதை சுகர் சுகன்யா சுகுமாரி சுகேது சுக்ரது சுக்ரன் சுக்ரீவன் சுசர்மன் சுசோபனை சுதக்ஷிணன் சுதசோமன் சுதர்சனன் சுதர்மை சுதன்வான் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுநந்தை சுந்தன் உபசுந்தன் சுபத்திரை சுப்ரதீகா சுமித்திரன் சுமுகன் சுரதன் சுரதை சுரபி சுருதகர்மன் சுருதசேனன் சுருதர்வன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுருவாவதி சுலபை சுவர்ணஷ்டீவின் சுவாகா சுவேதகேது சுனந்தை சுனஸ்ஸகன் சுஷேணன் சுஹோத்திரன் சூதன்வான் சூரன் சூரியதத்தன் சூரியவர்மன் சூரியன் சூர்ப்பனகை சேகிதானன் சேதுகன் சேனஜித் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன் சோமதத்தன் சௌதி சௌதியும்னி சௌனகர் தக்ஷகன் தக்ஷன் தண்டதாரன் தண்டன் தண்டி ததீசர் தத்தாத்ரேயர் தபதி தபஸ் தமயந்தி தமனர் தம்போத்பவன் தர்மதர்சனர் தர்மதேவன் தர்மத்வஜன் தர்மவியாதர் தர்மாரண்யர் தளன் தனு தாத்ரேயிகை தாரகன் தாருகன் தார்க்ஷ்யர் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன் திரிதர் திரிஜடை திருதராஷ்டிரன் திருதவர்மன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமை திவோதாசன் தீர்க்கதமஸ் துச்சலை துச்சாசனன் துந்து துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன் துலாதாரன் துவஷ்டிரி துவாபரன் துவிதன் துஷ்கர்ணன் துஷ்யந்தன் தேவ தேவகி தேவசர்மன் தேவசேனா தேவசேனை தேவமதர் தேவயானி தேவராதன் தேவலர் தேவஸ்தானர் தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நமுசி நரகாசுரன் நரன் நளன் நளன்2 நாகன் நாசிகேதன் நாடீஜங்கன் நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிருகன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன் பகீரதன் பங்காஸ்வனன் பசுஸகன் பஞ்சசிகர் பஞ்சசூடை பத்மநாபன் பத்மன் பத்ரகாளி பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பராசரர் பராவசு பரிக்ஷித் பரீக்ஷித்1 பர்ணாதன் பர்வதர் பலராமன் பலன் பலி பலிதன் பாகுகன் பாணன் பாண்டியன் பாண்டு பானுமதி பானுமான் பாஹ்லீகர் பிங்களன் பிங்களை பிரகலாதன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரமாதின் பிரம்மதத்தன் பிரம்மத்வாரா பிரம்மன் பிரம்மாதி பிராதிகாமின் பிருகதஸ்வர் பிருகத்யும்னன் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன் பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன் புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பூஜனி போத்யர் பௌரவன் பௌரிகன் பௌலோமர் மங்கணகர் மங்கி மடன் மணிமான் மதங்கன் மதயந்தி மதிராக்ஷன் மது மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மலயத்வஜன் மனு மஹாபிஷன் மஹிஷன் மஹோதரர் மாணிபத்ரன் மாதலி மாதவி மாத்ரி மாந்தாதா மாரீசன் மார்க்கண்டேயர் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன் மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யாதுதானி யாஜ்ஞவல்கியர் யுதாமன்யு யுதிஷ்டிரன் யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ராஜதர்மன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷபர் ரிஷ்யசிருங்கர் ருக்மரதன் ருக்மி ருக்மிணி ருசங்கு ருசி ருத்திரன் ருரு ரேணுகன் ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் ரோஹிணி லக்ஷ்மணன் லட்சுமணன் லட்சுமி லபிதை லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர் வசுமனஸ் வசுமான் வசுஹோமன் வதான்யர் வந்தின் வருணன் வர்கா வஜ்ரவேகன் வஜ்ரன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர் வாலி விகர்ணன் விசரக்கு விசாகன் விசித்திரவீரியன் விசோகன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன் விபுலர் வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருபாகஷன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன் விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வீதஹவ்யன் வீரத்யும்னன் வீரபத்ரன் வேதா வேனன் வைகர்த்தனன் வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதை ஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனதேவன் ஜனபதி ஜனமேஜயன் ஜனமேஜயன் 1 ஜாம்பவதி ஜாரிதரி ஜாஜலி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன் ஜைகிஷவ்யர் ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸனத்குமாரர் ஸுமனை ஸுவர்ச்சஸ் ஸ்கந்தன் ஸ்தாணு ஸ்தூணாகர்ணன் ஸ்யூமரஸ்மி ஸ்ரீ ஸ்ரீமதி ஸ்ரீமான் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹரிச்சந்திரன் ஹர்யஸ்வன் ஹனுமான் ஹாரீதர் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹிரண்யவர்மன் ஹோத்திரவாஹனர்